தமிழகத்தின் காலநிலையும், வானிலையும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளி மண்டலத்தில் காணப்படும் சூழல் வானிலை (Weather).
ஓரு பெரிய பரப்பிற்கான நீண்டகால சராசரி வானிலை (பொதுவாக சுமார் 30 வருடங்களுக் கான சராசரி வானிலை) காலநிலை எனப்படும்.
முக்கிய காலநிலைக் கூறுகள் : வெப்பநிலை, அழுத்தநிலை, காற்று, ஈரப்பதம், மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு.
இயற்கை அமைப்பு, கடலுக்கு அண்மை மற்றும் புவியியல் அமைவிடம் ஆகிய காரணிகள் புவியியல் பகுதிகளின் காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.
தமிழகத்தைப்
பொருத்தவரையில் உயரமான மலைகளிலும் குன்றுகளிலும் அமைந்துள்ள இடங்கள்
குளிராகவும், மற்ற நிலப்பரப்பில் உள்ள இடங்கள் சற்று வெப்பமாகவும் தட்ப
வெப்பநிலை இருக்கிறது.
ஆண்டுக்கு இருமுறை சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும்.
தமிழ்நாட்டின் காலநிலையைப் பாதிக்கக்கூடிய காரணிகள்... சூரியனின் கதிர்கள் பூமியில் படும் கோணம் மற்றும் மழையைத் தருவிக்கும் காற்றுகளால் உண்டாகும் நேரடித் தாக்கம் ஆகியவை ஆகும்.
தமிழ்நாடு வெப்ப மண்டலக் காலநிலை பிரதேசத்தில் அமையப் பெற்றிருக்கிறது. இருந்தாலும், அதன் உள்நாட்டு வானிலை, சூழல் காரணமாக... வெப்பநிலை, ஈரப்பதம், மேகங்களின் அமைப்பு மற்றும் காற்றுவீசும் திசை ஆகிய காரணிகளால், பிற வெப்ப மண்டலப்பிரதேசங்களிலிருந்து தமிழ் நாடு பெரிதும் வேறுபடுகிறது.
பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து உயரத்தொடங்கும் வெப்ப அளவு, ஒரே சீராக உயர்ந்து... மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களின் முடிவில் கோடைப் பருவத்திற்கான உச்ச அளவை எட்டுகிறது.
ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து வெப்பம் மெல்ல, குறையத் தொடங்கி அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவக்காற்று மழையால் மேலும் குறைந்து... அந்நிலை பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது.
தமிழ்நாட்டில் மே மாதம் வெப்பமிகு மாதமாகவும், ஜனவரி மாதம் குளிர் மிகுந்த மாதமாகவும் உள்ளது.
கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும் வேலூர், சேலம் போன்ற உள்நாட்டுச் சமவெளி பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸும் நிலவுகிறது. அதேசமயம் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் 16 டிகிரி செல்சியஸும், கோவை போன்ற பீடபூமி பகுதிகளில் 32 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
குளிர்காலத்தில் கடலோரப் பகுதிகளிலும் உள்நாட்டுச் சமவெளிப் பகுதிகளிலும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. பீடபூமி பகுதிகளில் 26 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் 11 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
மழைகாலத்தில் கடலோரப் பகுதிகளில் 25 டிகிரி செல்சியஸும் உள்நாட்டுச் சமவெளிப் பகுதிகளில் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவுகிறது. பீடபூமி பகுதிகளில் 21 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
ஒப்பு ஈரப்பதம் (ஸிமீறீணீtவீஸ்மீ பிuனீவீபீவீtஹ்) கோடைக்கால மாதங்களைவிட குளிர் காலத்தில் அதிகமாகவே உள்ளது.
மே மாதத்தில் காற்றின் சராசரி ஈரப்பதம் 68 சதவீதமாகவும், ஜனவரிமாதத்தில் 82 சதவீதமாகவும் உள்ளது.
ஆவியாதல் குளிர்காலத்தைவிட, கோடை காலத்தில்தான் அதிகமாக காணப்படுகின்றது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைப்பொழிவு தரும் மேகங்கள் பெரும் அளவில் காணப்படுகின்றன.
மான்சூன் என்ற சொல்லானது மௌசம் என்ற அரேபியச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லுக்கு பருவம் என்ற பொருள். ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நேர் எதிர் திசைகளிலிருந்து வீசும் காற்றுகளை பருவக் காற்று என்பர்.
கோடை காலத்தின் அதிக வெப்பமான காலம், அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் எனப்படும்.
மழையளவு
குறைந்தபட்சம் : 912 மி.மீ
அதிக பட்சம் : 938 மி.மீ
நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் இம்மழைப் பொழிவால் பயனடைகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்று மழை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இப்பருவ மழை முதலில் தொடங்குவதால் அங்கு சராசரியாக 150 செ.மீ. மழை பொழிகின்றது.
பருவக்காற்று தென்மேற்கு திசையில் வீசுவதன் காரணமாக, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் உட்பகுதிகள் இப்பருவ மழைக்கு மழைமறைவுப் பிரதேசமாகின்றது.
பொதுவாக மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லக் குறைகிறது. அதிகபட்ச அளவாக 70% மழை நீலகிரி மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக அளவு மழையைப் பெறுகின்றன.
இப்பருவ மழையால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழைப் பொழிவைப் பெறுகின்றன.
பொதுவாக இப்பருவ காலத்தில் வடகிழக்குப் பருவ மழையும் சூறாவளி மழையும் இணைந்தே மழைப் பொழிவைத் தருகின்றன.
இப்பருவ மழையின்போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப் பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப் பொழிவையும் பெறுகிறது.
கன்னியாகுமரியைத் தவிர மற்ற கடற்கரை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் 150 செ.மீ. முதல் 200 செ.மீ வரை மழைப் பொழிவை வடகிழக்குப் பருவமழையின் மூலம் பெறுகின்றது.
திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் 100 செ.மீ. முதல் 150 செ.மீ. வரை இப்பருவ காலத்தில் மழையைப் பெறு கின்றன.
வடகிழக்கு பருவமழை யும் சூறாவளி மழைப் பொழிவும் சமமான அளவில் கடலோர மாவட்டங்களுக்கு மழைப் பொழிவைத் தருகின்றன.
ஆண்டு மழைப் பொழிவின் அளவைக் கொண்டு தமிழ்நாட்டின் மாவட்டங்களை ஐந்து மழை மாவட்டங்களாகப் பிரிக்கலாம். (அட்ட வணையைப் பார்க்கவும்).
கடலோர மாவட்டங் களும், நீலகிரி மாவட்டமும் ஆண்டிற்கு சுமார் 1400 மி.மீட்டருக்கு மேல் மழை பெறுகிறது.
தமிழக மாவட்டங்களுள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே மூன்று பருவ காலங்களிலும் மழையைப் பெறும் மாவட்டமாகும்.
ஆண்டின் மொத்த மழை அளவில் குறைந்த அளவு மழையை கோயம்புத்தூர் மாவட்டம் பெறுகின்றது.
தென்மேற்குப் பருவக்காற்று இந்துமகா சமுத்திரத்தையும், அரபிக்கடலையும் கடந்து மேகங்களைக் கொண்டு வந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்புறத்தைத் தாக்குகின்றது. அதனால் அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. இதனால் அண்டை மாநிலமான கேரளத்திற்குக் குறைவின்றி நீர்வளம்
கிடைக்கின்றது.
தென்மேற்குப் பருவக்காற்று உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து வீசுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு மிகுதியான மழை இல்லை எனலாம். இருப்பினும் இக்காற்று பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து சேர்வராயன் மலைகளில் மோதுவதால் சிறிதளவு மழை பெய்கிறது.
ஆகஸ்ட் மாதத்தின் இடையில் காவிரி ஆற்று ஓரங்களில் இக்காற்று மிகுதியாக வீசுவதால் தஞ்சாவூர், மதுரை, கோயம் புத்தூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நல்ல மழை பெய்கிறது.
ஆகஸ்ட் மாத இறுதியிலும் செப்டம்பர் முழுவதிலும் இக்காற்று காஞ்சிபுரத்திற்கும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கும் இடைப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கும், மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கும் மழையைத் தருவதுண்டு.
மேற்கு மலைத்தொடரின் கீழ்ப்புறமுள்ள சமவெளிப் பகுதிகளில், பொதுவாகத் தமிழகத்தில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்வதுண்டு.
சில சமயங்களில் வடகிழக்குப் பருவக்காற்றால் அளவுக்கு மீறிய மழையும்
பெய்வதுண்டு. வங்கக்கடலில் அவ்வப்போது ஏற்படும் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு மண்டலத்தால் புயல் காற்று வீசுகின்றது.
முக்கிய காலநிலைக் கூறுகள் : வெப்பநிலை, அழுத்தநிலை, காற்று, ஈரப்பதம், மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு.
இயற்கை அமைப்பு, கடலுக்கு அண்மை மற்றும் புவியியல் அமைவிடம் ஆகிய காரணிகள் புவியியல் பகுதிகளின் காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.
காலந்தோறும் காலநிலை
தமிழ்நாட்டின் காலநிலை பொதுவாக வெப்ப மண்டல காலநிலை வகையைச் சார்ந்ததாகும்.
ஆண்டுக்கு இருமுறை சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும்.
தமிழ்நாட்டின் காலநிலையைப் பாதிக்கக்கூடிய காரணிகள்... சூரியனின் கதிர்கள் பூமியில் படும் கோணம் மற்றும் மழையைத் தருவிக்கும் காற்றுகளால் உண்டாகும் நேரடித் தாக்கம் ஆகியவை ஆகும்.
தமிழ்நாடு வெப்ப மண்டலக் காலநிலை பிரதேசத்தில் அமையப் பெற்றிருக்கிறது. இருந்தாலும், அதன் உள்நாட்டு வானிலை, சூழல் காரணமாக... வெப்பநிலை, ஈரப்பதம், மேகங்களின் அமைப்பு மற்றும் காற்றுவீசும் திசை ஆகிய காரணிகளால், பிற வெப்ப மண்டலப்பிரதேசங்களிலிருந்து தமிழ் நாடு பெரிதும் வேறுபடுகிறது.
பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து உயரத்தொடங்கும் வெப்ப அளவு, ஒரே சீராக உயர்ந்து... மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களின் முடிவில் கோடைப் பருவத்திற்கான உச்ச அளவை எட்டுகிறது.
ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து வெப்பம் மெல்ல, குறையத் தொடங்கி அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவக்காற்று மழையால் மேலும் குறைந்து... அந்நிலை பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது.
தமிழ்நாட்டில் மே மாதம் வெப்பமிகு மாதமாகவும், ஜனவரி மாதம் குளிர் மிகுந்த மாதமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் வெப்பநிலை
தமிழ்நாட்டின் வெப்பநிலை பொதுவாக மேற்குறிப்பிட்ட முறையில்
இருந்தாலும்... கடற்கரை சமவெளி, பீடபூமி மற்றும் மலைப்பகுதிகளில் பருவ
காலங் களுக்கு ஏற்ப அதன் காலநிலை மாறுபட்டுக் காணப்படுகிறது.கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும் வேலூர், சேலம் போன்ற உள்நாட்டுச் சமவெளி பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸும் நிலவுகிறது. அதேசமயம் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் 16 டிகிரி செல்சியஸும், கோவை போன்ற பீடபூமி பகுதிகளில் 32 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
குளிர்காலத்தில் கடலோரப் பகுதிகளிலும் உள்நாட்டுச் சமவெளிப் பகுதிகளிலும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. பீடபூமி பகுதிகளில் 26 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் 11 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
மழைகாலத்தில் கடலோரப் பகுதிகளில் 25 டிகிரி செல்சியஸும் உள்நாட்டுச் சமவெளிப் பகுதிகளில் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவுகிறது. பீடபூமி பகுதிகளில் 21 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவுகிறது.
ஒப்பு ஈரப்பதம் (ஸிமீறீணீtவீஸ்மீ பிuனீவீபீவீtஹ்) கோடைக்கால மாதங்களைவிட குளிர் காலத்தில் அதிகமாகவே உள்ளது.
மே மாதத்தில் காற்றின் சராசரி ஈரப்பதம் 68 சதவீதமாகவும், ஜனவரிமாதத்தில் 82 சதவீதமாகவும் உள்ளது.
ஆவியாதல் குளிர்காலத்தைவிட, கோடை காலத்தில்தான் அதிகமாக காணப்படுகின்றது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைப்பொழிவு தரும் மேகங்கள் பெரும் அளவில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் மழைப் பொழிவு
தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று மழைப் பொழிவு, வடகிழக்கு பருவக்
காற்று மழைப் பொழிவு மற்றும் சூறாவளி மழைப் பொழிவு ஆகிய மூன்று
மழைப்பொழிவுகளால் மழை பெறுகிறது.மான்சூன் என்ற சொல்லானது மௌசம் என்ற அரேபியச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லுக்கு பருவம் என்ற பொருள். ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நேர் எதிர் திசைகளிலிருந்து வீசும் காற்றுகளை பருவக் காற்று என்பர்.
கோடை காலத்தின் அதிக வெப்பமான காலம், அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் எனப்படும்.
மழையளவு
குறைந்தபட்சம் : 912 மி.மீ
அதிக பட்சம் : 938 மி.மீ
தென்மேற்குப் பருவக்காற்று மழைப்பொழிவு
தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காலம் ஜூன்முதல் செப்டம்பர் மாதம் வரை நிலவுகிறது.நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் இம்மழைப் பொழிவால் பயனடைகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்று மழை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இப்பருவ மழை முதலில் தொடங்குவதால் அங்கு சராசரியாக 150 செ.மீ. மழை பொழிகின்றது.
பருவக்காற்று தென்மேற்கு திசையில் வீசுவதன் காரணமாக, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் உட்பகுதிகள் இப்பருவ மழைக்கு மழைமறைவுப் பிரதேசமாகின்றது.
பொதுவாக மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லக் குறைகிறது. அதிகபட்ச அளவாக 70% மழை நீலகிரி மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக அளவு மழையைப் பெறுகின்றன.

வடகிழக்குப் பருவக்காற்று மழைப் பொழிவு
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு காணப்படுகிறது.இப்பருவ மழையால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழைப் பொழிவைப் பெறுகின்றன.
பொதுவாக இப்பருவ காலத்தில் வடகிழக்குப் பருவ மழையும் சூறாவளி மழையும் இணைந்தே மழைப் பொழிவைத் தருகின்றன.
இப்பருவ மழையின்போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப் பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப் பொழிவையும் பெறுகிறது.
கன்னியாகுமரியைத் தவிர மற்ற கடற்கரை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் 150 செ.மீ. முதல் 200 செ.மீ வரை மழைப் பொழிவை வடகிழக்குப் பருவமழையின் மூலம் பெறுகின்றது.
திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் 100 செ.மீ. முதல் 150 செ.மீ. வரை இப்பருவ காலத்தில் மழையைப் பெறு கின்றன.

சூறாவளி மழைப் பொழிவு
தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் சூறாவளி மழைப் பொழிவு மாதமாகும்.
வங்கக்கடலின் தென்பகுதியில் ஏற்படுகின்ற வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால்
தாழ் அழுத்தப்பகுதி உண்டாகி, அது மேன்மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக
மாறுகின்றது.வடகிழக்கு பருவமழை யும் சூறாவளி மழைப் பொழிவும் சமமான அளவில் கடலோர மாவட்டங்களுக்கு மழைப் பொழிவைத் தருகின்றன.
ஆண்டு மழைப் பொழிவின் அளவைக் கொண்டு தமிழ்நாட்டின் மாவட்டங்களை ஐந்து மழை மாவட்டங்களாகப் பிரிக்கலாம். (அட்ட வணையைப் பார்க்கவும்).
கடலோர மாவட்டங் களும், நீலகிரி மாவட்டமும் ஆண்டிற்கு சுமார் 1400 மி.மீட்டருக்கு மேல் மழை பெறுகிறது.
தமிழக மாவட்டங்களுள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே மூன்று பருவ காலங்களிலும் மழையைப் பெறும் மாவட்டமாகும்.
ஆண்டின் மொத்த மழை அளவில் குறைந்த அளவு மழையை கோயம்புத்தூர் மாவட்டம் பெறுகின்றது.
பருவக் காற்றுகள்
தமிழகத்தில் தமிழகத்திற்கு மழையை வழங்கும் தென்மேற்குப் பருவக்காற்று,
வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகையான காற்றுகள் இரு பருவங்களில்
வீசுகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்று
தென்மேற்குப் பருவக்காற்று ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் வீசுகின்றது.தென்மேற்குப் பருவக்காற்று இந்துமகா சமுத்திரத்தையும், அரபிக்கடலையும் கடந்து மேகங்களைக் கொண்டு வந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்புறத்தைத் தாக்குகின்றது. அதனால் அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. இதனால் அண்டை மாநிலமான கேரளத்திற்குக் குறைவின்றி நீர்வளம்

தென்மேற்குப் பருவக்காற்று உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து வீசுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு மிகுதியான மழை இல்லை எனலாம். இருப்பினும் இக்காற்று பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து சேர்வராயன் மலைகளில் மோதுவதால் சிறிதளவு மழை பெய்கிறது.
ஆகஸ்ட் மாதத்தின் இடையில் காவிரி ஆற்று ஓரங்களில் இக்காற்று மிகுதியாக வீசுவதால் தஞ்சாவூர், மதுரை, கோயம் புத்தூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நல்ல மழை பெய்கிறது.
ஆகஸ்ட் மாத இறுதியிலும் செப்டம்பர் முழுவதிலும் இக்காற்று காஞ்சிபுரத்திற்கும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கும் இடைப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கும், மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கும் மழையைத் தருவதுண்டு.
வடகிழக்குப் பருவக்காற்று
வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் வீசுகின்றது.மேற்கு மலைத்தொடரின் கீழ்ப்புறமுள்ள சமவெளிப் பகுதிகளில், பொதுவாகத் தமிழகத்தில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்வதுண்டு.

No comments:
Post a Comment