தமிழ்நாடு அமைவிடச் சிறப்பு
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கடலோர மாநிலமான தமிழ்நாடு,
கிழக்கில் வங்காளவிரிகுடா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும்,
தெற்கில் இந்தியப் பெருங்கடலையும், மேற்கில் கேரளாவையும், வடக்கில்
கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தினையும் தனது எல்லையாகக் கொண்டுள்ளது.1958ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் தமிழ், தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகக் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஏழாவது இடத்தையும் பரப்பளவில் பதினொன்றாவது இடத்தையும் பெற்றுள்ள தமிழகம், விவசாயம் மற்றும் இயந்திரப் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தமிழ்நாடு வடக்கே 805’ அட்சத்திலிருந்து 130 35’ அட்சம் வரையிலும், கிழக்கே 760 15’ தீர்க்கத்திலிருந்து 800 20’ தீர்க்கம்வரை பரவியுள்ளது.
முக்கோண வடிவில் அமைந்துள்ள தமிழ்நாடு பரப்பளவில் இந்திய மாநிலங்களில் பதினொன்றாவது இடத்தை வகிக்கின்றது.
தமிழ்நாடு தனித்தொரு புவியியல் மண்டலமாகத் திகழ்கின்றது.நகரமயமாதலில் அதிக வளர்ச்சி யடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
அழகிய இயற்கை வளங்கள், அடர்ந்த காடுகள், அரிய வனவிலங்குகள், குளிர்மலைப் பிரதேசங்கள், திராவிட கலைநயம் மிக்க இந்துக் கோவில்கள், சிற்பக் கலைக்கூடங்கள் ஆகியவை தமிழ கத்தின் தனிப்பெரும் அடையாளங் களாகத் திகழ்கிறது.
பெருமை மிக்க மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யுனெஸ்கோவால் (UNESCO)அங்கீகரிக்கப்பட்ட உலக பண்பாட்டுத் தலங்கள் நிறைந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
தமிழ்நாடு மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில்மேற்கு
மலைத்தொடர்களாலும், கிழக்கு பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள
கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப்
பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பினை மலைகள் (மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்), பீடபூமி பகுதி, சமவெளிப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
தமிழக மலைத் தொடர்கள்
தமிழகத்தில் மலைகள் ஒன்றையன்று அடுத்து அடுத்து அமைந்து ஒரு நீண்ட
சுவர்போல் எழும்பி மேற்கு மலைத்தொடர், கிழக்கு மலைத்தொடர் என இரு
மலைத்தொடர்கள் இயற்கையாக அமைந்துள்ளன.
மேற்குமலைத்தொடர் (Western Ghats)
மேற்குமலைத்தொடர் மராட்டியம், குஜராத் ஆகியமாநிலங்களின் எல்லைகளில் உள்ள
தபதி ஆற்றுக்குத் தெற்கே தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா,
தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியாக நீண்டு தமிழ்நாட்டிலுள்ள
கன்னியாகுமரியில் முடிவடைகிறது.மேற்குமலைத்தொடரின் நீளம் 1600 கி.மீட்டர் மற்றும் சராசரி உயரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள்.
மேற்குமலைத்தொடர் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் 'சயாத்ரி மலைத்தொடர்’ எனவும், தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகின்றது.
மேற்குமலைத்தொடரின் மிக உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இதுவே தென் இந்தியாவின் உயரமான சிகரம் ஆகும்.
தென்இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகின்றன.இங்கு உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கித் தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில்கலக்கும் முக்கியமான ஆறுகளுள் ஒன்று காவிரி.
தாமிரபரணி ஆறும் வேறு சில சிறு ஆறுகளும் மேற்கு மலைத்தொடரில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அவற்றுள் சில மணிமுத்தாறு, கபினி ஆறு, பெரியாறு போன்றவை மிக முக்கிய ஆறுகள் ஆகும்.
மேற்கு மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செல்சு தீவுகளோடு இணைந்திருந்தது என்று புவியியலார் கூறுகின்றனர். இதுவே 'லெமூரியாக் கண்டம்’ என்பர்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து, கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது.
கிழக்குத் தொடர்ச்சிமலைகளைவிட மேற்குத் தொடர்ச்சி மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள மலைத்தொடர்களில் அதிக உயரமான சிகரங்கள் தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்) மற்றும் முக்கூர்த்தி (2540 மீட்டர்கள்) ஆகும்.

தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் (2637 மீ). மேற்கு மலைத் தொடரும், கிழக்கு மலைத் தொடரும் நீலகிரி மலைப் பகுதியில் ஒன்று சேர்கின்றன.
தமிழ்நாட்டின் நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் ஓர் கிளைத் தொடர் குன்று கிழக்கு நோக்கி சுமார் 1500 மீட்டர் முதல் 2000 மீட்டர் உயரம்வரை கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.
பழனிக்குன்றுகளுக்கு தெற்கே வருசநாடு, ஆண்டிபட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாய், ஆரல்வாய்க் கணவாய், செங்கோட்டைக் கணவாய் ஆகிய கணவாய்கள் காணப்படுகின்றன.
பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே ஆண்டிபட்டி மலை, ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.

சமவெளிகளையும், பீடபூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத் தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய்கள் கடலூர் மாவட்டத்தைச் சமவெளி பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமி பகுதியோடும் இணைக்கின்றன.
ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், அருவிகளும் ஏராளமாக உள்ளஇம்மலைத் தொடரில் ஆயிரக்கணக்கான தாவர இனங்களும் நூற்றுக்கணக்கான வனவிலங்குகளும் காணப்படுகின்றன.
மேற்குத் தொடர்ச்சிமலைகளில் உயர்ந்த மலை ஆனைமலை.
கிழக்குமலைத்தொடர் (Eastern Ghats)
கிழக்கு மலைத்தொடர் மேற்கு வங்காளம் முதல்தமிழ்நாடு வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி வருகிறது.ஒரிசாவில் தொடங்கித் தமிழ் நாட்டிலுள்ள சென்னைக்கு அருகிலிருந்து மேற்கு நோக்கி வளைந்து மேற்கு மலைத் தொடருடன் நீலகிரியில்இணையும் கிழக்கு மலைத்தொடர் தமிழகத்தை ஆந்திரா, கர்நாடகம் மாநிலங்களிலிருந்து பிரிக்கின்றது.
கிழக்கு மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சிமலைகள் போல் தொடர்ந்து காணப்படவில்லை. கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி போன்ற பெரிய ஆறுகள் இம்மலைத்தொடர் ஊடே செல்வதால் இடையிடையே தொடர்ச்சி இல்லாமல் குன்றுகளாகக் காணப்படுகின்றது.
கிழக்கு மலைத்தொடரில் மிக உயர்ந்த சிகரம் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி. இதன் உயரம் 1501 மீட்டர் ஆகும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் பெரும்பாலும் ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்உள்ளன.
மேற்குத் தொடர்ச்சிமலைகளோடு ஒப்பிடும்போது கிழக்குத் தொடர்ச்சிமலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன.

கிழக்குத் தொடர்ச்சிமலையின் சராசரி உயரம் 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர்வரை ஆகும்.
தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன்மலை (1500-1600 மீட்டர்).
தமிழகத்தின் மலைகள்
தமிழகத்தில் மேற்கு மலைத்தொடரில் நீலகிரி, ஆனைமலை, பழனி மலை போன்ற மலைகளும், கிழக்கு மலைத் தொடரில் சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன்மலை, பச்சை மலை, ஜவ்வாது மலை போன்ற மலைகளும் அமைந்துள்ளன.
நீலகிரி
தென்னிந்தியாவில் உள்ள மேற்கு மலைத் தொடரில் அமைந்துள்ள பெரிய மலைத்தொடர்நீலகிரிஆகும். தமிழ்நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள இம்மலை கேரளமாநிலத்தின் வடக்கிலும், கர்நாடக மாநிலத்தின் தெற்கிலும் நீண்டு பரவி அமைந்துள்ளது.
நீலகிரி மலையில் தமிழகத்தின் மிக உயரமான சிகரமான தொட்டபெட்டா அமைந்துள்ளது. இது 2637 மீட்டர் உயரம் உடையது.
நீலகிரி மலையில் தேயிலை, காப்பி, ஆரஞ்சு, ரப்பர்தோட்டங்கள் பயிரிடப்படுகின்றன.
யூகலிப்டஸ் மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. இம்மரங்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் (எண்ணெய்) நீலகிரித் தைலம் என்று கூறப்படுகிறது.

ஆனை மலை
மேற்குமலைத்தொடரில் அமைந்த மற்றொரு பெரிய மலைத் தொடரான ஆனைமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு அருகில் உள்ளது. கேரள மாநிலத்திலும் பரவி அமைந்துள்ளஇம்மலையில் தேயிலையும் காப்பியும் மிகுதியாகப் பயிராகின்றன. தேக்கு மரங்களும், பல்வகையான காட்டு மரங்களும், யானைகளும் மிகுதியாக உள்ளன.
இம்மலையில் யானைகள் மிக அதிகமாக வாழ்வதால் இம்மலைக்கு ஆனைமலை என்றும் பெயர்.
சேர்வராயன் மலை
தமிழ்நாட்டில் சேலம் மாநகரத்தின் அருகே சேர்வராயன் மலை அமைந்துள்ளது.சேர்வராயன் மலையின் சராசரி உயரம் 1500 - 1600 மீட்டர்.
சேர்வராயன் மலையில்ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு என்னும் கோடை வாசஸ்தலம் உள்ளது. இது கடல் மட்டத்துக்குமேல் 1365 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலையின் மிக உயர்ந்த சிகரமான சோலைக்காடு கடல் மட்டத்திலிருந்து 1640 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மந்திரி குமாரி’ திரைப்படத்தில்
இடம்பெற்ற 'வாராய் நீ வாராய்’ என்ற புகழ்பெற்ற பாடல்காட்சி சேர்வராயன்
மலையில் எடுக்கப்பட்டது.சேர்வராயன் மலையில் வாழும் மக்கள் தங்களின் காவல் தெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர் சேர்வராயன் என்பதால் இம்மலை சேர்வராயன்மலை எனப்படுகிறது.
சேர்வராயன் மலையின் உச்சியில் உள்ள (1620 மீட்டர் உயரத்தில்) சேர்வராயன் கோயிலில் இறைவன் காவேரி அம்மனோடு இருக்கிறார்.
சேர்வராயன் மலையில் பெரும் அளவு கனிம வளங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு மேக்னசைட் (Magnesite) படிமங்கள் உள்ளன.

கொல்லி மலை
தமிழ் நாட்டின் சிறுமலைத் தொடர் கொல்லி மலை. கொல்லி மலையின் மொத்த நீளம் 27 கி.மீ. மற்றும்1000 முதல் 1300 மீட்டர் வரை உயரம் கொண்டது.
கொல்லிமலை கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி ஆண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
கல்ராயன் மலை
சேலம், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையில்பெரிய தொடராக
நீண்டு அமைந்துள்ள கல்ராயன்மலையின் பெரும்பகுதி விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது.கல்ராயன் மலைத்தொடர் வடக்கு நோக்கி அமைந்துள்ள சின்ன கல்ராயன் மலை(சராசரி உயரம் 820 மீ) மற்றும்தெற்கு நோக்கி அமைந்துள்ள பெரிய கல்ராயன் மலை(சராசரி உயரம் 1365 மீ)என இரண்டு பகுதிகளாகப் பிரிந்து அமைந்துள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள கிழக்கு மலைத் தொடரில் பெரும்பகுதி கல்ராயன் மலையே என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை மலை
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூருக்கு அருகில்பச்சை மலை
உள்ளது. இம்மலை முழுவதும் பச்சை நிறத் தாவரங்களால்
போர்த்தப்பட்டிருப்பதால் இம்மலை பச்சை மலை எனப்பட்டது. பச்சை மலை தொடர்ச்சியாக அமையாமல் அருகருகே அமைந்த ஏராளமான குன்றுகளால் ஆனது. இம்மலை சுமார் 5000 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.
மகேந்திரகிரி
தமிழ்நாட்டிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகேந்திரகிரி (1645 மீ) அமைந்துள்ளது.கிழக்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரமான மகேந்திரகிரி 1501 மீட்டர் உயரம் கொண்டது. இது ஒடிசா மாநிலத்தில் அமைந் துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி மலைக்கும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வருசநாடு மலைக்கும் இடையே செங்கோட்டை கணவாய் காணப்படுகிறது.
மகேந்திரகிரி மலையில் இஸ்ரோவின் திரவ உந்து பொருள் தயாரிப்பு நிலையம் (Liquid Propulsion System Center) அமைந்துள்ளது.
LPSC யில் தான் GSLV ராக்கெட்டுக்குத் தேவையான கிரையோஜெனிக் எரிபொருள் தயாரிப்பு பற்றிய ஆராய்ச்சியும் தயாரிப்புகளும் நடந்து வருகின்றன. கிரையோஜெனிக் எரிபொருள் என்பது திரவ ஆக்ஸி ஜனையும் திரவ ஹைட்ரஜனையும் கலந்த எரிபொருள் ஆகும்.

சேர்வராயன் மலை - சேலம்
சுவாமி மலை - தஞ்சாவூர்
பச்சைமலை - திருச்சி
மருத்துவ மலை - கன்னியாகுமரி
கொல்லிமலை - நாமக்கல்
சஞ்சீவி மலை - தேனி
கழுகு மலை, மகேந்திரகிரி - திருநெல்வேலி
ஜவ்வாது மலை, இரத்தின கிரி, ஏலகிரி மலை, வள்ளி மலை - வேலூர்
சித்தேரி மலை - தருமபுரி மற்றும் சேலம்
நார்த்தா மலை - புதுக்கோட்டை
மருத மலை - கோயம்புத்தூர்
கைலாச கிரி, தீர்த்த மலை, பலமாத்தி மலை - தருமபுரி
உதயகிரிக் கோட்டை - கன்னியாகுமரி
கல்வராயன் மலை - விழுப்புரம்
செஞ்சி மலை - திருவண்ணாமலை
தமிழ்நாட்டின்பீடபூமிகள்
மேற்குத் தொடர்ச்சிமலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி பீடபூமியில் சந்திக்கின்றன.நீலகிரி பீடபூமியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நோக்கி சுமார் 1800 மீட்டர் உயரத்தில் கோயம்புத்தூர் பீடபூமியை நோக்கி இவ்வுயர்நிலம் சரிகின்றது.
அங்கிருந்து மேலும் சரிந்து சேர்வராயன் உயர்நிலங்களுக்கு மேற்காக பாராமஹால் பீடபூமி என்று அழைக்கப்படும் தருமபுரி பீடபூமி அமைகிறது.
பாராமஹால் பீடபூமியின் சராசரி உயரம் 300 முதல் 1700 மீட்டர் ஆகும்.
தருமபுரி பீடபூமி மேற்கில் மைசூர் பீடபூமியுடன் இணைகிறது.
தமிழ்நாட்டின் பீடபூமிகளின் சராசரி உயரம் கிழக்கில் இருந்து சுமார் 120 மீட்டரில் இருந்து மேற்காக 300 முதல் 400 மீட்டர் வரை ஆகும்.
தமிழ்நாட்டின் பீடபூமிகளை கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி என்ற இரு பிரிவுகளாக பிரிக்கலாம். இவ்விரு பீடபூமி பிரிவுகளுக்கும் இடையே பல தனித்தனி குன்றுகள் காணப்படு கின்றன. இவ்வகை குன்றுகளுள் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.
தமிழ்நாட்டு சமவெளிகள்
தமிழ்நாட்டு சமவெளிகளை ஆற்றுச்சமவெளி மற்றும் கடலோர சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.கடலோர சமவெளிகள் வடக்கே பழவேற்காடு ஏரியில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை 1000 கிலோ மீட்டர் நீளத்தில் பரவியுள்ளது. இச்சமவெளியின் சராசரி உயரம் 50 மீட்டர்.
தமிழ்நாட்டின் ஆற்று சமவெளிகள் வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய நதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய தமிழக ஆற்றோரச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
தெற்குப் பகுதியில் பாயும் வைகை, வைப்பாறு மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகள் தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கியுள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கடலோர சமவெளி 'சோழமண்டல சமவெளி’ என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் கடற்கரைகள்
தமிழ்நாட்டில் மெரினாகடற்கரை, இராமேஸ்வரம் கடற்கரை ஆகிய இரண்டு கடற்கரைகள் குறிப்பிடத் தக்கவை.
மெரினா கடற்கரை
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான புகழ்பெற்ற மெரினா கடற்கரை 13 கி.மீ நீளமுள்ள உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்.சென்னை துறைமுகம் கட்டப்படும்முன் வெறும் களிமண் கரையாக இருந்த கடற்கரை, 1884 ல் சென்னை மாகாண கவர்னர் மவுண்டஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டவ் (Mount stuart elphinstone Grand Duff) என்பவரால் களிமண் கரை, மணல் கடற்கரையாக மாற்றப்பட்டு கரை ஓரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டு 'மெட்ராஸ் மெரினா' என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னை நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
இராமேஸ்வரம் கடற்கரை
அழகிய கடல்நிலத் தோற்றங்களுக்கும் அலையில்லா கடற்பரப்பிற்கும் இராமேஸ்வரம் கடற்கரை புகழ்பெற்றதாகும்.இராமேஸ்வரம் கடற்கரை கடல் அலைகள் 3 செ.மீட்டருக்கும் குறைவான அளவில் எழும்புவதால் பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
தமிழ் நாடு இயற்கைத் தாவரங்கள்
தமிழ்நாட்டில் காடுகளின்பரப்பளவு 17 சதவீதம் ஆகும்.தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப்பரப்பில் குறைந்தபட்சம் 33 சதவீத அளவு காடுகள் இருத்தல் வேண்டும்.
தமிழகத்தின் காடுகள் பெரும்பாலும் மேற்கு மலைத் தொடர் மற்றும் பிற மலைப்பகுதிகளிலுமே காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் மாநிலத்திலேயே அதிக சதவீத காடுகளைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் அதிக அளவிலான காடுகளைக் கொண்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் காணப்படும் வறண்ட வெப்பநிலையும், வளமற்ற மண்ணின் தன்மையும் சவுக்கு மரம் மட்டுமே வளர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் அதிக மழைப் பொழிவு பெறும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு வெப்ப மண்டலக் காடுகளும், பசுமைமாறாக் காடுகளும் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் காடுகளின் பரவல்
தமிழக மாவட்டங்களில் காடுகளின் பரவல் சதவீதம் குறைவான நிலையில்
காணப்படுகின்றது. தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டத்தின்
ஜவ்வாது மலைக்குன்றுகளிலுமே காடுகளின் அடர்த்தியைக் காண முடிகின்றது.சேலம் மாவட்டத்திலும் அடர்த்தியான காடுகள் உள்ளன.
நீலகிரிமாவட்டத்தின் மொத்தப் பரப்பில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பு, காடுகளாக உள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் காடுகள் 1 முதல் 5 சதவீதம் வரை காணப்படுகின்றன.
தமிழ்நாட்டின் காடுகளில் பல்வேறு வகையான மரங்கள் காணப்படுகின்றன. வறண்ட பருவத்தில் பெரும்பாலான மரங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.
தமிழ்நாட்டில் 5,88,000 ஹெக்டேர் பரப்பளவில் சந்தனமரக்காடுகள் உள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தன மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
மதுரை, கோவை, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் அடர்த்தியான மரங்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
கற்பூர மற்றும் தைல மரங்களுக்கு நீலகிரி மாவட்டம் பெயர் பெற்றதாகும்.
மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரின்அடிவாரம் மற்றும் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செறிந்து காணப்படும் மரங்கள் தீக்குச்சி செய்யப் பயன்படுகின்றது.
மா, நாவல், பலா , நெல்லிக்காய் போன்ற பழவகை மரங்களும் மாநிலமெங்கும் காணப்படுகின்றன.
இயற்கை தாவரங்களை பொறுத்து தமிழகத்திலுள்ள காடுகளை வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள், முட்புதர்க் காடுகள், சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மலையகக் காடுகள் என ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
வெப்ப மண்டலப் பசுமை மாறாக் காடுகள்
வெப்ப மண்டலப் பசுமை மாறாக் காடுகள் என்றும் பசுமை மாறாதவை மற்றும்
இலைகளை உதிர்க்காதவை. இக்காடுகளின் மரங்களில் எப்பொழுதுமே இலைகள்
இருப்பதால் பசுமை மாறாக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.ஆண்டிற்கு மழைப்பொழிவு 200 செ.மீ.க்குமேல் இருக்கின்ற பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன.
தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலைச் சரிவுகளிலும், கடலோரப் பகுதிகளிலும் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன.
எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்கள் பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றன. இம்மரங்கள் சராசரியாக சுமார் 60 மீட்டர் உயரம் வரை வளரும்.
வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள்
ஆண்டிற்கு மழைப்பொழிவு 100 செ.மீ.லிருந்து 200 செ.மீ. இருக்கின்ற பகுதிகளில் வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள் காணப்படு கின்றன.தெற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்குச்சரிவில் பெரும்பான்மையாக காணப்படும் காடுகளான வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள் 'பருவக்காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
கோடைக்காலத்தில் நிகழும் ஈரப்பத இழப்பைத் தவிர்க்க அகன்ற இலைக் காடுகளில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
அகன்ற இலைக் காடுகளில் பல்வேறு வகையான குட்டையான, உயரமான, மென்மையான மற்றும் கடினமான மரங்கள் காணப்படுகின்றன. சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் ஆகியவை குறிப்பிடத்தக்க வெப்ப மண்டல அகன்ற இலை வகையைச் சார்ந்த மரங்கள் ஆகும்.
முட்புதர்க் காடுகள் (Thorn forest)
முட்புதர்க் காடுகள் நீண்ட வறண்ட காலமும், குறைவான மழைப் பொழிவும் உள்ள இடங்களில் காணப்படுகின்றன.சிறிய குட்டையான மரங்களும், புதர்களும் முட்புதர்க் காடுகளில் காணப்படுகின்றன. ஆழமான வேர்களும், கனமான தண்டு அமைப்பும் மற்றும் சதைப்பற்றுள்ள இலைகள் வறண்ட கால நிலையை எதிர்கொள்ளும் வகையில் இவ்வகைக் காடுகள் அமைந்துள்ளன.
சதுப்புநிலக் காடுகள் (Mangrove Forest)
வெப்ப மண்டலம், உப வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிக உப்பளவு நீர் கொண்ட
ஓதப் பெருக்கு பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.ஆற்று முகத்துவாரம் மற்றும் ஓதப் பெருக்கு அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளில் சதுப்பு மரங்கள் செறிந்து வளர்கின்றன.
சதுப்பு நிலக்காடுகள் எனப்படும் ஓதக் காடுகள் தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
பிச்சாவரம் காடுகள்
பிச்சாவரம் சதுப்பு காடுகள் மாநிலத்தின் மிக முக்கிய சதுப்பு காடுகளாகும்.கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகர் அருகே வங்காள விரிகுடா கடலின் அமிழ்ந்த நிலப்பகுதியில் இக்காடுகள் சுமார் 1,214 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
பிச்சாவரம் காடுகளில் சிறு சிறு தீவுகளாக உள்ள மரக் கூட்டங்களால் வெப்ப மண்டல மற்றும் பசுமை மாறா மரங்களும் புதர் வகைகளும் காணப்படுகின்றன. பிச்சாவரக் காடுகளில் ரைசோபோரா என்னும் சுரப்புன்னை மரங்களும், அவிசினியா என்னும் காந்தள் மரங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள் 25 ச.கி.மீட்டர் பரப்பில் பரவியுள்ளது.
கோடிக்கரை காடுகள்
வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடிக்கரை சோழ மண்டலக் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுருவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி.கோடிக்கரை வெப்பமண்டல உலர் பசுமை மாறா காடுகள் அமைந்துள்ளது.
கோடிக்கரையில் சதுப்புநிலக் காடுகள் (வேதாரண்யம் காடுகள்) 17 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரவியுள்ளது.
கோடிக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் (Point Calimere Wildlife and Bird Sanctuary) இங்கு அமைந்துள்ளது.
மலையகக் காடுகள்
மழைப்பொழிவு அதிகமாக உள்ள மலைச்சரிவுகளில் மலையகக் காடுகள் காணப்படுகின்றன.மலையகக் காடுகள் தமிழகப் பகுதியிலுள்ள ஆனைமலைப் பகுதியிலும், நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது. மரங்கள், சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகள் இங்கு காணப்படுகின்றன.
கடல்கள்
தமிழகத்தின் கிழக்கில் வங்கக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங் கடலும், மேற்கில் அரபிக்கடலும் இயற்கை அரண்கள் போன்று அமைந்துள்ளன.இக்கடல் அரண்கள் பற்றிச் சிலப்பதிகாரம் 'நாமநீர் வேலி யுலகிற்கு' (மங்கல வாழ்த்துப்பாடல்:8) (நாமநீர் அச்சத்தைத் தருகின்ற கடல்; வேலி : அரண்)என்றதொடரால் குறிப்பிடுகின்றது. நெடியோன்குன்றம் தொடியோன் பௌவம் என்றும் தமிழ் நாட்டின் எல்லை குறிப்பிடப் படுகிறது.
சங்க காலத்தில் கிழக்குக் கடற்கரையில் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, காயல் போன்ற துறைமுகப்பட்டினங்கள் சிறப்புற்று விளங்கின.
தமிழகத்தைச்சுற்றி மூன்று புறத்திலும் கடல் சூழ்ந்து இருந்ததால் முத்துக்குளிக்கும்தொழில் அயல்நாட்டுச் செலாவணியைத் தேடித் தந்தது.
கிரேக்கர், ரோமர், பினீசியர் (அரேபியர்) சீனர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் ஆகியோர் வணிகம் செய்யத் தமிழகத்திற்குக் கடல் வழியாக வந்து சென்றுள்ளனர்.
ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களும் தமிழகத்திற்கு அந்நியச்செலாவணியைத் தேடித் தந்தன.
தமிழகம் வளர்ச்சி பெற உதவி நன்மையை அளித்த இக்கடல்கள் தீங்கும் விளைவித்துள்ளன. கடல் கோள்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கைச் சீற்றமான புயல், கடல் அரிப்பு இவற்றால் தமிழகம் பல இன்னல்களைச் சந்தித்துள்ளது.
முதல் கடற்கோளில் தென் மதுரையில் இருந்த முதற் தமழ் சங்கமும் இரண்டாம் கடற்கோளில் கபாடபுரத்தில் இருந்த இடைச்சங்கமும் அழிந்தது குறித்து இறையனார் களவியலூரை கூறுகிறது.
1964ல் ஏற்பட்ட கடல் புயலில் ராமநாதபுரத்தின் ஒரு பகுதியான தனுஷ்கோடி கடலில் மூழ்கியது.
2006 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப் பேரலை (சுனாமி) தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு கடும் சேதத்தை விளைவித்துள்ளது.
நீண்ட மலைத்தொடர்களும், கடல்களும் இருந்தமையால் தமிழகத்தில் பேரரசுகள் தோன்றுவது கடினமாக இருந்தது.
No comments:
Post a Comment