Sunday 10 April 2016

ஜாக்கிசான்

ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து, ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள்...

துவக்கத்தால் துவளாதே :

பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்!

செய்வதில் சிறந்திடு :

மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது.   நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ' 'fist of fury' படத்தின்   வாய்ப்பு  ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

சுயத்தை நம்பு :

ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :

ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,"ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை." என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,"அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !" என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். "எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !" என்று பிற்காலத்தில் சொன்னார் அவர்.

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின்  மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :

போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.

வெல்லும் வரை விடாதே  :

டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் : 2900 !

சொந்த காலில் நில் மகனே ! :

தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. " அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !" என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் !

பாணியை மாற்று ! :

பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். "எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !" என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !

கேட்பது

மனிதன் சொல்ல இறைவன் கேட்பது - திருவாசகம்.

இறைவன் சொல்ல மனிதன் கேட்பது - கீதை.

மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்.

அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது - திருவருட்பா.

ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்.

மகன் சொல்ல மகேசன் கேட்பது - பிரணவம்.

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

 நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்.

* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.

*கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.

* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.

* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.

* அன்பே வாழ்வின் அடிப்படை. ஆனால் வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான்.

* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. அமைதியான மனநிலையில் கடினமான பணி கூட எளிதாக நிறைவேறி விடும்.

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.
------------------------------------------------------------
நம்மை விட அல்லது யாரையும் விட புத்திசாலிகள் இவ்வுலகில் மிக அதிகம்.
----------------------------------------------------------------
கற்றது கடுகளவு கல்லாதது காடளவு.
---------------------------------------------------------------
விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..
மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..
நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
ஆம்..நண்பர்களே..,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.


தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல

 ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன், சாதனையாளன். தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.

உண்மையில் தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

அதே போன்று தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம். ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும்.

நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்பதே

பொதுவாக சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை. இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி, கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் (80களில்) தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது. ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.

மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை. "பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...' என்று ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக் கொள்வார்கள். வாழ்வின் இறுதி வரை முயற்சிசெய்து கொண்டேயிருப்பார்கள்

எப்போதெல்லாம் நமக்கு பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், "அதனால் என்ன? அடுத்து என்ன? நல்ல வழி தானாகவே பிறக்கும்.

நம்பிக்கை சக்தி

ஆகாயத்திற்கு குறிவைத்தால்தான் மர உச்சியையாவது தொடமுடியும்..!!

ஆனால்.. குறிவைப்பதே மர உச்சியை நோக்கியிருந்தால், இலக்கு தரைக்குமேல் போகாது..!!.

அடையமுடியாதது போல தோன்றினும் மிக உயர்ந்தவற்றிற்காக பாடுபடுவதை நிறுத்தக்கூடாது...!!

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ளவித்தியாசம் இதுதான்..
உணவும் இடமும் கிடைக்கும் வரை மிருகம் , தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை...!!

ஆனால், மனிதன் உயர்ந்தவற்றை அடைய முயன்று கொண்டே இருக்கிறான்..!!

உயர் லட்சியங்களுக்காகத் தொடர்ந்து முன்னேறுபவனே உண்மையான மனிதன்..!!!

நாளை தேர்வெழுத உள்ள என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்..

-நட்புடன் நம்பிக்கை சக்தி...

சிந்தனைகளோடு வாழுங்கள்


இறப்பு: சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். " உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்

திண்ணையை இடித்து தெருவாக்கு

 திண்ணையை இடித்து தெருவாக்கு

உட்கார் நண்பா நலந்தானா?-நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா?-உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா?

புல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி
புலம்ப வேண்டாம்-நெல்கூட
புல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது
பூமியின் பசியைப் போக்க வில்லை?

கடலின் நான் ஒரு துளிஎன்று
நீகரைந்து போவதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று -நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு

வந்தது யாருக்கும் தெரியாது- நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது
சந்ததிகூட மறந்துவிடும் -உன்
சரித்திரம் யாருக்கு நினைவு வரும்?

உணவு ஆடை வீடென்று -உன்
உடைமையைப் பெருக்கிக் கொள்ளாதே!
மனைவி மக்கள் வீடென்று -உன்
மனதின் எல்லையை சுருக்காதே

திண்ணைதானா உன்தேசம்-உன்
தெருவொன் றேவா உன் உலகம்
திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்
தெருவை மேலும் விரிவாக்கு

எத்தனை உயரம் இமய மலை -அதில்
இன்னொரு சிகரம் உனது தலை
எத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?

பூமிப் பந்து என்ன விலை -உன்
புகழைத் தந்து வாங்கும் விலை;
நாமிப் பொழுதே புறப்படுவோம்-வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்

தெரியலையா? வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்-இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும் அந்தக் கவிஞரின் பெயர் தாராபாரதி.
இந்த வரிகளே இப்படி என்றால் இந்தக் கவிதை முழுவதும் எப்படி இருக்கும்.

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான் வாழ்க்கையென- வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன்
விழிமுன் சூரியன் சின்னப் பொறி
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி

நீட்டிப் படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வலம் வரும் புதுப் பாதை

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன்
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல்
சுட்டு விரலின் சுகமாய் வானம்
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை-இனி
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி வரும்-உன்
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப் பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை
வேலை களல்ல வேள்விகளே!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

 தொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இதில் எந்தத் தர்ப்பை சேர்ந்தவர் என்பதைத் தீர்மானிப்பது எது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாகப் பெருமளவில் விளங்கினாலும் நம்முடைய மனோநிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம், தேர்தலில் பல முறை தோல்வியைத் தழுவிய ஒருவர் விடாமுயற்சியோடு போட்டியிட்டு அமெரிக்க அதிபராக வெற்றிவாகை சூடினார். தான் வளர்த்தெடுத்த நிறுவனத்திலிருந்தே துரத்தப்பட்ட ஒருவர் பின்னாளில் பிரபலக் கணினி ஜாம்பவானாக மாறினார். அவர்கள் யார் யார் என்று தெரிகிறதா? இப்படித் தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்ளவும் தொழில்ரீதியாகச் சிறந்து விளங்கவும் தேவையான 10 அணுகுமுறைகளை ஸ்பெயினில் இருக்கும் நவரா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆலோசகருமான பாப்லோ மேல்லா பட்டியலிடுகிறார்.

நிதர்சனங்களைப் புரிந்து கொள்தல்

உங்களையும் மற்றவர்களையும் குறித்த நிதர்சனமான பார்வையும் புரிதலும் வளர்த்துக் கொள்ளும்போதுதான் சுய முன்னேற்றம் சாத்தியமாகும். அதிலும் நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை விடுத்துச் சூழ்நிலையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம்.

பலமும் பலவீனமும்

தப்பித்தவறிகூடத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என நமக்கு நாமே கடிவாளம் போட்டுக்கொள்வதும் சிக்கல்தான். நம்முடைய குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். பலவீனங்களை ஒத்துக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். இல்லையேல் தோல்வியால் மனம் உடைந்துபோகும். பலவீனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகாதவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். ஆக, வெற்றியைக் கொண்டாடுவோம்; தோல்வியை நிதானமாக ஏற்றுக்கொள்வோம்.

குற்றம் பார்க்கலாமா?

நீங்கள் சங்கிலி துரித உணவகங்களைப் பல்வேறு இடங்களில் நடத்துபவர் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென ஒரு உணவகத்துக்கு வந்திறங்கிய இறைச்சி கெட்டுப்போனதாகத் தெரியவருகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி அந்த உணவை அப்புறப்படுத்தியபோதும் இந்தச் செய்தி பரவிவிடுகிறது. இதில் உங்களுடைய தவறென்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஹோட்டல் நிறுவனராகப் பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் நடந்ததை எண்ணிச் சோர்ந்துபோகலாம். யாரால் இது நடந்ததோ அவரைக் கடிந்துகொண்டு தண்டிக்கலாம். ஆனால் இதனால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவதுதான் நல்லது.

மகிழ்ச்சியும் நன்றியும்

நெடுங்காலமாகக் காத்திருந்த வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாக மகிழ்ச்சி அடைவோம். சில காலம் முழுமூச்சாக ஈடுபாட்டோடு செயல்படுவோம். ஆனால் காலப்போக்கில் உத்வேகம் குறைந்து அதன் அருமை மறந்துபோகும். இந்த வேலை கிடைத்திடாதா என ஏங்கிய காலம் மாறி இது சரி இல்லை, அதில் குறை எனச் சலிப்பூட்டும். இதனால் நம்முடைய மனச்சோர்வுக்கு நாமே காரணமாகிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நேர்மறைச் சிந்தனை

எதிர்மறையான சிந்தனை கொண்டவர்களைக் காட்டிலும் நேர்மறையான விற்பனையாளர்களால் 90 சதவீதம் கூடுதலாகத் தங்கள் பொருட்களை விற்க முடிந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு. அது எப்படிச் சாத்தியம் எனக் கேட்கலாம். உதாரணமாக, நண்பர்கள் சந்திப்புக்குச் செல்லும்போது எப்படியும் அந்தக் கூட்டம் அறுவையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு சென்றீர்களானால் நிச்சயமாக உங்களால் கொண்டாட்ட மனநிலைக்கு எளிதில் வர முடியாது. அதே எளிமையான உளவியல்தான் இதன் அடிப்படையும்.

எட்டக்கூடிய இலக்கு

நம்மால் எட்ட முடிந்த இலக்கை நிர்ணயிக்கும்போது அதற்கான உத்வேகம் தானாகவே பிறக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டுத் திட்டமிடுங்கள்; வெல்லுங்கள்!

அர்த்தமுள்ள செயல்பாடு

ஒருவர் அலுவலக வேலைக்குச் செல்வதும் மற்றொருவர் சமூகச் செயற்பாட்டாளராக இயங்குவதும் ஒன்றாகிவிட முடியாது. சிலருக்கு மட்டுமே வேலை என்பது வாழ்க்கையின் அர்த்தமாகவே மாறிப்போகும். மற்றவர்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முன்வர வேண்டும்

கொடுத்த வேலையை மட்டுமே செய்வதற்கும் முக்கியத் தீர்மானங்களைத் தானே முன்வந்து எடுப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது தானாகவே உத்வேகம் அதிகரிக்கும்.

நம்பிக்கையும் கடமையும்

நமக்குப் பிடித்ததை மட்டுமே செய்துவிட்டாலே உற்சாகம் பீறிட்டு எழும் எனச் சொல்லிவிட முடியாது. பிடித்த விஷயத்தை முழு ஈடுபாட்டோடு செய்யும்போது மட்டுமே அது சாத்தியம். ஈடுபாடு தளர்ந்துபோகும் வேளையில் உங்களுடைய கடமைகளை அசைபோடுங்கள் அது உங்களை வழிநடத்தும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

தடைகளை எதிர்கொள்ளும்போது தளர்ந்துபோவது சகஜம்தான். ஆனால் விழும்போது நம்மை நாமே எழுப்பிக்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் போட்ட புதிருக்கு விடை இதோ. விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க முடியாது.

அப்துல் கலாம்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது....
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ...
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...
👌
👇
📢
👊

👉
நேரம்
👉
இறப்பு
👉
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉
நகை
👉
பணம்
👉
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉
புத்தி
👉
கல்வி
👉
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉
உண்மை
👉
கடமை
👉
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉
வில்லிலிருந்து அம்பு
👉
வாயிலிருந்து சொல்
👉
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉
தாய்
👉
தந்தை
👉
இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉
தாய்
👉
தந்தை
👉
குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்

வெற்றி

 நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது.
---ஹிட்லர்

எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது
--ஆபிரஹாம் லிங்கன்

வெற்றிக்கு மூன்று வழிகள்:
1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்
-- வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.
-- சார்ல்ஸ் டிக்கன்ஸ்

வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.
-- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எப்போதும் புகழ்ச்சிக்கு
மயங்காதிரு ...
எக்கணமும் இகழ்ச்சிக்கு
கலங்காதிரு ...
காலம்கொடுத்த வேலையென்று
கடமைசெய் ...
காலம்என்றும் முடியக்கூடும்
விரைந்துசெய் ...
உன்கணக்கு முடிந்துவிட்டால்
ஒய்வுதான்
உயிரிருக்கும் நேரமெதற்கு
ஒய்வுதான் ?
கொண்டுபோக இவ்வுலகில்
ஏதுமில்லை ...
தந்தபோனால் கொண்டுபோவாய்
பேருதான் ...


எதிர்த்து நில்...

எதிர்த்து நில்...

துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.


இது உலகத்தின் நீதி ...

உலகத்தையே வெல்லும் சக்தி
உனக்குள்ளே இருந்தாலும் ...
நீ வெல்லும்வரை
இந்த உலகமுன்னை
வேடிக்கையாக்கூட பார்க்காது ...
அதேநீ வென்றுவிட்டால்
கோமளியாக இருந்தால்கூட
கடவுளாகப் பாவிக்கும் ...

மொரார்ஜி தேசாய்

 நேர்மையான அரசியல் தலைவர், முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் (Morarji Desai) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் (தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார்.

* சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.

* மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.

* பம்பாய் மாகாண முதல்வராக 1952-ல் பொறுப்பேற்றார். ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அரசில் வணிகம், தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை பிரதமராகப் பணியாற்றினார்.

* காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975-ல் அவசர நிலையை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியில் இணைந்தார்.

* நாட்டின் 4-வது பிரதமராக 1977-ல் பொறுப்பேற்றார். ஜனநாயகத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு, தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார்.

* விவசாயத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நிலவரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வகைசெய்து, நல்ல விலை கிடைக்கச்செய்தார். கட்டாய வேலைவாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலை போடுதல், பாசன வசதி போன்ற பணிகள் செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளத்துக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

* ‘ஜனதா’ சாப்பாடு திட்டம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைத்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையை சீரமைத்தார். உள்நாட்டு சிறு தொழில், வணிகத் துறைகளை ஊக்கப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டினார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது இவரது மாபெரும் சாதனை.

* சில அரசியல் விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் இரண்டே ஆண்டுகளில் இவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். தனது சித்தாந்தங்கள், கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்.

* இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் இதற்கு இணையாக கருதப்படும் ‘நிஷான் இ பாகிஸ்தானி’ விருதும் பெற்றவர். இந்த 2 விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே. பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையுடன் செயல்பட்ட கறைபடாத அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாய் 99-வது வயதில் (1995) மறைந்தார்.

குறிக்கோள்!

குறிக்கோள்!

நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள். நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

வாழ்க்கை

1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள்.

2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள்.

3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கப் போகும் போது நாம் இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் எனக்கு பெரிய விஷயமாகும்.

4. எனக்கு 17 வயதாக இருக்கும் போது சில வார்த்தைகள்  என்னை மிகவும் கவர்ந்தது. " உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து வாழ்ந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது "இன்று தான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எனக்கு நானே  சொல்லிக்கொண்டு என் வேலைகளை ஆரம்பிப்பேன்.

5. சில நேரங்களில் இந்த வாழ்க்கை உங்கள் தலையை செங்கல் கொண்டு அடித்து நொறுக்கும். எந்த நேரத்திலும்  நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

6. வாழ்க்கை என்பது வரையறுக்கப்பட்டது. அன்பு மட்டுமே பல மைல்கள் கடந்து பயணிக்கும்.

7. பொருட்களை, செல்வங்களை தொலைத்து விட்டால் திரும்ப கண்டுபிடித்து விடலாம். ஒன்றே ஒன்றை மட்டும் தொலைத்து விட்டால் மீண்டும் அதை கண்டுபிடிக்கவே முடியாது அந்த ஒன்று தான் வாழ்க்கை.