Thursday 17 December 2015

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
5..இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
8..அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
14..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
15..அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

விடைகள்..
1..திருக்குறள்.
2..சீவக சிந்தாமணி.
3..கம்பராமாயாணம்.
4..பெரிய புராணம்.
5..கலித்தொகை.
6..புறநானூறு.
7..குறிஞ்சிப்பாட்டு.
8..பெருங்கதை .
9..நேமிநாதம்.
10..பத்துப்பாட்டு.
11.திருவாசகம்.
12..பதிற்றுப்பத்து.
13..தேவாரப்பதிகங்கள்.
14..சுந்தரரின் பதிகங்கள்.
15..முதுமொழிக்காஞ்சி.
16..மணிமேகலை.
17..குண்டலகேசி.
18..ஏலாதி.
19. திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
20..இலக்கண விளக்கம்..

மரபுக்கவிதை

பொதுத்தமிழ் பிரிவில் ***மரபுக்கவிதை *** பகுதியில் இருந்து முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன .

1..பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?
2..மக்கள் கவிஞர்,பொது உடைமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
3..செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
4..எனது வலது கை என்று பட்டுக்கோட்டையைப் பார்த்து புகழ்ந்தவர் ?
5..தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர்?
6..அவர் கோட்டை நான் பேட்டை என்று கூறியவர்?
7..பெரியார் பெருந் தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?
8..பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர்?
10..கவி வாணர் என்று அழைக்கப்பட்டவர்?
11..எத்திராசுலு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..முத்தையா என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..இராச கோபாலன் என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..துரைராசு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர்?
14..துப்பாக்கி என்று அழைக்கப்பட்டவர்?
15..பாவலர் மணி என்று அழைக்கப்பட்டவர்?
16..தமிழகத்தின் வர்ட்ச்வொர்த் என்று அழைக்கப்பட்டவர்?
17..ரமி என்ற புனைப் பெயர் கொண்டவர்?
18..எழிலோவியம் எழுதியவர்?
19..பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?
20..பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவ்வாலியர் விருது பெற்றவர்?
21..குழந்தை இலக்கியம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
22..கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி க்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த வருடம்?
23..அனார்கலி,ஊமையன் கோட்டை,குமரி காண்டம் எழுதியவர்?
24..கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்ற பாடலை எழுதியவர்?
25..வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே என்ற பாடலை எழுதியவர்?
26..ஏர்முனை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
27..திரைக்கவித்திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
28..ஊன்றுகோல் எழுதியவர்?
29..பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் என்று அழைக்கப்பட்டவர்?
30..முடியரசனை அண்ணா அவர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
31..யார் கவிஞன் எழுதியவர்?
32..பூங்கொடி எழுதியவர்?
33..கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
34..தேன்மழை எழுதியவர்?
35..சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?
36..சுரதாவின் முதல் நூல் எது?
37..சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?
38..உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?
39..பட்டத்தரசி ,மங்கையர்க்கரசி எழுதியவர்?
40..விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

உடல் நலம், மன நலம் காக்க சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

உடல் நலம், மன நலம் காக்க
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…
(கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி
கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது ­.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ­ ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச்தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும். உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும் ­. ஒழுங்காகசாப்பிடத்தோன்று ம். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருட ­ன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்

ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்திலிருந்து

ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்திலிருந்து (Who will cry when you die?") சில மேற்கோள் வாக்கியங்கள் (in whatsapp post)

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். (Negative or Positive Experience)

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். (அதே நேரத்தில் நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்)

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

13. எதிலும் தனித்துவமாக (Unique) இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

14. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

15. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

Wednesday 9 December 2015

ராஜாஜி

டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..
இளம்வயதிலேயே கிட்டப்பார்வையால் கண்ணாடி போட்ட அவருக்கு பள்ளிக்காலத்தில் நண்பர்கள் வெகு குறைவாகவே இருந்தனர். அரசுப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் மெட்ரிகுலேசன் தேர்வில் சாதித்துக்காட்டினார் அவர். பின்னர் சட்டம் படித்து முடித்த பின்னர் சேலத்தில் பிரபல வழக்கறிஞர் ஆனார் அவர். அப்பொழுதே ஆயிரம் ரூபாய் ஒரு வழக்குக்கு வாங்குகிற அளவுக்கு வருமானம்
உடையவராக இருந்தார் அவர். 1917 இல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார் அவர். சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் ஆறு மணிநேரம் தினமும் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.
1909-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாருடன் பழகும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்கான போராட்டம் குறித்து இருவரும் பல சந்திப்புகளில் விவாதித்தனர். இது பற்றி காந்தியடிகளையும் சந்தித்து ராஜாஜி பேசினார். சென்னையில் இருந்த ராஜாஜியின் வீட்டில்தான் மகாகவி பாரதியார் முதன்முறையாக காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஈர்க்க பல்லாயிரம் ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை துறந்தார் அவர். உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் அவர்.
1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றபின்னர் முதல்வர் ஆனார் அவர். மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர். ஆலய பிரவேசத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியப்படுத்தினார் விவசாயிகளின் கடன் சுமையை
குறைக்கவும் சட்டமியற்றினார்.
அடுத்து ஹிந்தி மொழியை 125 பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் கொண்டு வந்தார். இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என்று ராஜாஜி நினைத்தார். "குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பலவந்தம் செய்தாலும் பரவாயில்லை. தமிழ்மொழி கால் போன்றது ; ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி !" என்று விளக்கம் தந்தார் அவர். நாவலர்
சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ஹிந்தி எதிர்ப்புக்குழு உருவானது. பெரியார் ,"ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார். இங்கே தமிழ் எங்கே இருக்கிறது ?" என்று முழங்கினார். அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார் ராஜாஜி . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியதால் ஹிந்து திணிப்பு அதோடு நின்று போனது.
ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். போர்க்காலத்தில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் என்று சொன்னார் அவர். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 1951 ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதிக இடங்களில் வென்றிருந்தார்கள். ராஜாஜியை அழைத்தார்கள். காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் அவர். ராஜாஜி தன் வாழ்நாளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறார்.
பதவிக்கு வந்ததும் போட்ட முதல் உத்தவரவு கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான். குலக்கல்வி முறையை அடுத்து கொண்டுவந்தார் அவர். ஐந்து பாடவேளைகள் என்பதை மூன்று பாடவேளைகள் என்று குறைத்தார் ராஜாஜி. ஷிப்ட் முறையில் ஒரே நாளில் இரண்டு பிரிவாக வகுப்புகள் நடக்கும். காலையில் பள்ளியில் படித்துவிட்டு மதியம் போய் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் பிள்ளைகள் உதவவேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அது சாதியத்தை காப்பாற்றவும், வலுப்படுத்தவும் செய்யும் என்று எதிர்த்தார்கள். பெரியார் ,"ராஜாஜி கிராமத்து பையனுக்கு கல்வி வேண்டாம் என்று சொல்கிறாரா ? மூன்றே பாடவேளைகள் என்பதால் மிச்ச நேரத்தில் அவன் கழுதை மேய்த்துக்கொண்டும், முடி வெட்டிக்கொண்டும், துணி துவைத்துக்கொண்டும்
இருக்க வேண்டுமா ?" என்று பொங்கினார். தொழிற்கல்வித்திட்டம் குலக்கல்வி என்று அழைக்கப்பட்டது.
ராஜாஜி அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவை எடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. "ராமானுஜர்,சங்கரர் முதலானோர் மற்றவரை கேட்டுவிட்டா தங்களின் தத்துவங்களை வெளியிட்டார்கள் ? இது நிர்வாக ரீதியான முடிவு " என்றார் ராஜாஜி. ஆனாலும்,ஆசிரியர்கள் ஆறு பாடவேளைகள் பாடமெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த சம்பள
உயர்வையும் ராஜாஜி வழங்கவில்லை. அவர்களை கலந்தாலோசிக்கவும் இல்லை. பருலேகர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து தான் செய்தது சரியென்று சொன்னார் ராஜாஜி. அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் அவர்.
அவருக்கு பின்னர் காமராஜர் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
ராஜாஜியின் வாழ்க்கையில் இருந்த நேர்மை சிலிர்க்க வைப்பது. கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்த அவர் வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் பீரோக்களில் அடுக்கி கொடுத்துவிட்டு கையில் தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறியவர் அவர்.
தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படியே இயங்குவார் அவர். சத்தியமூர்த்தியின் சிஷ்யர் என்று காமராஜரை எதிர்த்தார் இவர். அண்ணாவுடன் கூட்டணி போட்டு அவரின் தோல்விக்கு அடிகோலினார். பின்னர் அதே காமராஜருடன் இணைந்தார். கம்யூனிஸ்ட்கள் முதல் எதிரி என்றவர் அவர்களோடும் கூட்டணி வைத்தார். இவை சுய லாபத்துக்காக என்று சொல்ல முடியாது. அவரின் சுய சிந்தனைக்கு எது சரியோ அப்படி இயங்கினார் அவர். அமெரிக்கா சென்றிருந்த பொழுது கென்னடியை சந்தித்து அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று அற்புதமாக எடுத்துரைத்து விட்டு வந்தார் ராஜாஜி.
சுதந்திரா கட்சியை ஆரம்பித்து தொழிலதிபர்களுக்கு தன்னுடைய ஆதரவைக்காட்டிய அவர் மேடைகளில் யாரேனும் பேசிக்கொண்டு இருக்கிற பொழுது ஒரு காதில் கைவைத்துக்கொண்டு விடுவார். அவருக்கு இன்னொரு காது கேட்காது. இரண்டு காதுகளும் இப்படி கேட்காத சமயத்தில் அந்த இதழுக்கு என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசிப்பார் அவர். சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய நூல்களை எழுதிய அவர் மதபீடங்களின் தலைவர்களை சந்தித்தது இல்லை. கோயில்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தார். அவரின் கீழே வங்கத்தில் மதக்கலவரங்கள் பெருமளவில் நின்றன. ராஜாஜியின் மதச்சார்பின்மை அவரை படேல் 'அரை முஸ்லீம் !' என்று குறிக்கிற அளவுக்கு இருந்தது. அந்த குணமே அவரை ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தது. குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மரணமடைந்து இருந்த சூழலிலும் ,"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !" என்று பாடல் எழுதினார் அவர். டாக்டர் ராஜாஜி என்றொரு கூட்டத்தில் அழைத்த பொழுது ,"எனக்கென்று பெயர் இருக்கிறது. எதற்கு இந்த பட்டங்கள் எல்லாம் ?" என்று கடிந்து கொண்டார் அவர்.
நேருவின் அமைச்சரவையில் இருந்த ராஜாஜி நேருவின் கம்யூனிஸ்ட்கள் மீதான பாசத்தை கண்டித்தார். தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேரு குறைத்ததை ஏற்க மறுத்தார் ராஜாஜி. நேருவின் சோவியத்துடன் நட்பு என்கிற கொள்கையையும் குறை சொன்னார். சீனா ஆபத்தானது என்று முன்கூட்டியே எச்சரித்தார். இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரி ஹிந்து மகா சபை என்றார் நேரு. கம்யூனிஸ்ட்கள் என்றார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கி சுதந்திரா கட்சியை துவங்கினார்.
ராஜாஜியிடம் எல்லையில்லா நாகரீகம் இருந்தது. நேருவுடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,"என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !" என்று பதிவு
செய்தார்.
பெரியாருக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கமானது.ராஜாஜியை வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாக பெரியார் எதிர்த்தாலும் மணியம்மையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் அது குறித்து ராஜாஜியிடமே ஆலோசனை கேட்டார். ஒருமுறை ஒரு விஷயத்தில் இப்படி செய்யலாமா என்று பெரியாரிடம் கேட்ட பொழுது வேறொரு யோசனையை சொன்னார் பெரியார். "மக்கள் என்ன நினைப்பார்கள் ?" என்று கேட்டார் ராஜாஜி. "மக்கள் யாரு ? ஒண்ணு நீங்க இல்லை நானு ஆச்சாரியாரே !" என்று சொன்னார் பெரியார். ராஜாஜி தள்ளாடும் வயதில் தமிழக முதல்வர் கலைஞர்
மதுவிலக்கை நீக்க முடிவு செய்த பொழுது கொட்டும் மழையில் அவரை சந்தித்து அவரின் கைபிடித்து அதை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவர் இறந்த பொழுது அவரின் வாழ்நாள் நண்பர் பெரியார் கதறி கதறி அழுதார்.

Tuesday 8 December 2015

★☆★2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்★☆★

★☆★2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்★☆★

★கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
★உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
★கம்பர் விருது – கோ. செல்வம்
★சொல்லின் செல்வர் விருது – முனைவர் சோ. சத்தியசீலன்
★ஜி.யு. போப் விருது - மதுரை இளங்கவின்
(எம்.ஆரோக்கியசாமி)
★உமறுப்புலவர் விருது – மு. சாய்பு மரைக்காயர்
★இளங்கோவடிகள் விருது – முனைவர். நிர்மலா மோகன்
★மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
★அண்ணல் அம்பேத்கார் விருது – ஆழி. கு. மகாலிங்கம்
★பேரறிஞர் அண்ணா விருது – திருமதி. கஸ்தூரி ராஜா
★தமிழ்த்தென்றல்திரு.வி.க. விருது - கரு. நாகராஜன்
★திருவள்ளுவர் விருது – திருக்குறள். க. பாஸ்கரன்
★தந்தை பெரியார் விருது – தாவூஜி குப்தா
★பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கண்மதியன்
★பெருந்தலைவர் காமராஜர் விருது – கருமுத்து. தி. கண்ணன்
★முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – பேராசிரியர் எம்.ஏ. ஜேம்ஸ்
★தமிழ்த்தாய் விருது – திருவனந்தபுரம் தமிழ்சங்கம்

பாரதிதாசனை

 பாரதி தாசன் என்ற சுப்புரத்தினம்(புரச்சி கவிஞர்)!!!


பெற்றோர்:கனகசபை-லட்சுமி


29.4.1891 முதல் 21.4.1964 வரை 73 வயது ( புதுச் சேரி)


1938-->இந்தி எதிர்ப்பு.

பாரதிதாசன் நூல்கள்:

1.பாண்டியன் பரிசு, 2.சேர தாண்டவம், 3.அழகின் சிரிப்பு ( இயற்கையை வர்ணிப்பது), 4.குடும்ப விளக்கு ( கற்ற பெண்களின் சிறப்பை கூறுவது), 5.இருண்ட வீடு ( கல்லாத பெண்களின் இழிவை கூறுவது), 6.குறிஞ்சித் திட்டு, 7.கண்ணகி, 8.புரட்சிக் காப்பியம் ( பில்கணியத்தின் தழுவல்), 9.மணிமேகலை வெண்பா, 10.காதல் நினைவுகள், 11.கழைக்கூத்தியின் காதல், 12.தமிழிச்சியின் கத்தி, 13.அமைதி, 14.இளைஞர் இலக்கியம், 15.சௌமியன், 16.நல்ல தீர்ப்பு, 17.தமிழ் இயக்கம், 18.இரண்யன் அல்லது இணையற்ற வீரன், 19.காதலா கடமையா???, 20.சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ( பொதுவுடைமை வலியுறுத்தியது)

பாரதிதாசன் நடத்திய இதழ்--> "குயில்"

♪பாரதியின் கட்டளைக்கிணங்க பாரதிதாசன் பாடியது:
"எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா"

பாரதிதாசனின் மேற்கோள்கள்:::
♪"கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்"

♪"தமிழுக்கும் அமுதென்று பேர்"

♪"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்"

♪"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"

♪"கொலை வாளினை எடடா-மிகு
கொடியோர் செயல் அறவே"

♪"மங்கை ஓருத்தி தரும் சுகம்-எங்கள்
மாத்தமிழூக்கு ஈடில்லை"

♪"தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்".


புதுமைப்பித்தன் பாரதிதாசனை "அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்"


கு.ப.ரா என்பவர் பாரதிதாசனை "பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி"


அ.சிதம்பரநாத செட்டியார் என்பவர் பாரதிதாசனை " அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்"

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்

நவம்பர் 27: விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார்
மனிதர்; கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார். இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார், அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின்  நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார்.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன. சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

 காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் இவரே.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நாளில் மரணம் அடைந்தார்...

GK TAMIL

இராமலிங்க அடிகளாரை திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைத்தவர் யார்?தொழுவூர் வேலாயுத முதலியார்
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?d பாரதிதாசன்
திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று புகழ்ந்தவர் யார்?ஆதிசங்கரர் - சொஸ்தலிகிதம் என்ற நூலில்
முதன் முதலில் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்’ - என்று கூறியவர் யார்?விடை - மு.வரதராசனார்
இக்கால அருணகிரி, தெய்வக் கவிராயர் – என்று போற்றப்படுபவர் யார்?குமரகுருதாசர் - பாம்பன் சுவாமிகள் (குமரகுருதாசர் என்பது இவருடைய இயற்பெயர்)
குமரகுருபரர் பேசும் திறன் பெற்றவுடன் முதலில் பாடிய நூல் எது?கந்தர் கலிவெண்பா
குமரகுருபரர் அவர் ஞானாசிரியர் மீது பாடிய நூல் - பண்டார மும்மணிக்கோவை
காசிம் புலவரை ‘இஸ்லாமிய மதுரகவி’ என்று புகழ்ந்தவர் யார்?
‘தமிழ் மொழி பண்டாரம்’ - என அழைக்கப்பட்டவர் யார்?ஒப்பிலாமணிப் புலவர்
பாரதிதாசனின் பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் - என்று கூறியவர்?சிதம்பர செட்டியார்
 பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி என்று கூறியவர் - கு.ப.ரா
அறிவு கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் என்று பாவேந்தரை புகழ்ந்தவர் - புதுமைப்பித்தன்
திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி என்று புகழ்ந்தவர் யார்?ஜி.யூ.போப்
டென்சிங் நார்கே விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது ?

Friday 20 November 2015

மொபைல் அப்ளிகேஷனயும்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

1..நாடித்துடிப்பு எதில் பார்க்கபடுகிறது?
ஆரத்தமனியில்.
2..பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது ?
SA முடிச்சு.
3..ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தவர்?
ரானோ லெய்நெக்
4..லப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
AV வால்வு மூடுவதால்.
5..டப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
அரைசந்திர வால்வு மூடுவதால்.
6..ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி.
7..இரத்த மாற்று அறுவை சிகிச்சையை முதலில் செய்தவர்?
ஜேம்ஸ் பிலெண்டல்.
8..இரத்த வகைகளை கண்டுபிடித்தவர்?
லேன்ட் ச்டெயினர்.
9..மனித ரதத்தின் PH மதிப்பு?
7.4.
10..கொடையாளி ரத்த வகை?
"o "
11..ஏற்பி ரத்த வகை?
"AB "
12..ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை?
ஆண்கள்-5-5.5 மில்லியன்.
பெண்கள்-4-4.5 மில்லியன்.
13..ரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை?
6000-8000.
14.ரத்த தட்டுகளின் எண்ணிக்கை?
200000-400000
15..ரத்த சிவப்பணுக்களின் மயானம்?
மண்ணீரல்.
16.ரத்த சிவப்பணு அதிகரிப்பு நோய்?
பாலி சைதீமியா.
17..ரத்த வெள்ளணுக்கள் அதிகரிப்பு நோய்?
லியூகோ சைடோசிஸ்.
18.ரத்த தட்டுகள் அதிகரிப்பு நோய்?
த்ராம்போ சைடோசிஸ்.
19.ரத்த சிவப்பணு குறை நோய்?
அனிமியா.
20..ரத்த வெள்ளணுக்கள் குறை நோய்?
லியூகோ பீனியா.
21..ரத்த தட்டுகள் குறை நோய்?
த்ராம்போபீனியா.
22.ரத்த வெள்ளையணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
போர் வீரர்கள்.
23.ரத்த சிவப்பணுக்களின் ஆயுள்காலம்?
120 நாட்கள்.
24..ரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவி?
ஹீமோசைடோமீட்டர்.
25..இந்தியாவில் அதிகம் காணப்படும் Rh காரணி?
நேர்மறை Rh

.

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15
**********************

1. பெல்லாக்ரா நோய் எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும்-- வைட்டமின் B3( நியாசின் )

2. கரும்பு ஒரு C4 தாவரம்

3. மனித இனத்தை மேம்பாடடையச் செய்ய மையமாகக் கொண்ட அறிவியல் -- யுஜெனிக்ஸ் ( Eugenics)

4. இருபெயர் கூட்டுமுறையை அறிமுகம் செய்தவர் -- கார்ல் லின்னேயஸ்

5. ஒரு சந்ததியினை அதன் பெற்றோருடன் கலப்பு செய்யும்போது அக்கலப்பினை அழைப்பது-- பிற்கலப்பு ( Back cross )

6. 'கிலோ- வாட் மணி ' என்பது எதன் அலகு ? மின் ஆற்றல் ( Electrical energy )

7. Ball point pen செயல்படும் தத்துவம் -- நுண்புழைத்தன்மை மற்றும் பரப்பு இழுவிசை

8. பரிணாம வளர்ச்சி -- சார்லஸ் டார்வின்
இரத்த ஓட்டம்- வில்லியம் ஹார்வி

9. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நீர்மட்டத்துக்கு மேல்/ தரை மேல் உள்ள பொருட்களைக் காண உதவுவது -- பெரிஸ்கோப்

10. ஒரு பொருளின் எடை துருவங்களில் அதிகம்

11. செயற்கை கருவுறுதலுக்குப் பயன்படுத்தப்படும் மாட்டின் விந்து எதில் சேமித்து வைக்கப்படும் -- திரவ நைட்ரஜன்

12. ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது
- 273 டிகிரி செல்சியஸ்

13. டெசிபல் என்பது எதன் அலகு ? ஒலிச்செறிவு

14. பென்சிலின் -- அலெக்ஸாண்டர் பிளெமிங்

வெறிநாய்க்கடி ( ராபிஸ் நோய் ) எதிர்ப்பு மருந்து - லூயி பாஸ்டியர்

15. ஃபிரியான் -- குளிர்பதனி

ஐயோடஃபார்ம் -- சீழ்தடுத்தல்

ஓசோன் -- சாயம் நீக்குதல்

16. " லூனார் காஸ்டிக் " எனப்படுவது -- வெள்ளி நைட்ரேட் ( AgNo3)

17. அழுகிய மீனின் மணமுடைய நிறமற்ற வாயு -- பாஸ்பீன் PH2

அழுகிய முட்டையின் மணமுடையது -- ஹைட்ரஜன் சல்பைடு H2S

18. உயர்மின்னழுத்த பொருட்களின் மேலுறை தயாரிக்கப் பயன்படுவது -- சிலிக்கோன்கள் ( silicones)

19. புகையிலையை உலராமல் பாதுகாத்து வைக்கப் பயன்படும் பொருள் -- கிளைக்கால் ( glycol)

20. இரசக்கலவை ( amalgam) என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி ( பாதரசம் ) உள்ளது.

21. மலேரியா நீக்கிகள் -- குளோரோகுயின்

நுண்ணுயிர் எதிரிகள் -- பென்சிலின்

22. புரத செயல்பாடுகளில் தொடர்புடைய வைட்டமின் எது ?
வைட்டமின் B2 ( ரிபோப்ளோவின் )

23. முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து BHC ( Benzene Hexa Chloride )

24. செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு -- மைக்ரான்

25. ஒற்றைக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் --
3:1

ஒற்றைக் கலப்பின் ஜீனாக்க விகிதம் --
1:2:1

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

676. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்? 677. முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

678. இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? 679. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?

680. தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?

681. கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?

682. விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?

683. சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார்?

684. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?

685. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது?

686. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

687. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார்?

688. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது?

689. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?

690. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது?

691. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்?

692. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?

693. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது?

694. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

695. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?

696. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?

697. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்?

698. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்?

699. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்?

700. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

701. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்

702. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்?

703. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?

704. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்?

705. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?

706. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

707. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

708. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?

709. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

710. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

விடைகள்

676. மேஜர் மன்ரோ 677. வாரன் ஹேஸ்டிங்ஸ் 678. டல்ஹவுசி பிரபு 679. மெக்காலே பிரபு 680. மருது சகோதரர்கள் 681. நானா சாகிப் 682. 1858 683. பெண்டிங் பிரபு 684. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் 685. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 686. ரிப்பன் பிரபு 687. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் 688. கிலாபத் இயக்கம் 689. நேரு 690. 1931 691. லிண்லித்தோ பிரபு 692. லட்சுமி 693. 1919 - 1947 694. 1938 695. 52 வினாடிகள் 696. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 697. அன்னிபெசன்ட் 698. கர்சன் பிரபு 699. பாலகங்காதர திலகர் 700. சுவாமி தயானந்த சரஸ்வதி 701. லாலா லஜபதி ராய் 702. கான் அப்துல் கபார்கான் 703. பங்கிம் சந்திர சட்டர்ஜி 704. சுவாமி விவேகானந்தர் 705. அக்டோபர் 2, 1869 706. வினோபா பாவே 707. ஜனவரி 30 708. ராபர்ட் கிளைவ் 709. 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி 710. அன்னிபெசன்ட் அம்மையார்

மியான்மர்

 கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் உண்மையிலேயே சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல். நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பதும், ஒரு சிறிய அசம்பாவிதம் அல்லது வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. 3 கோடி வாக்காளர்களில் 80% பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள். கிராமப்புறங்களில் இந்த அளவுக்குப் பரவலாக மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் இதுவே முதல்முறை. இதற்காக நாட்டின் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எடுத்துரைத்த அமைப்புகளும் பாராட்டப்பட வேண்டும். 664 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம்பெற 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆங் சான் சூச்சியின் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ (என்.எல்.டி.) கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. மியான்மரின் வெவ்வேறு நிலைகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. மியான்மரின் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் அரசு அமையப் போகிறது. எனினும், அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது ராணுவத்தின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆங்சான் சூச்சி அதிபர் பதவி ஏற்க முடியாத சூழலை அந்நாட்டின் அரசியல் சட்டம் மூலம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரை ஆங் சான் மணந்தார். அவருடைய 2 மகன்களும் இப்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகப் பெற்றவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆங் சானை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்தது ராணுவ அரசு. ஆனால் நாட்டுக்குள்ளும் சர்வதேச அரங்குகளிலும் அவருக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய அரசுக்கு ஆதரவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தின் 664 உறுப்பினர்களில் 25% பேர் ராணுவத்தின் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்க ளுடைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது ஆங்சான் சூச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கும். மியான்மரை ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது எளிதாக இருக்காது. ஆசியாவின் வறிய நாடுகளில் மியான்மரும் ஒன்று. அரசின் எந்தத் திட்டமும் நாட்டு மக்களில் 3% பேரை மட்டுமே அடைகிறது. ஆயுதம் ஏந்திய வெவ்வேறு இனக் குழுக்கள் அதிகம். மேலும், பவுத்த பெரும்பான்மையினவாதக் குழுக்கள் மதச் சிறுபான்மையோரை அடக்க தொடர்ந்து முற்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மியான்மரின் ஜனநாயக இழிவுகளில் ஒன்று. மியான்மர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டியிருப்பதால் பெரிய நிறுவனங்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்த அரசால் அவை இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுவதைத் தடுக்க முடியவில்லை. உலக அளவில் காடுகள் அழிக்கப்படுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மியான்மர்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள அரசு இந்தச் சவால்களைச் சமாளித்தாக வேண்டும். இதுவரை புறக்கணித்துவந்த மியான்மர் மீது இந்திய அரசும் இனி அதிகக் கவனம் செலுத்த வேண்டும்!

IMPORTANT COMMITTEES IN INDIA..

IMPORTANT COMMITTEES IN INDIA..

1. Malhotra Committee - Insurance Reforms.

2. Janaki Raman Committee - Security Scam.

3. Ajay Vikram Singh Committee - Faster Promotions in Army.

4. Rajinder Sachar Committee 1 - Companies and MRPT Act.

5. Rajindar Sachar Committee 2 - Report on the social, economic and educational status of the Muslims of India...

6. Jyoti Basu Committee - Report on Octroi abolition.

7. Balwant Rai Mehta Committee - Recommendationson decentralization system..

8. Sawant Committee - Enquiry on corruption, charges against ministers& Anna Hazare.

9. Chelliah Committee - Eradicating black money...

10. Wanchoo Committee - Tax enquiry.

11. Bhanu Pratap Singh Committee – Agriculture..

12. Agarwal Committee - Nepotism ingranting petrol pump, LPG connections..

13. Rangarajan Committee - Reforms in private sector..

14. Naresh Chandra Committee - Corporate governance..

15. Chakravarti Committee - Banking sector reforms.

16. Rekhi Committee - Structure of indirect taxation

17. GV. Ramakrishna Committee - Disinvestment in PSU shares.

18. Kelkar Committee 1 - First committee on backward castes.

19. P.C.Hotha Committee - Restructuring of civil services

20. Justice B.N.Kirpal Committee - 1st chairman National Forest Commission

21. Godbole Committee - Enron PowerProject.

22. J.C.Kumarappa Committee - Congress agrarian Reforms Committee

23. Swaminathan Committee - Population policy.

24. Rangaraju Committee – Statistics.

25. Wardha Committee - Inquiry on murder of Graham Staines.

26. Vohra Committee - Criminalizationof politics.

27. Kelkar Committee 2 - Direct-Indirect Taxes.

28. Alagh Committee - Civil Service Examinations..

29. Abid Hussain Committee - Recommendationson Small scale industries.

30. Narasimham Committee - Banking sector reforms.

31. Chelliah Committee - Tax reforms.

32. Mashelkar Committee - National Auto Fuel Policy.

33. Boothalingam Committee - Recommendationson integrated wages, income and price policy..

34. Omkar Goswami Committee - Industrial sickness...

35. Yashpal Committee - Review of School Education system..

36. Ram Nandan Prasad Committee - Constitution of creamy layers among Backward Castes.

37. Kelkar Committee 3 - Enquiry on Kargil defense deals...

38. Saharya Committee - Tehelka tapes.!

மன்னர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

குஷாண மரபு - குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)

சிறந்த அரசர் கனிஷ்கர்

சாதவாகன மரபு சிமுக

குப்த மரபு - ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

வர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு - முதலாம் புலிகேசி

இராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா
(சிறந்த மன்னர் கோவிந்தர்)

பிரதிகாரர் மரபு - முதலாம் நாகபட்டர்

பரமாரர்கள் - உபேந்திரர்

பாலர் மரபு - கோபாலன்

அடிமை மரபு - குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

கில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

துக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு - கிசிர்கான்

லோடி மரபு - பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

பாமினி அரசு - அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர்

பொது அறிவு 2

1. ஆங்கிலக் கால்வாயை நீந்திக்
கடந்த முதல் இந்தியர்? மிகிர் சென்
2. . இந்தியாவின் முதல்
மாநகராட்சி?. சென்னை
மாநகராட்சி
3. ஆஸ்கர் விருது பெற்ற முதல்
இந்தியர்?. பானு அதையா
4. ஆங்கிலக் கால்வாயை நீந்திக்
கடந்த முதல் இந்தியப் பெண்மணி?.
ஆர்த்தி ஷா
5. நோபல் பரிசு பெற்ற முதல்
இந்தியப் பெண்மணி?. அன்னை
தெரசா (1979)
6. காந்தியை “தேசப்பிதா” என
அழைத்தவர்?. நேதாஜி
7. காந்தியை “மகாத்மா” என
அழைத்தவர்?. ரவீந்திரநாத் தாகூர்
8. ஏற்காட்டின் தந்தை?8.
எம்.டி.காக்பர்ன்
9. இந்தியாவின் முதல் துணைப்
பிரதமர்?9. வல்லவாய் பட்டேல்
10. பதவியை ராஜினாமா செய்த
முதல் பிரதமர்?10. மொராஜி
தேசாய்
11. இந்தியாவின் முதல் பேசும்
படம்? ஆலம் ஆரா (1931)
12. இந்தியாவின் முதல் பெண்
முதலமைச்சர்? திருமதி. சுசேதா
கிரிபாலனி
13. இந்தியாவின் முதல் பெண்
ஆளுநர்? திருமதி. சரோஜினி
நாயுடு
14. உச்சநீதிமன்றத்தின் முதல்
தலைமை நீதிபதி? ஹிராலால்
கானியா
15. தமிழகத்தில் இயற்கை ரப்பர்
உற்பத்தியில் முதன்மையானமாவட்
டம்? கன்னியாகுமாரி
16. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண்
நீதிபதி? மீரா சாகிப் பாத்திமா
பீவி
17. இந்தியாவின் முதல் பெண்
ஐ.பி.எஸ். அதிகாரி? கிரன் பேடி
18. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த
முதல் இந்தியப் பெண்மணி?
பச்சேந்திரி பால்
19. பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக
்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
இந்தியர்? தாதாபாய்நெளரோஜி
20. . லோக்சபாவின் முதல்
சபாநாயகர்?. ஜி.வி.முவாலாங்கர்
(1952-57)
21. ராஜ்ஜிய சபாவின் முதல்
தலைவர்? எஸ்.வி.கிருஷ்ணம
ூர்த்தி (1952)
22. லோக்சபாவின் முதல் பெண்
சபாநாயகர்? திருமதி. மீரா
குமார்.
23. இந்தியாவின் மிகப்பெரிய
கால்நடைச் சந்தை? சோனேபூர்
(பீகார்)
24. இந்தியாவின் முதல் பெண்
பிரதமர்? திருமதி. இந்திராகாந்தி
25. இந்தியாவின் முதல் பெண்
ஜனாதிபதி? திருமதி. பிரதீபா
தேவிசிங் பாட்டீல்
26. பொற்கோயில் நகரம்?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
27. அரண்மனைகளின் நகரம்?
கொல்கத்தா
28. இந்திய பயிர்பதனக் கழகம்
அமைந்துள்ள இடம்? தஞ்சாவூர்
29. இந்தியாவின் முதல் நீர்மின்
நிலையம்? டார்ஜிலிங் (1898)
30. புக்கர் பெற்ற முதல் இந்திய
எழுத்தாளர்? அருந்ததி ராய்
31. பாரத ரத்னா விருது பெற்ற
முதல் இசைக்கலைஞர்? எம்.எஸ்.
சுப்புலட்சுமி
32. பாரத ரத்னா விருதை
உருவாக்கியவர்? டாக்டர்.
ராஜேந்திரபிரசாத் (1954)
33. பாரத ரத்னா விருது பெற்ற
தென்னாப்பிரிக்க தலைவர்?
நெல்சன் மண்டேலா (1990)
34. சுதந்திர இந்தியாவின் முதல்
கமாண்டர் இன் சீப்? ஜெனரல் கே.எம்.
கரியப்பா
35. இந்தியாவிலேயே அதிக பெண்
காவலர்களைக் கொண்டது?
தமிழ்நாடு காவல்துறை
36. இந்தியாவிலேயே அதிக மகளிர்
காவல் நிலையங்களை
கொண்டுள்ளமாநிலம்? தமிழ்நாடு
37. நாட்டிலேயே பெண்
கமாண்டோ படையைப்
பெற்றுள்ளகாவல்துறை?
தமிழ்நாடு
38. இந்தியாவின் முதல்
சோதனைக் குழாய் குழந்தை?
இந்திரா (பேபி ஹர்ஷா)
39. இந்தியாவில் வெளியான
முதல் செய்தித்தாள்? பெங்கால்
கெஜட் (1781)
40. தேசிய வாழை ஆராய்ச்சி
மையம் அமைந்துள்ள இடம்?.
திருச்சி
41. இந்தியாவின் 13-ஆவது பெரிய
துறைமுகம்? போர்ட்பிளேர்
42. இருமுறை இந்திய
ஜனாதிபதியாக
பணியாற்றியஉச்சநீதிமன்ற
நீதிபதி? இதயத்துல்லா
43. இந்தியாவின் முதல் கனநீர்
ஆலை? நங்கல் (1962) (பஞ்சாப்)
44. தமிழ்நாட்டில் கனநீர் ஆலை உள்ள
இடம்? தூத்துக்குடி
45. அணு எரிபொருள் வளாகம்
அமைந்துள்ள இடம்? ஹைதரபாத்
46. உலகில் யுரேனியம்-233-ஐக்
கொண்டு இயங்கும் ஒரே
அணுவுலை? காமினி
(கல்பாக்கம்)
47. இந்தியாவின் முதல்
அணுவுலை? அப்சரா
48. தேங்காய் உற்பத்தியில்
முதலிடம் வகிக்கும் மாநிலம்?
கேரளா
49. தமிழகத்தில் உணவு
பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட
ஆண்டு? 2006
50. உணவுப்பாதுகாப்புச் சட்டம்
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட
ஆண்டு?. ஆகஸ்ட் 2011
51. தமிழகத்தில் பால் உற்பத்தியில்
முதலிடம் வகிப்பது? சேலம்
மாவட்டம்
52. தமிழகத்தில் முந்திரி
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
மாவட்டம்? கடலூர் மாவட்டம்
53. தமிழகத்தில் அதிக சிமெண்ட்
உற்பத்தி செய்யும் மாவட்டம்?
அரியலூர் மாவட்டம்
54. இந்தியாவின் நீளமான
பனியாறு (Glacies)? சியாச்சன்
பனியாறு
55. இந்தியாவின் மிகப்பெரிய
அருங்காட்சியகம்? இந்திய
அருங்காட்சியகம் (கொல்கத்தா)
56. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு
முறை ஏறிய முதல் மனிதர்? நவாங்
கொம்பு
57. இந்தியாவின் மிக்ப்பெரிய
கோளரங்கம்? பிர்லா கோளரங்கம்,
கொல்கத்தா
58. இடி, மின்னல் பூமி? பூட்டான்
59. இந்தியாவின் மிகப்பெரிய
சிறைச்சாலை? திகார் சிறை,
டில்லி
60. . இந்தியாவின் மிக நீளமான
இரயில்வே பாலம்?. இடப்பள்ளி,
வல்லார்பாடம் (கேரளா)
61. கனவுக் கோபுரங்களின் நகரம்?
ஆக்ஸ்போர்டு
62. இந்தியாவின் மிக நீண்ட தூர
ரயில்? விவேக் எக்ஸ்பிரஸ்
63. இந்தியாவின் மிக உயரமான
நீர்வீழ்ச்சி? ஜோக் நீர்வீழ்ச்சி
(கர்நாடகா)
64. இந்தியாவின் மிகப்பெரிய
மிருக்க்காட்சி சாலை?
கொல்கத்தா விலங்கியல் பூங்கா
65. இந்தியாவின் மிகப்பெரிய
ஆதிவாசி இனம்? கோண்ட்
66. இந்தியாவின் மிகப்பெரிய
பட்டியல் வகுப்பினர் (SC)? சமார்
(Chamar)
67. இந்தியாவின் மிக நீளமான
ஆறு? கங்கை (2640 கி.மீ)
68. இந்தியாவின் மிக நீளமான
சாலை? கிரான்ட் டிரங் ரோடு
69. இந்தியாவின் மிகப்பெரிய
மாநிலம் (பரப்பளவில்)? ராஜஸ்தான்
70. . இந்தியாவின் மிகச்சிறிய
மாநிலம் (பரப்பளவில்)?. கோவா
71. அதிக மக்கள்தொகை கொண்ட
மாநிலம்? உத்திரப்பிரதேசம்
72. மிகக்குறைந்த மக்கள் தொகைக்
கொண்ட மாநிலம்? சிக்கிம்
73. பாலின விகிதம் அதிகம்
கொண்ட மாநிலம்? கேரளா
74. அதிக எழுத்தறிவு பெற்ற
மாநிலம்? கேரளா
75. மிக்ப்பெரிய
யூனியன்பிரதேசம் (பரப்பளவில்)?
அந்தமான் – நிகோபார் தீவுகள்
76. மிகச்சிறிய யூனியன்
பிரதேசம் (பரப்பளவில்)? இலட்சத்
தீவுகள்
77. இந்தியாவின் முதலாவது
ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம்?
ஹிமாத்ரி (2008)
78. தடை செய்யப்பட்ட நகரம்? லாசா,
திபெத்
79. இந்தியாவின் முதலாவது
அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
கங்கோத்ரி (1983)
80. . அண்டார்டிக்காவிற்கு
இந்தியா முதன் முதலாக பயணம்
செய்தஆண்டு? 1981
81. இந்தியாவின் இரண்டாவது
அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
மைத்திரி (1989)
82. இந்தியாவின் முதலாவது
சர்வதேச சரக்குப் பெட்டக
முனையம்?3 வல்லார்பாடம்
(கேரளா)
83. இந்தியாவிற்கு வந்த முதல்
அமெரிக்க ஜனாதிபதி? டுவைட்
டேவிட் எயிஸ்னோவர்
84. இந்தியாவிற்கு வந்த முதல்
பிரிட்டிஷ் பிரதமர்? ஹரோல்டு
மேக்மிலன்
85. பூமியின் தென்துருவத்தை
அடைந்த முதல் மனிதர்?
ஆமுன்ட்சென்
86. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய
முதல் மனிதர்? டென்சிங் நார்கே
(இந்தியா)
87. வட துருவத்தை அடைந்த முதல்
மனிதர்? ராபர்ட் பியரி
88. உலகின் மிகப்பெரிய தரைவாழ்
விலங்கு? ஆப்பிரிக்க யானை
89. நிலவில் காலடி வைத்த முதல்
மனிதர்? நீல்ஆம்ஸ்ட்ராங்
90. . தமிழகத்தின் முதல் கவர்னர்?
ஜார்ஜ் மெக்கார்டினி
91. அமெரிக்காவின் முதல்
ஜனாதிபதி? ஜார்ஜ் வாஷிங்டன்
92. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட
முதல் செயற்கைக்கோள்?
இன்சாட்-2A (1992)
93. இந்தியாவில் முதல் அணு
ஆயுத சோதனை நடைபெற்ற இடம்?
பொக்ரான் (1974)
94. இந்தியாவின் முதலாவது
அஞ்சல் நிலையம்? கொல்கத்தா
(1727)
95. தமிழ்நாட்டில் காபியை
அறிமுகப்படுத்தியவர்?
எம்.டி.காக்பர்ன்
96. ராமன் மகேசே விருது பெற்ற
முதல் இந்தியர்? ஆச்சாரியா
வினோபாபாவே
97. நோபல் பரிசு பெற்ற முதல்
இந்தியர்? ரவீந்திரநாத் தாகூர்
98. பதவியிலிருக்கும் போது
இறந்த முதல் இந்திய ஜனாதிபதி?4
டாக்டர். ஜாகீர் ஹூசைன்
99. இந்தியாவின் முதல்
விண்வெளி வீரர்?4 ராக்கேஷ்
ஷர்மா
100. இந்தியாவின் முதலாவது
பீல்டுமார்ஷல்? மேனக்ஷா
101. அரசுப் பணிகளில்
பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை
வழங்கியவர் யார்? மு.கருணாநிதி
102. தமிழ்நாட்டின் மொத்த
வருவாயில் அதிக பங்கு வகிப்பது
எது? சேவைத்துறை
103. தமிழ்நாடு மாநில பறவை
பெயர் யாது? மரகப் புறா
104. தென்னிந்திய புரட்சியில்
தலைமையேற்று நடத்திய அரசி
யார்? வேலு நாச்சியார்
105. தூத்துக்குடிக்கும் எந்த
நாட்டிற்கும் இடையே
வ.உ.சிதம்பரம் பிள்ளை
நிறுவியகப்பல் நிறுவனம்
பயணத்தை இயக்கியது? இலங்கை
106. தமிழகத்தில் உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்களுக்கு
இடஒதுக்கீடுவழங்கப்பட்டது எந்த
ஆண்டு?1994
107. தமிழ்நாடு அதிகப்படியாக
உற்பத்தி செய்யும் பொருள்?
கரும்பு
108. 2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு
சட்டமன்ற இடைத் தேர்தலில்
எந்ததொகுதியில் அதிக
வாக்குகள் பதிவானது?
திருமங்கலம் .
109. 2010ஆண்டு ஜூலை மாதம்
நடைபெற்ற உலகத் தமிழ்
செம்மொழி மாநாடு,உலக தமிழ்
மாநாடுகளின் வரிசையில்
எத்தனையாவது? ஒன்பதாவது
மாநாடு
110. வேக ஈனு சோதனை அணு
உலை இருக்குமிடம்? கல்பாக்கம்
111. உலகின் மிகப்பெரிய நாடு
(பரப்பளவில்) எது? ரஷ்யா
112. ’லோக்பால்’ என்ற வார்த்தையை
உருவாக்கியவர் யார்?
எல்.எம்.சிங்வி (1963)
113. மக்களவையில் லோக்பால்
மசோதாவை (1968)
அறிமுகப்படுத்தியவர் யார்?
சாந்தி பூஷன்
114. வங்காளத்தின் துயரம்?
தாமோதர் நதி
115. பீகாரின் துயரம்? கோசி நதி
116. சீனாவின் துயரம்? அவாங்கோ
நதி
117. ஏழு குன்றுகளின் நகரம்? ரோம்
118. இருண்ட கண்டம்? ஆப்பிரிக்கா
119. உலகின் மிகப்பெரிய கண்டம்?
ஆசியா
120. உலகின் மிகச்சிறிய கண்டம்?
ஆஸ்திரேலியா
121. உலகின் மிக நீளமான ஆறு?
நைல்
122. உலகின் மிகப்பெரிய ஆறு?
அமேசான்
123. உலகின் மிகப்பெரிய
பாலைவனம்? சகாரா
124. உலகின் மிக வறண்ட
பாலைவனம்? அட்டகாமா (சிலி)
125. உலகின் மிக வெப்பமான
பாலைவனம்? லத் பாலைவனம்
(ஈரான்)
126. வெள்ளை யானைகளின்
பூமி?தாய்லாந்து
127. ஆயிரம் ஏரிகளின் பூமி?
பின்லாந்து
128. நெருப்புத் தீவு (Island of fire)?
ஐஸ்லாந்து
129. உலகின் கூரை?பாமிர்
முடிச்சு
130. உலகின் மிகப்பெரிய தீவு?.
கீரின்லாந்து
131. உலகின் மிகப்பெரிய ஆற்றுத்
தீவு? மஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
132. உல்கின் ரொட்டிக் கூடை? வட
அமெரிக்காவின் பிரைரி பகுதி
133. இந்தியாவின் ரொட்டிக்
கூடை? பஞ்சாப்
134. காற்று நகரம்? சிகாகோ
135. குவாக்கர் நகரம்?
பிலடெல்பியா
136. நித்திய வசந்த நகரம்?
குவிட்டோ (தென் அமெரிக்கா)
137. தங்கவாயில் நகரம் (City of Golden
Gate)? சான் பிரான்ஸிஸ்கோ
138. வானளாவிய நகரம் (City of
Skyscrapers)? நியூயார்க்
139. ஐரோப்பாவின் ‘காக்பிட்’?
பெல்ஜியம்
140. பேரரசு நகரம்?. நியூயார்க்
141. உலகின் மிகப்பெரிய
நீர்ப்பாசன திட்டம்? லாயிட் பாரேஜ்
(பாகிஸ்தான்)
142. இங்கிலாந்து தோட்டம்? கெண்ட்
(இங்கிலாந்து)
143. இந்தியாவின் தோட்டம்?
பெங்களூரு
144. கிரானைட் நகரம்? அபெர்டீன்
(ஸ்காட்லாந்து)
145. புனித பூமி? பாலஸ்தீனம்
146. புனித மலை? புஜியாமா
(ஜப்பான்)
147. முத்துக்களின் தீவு? பஹ்ரைன்
148. கங்காருகளின் பூமி?
ஆஸ்திரேலியா
149. மாப்பிள் இலைகளின் பூமி?
கனடா
150. . பளிங்கு பூமி? இத்தாலி
151. மிகப்பெரிய கடல் பறவை?
அல்பட்ரோஸ்
152. உலகின் மிகப்பெரிய கோயில்?
அங்கோர் வாட் கோயில்
(கம்போடியா)
153. உலகின் மிகப்பெரிய
சமுத்திரம்? பசிபிக் பெருங்கடல்
154. உலகின் மிகப்பெரிய
குவிமாடம் (Dome)? கோல்கும்பாஸ்
(இந்தியா)
155. உலகின் ஆழமான ஏரி?
பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
156. உலகின் மக்கள்தொகை மிகுந்த
நாடு? சீனா
157. மிகப்பெரிய பறவை?
நெருப்புக் கோழி
158. உலகின் மிகப்பெரிய
உயிரினம்? நீல திமிங்கலம்
159. உலகில் மிக அதிக
வாக்காளர்களைக் கொண்ட நாடு?
இந்தியா
160. . உலகின் மிகப்பெரிய
கழிமுகம் (Delta)?. சுந்தரவனம்
(இந்தியா)
161. உலகின் உயரமான ஏரி?
டிடிகாகா (பெரு-பொலிவியா)
162. உலகின் மிகப்பெரிய
வளைகுடா? மெக்சிகோ
வளைகுடா
163. உலகின் மிகப்பெரிய மசூதி?
ஜாமா மசூதி (டில்லி)
164. நள்ளிரவில் சூரியன்
உதிக்கும் பூமி? நார்வே
165. உலகின் மிக நீளமான ரயில்வே?
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
166. உலகின் மிக நீளமான சுவர்?
சீரப் பெருஞ்சுவர் (சீனா)
167. உலகின் மிகச்சிறிய பறவை?
ஹம்மிங் பறவை
168. உலகின் மிகச்சிறிய நாடு
(பரப்பளவில்)? வாடிகன் நகரம்
169. மிக உயரமான விலங்கு?
ஒட்டகச்சிவிங்கி
170. உலகின் உயரமான
மலைத்தொடர்?. இமயமலைத்தொடர்
171. குழந்தைகள் நீதிமன்றம்
அமைந்துள்ள முதல் மாநிலம்?
டில்லி (2011)
172. உலகின் மிக உயரமான நீர்
ஊற்று? பவுண்டெய்ன் ஹில்ஸ்
(அரிசோனா)
173. உலகின் மிக குளிரான இடம்?
பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்ட
ி (அண்டார்டிகா)
174. உலகின் மிக வெப்பமான இடம்?
தலால் (எதியோப்பியா)
175. உலகின் மிக அதிக
மழைபெறும் இடம்? மாசின்ரம்
(மேகாலயா-இந்தியா)
176. உலகின் மிக உயரமான
ஒற்றைக்கல் சிலை? கோமட்டீஸ்வர்
சிலை (சிரவணபெலகோலா)
177. இந்தியாவின் மிக உயரமான
விமானநிலையம்? லே விமான
நிலையம் (லடாக்)
178. இந்தியாவின் மிகப்பெரிய
பொதுத்துறை வங்கி? ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியா
179. இந்தியாவின் மிகப்பெரிய
ஆடிட்டோரியம்? ஸ்ரீ
சண்முகாநந்தா ஹால், மும்பை
180. . இந்தியாவின் மிக நீளமான
கடல் பாலம்?. பாம்பன் பாலம்
(தமிழ்நாடு)
181. இந்தியாவின் மிக நீளமான
கால்வாய்? இந்திராகாந்தி
கால்வாய் (ராஜஸ்தான்)
182. இந்தியாவில் உள்ள பெரிய
பாலைவனம்? தார் பாலைவனம்
(ராஜஸ்தான்)
183. இந்தியாவின் மான்செஸ்டர்?
மும்பை
184. ஏழு தீவுகளின் நகரம்? மும்பை
185. இந்தியாவின் மிகப்பெரிய
குகை? அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்)
186. இந்தியாவின் மிகப்பெரிய
குகைக்கோயில்? எல்லோரா
(மகாராஷ்டிரா)
187. இந்தியாவின் பழமையான
தேவாலயம்? புனித தோமையார்
தேவாலயம் (கேரளா)
188. இந்தியாவின் மிகப்பெரிய
தேவாலயம்? புனித கதீட்ரல்
தேவாலயம் (பழைய கோவா)
189. இந்தியாவின் மிகப்பெரிய
குருத்துவாரா? பொற்கோயில்
(அமிர்தசரஸ்)
190. இந்தியாவின் மிக உயரமான
அணை?. பக்ரா அணை (பஞ்சாப்)
191. இந்தியாவின் மிக நீளமான
அணை? ஹிராகுட் அணை
(ஒடிசா)
192. இந்தியாவின் மிக உயரமான
நீர்மின் திட்டம்? ரோங்டோங் நீர்மின்
திட்டம் (இமாச்சல பிரதேசம்)
193. இந்தியாவின் மிகப் பெரிய
நன்னீர் ஏரி? உலார் ஏரி (காஷ்மீர்)
194. இந்தியாவின் மிகப்பெரிய
உவர் நீர் ஏரி? கொல்லேறு (ஆந்திரப்
பிரதேசம்)
195. அதிகாலை அமைதி நாடு?
கொரியா
196. இந்தியாவின் மிகப்பெரிய
நூலகம்? அண்ணா நூற்றாண்டு
நூலகம் (சென்னை)
197. தங்கக் கம்பளி பூமி?
ஆஸ்திரேலியா
198. இந்தியாவின் பழமையான
புத்த மடாலயம்? தவாங் மடாலயம்
(அருணாச்சலப் பிரதேசம்)
199. இந்தியாவின் முதலாவது
வனவிலங்கு சரணாலயம்?
முதுமலை
200. . தமிழகத்தில் கேழ்வரகு
உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?.
கிருஷ்ணகிரி மாவட்டம்
201. தமிழ்நாட்டின் முதல் பெண்
முதலமைச்சர் யார்? ஜானகி
ராமச்சந்திரன்
202. தேசிய ஊரக
வேலைவாய்ப்புத் திட்டம் எந்த
ஆண்டு தமிழ்நாட்டில்
அமல்படுத்தப்பட்டது? 1980
203. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை
தேற்றூவிக்கப்பட்ட ஆண்டு எது?
1937
204. தமிழ்நாட்டில் ஜனநாயக
முறையிலான தேர்தல் முறை
எதில் கிடைக்ககிறது?’
கல்வெட்டாக
205. 1935- ஆம் ஆண்டு இந்திய
அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட
பிறகு சென்னை மாகானத்தில்
அமைச்சரவையில் அமந்த கட்சி?
காங்கிரஸ் கட்சி
206. கடந்த 2009 நாடாளுமன்ற
தேர்தலில் தி.மு.க கட்சி வெற்றி
பெற்ற தொகுதிகளின்
எண்ணிக்கை எத்தனை? 18
207. தமிழ்நாட்டின் நகரங்களின்
எண்ணிக்கை எத்தனை? 832
208. தமிழக அரசுச் சின்னமாக
விளங்குவது எது?
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில்
கோபுரம்
209. முல்லை நிலம் என்பது?
காட்டுப்பகுதி
210. . தமிழ்நாடு அரசு அமைத்த
மத்திய-மாநில அரசு
உறவுகளைப்பற்றிய குழுவிற்கு
தலைமை வகித்தவர் யார்?
ராஜமன்னார்
211. தமிழ்நாட்டின் மிக உயரமான
சிகரம் எது? தொட்ட பெட்டா
212. திருவிடையாட்டம் என்றால்
என்ன? கோயில் வசம் இருக்கும்
நிலம்
213. தமிழ்நாட்டில் அதிக
காடுகளைக் கொண்ட மாவட்டம்
எது? நீலகிரி
214. பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை
தாங்கியது
215. 1887-ல் சென்னையில் நடந்த
மூன்றாவது காங்கிரஸ்
மாநாட்டில் எந்த வருடம் சென்னை
சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?
1852
216. மிக அதிக கொள்திறன்
கொண்ட அனுமின் நிலையம் எது?
தாராப்பூர், மகராஷ்டிரா.
217. தமிழகத்தில் தொல் பழங்கால
ஓவியம் முதன் முதலில் எங்கு
கண்டுபிடிக்கப்பட்டது?
218. மல்லப்பாடி
219. இனியவை நாற்பது நூலின்
ஆசிரியர் யார்? நல்லாதனார்
220. தமிழின் முதல் நிகண்டு?
திவாகர நிகண்டு
221. தமிழ்நாட்டில் ஜமிந்தாரி
முறை எப்போது ஒழிக்கப்பட்டது?
1948
222. பெரும்பாலான
மாவட்டங்களில் தமிழ்நாட்டில்
குடும்பத் தொழிலாக தொடர்ந்து
இருந்து கொண்டு இருப்பது?
கைத்தறித் தொழில்
223. கனியன் பூங்குன்றனார்
விருது எதனோடு
தொடர்புடையது? அறிவியல்
தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும்
வகையில் வெளிவரும் தமிழ்
மென்பொருள்
224. தமிழ்நாட்டில் NH 47
நெடுஞ்சாலை எது? சேலம் முதல்
கன்னியாகுமாரி வரை.
225. தென்னிந்திய புரட்சியின்
போது திண்டுக்கல்
கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட
ஆண்டு எது? ஜூன், 1800
226. போரில் உயிர் நீத்த வீரர்களின்
குடும்பங்களுக்கு பாண்டிய
அரசர்கள் வழங்கிய நிலங்களின்
பெயர்? உதிரப்பட்டி
227. விழாக்களின் நகரம்? மதுரை
228. பிற்காலச் சோழர்
பரம்பரையைத் தோற்றுவித்தவர்
யார்? விஜாலயன்
229. தமிழ்நாட்டின் மொத்த
நிலப்பரப்பு எவ்வளவு? 3 லட்சம்
சதுர கி.மீ
230. மெய்கீர்த்திகள் எழுதும் வழக்கம்
முதன் முதலில் எந்தச் சோழன்
காலத்தில் தோன்றியது? முதலாம்
இராஜராஜன்
231. உதயகிரிக் கோட்டை
அமைந்துள்ள இடம் எது?
கன்னியாகுமாரி
232. ‘பிரம்மதேயம்’ என்னும் சொல்
எதனைக் குறிக்கும்?
பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
233. சாத்தனூர் அணைக்கட்டு எந்த
நதியின் குறுக்காக
கட்டப்பட்டுள்ளது? தென்பெண்ணை
234. சோழ அரச வம்சம் பண்டைய
தமிழ் அரச வம்சமாகும். அது எந்த
நதிக்கரையில் அமைந்திருந்தது?
காவேரி
235. தமிழ்நாட்டில் பொதுவாக
அதிகமாக பாசனத்திற்கு
பயன்படுத்தப்பட்டவை எவை?
கிணறு
236. சென்னை அரசு முதல்
வகுப்புவாரி அரசு ஆணையை
எப்பொழுது வெளியிட்டது? 1921
237. சென்னைக்கு குடிநீர்
கொண்டுவர பூண்டி நீர்
தேக்கத்தை திட்டமிட்டவர்?
சத்தியமூர்த்தி ஐயர்
238. மாமல்லபுரத்திலுள்ள
கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்
யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
239. தமிழ்நாட்டில் முதன்
முதலில்;அமைக்கப்பட்ட சிறப்பு
பொருளாதார மண்டலம் உள்ள இடம்
எது? சென்னை
240. இந்தியாவிலேயே முதன்
முதலாக அரசு ஊழியர்களுக்கு
காப்பீடு திட்டத்தை
அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
தமிழ்நாடு
241. பாண்டியர் ஆட்சியை காவேரி
வரை பரப்பி அதனை
ஒருங்கிணைத்த மன்னர் யார்?
சுந்தர பாண்டியன்
242. வலிமை மிக்க கப்பற்படை
வைத்திருந்த சோழ அரசர் யார்?
முதலாம் ராஜேந்திரன்
243. தமிழ்நாட்டில்
கிராமங்களுக்கு மின்வசதி
செய்துள்ள அளவு ? 99%
244. முல்லை பெரியார்
பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள்
தமிழ்நாடு மற்றும் ...............?
கேரளா
245. திருப்பூர் குமரன் இறந்த
ஆண்டு எது?1932
246. சுதந்திர இந்தியாவில்
சென்னை மாநில
அமைச்சரவையில் இடம்பெற்ற
கேப்டன் லட்சுமி என்ற பெண்மனி
யார்? ஜான்சி படையினரின்
தலைவர்
247. சென்னை குடிநீர் தேவைக்கு
பயன்படும் தண்ணீர் கிடைக்கும்
துணை நீர் ஆதாரம் எது?
கிருஷ்ணா நதிநீர்
248. நாமக்கல் மாவட்டம் எந்த
ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1997
249. தமிழ்நாட்டில் எங்கு துரித
போக்குவரத்து முறை
அமைந்துள்ளது? சென்னை
250. எந்த மாவட்டத்தில் தோடர்கள்
( மலைவாழ் பழங்குடிகள் )
அதிகமாக வாழ்கின்றனர்?
உதகமண்டல்
251. எந்த குன்றில் கிள்ளியூர்
நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
சேர்வராயன்
252. சென்னை மெரினா
கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள்
சிலையை செய்தவர் யார் ? டி பி
ராய்.
253. உதகமண்டலத்தை கண்டறிந்து
மேம்படுத்தியவர் யார்? ஜான்
சுல்லிவன்.
254. கிரெடிட் கரட் வழங்கிய முதல்
இந்திய வங்கி எது? சென்ட்ரல்
பேங்க் ஆப் இந்தியா.
255. சுதந்திர இந்தியாவின் முதல்
சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர்
அம்பேத்கார்.
256. பெண் கமாண்டோ படையை
உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
257. குறைந்த நேரத்தில்
சூரியனை சுற்றி வரும் கோள்
எது ? மெர்குரி
258. ஒளி செல்லும் வேகத்தை
கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
ரோமர்
259. நீண்ட காலம் சுதந்திர
இந்தியாவின் குடியரசு
தலைவராக இருந்தவர் யார்? டாக்டர்
ராஜேந்திர பிரசாத்.
260. தமிழ் நாட்டின் மலர் எது ?
செங்காந்தள் மலர்
261. திருப்பூர் குமரன் பிறந்த ஊர்
எது ? சென்னிமலை

. The broken Nest


  

1. வங்க பிரிவினைக்கு எதிராக ரக்ஷ பந்தன் விழாவை துவக்கியவர்?

2. பங்ளாதேஷ்க்கு தேசிய கீதம் இயற்றிய இந்திய கவிஞர்?

3. சாந்தி நிகேதன் பள்ளியை துவக்கியவர்?

4. My Reminiscences யாருடைய சுய சரிதை?

5. The broken Nest நூலின் ஆசிரியர்?

6. காந்தியடிகளால் குருதேவ் எனப்பட்டவர்?

பொது அறிவு 1

சுரதாவை 'உவமை கவிஞர்' என்று முதன் முதலாக புகழ்ந்தவர் ?ஜெகசிற்பியன்
பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில்  அறிமுகம் செய்யப்பட்ட  ஆண்டு ?1959
.பாரத ரத்னாவின் பொருள் என்ன?
இந்தியாவின் ரத்தினம்.
2.பாரதரத்னா விருது பெற்ற வெளிநாட்டினர்?
அன்னை தெரசா(1980),கான் அப்துல் கபார் கான்(1987),நெல்சன் மண்டேலா(1990).
3..யாருடைய பாரத ரத்னா விருது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது?
சுபாஷ் சந்திர போஸ்(1992)
4..இறப்புக்கு பின் பாரதரத்னா விருது அளிக்கப்பட்ட முதல் மனிதர்?
லால் பகதூர் சாஸ்திரி.
5..பாரத ரத்னா விருது எந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது?
கலை,இலக்கியம்,அறிவியல்,பொதுச் சேவை,விளையாட்டு.
6.பாரதரத்னா,பத்மபூசன்,பத்மவிபூஷன்,பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்ற முதல் இந்தியர்?
சத்யஜித்ரே.

1..ஐ.நா 2015 ஐ எந்த ஆண்டாக அறிவித்தது?
சர்வதேச ஒளி வருடம் மற்றும் சர்வதேச மண் வருடம்.
2..ஐ.நா 2016 ஐ எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?
international pulses year and international camelids year .
3..இந்திய தேசிய கணித வருடம்?
2012.
4..சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு வருடம்?
2013.
5..சர்வதேச வன வருடம்?
2011.
6..சர்வதேச இயற்பியல் வருடம்?
2005.
7..சர்வதேச பெண்கள் வருடம்?
1975.
8..சர்வதேச மக்கள்தொகை வருடம்?
1974.
9..சர்வதேச கல்வி வருடம்?
1970.
10..சர்வதேச மனித உரிமைகள் வருடம்?

Tuesday 27 October 2015

நோபல் பரிசு - 2015:

நோபல் பரிசு - 2015:

மருத்துவம்: [வில்லியம் கேம்பெல் - அயர்லாந்து, சதோஷி ஒமுரா - ஜப்பான் & யூயூ தூ - சீனா ]:

உருளைப் புழுக்களால் ஏற்படும் யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும்,

மலேரியாவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக யூயூ தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ள "அவெர்மேக்டின்' மருந்து, உருளைப் புழு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக் கால் வியாதி,

பார்வையின்மை ஆகிய நோய்கள் தாக்குதவதை மிகப் பெரிய அளவில் குறைத்துள்ளது.

மேலும், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிற நோய்களையும் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது.

யூயூ தூவால் கண்டுபிடிக்கப்பட்ட "ஆர்டெமிஸினின்' மருந்து, மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.

இயற்பியல்: [கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா]:

நியூட்ரினோ ஆய்வுக்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

வேதியியல்: [தாமஸ் லிண்டால் - சுவீடன், பால் மாட்ரிச் - அமெரிக்கா, அசீஸ் சன்கார் - துருக்கி]:

மரபணு குறையை சீரமைக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

இலக்கியம்: [ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் - பெலாரஸ்]

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 14வது பெண் அலெக்ஸிவிச் ஆவார்.

இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட பல உணர்வுப் பூர்வமான புத்தகங்களை எழுதியவரும், பல மொழிகளில் இருந்து புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

ரஷ்ய மொழியில் இவர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இன்னமும் அவரது தாய் மொழியில் எழுதப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதி: [துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழு]

துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்: [ஆங்கஸ் டீட்டன் - ஸ்காட்லாந்து]

2015ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு (69) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரின்ஸ்டென் பல்கலைகழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஆங்கஸுக்கு, நுகர்வு, வறுமை, மக்கள் நலம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதற்காக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.

எடிசன்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..

இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் ” மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்…..

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்

GK

01.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்
5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்

HISTORY

1.உமாயூன்' எனற வார்த்தையின் பொருள் என்ன ?
அதிஸ்டசாலி

2.ஷெர்சா -வின் அமைச்சரவையில் காணப்பட்ட 'திவானி -இ-ஆரிஸ்' என்ற அமைச்சரின் பணி என்ன ?
இராணுவ பொறுப்பாளர்

3.குதிரைப்படையிலுள்ள குதிரைகளுக்கு சூடு போடும் முறையான் ' தாக்' எனும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? ஷெர்சா

4. 'அக்பரின் முன்னோடி' என அழைக்கப்படுபவர் யார் ? ஷெர்சா

5.நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார் ?
ஷெர்சா

6.இராமாயணம்' மற்றும் ' மகாபாரதம்'காவியங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர் ?
அபுல்பைசி

7.ஆங்கிலேயருக்கு சூரத் நகரில் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய மன்னர்யார் ?
ஜஹாங்கீர்

8.துசுக் -இ - ஜஹாங்கிரி -நூலை எழுதியவர் ?
ஜஹாங்கீர்

9.மக்களுக்கு நீதி வழங்க "நீதிச் சங்கிலி முறை"யை அறிமுகப்படுத்திய மன்னர் யார் ?
ஜஹாங்கீர்

10." நூர் மஹால்" - என்பதன் பொருள் என்ன ? அரண்மனையின் ஒளி

11. மகாஜன பதங்களின் எண்ணிக்கை ?
16

12.வஜ்ஜிக் கூட்டாட்சியின் தலைநகர் ? வைசாலி

13. மகதப் பேரரசின் முதல் (பழைய) தலைநகரம் எது ?
சிராவஸ்தி

14.பாலி மொழியில் திரி பீடகம் என்பதன் பொருள் என்ன ?
மூன்று கூடைகள்

15.பிம்பிசாரர் எந்த வம்சத்தைசார்ந்தவர் ?
அரியங்க வம்சம்

16.சந்திரகுப்த மொளரியர் வென்ற நந்த மன்னன்யார் ?
தன நந்தன்

17.சந்திரகுப்த மொளரியர் எந்த கிரேக்க மன்னனை தோற்கடித்தார் ?
செலுக்கஸ் நிகேடர்

18. சந்திர குப்த மெளரியர் தழுவிய மதம் ?
சமண மதம்

19.சந்திர குப்த மொளரியரின் மகன்யார் ? பிந்துசாரர்

20. அசோகரால் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது ?
மூன்றாம் புத்த மாநாடு

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்
==============================
========
கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது – கோ. செல்வம்
சொல்லின் செல்வர் விருது – முனைவர் சோ. சத்தியசீலன்
ஜி.யு. போப் விருது - மதுரை இளங்கவின்
(எம்.ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது – மு. சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது – முனைவர். நிர்மலா மோகன்
மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
அண்ணல் அம்பேத்கார் விருது – ஆழி. கு. மகாலிங்கம்
பேரறிஞர் அண்ணா விருது – திருமதி. கஸ்தூரி ராஜா
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - கரு. நாகராஜன்
திருவள்ளுவர் விருது – திருக்குறள். க. பாஸ்கரன்
தந்தை பெரியார் விருது – தாவூஜி குப்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கண்மதியன்
பெருந்தலைவர் காமராஜர் விருது – கருமுத்து. தி. கண்ணன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – பேராசிரியர் எம்.ஏ. ஜேம்ஸ்
தமிழ்த்தாய் விருது – திருவனந்தபுரம் தமிழ்சங்கம்

வங்கி

1. இந்தியாவில் முதன் முதலாக வங்கியானது யாரால் துவக்கப்பட்டது ?
அலெக்ஸாண்டர் & கம்பெனி 1770

2. இந்தியாவில் தற்கால நடைமுறையிலுள்ள வங்கி அமைப்பானது முதன் முதலில் 1806 ல் " வங்காள வங்கி " என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது

3. ரிசர்வ் வங்கியின் மூன்று வகைப் பணிகள் எவை?
அ) தொன்மைப் பணிகள்
ஆ) மேற்பார்வை பணிகள்
இ) முன்னேற்ற பணிகள்

4. Languages on Currency Notes
The amount of a banknote is written on it in 17 languages out of 22 official languages of India. The languages are Assamese, Bengali, Gujarati, Kannada, Kashmiri, Konkani, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Tamil, Telugu and Urdu.

5. 'மாற்றுச்சீட்டு' என்பது ஏற்றுமதியாளர்களுக்கு இறக்குமதியாளர்கள் வழங்கும் உறிதிப்பத்திரம்

6. அயல்நாட்டுச் செலாவணியின் பாதுகாவலன் யார்? ரிசர்வ் வங்கி

7. இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய்.5 கோடி முதலீட்டுடன் ஏப்ரல் 1935 ஆரம்பிக்கப்பட்டது

8. இந்திய ரிசர்வ் வங்கி எதனை அடிப்படையாகக் கொண்டு வங்கித்தாள் பணத்தை வெளியிடுகிறது ?
குறைந்த இருப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு
ரூ. 115 கோடி அளவு தங்கம் + ரூ.85 கோடி அளவு அன்னியசெலாவணி

9. மைய , மாநில அரசுகளுக்கு முன்பணக்கடன்களை எத்தனை நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டி ரிசர்வ் வங்கி வழங்குகிறது ?
91 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்

10. பணவீக்கத்தை கட்டுப்படுத்த
அ) வங்கிகள் தாம் வழங்கும் கடன்களின் வட்டிவீததை உயர்த்தும்
ஆ) பண அளிப்பினைக் குறைத்தல்
இ) வங்கி ரொக்க இருப்பு வீதத்தை அதிகரித்தல்
( RBI செய்கிறது )

11. EXIM வங்கிகள் ஏற்றுமதி வளர்ச்சிக்காக கடன் வழங்குகின்றன

12. ரிசர்வ் வங்கியின் நிறுவனங்கள் ,
NABARD , EXIM BANK , IFCI , IDBI , SFC

13. ரிசர்வ் வங்கியைப் பற்றி , ( மைய வங்கி )

a) W.A. ஷான் -- கடனை கட்டுப்படுத்தும் அமைப்பு
b) ஹாட்ரே -- கடன் வழங்கும் கடைசிப் புகழிடம்
c) சாமுவேல்சன் -- வங்கிகளின் வங்கி மற்றும் " மீப்பெருமதிப்புப் பணத்தைக் " கொண்ட அமைப்பு
d) ஆடம்ஸ்மித் -- ஒரு தனித்த வங்கியின் வங்கியில் முறை

14. கால்ம விலக்கம் என்பது
( Mean Deviation )
Q.D = (Q3 - Q1) / 2

15. முகடு =
( 3 இடைநிலை -
2 கூட்டுச்சராசரி )

அளபெடை

அளபெடையிலிருந்து நிச்சயம் ஒரு வினா கேட்கப்படலாம்.ஆகவே இதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
அளபெடை
ஓர் செய்யுளில் ஓசை குறையும்போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.
அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை
1.உயிரளபெடை
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது
உயிரளபெடையாகும்.
செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)
என இது வகைப்படும்.
செய்யுளிசையளபெடை (அ)
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறு பெயர் இசைநிறையளபெடை.
(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்ல படா அ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்
சொல்லிசையளபெடை (இ)
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச்சொல்லை வினையெச்ச
சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை
என்பதாகும்.
(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ
இன்னிசையளபெடை (உ)
செய்யுளில் ஓசை குறையாதபோதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்
(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்
2.ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்யும்பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும்.இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.
(எ.கா) கண்ண் கருவினை
கலங்ங்கு நெஞ்சமில்லை
இலஃஃகு முத்தின்
மடங்ங்கலந்த.

தேசிய ஆய்வுக்கூடங்கள்

தேசிய ஆய்வுக்கூடங்கள்
தேசிய மின் வேதியியல் ஆய்வுக் கூடம் (CECRI) காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னை
தேசிய விமான ஆய்வுக்கூடம் பெங்களுரு
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் பூனே
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம்
மத்திய மீன் ஆராய்ச்சி மையம் எர்ணாகுளம்
மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் கட்டாக் ( ஒரிசா )
வன ஆராய்ச்சி மையம் டேராடூன்
விவசாய ஆராய்ச்சி மையம் புது டெல்லி
சர்க்கரை ஆராய்ச்சி மையம் கான்பூர்
லூயி பாஸ்டியர் மையம் குன்னூர் ( ஊட்டி)
தமிழக அரிசி ஆராய்ச்சி மையம் ஆடுதுறை ( தஞ்சை)
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் டிராம்பே
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ரூர்கேலா
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லி
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் ராஜமுந்திரி
இந்திய பெட்ரோலிய நிறுவனம் டேராடுன்
தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழகம் கர்னால் ( ஹரியானா)
தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் கோவா
தேசிய நூலகம் கொல்கத்தா
தேசிய அருங்காட்சியகம் டெல்லி
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் புது தில்லி
ஏவுகணை செலுத்தும் மையம் தும்பா
காச நோய் நிறுவனம் புது தில்லி
தேசிய நிலக்கரி வளர்ச்சி நிறுவனம் ராஞ்சி

July – 2015 Current Affairs

July – 2015 Current Affairs
1. இந்தியாவில் ஒரு நிமிடம் லீப் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது 30.06.2015 ம் நாள் முதல் அமுலுக்கு வருகிறது. (TIME AND FREQUENCY STANDARDS LABORATORY, New Delhi)
2. Digital India வாரம் பிரதமரால் ஜூலை 1, 2015 ம் நாளன்று தொடங்கப்பட்டது.
3. மக்கள் தொகை பட்டியல் ஜூன் 30, 2015 ம் நாளன்று அரசால் வெளியிடப்பட்டது. இதன்படி 207.8 லட்சம் பார்வையற்றவர்கள் இந்தியாவில் உள்ளனர். அதிக பார்வையற்றவர்கள் உள்ள மாநிலமாக உத்திரப்ரதேஷ் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேஷ் உள்ளது. குறைந்த அளவில் Lakshadweep, Daman and Diu and Dadra & Nagar Haveli யில் உள்ளனர்.
4. சஞ்சீவ் கலாடே அவர்களுக்கு 2014 ம் ஆண்டுக்கான G.D. Birla விருது வழங்கப்பட்டுள்ளது.
5. US Presidential Award இந்திய அமெரிக்கரான திரு தர்சன் ஜெயின் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
6. Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டம் பொருளாதார விவகார அமைச்சர் குழுவால் 02.07.2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு (2015-2016 to 2019-2020) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
7. HIV-1 க்கு எதிரான மருந்து Interleukin-21 கார்னல் மருத்துவ கல்லூரி (நியுயார்க்) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8. 30.06.2015 ம் நாளிலிருந்து HIV என்ற நோய் தாயிடம்மிருந்து குழந்தைகளுக்கு பரவுவதிலிருந்து முற்றுலும் தவிர்க்கப்பட்ட நாடாக கியுபா உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது
9. C.H.Vidyasagar Roa (03.07.2015) வால் எழுதப்பட்ட உனிகி என்ற புத்தகத்தின் முதல் பிரதியே மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
10. 2015 ம் ஆண்டுக்கான உலக உணவு விருது Sir Fazle Hasan Abed (Bangladesh) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
11. இந்திய அமெரிக்கரான R.Paul Singh அவர்களுக்கு GCHERA WORLD AGRICULTURE PRIZE ( உலக விவசாய விருது ) 24.06.2015 ம் நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 20.09.2015 ம் நாளன்று வழங்கப்படும்.
12. South Asian Basket Ball சாம்பியனானது இந்தியா நாள் (05.07.2015)
13. பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கார்பொரேசன் வங்கி முதன்முதலில் முத்ரா அட்டையே (MUDRA Card) வழங்கத் தொடங்கியது நாள் 04.07.2015.
14. இந்தியாவும் கஜகஸ்தானும் ஐந்து ஒப்பந்தங்கள் கையளுததாயின (08.07.2015) இதில் யுரேனியம் பெறுவது சம்பந்தமான ஒப்பந்தமும் ஒன்றாகும்.
15. கோவாவில் 2016- ம் ஆண்டு Youth Delphic Games நடைபெற உள்ளது.
16. மத்திய உள்துறை அமைச்சகம் நாகலாந்து மாநிலத்திற்கான இடையுறு பகுதி அந்தஸ்து (Disturbed Area Status) (Under Section 3 of the Armed Forces Special Power Act 1958) மீண்டும் ஓராண்டு நீட்டித்துள்ளது
17. எழாவது பிரிக்ஸ் மாநாடு (BRICS SUMMIT) ரஷ்யாவின் உபா (UFA) நகரில் (8th to 9th July 2015) ல் நடைபெற்றது. ஆறாவது மாநாடு (2014) ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்றது. எட்டாவது மாநாடு 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது
18. Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்களால் Rashtriya Avishkar Abhiyan (RAA) திட்டம் (09.07.2015) தொடங்கப்பட்டது. இத்திட்டம் பள்ளிகுலந்தைகளின் அறிவியல் வேட்கையை தூண்டுவதாகும்
19. இந்தியாவும் பாகிஸ்தானும் 2016 ம் ஆண்டில் இருந்து சங்காய் ஒத்துளைப்பு அமைப்பில் (Shangai Cooperation Organisation (SCO) ) முழு உறுப்பினராக சேர உள்ளது. SCO அமைப்பு 15th June 2001 –ம் ஆண்டு ஆறு உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு (சீனா, ரஷ்சியா, கஜகஸ்தான்,கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா ,பாகிஸ்தான்)
20. செரினா வில்லியம்ஸ் ஆறாவது விம்பிள்டன் கோப்பையே வென்றார்
21. மகேஷ் பூபதியும் மார்டினா கிங்கிசும் கலப்பு இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
22. சுமித் நாகல் மற்றும் நாம் ஹோஅங் இருவரும் ஆண்கள் இரட்டடையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
23. சானிய மிர்ஸாவும் மார்டினா கிங்கிசும் பெண்கள் இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்
24. இந்தியாவின் மிக நீண்ட குகைப்பாதை பட்னிடோப் 2016 ல் திறக்கப்பட உள்ளது.
25. தமிழ்நாடு 55 வது தேசிய மாநிலங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டியே நடத்தியது.
26. World Youth Skills Day முதன் முதலாக 15th July 2015 ம் நாளிலிருந்து கடைப்பிடிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் World Youth Skills Day திண்மக் 15th July கொண்டாடப்படும்.
27. இந்தியாவின் மிகப் பழமையான துறைமுகம் ரேம்னந்த்ஸ் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
28. Pradhan Mantri Kaushal Yojana என்ற திட்டம் பிரதம மந்திரியால் 15.07.2015 நாளன்று தொடங்கப்பட்டது.
29. நெல்சன் மண்டேலா சர்வேதேச தினமாக ஜூலை 18 – ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

முயல், ஆமை கதையின் "லேட்டஸ்ட் வெர்ஷன்" :-

முயல், ஆமை கதையின் "லேட்டஸ்ட் வெர்ஷன்" :-
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்
.
இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : "டீம்-வொர்க்" வின்ஸ்!

டீம்-வொர்க்:-
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை,

வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.
நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்

முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.

‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬.
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்
.
இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : "டீம்-வொர்க்" வின்ஸ்!

டீம்-வொர்க்:-
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை,

வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.
நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்

முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.

‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬.
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!

புலம்பாதே போராடு ...

புலம்பாதே போராடு ...
================

புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...

வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...

திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...

எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...

ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...

போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...

GK

101தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
106கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
107,திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
108,மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
109,தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்
.
110,தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
111,சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
112,தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
113,தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
114,தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
115,புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
116,வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
117,தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
118,தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
119,தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
.
120,முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
121,தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
122,பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
123,கர்மவீரர் -காமராஜர்.
124,கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
125,மூதறிஞர் -ராஜாஜி.

126,தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
127,சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
128,சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை
.
129,சொல்லின் செல்வன் -அனுமன்.
130. நெடியவன் :ராமன் 131. முதல் அரசர் - சந்திரகுப்த மௌரியர்
132. சந்திரகுப்த மௌரிய மௌரிய புத்ரா என்று அழைத்தவர் விசாகதத்தர்
133. சந்திரகுப்த மௌரிய அரசியல் குரு சாணக்கியர்
134. சாணக்கியர் வேறுபெயர்கள் கௌடில்யர், விஷ்ணு குப்தர்
135. சந்திரகுப்த மௌரிய மனைவி ஹெலன்
136 ஹெலன் தந்தை செல்யூகஸ் நிகேடர்
137. செல்யூகஸ் நிகேடர் தூதர் மெகஸ்தனிசு
138. மெகஸ்தனிசு எழுதிய நூல் இண்டிகா
139. மௌரியர்களின் ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் இண்டிகா
140. சந்திரகுப்த மௌரியர் பின் பற்றிய சமயம் சமண சமயம்
141. சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது சந்திராபாஸ்டி
142. சந்திரகுப்த மௌரியரின் உடன் சென்ற துருவி பத்ரபாகு
143. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்
144. பிந்துசாரர் பட்டப்பெயர் அமித்ரகதா
145. பிந்துசாரர் மகன்கள் சுமனா, அசோகர்
146. முதல் தேசிய அரசர் அசோகர்
147. அசோகர் ஆட்சி செய்த பகுதி உஜ்ஜயினி
148. அசோகர் மனைவி தேவி
149. அசோகர் முதலில் வணங்கிய கடவுள் சிவன்
150. அசோகர் புத்த மதத்திற்கு மாற்றியவர் உபகுப்தர்

GK

1. மிகவும் சிறந்த மின்கடத்தி - வெள்ளி

2. இரு மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைப் பற்றி கூறும் விதி ? கூலும் விதி

3. ஹைட்ரஜன் குண்டுக்குக் காரணமான நிகழ்வு -- அணுக்கரு இணைவு ( nuclear fusion )

4. குறைகடத்தி தனிமங்களின் ( semiconductor ) பிணைப்பு - சக பிணைப்பு ( covalent bond )

5. இரும்பு அதிகம் உள்ள தாது -- ஹேமடைட்

6. கணிப்பொறி மற்றும் மின்னனு சாதனங்களில் உள்ள சில்லுகள் ( chips) எதனால் ஆனவை -- சிலிக்கான்

7. காமா கதிர்கள் - மின் தன்மையற்ற கதிர்கள்

8. குளோரோபில்லில் உள்ள உலோக அணு -- மெக்னீசியம்

9. ஆஸ்பிரின் வேதிப்பெயர் -- அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ( வலி நீக்கி )

10. இஞ்சி என்பது தரைகீழ் தண்டு

11. மரபியல் தந்தை - கிரிகெர் ஜோஹன் மெண்டல்

12. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா -- ரைசோபியம் , அசட்டொபாக்டர்

13. பிரஷர் குக்கரில் உணவு மிக விரைவாக வேகக் காரணம் -- அதிக அழுத்தம் வெப்பநிலையை உயர்த்துவதால்

14. நொதிகள் ( enzymes ) - நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வேதிமப் பொருட்கள்

15. எலிசா சோதனை ( Elisa test ) -- HIV கண்டறிய

16. புளியில் உள்ள அமிலம் - டார்டாரிக் அம்லம்
இரப்பையில் உள்ள அமிலம் -- HCL

17. ஒலியின் வேகம் அதிகம் காணப்படுவது -- இரும்பு ( எஃகு )

18. ஓர் ஏவுகணை வேலை செய்யும் தத்துவம் -- உந்தம் அழிவின்மை விதி

19. கரும்புச் சர்க்கரை ( சுக்ரோஸ் C12 H22 O11 ) என்பது ஒரு
டை சாக்கரைட்

20. மாலைக்கண் நோய் ( நிக்டலோபியா ) எதன் குறைபாட்டினால் வருகின்றது ? வைட்டமின் A குறைவினால்

21. கரையக் கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நிறைந்த நீர் -- மென்நீர்

22. சமையல் சோடாவின் வேதிப்பெயர் -- சோடியம் பை கார்பனேட்

23. ஒரே அணு எண்ணும் ஒரே அணு உடையது ( ஐசோடோப்பு ) -- ஹைட்ரஜன்

24. செல்களுக்கு ஆற்றல் கிடைப்பது -- சுவாசித்தல் மூலம்

25 . ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான நிறமி -- குளோரோபில்

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழகம் என அழைக்கப் பெறும் தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். மதராஸ் மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள் தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்) உள்ளது.

2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

CURRENT AFFAIRS NOTES FOR GROUP 1 PRELIMINARY EXAM (JAN 2015 TO SEPTEMBER 2015)

CURRENT AFFAIRS NOTES FOR GROUP 1 PRELIMINARY EXAM (JAN 2015 TO SEPTEMBER 2015)

IMPORTANT AWARDS:

1) Champions of change (for providing the service to physically challenged) - Swetha prabakaran

2) Champions of change ( Climate change category ) Sunita

3) Champion of earth - sheik hasina

4) Santhiswarup patnagar award
a) Biology - balasubramanian
b) Medicine - vididha vaidhya
c) Mathematics - Reeta
d) Chemistry - srinivasa reddy
e) Engineering - Yokesh

5) A.P.J.Abdul kalam award - N.Valarmathi (director of remote sensing)

6) avvayar award - santhi renganathan

7) Kambar awrad - selvam

8) kabilar award - piraisoodan

9) vu.ve.saaminadhayyar award - bala subramanian

10) Computer tamil award - kumaresan

11) umaruppulavar award - saibu maraikkayar

12) ilangovadigal award - nirmala mihan

13) National tourism awards to - kerala, gujarat and madhyapradesh

14) the 1st sansad peace award - vijaygupta (conferred by southkorea)

15) Tensing norway award - joth singh, arunima sinha and param vir singh

16) ramanujam award - krishnan

17) khelratna award - sania mirza

18) Dhyan chand award - romio james, mishra and nayar

19) Nelson mandela award - jelena and fernando

20) Raman magsaysay award - sanjeev (emerging leader) and anshy gupta

6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்

6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
19. கபிலர் நண்பர் :பரணர்
20. அகநானூறு பிரிவு
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. நான்காம் சங்கம் :மதுரை

NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?

HELLO FRIENDS........
NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?
"யார் என்ன சொன்னாலும் என்னால படிக்க முடியல" அப்படி என்பவரா நீங்கள்....???
எவ்ளோ ட்ரை பண்ணி படிச்சாலும் மனசுல நிக்கவே மாட்டுது அப்படி என்பவரா நீங்கள்....???
கொஞ்சம் படிச்சாலே tired ஆகுபவரா நீங்கள்?
அப்ப நீங்க இதை கண்டிப்பாக பின்பற்றி பாருங்கள்.
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
வரும் தேர்வுகளுக்கு முக்கியம் தமிழில் நன்றாக, தெளிவாக படித்து இருக்க வேண்டும், அப்படி படித்தால் 100 மதிப்பெண்களுக்கு நம்மால் கட்டாயம் 85 முதல் 90 வினாக்களுக்கு விடை அளிக்க முடியும். உங்களுக்கு இது தெரிந்த செய்தி தான்.
ஆனால் 6 முதல் 12 வரை படிக்க என்னால இந்த குறைந்த நேரத்தில் எப்படி படிக்க முடியும்? இது உங்கள் கேள்வியாக இருந்தால் என் பதில்.......
உங்களால் (முடியும் OR முடியாது)
அனால் படிச்சு முடிச்சவங்க, தமிழில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து கேள்வி "கேட்க கேட்க" தெரிந்தவர்கள் பதில் "கூற கூற" அதை நீங்கள் நன்றாக கவனித்தால் உங்கள் மனதில் நன்றாக பதியலாம். எல்லாரும் பதில் கூறுவதை பார்த்து உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்,
மற்றவர்கள் போஸ்ட் பண்ணும் கேள்விகளுக்கு தப்போ, சரியோ பதில் அளியுங்கள். இன்னும் உற்சாகம் ஆவீர்கள்.
சில பேருக்கு Book ah எடுத்தாலே தூக்கமாக வரும், அனால் SYSTEM, CELLஅதிகமா use பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்கலாம் இப்படி ட்ரை பண்ணலாம். இது உங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் சேர்த்து தான். JOB பார்க்கிற நிறைய பேருக்கு கண்டிப்பா நேரம் கிடைப்பது மிக கடினம்.
தமிழ் நன்றாக படித்து முடித்தவர்களுக்கு எது முக்கியமான கேள்வி, புத்தகத்தில் எப்படிலாம் கேள்வி கேட்கலாம்னு நன்றாக தெரியும்........நீங்கள் கேள்விகள் POST பண்ணுவதால் உங்களுக்கும் ஒரு தடவ Revise பண்ண மாதிரி இருக்கும்....
இன்றைக்கு 6th தமிழில் நான் ஆரம்பித்து வைக்கிறேன் friends...
எவ்ளோ சீக்கிரம் வேகமா படிக்கிறோம் என்பது நம்ம கைல தான் இருக்கு......
இந்த குரூப்ல இருக்க, கண்டிப்பா அரசு வேலைக்கு போகணும்னு நினைக்கிற எல்லாரும் support பண்ணுங்க. அப்ப தான் சாதிக்க முடியும்.
பொதுநலமா யோசிங்க, கண்டிப்பா உங்களுக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் friends......
கேள்விகள் POST பண்றவங்க SUPPORT ரொம்ப முக்கியம்.
இது நான் எப்பவோ சொன்ன ஐடியா தான், அப்ப follow பண்ணல , but இனி தீயா உழைக்கணும், நம்ம கிட்ட நேரமும் இல்லை, நாட்களும் இல்லை.
தமிழ் முழுவதும் முடித்தவர்களுக்கு இது ஒரு REVISION மாதிரி இருக்கும்.
குறைந்தது TNPSC கு ஒரு வருடமாவது கடினமாக படித்தால் தான் PASS பண்ண முடியும் னு சொல்வாங்க, அத நீங்க நினைச்சால் மாத்தலாம்.
"எதுக்குமே நம்ம மனசு தான் காரணம்", முடியாதுன்னு நினைச்சாலே கண்டிப்பா முடியாது, "முடியும்" னு நினைச்சு முயற்சி தான் பண்ணிப் பாருங்களேன்.
"வெற்றியோ, தோல்வியோ ஒரு கை பார்ப்போம்". எது வந்தாலும் ஏத்துகுவோம்.
நன்றி,

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!
--------------------------------------------------

மனிதன் போடும் சிலகணக்குகள் பிழையாகும் போது அங்கே சந்தோசம் முற்றிலும் வடிந்துபோகிறது..

அதே நேரத்தில் கணக்கு சரியாக இருந்திருப்பின் உற்சாகம் குடிகொள்கிறது...

ஏன் நம்மில் பலர் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்வதில்லை...

தோல்விகள் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என எடுத்துக்கொண்டால் துக்கமும் மனஉளைச்சலும் நம்மை நெருங்குமா....

நம் அறிவை சோதிக்க சரியான தருணம் இன்னும் வரவில்லை என நினைத்துக்கொண்டால் என்ன...

இது ஓர் சிறிய சறுக்கல்தான்....எதையும் பாசிடிவ்வாக யோசிக்க வேண்டும்...அவ்வாறு யோசிக்க யோசிக்க மனம் தெளிந்து நல்வழிப் பிறக்கும்....

நம்தோல்வியை நினைத்து துவண்டுபோவதை விட வெற்றி பெற்றவரின் மதிநுட்பத்தை நினைத்து சந்தோசப் பட்டோமேயானால் நிச்சயம் அடுத்து நமக்கும் வெற்றிதான்...

நமக்குமுன் ஏகப்பட்ட பாதைகள் உள்ளன....எனவே,வாழ்வின் மொத்த சந்தோசமும் நம்மிடம் மட்டுமே உள்ளது...

நம்வெற்றியும் தோல்வியும் நம் நம்பிக்கையில் மட்டுமே உள்ளது...

நாம் தடுமாறி கீழே விழும்போதெல்லாம் சிலரின் அனுபவக் கருத்துகள் நம்மை நிமிர்ந்து எழச் செய்கின்றன..

நம்பிக்கை உள்ளவனுக்கு உலகமே தன் உள்ளங்கையில் அடங்கும்...அது இல்லாதவனுக்கு பூமியே...சின்ன புள்ளியாய் சுருங்கும்...

நம்பிக்கை கொண்டு நாம் விஸ்வரூபம் எடுப்போம்..
என்றும் நட்புடன்.....உங்கள் நம்பிக்கை சக்தி..!!!!

Thursday 24 September 2015

வள்ளலாரின் அறிவுரைகள்

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.

2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.

3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.

4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.

5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.

7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.

9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.

10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

இன்றைய பொழுது இனிதாகட்டும்...!