Tuesday 27 October 2015

நோபல் பரிசு - 2015:

நோபல் பரிசு - 2015:

மருத்துவம்: [வில்லியம் கேம்பெல் - அயர்லாந்து, சதோஷி ஒமுரா - ஜப்பான் & யூயூ தூ - சீனா ]:

உருளைப் புழுக்களால் ஏற்படும் யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும்,

மலேரியாவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக யூயூ தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ள "அவெர்மேக்டின்' மருந்து, உருளைப் புழு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக் கால் வியாதி,

பார்வையின்மை ஆகிய நோய்கள் தாக்குதவதை மிகப் பெரிய அளவில் குறைத்துள்ளது.

மேலும், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிற நோய்களையும் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது.

யூயூ தூவால் கண்டுபிடிக்கப்பட்ட "ஆர்டெமிஸினின்' மருந்து, மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.

இயற்பியல்: [கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா]:

நியூட்ரினோ ஆய்வுக்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

வேதியியல்: [தாமஸ் லிண்டால் - சுவீடன், பால் மாட்ரிச் - அமெரிக்கா, அசீஸ் சன்கார் - துருக்கி]:

மரபணு குறையை சீரமைக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

இலக்கியம்: [ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் - பெலாரஸ்]

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 14வது பெண் அலெக்ஸிவிச் ஆவார்.

இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட பல உணர்வுப் பூர்வமான புத்தகங்களை எழுதியவரும், பல மொழிகளில் இருந்து புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார்.

ரஷ்ய மொழியில் இவர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இன்னமும் அவரது தாய் மொழியில் எழுதப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதி: [துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழு]

துனிசியாவின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த பேச்சுவார்த்தைக்குழுவுக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்: [ஆங்கஸ் டீட்டன் - ஸ்காட்லாந்து]

2015ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு (69) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரின்ஸ்டென் பல்கலைகழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஆங்கஸுக்கு, நுகர்வு, வறுமை, மக்கள் நலம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதற்காக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.

எடிசன்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..

இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் ” மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்…..

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்

GK

01.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்
5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்

HISTORY

1.உமாயூன்' எனற வார்த்தையின் பொருள் என்ன ?
அதிஸ்டசாலி

2.ஷெர்சா -வின் அமைச்சரவையில் காணப்பட்ட 'திவானி -இ-ஆரிஸ்' என்ற அமைச்சரின் பணி என்ன ?
இராணுவ பொறுப்பாளர்

3.குதிரைப்படையிலுள்ள குதிரைகளுக்கு சூடு போடும் முறையான் ' தாக்' எனும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? ஷெர்சா

4. 'அக்பரின் முன்னோடி' என அழைக்கப்படுபவர் யார் ? ஷெர்சா

5.நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார் ?
ஷெர்சா

6.இராமாயணம்' மற்றும் ' மகாபாரதம்'காவியங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர் ?
அபுல்பைசி

7.ஆங்கிலேயருக்கு சூரத் நகரில் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய மன்னர்யார் ?
ஜஹாங்கீர்

8.துசுக் -இ - ஜஹாங்கிரி -நூலை எழுதியவர் ?
ஜஹாங்கீர்

9.மக்களுக்கு நீதி வழங்க "நீதிச் சங்கிலி முறை"யை அறிமுகப்படுத்திய மன்னர் யார் ?
ஜஹாங்கீர்

10." நூர் மஹால்" - என்பதன் பொருள் என்ன ? அரண்மனையின் ஒளி

11. மகாஜன பதங்களின் எண்ணிக்கை ?
16

12.வஜ்ஜிக் கூட்டாட்சியின் தலைநகர் ? வைசாலி

13. மகதப் பேரரசின் முதல் (பழைய) தலைநகரம் எது ?
சிராவஸ்தி

14.பாலி மொழியில் திரி பீடகம் என்பதன் பொருள் என்ன ?
மூன்று கூடைகள்

15.பிம்பிசாரர் எந்த வம்சத்தைசார்ந்தவர் ?
அரியங்க வம்சம்

16.சந்திரகுப்த மொளரியர் வென்ற நந்த மன்னன்யார் ?
தன நந்தன்

17.சந்திரகுப்த மொளரியர் எந்த கிரேக்க மன்னனை தோற்கடித்தார் ?
செலுக்கஸ் நிகேடர்

18. சந்திர குப்த மெளரியர் தழுவிய மதம் ?
சமண மதம்

19.சந்திர குப்த மொளரியரின் மகன்யார் ? பிந்துசாரர்

20. அசோகரால் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது ?
மூன்றாம் புத்த மாநாடு

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்
==============================
========
கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது – கோ. செல்வம்
சொல்லின் செல்வர் விருது – முனைவர் சோ. சத்தியசீலன்
ஜி.யு. போப் விருது - மதுரை இளங்கவின்
(எம்.ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது – மு. சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது – முனைவர். நிர்மலா மோகன்
மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
அண்ணல் அம்பேத்கார் விருது – ஆழி. கு. மகாலிங்கம்
பேரறிஞர் அண்ணா விருது – திருமதி. கஸ்தூரி ராஜா
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - கரு. நாகராஜன்
திருவள்ளுவர் விருது – திருக்குறள். க. பாஸ்கரன்
தந்தை பெரியார் விருது – தாவூஜி குப்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கண்மதியன்
பெருந்தலைவர் காமராஜர் விருது – கருமுத்து. தி. கண்ணன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – பேராசிரியர் எம்.ஏ. ஜேம்ஸ்
தமிழ்த்தாய் விருது – திருவனந்தபுரம் தமிழ்சங்கம்

வங்கி

1. இந்தியாவில் முதன் முதலாக வங்கியானது யாரால் துவக்கப்பட்டது ?
அலெக்ஸாண்டர் & கம்பெனி 1770

2. இந்தியாவில் தற்கால நடைமுறையிலுள்ள வங்கி அமைப்பானது முதன் முதலில் 1806 ல் " வங்காள வங்கி " என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது

3. ரிசர்வ் வங்கியின் மூன்று வகைப் பணிகள் எவை?
அ) தொன்மைப் பணிகள்
ஆ) மேற்பார்வை பணிகள்
இ) முன்னேற்ற பணிகள்

4. Languages on Currency Notes
The amount of a banknote is written on it in 17 languages out of 22 official languages of India. The languages are Assamese, Bengali, Gujarati, Kannada, Kashmiri, Konkani, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Tamil, Telugu and Urdu.

5. 'மாற்றுச்சீட்டு' என்பது ஏற்றுமதியாளர்களுக்கு இறக்குமதியாளர்கள் வழங்கும் உறிதிப்பத்திரம்

6. அயல்நாட்டுச் செலாவணியின் பாதுகாவலன் யார்? ரிசர்வ் வங்கி

7. இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய்.5 கோடி முதலீட்டுடன் ஏப்ரல் 1935 ஆரம்பிக்கப்பட்டது

8. இந்திய ரிசர்வ் வங்கி எதனை அடிப்படையாகக் கொண்டு வங்கித்தாள் பணத்தை வெளியிடுகிறது ?
குறைந்த இருப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு
ரூ. 115 கோடி அளவு தங்கம் + ரூ.85 கோடி அளவு அன்னியசெலாவணி

9. மைய , மாநில அரசுகளுக்கு முன்பணக்கடன்களை எத்தனை நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டி ரிசர்வ் வங்கி வழங்குகிறது ?
91 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்

10. பணவீக்கத்தை கட்டுப்படுத்த
அ) வங்கிகள் தாம் வழங்கும் கடன்களின் வட்டிவீததை உயர்த்தும்
ஆ) பண அளிப்பினைக் குறைத்தல்
இ) வங்கி ரொக்க இருப்பு வீதத்தை அதிகரித்தல்
( RBI செய்கிறது )

11. EXIM வங்கிகள் ஏற்றுமதி வளர்ச்சிக்காக கடன் வழங்குகின்றன

12. ரிசர்வ் வங்கியின் நிறுவனங்கள் ,
NABARD , EXIM BANK , IFCI , IDBI , SFC

13. ரிசர்வ் வங்கியைப் பற்றி , ( மைய வங்கி )

a) W.A. ஷான் -- கடனை கட்டுப்படுத்தும் அமைப்பு
b) ஹாட்ரே -- கடன் வழங்கும் கடைசிப் புகழிடம்
c) சாமுவேல்சன் -- வங்கிகளின் வங்கி மற்றும் " மீப்பெருமதிப்புப் பணத்தைக் " கொண்ட அமைப்பு
d) ஆடம்ஸ்மித் -- ஒரு தனித்த வங்கியின் வங்கியில் முறை

14. கால்ம விலக்கம் என்பது
( Mean Deviation )
Q.D = (Q3 - Q1) / 2

15. முகடு =
( 3 இடைநிலை -
2 கூட்டுச்சராசரி )

அளபெடை

அளபெடையிலிருந்து நிச்சயம் ஒரு வினா கேட்கப்படலாம்.ஆகவே இதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.
அளபெடை
ஓர் செய்யுளில் ஓசை குறையும்போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.
அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை
1.உயிரளபெடை
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது
உயிரளபெடையாகும்.
செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)
என இது வகைப்படும்.
செய்யுளிசையளபெடை (அ)
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறு பெயர் இசைநிறையளபெடை.
(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்ல படா அ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்
சொல்லிசையளபெடை (இ)
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச்சொல்லை வினையெச்ச
சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை
என்பதாகும்.
(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ
இன்னிசையளபெடை (உ)
செய்யுளில் ஓசை குறையாதபோதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்
(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்
2.ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்யும்பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும்.இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.
(எ.கா) கண்ண் கருவினை
கலங்ங்கு நெஞ்சமில்லை
இலஃஃகு முத்தின்
மடங்ங்கலந்த.

தேசிய ஆய்வுக்கூடங்கள்

தேசிய ஆய்வுக்கூடங்கள்
தேசிய மின் வேதியியல் ஆய்வுக் கூடம் (CECRI) காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னை
தேசிய விமான ஆய்வுக்கூடம் பெங்களுரு
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் பூனே
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம்
மத்திய மீன் ஆராய்ச்சி மையம் எர்ணாகுளம்
மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் கட்டாக் ( ஒரிசா )
வன ஆராய்ச்சி மையம் டேராடூன்
விவசாய ஆராய்ச்சி மையம் புது டெல்லி
சர்க்கரை ஆராய்ச்சி மையம் கான்பூர்
லூயி பாஸ்டியர் மையம் குன்னூர் ( ஊட்டி)
தமிழக அரிசி ஆராய்ச்சி மையம் ஆடுதுறை ( தஞ்சை)
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் டிராம்பே
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ரூர்கேலா
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லி
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் ராஜமுந்திரி
இந்திய பெட்ரோலிய நிறுவனம் டேராடுன்
தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழகம் கர்னால் ( ஹரியானா)
தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் கோவா
தேசிய நூலகம் கொல்கத்தா
தேசிய அருங்காட்சியகம் டெல்லி
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் புது தில்லி
ஏவுகணை செலுத்தும் மையம் தும்பா
காச நோய் நிறுவனம் புது தில்லி
தேசிய நிலக்கரி வளர்ச்சி நிறுவனம் ராஞ்சி

July – 2015 Current Affairs

July – 2015 Current Affairs
1. இந்தியாவில் ஒரு நிமிடம் லீப் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது 30.06.2015 ம் நாள் முதல் அமுலுக்கு வருகிறது. (TIME AND FREQUENCY STANDARDS LABORATORY, New Delhi)
2. Digital India வாரம் பிரதமரால் ஜூலை 1, 2015 ம் நாளன்று தொடங்கப்பட்டது.
3. மக்கள் தொகை பட்டியல் ஜூன் 30, 2015 ம் நாளன்று அரசால் வெளியிடப்பட்டது. இதன்படி 207.8 லட்சம் பார்வையற்றவர்கள் இந்தியாவில் உள்ளனர். அதிக பார்வையற்றவர்கள் உள்ள மாநிலமாக உத்திரப்ரதேஷ் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேஷ் உள்ளது. குறைந்த அளவில் Lakshadweep, Daman and Diu and Dadra & Nagar Haveli யில் உள்ளனர்.
4. சஞ்சீவ் கலாடே அவர்களுக்கு 2014 ம் ஆண்டுக்கான G.D. Birla விருது வழங்கப்பட்டுள்ளது.
5. US Presidential Award இந்திய அமெரிக்கரான திரு தர்சன் ஜெயின் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
6. Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டம் பொருளாதார விவகார அமைச்சர் குழுவால் 02.07.2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு (2015-2016 to 2019-2020) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
7. HIV-1 க்கு எதிரான மருந்து Interleukin-21 கார்னல் மருத்துவ கல்லூரி (நியுயார்க்) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8. 30.06.2015 ம் நாளிலிருந்து HIV என்ற நோய் தாயிடம்மிருந்து குழந்தைகளுக்கு பரவுவதிலிருந்து முற்றுலும் தவிர்க்கப்பட்ட நாடாக கியுபா உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது
9. C.H.Vidyasagar Roa (03.07.2015) வால் எழுதப்பட்ட உனிகி என்ற புத்தகத்தின் முதல் பிரதியே மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
10. 2015 ம் ஆண்டுக்கான உலக உணவு விருது Sir Fazle Hasan Abed (Bangladesh) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
11. இந்திய அமெரிக்கரான R.Paul Singh அவர்களுக்கு GCHERA WORLD AGRICULTURE PRIZE ( உலக விவசாய விருது ) 24.06.2015 ம் நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 20.09.2015 ம் நாளன்று வழங்கப்படும்.
12. South Asian Basket Ball சாம்பியனானது இந்தியா நாள் (05.07.2015)
13. பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கார்பொரேசன் வங்கி முதன்முதலில் முத்ரா அட்டையே (MUDRA Card) வழங்கத் தொடங்கியது நாள் 04.07.2015.
14. இந்தியாவும் கஜகஸ்தானும் ஐந்து ஒப்பந்தங்கள் கையளுததாயின (08.07.2015) இதில் யுரேனியம் பெறுவது சம்பந்தமான ஒப்பந்தமும் ஒன்றாகும்.
15. கோவாவில் 2016- ம் ஆண்டு Youth Delphic Games நடைபெற உள்ளது.
16. மத்திய உள்துறை அமைச்சகம் நாகலாந்து மாநிலத்திற்கான இடையுறு பகுதி அந்தஸ்து (Disturbed Area Status) (Under Section 3 of the Armed Forces Special Power Act 1958) மீண்டும் ஓராண்டு நீட்டித்துள்ளது
17. எழாவது பிரிக்ஸ் மாநாடு (BRICS SUMMIT) ரஷ்யாவின் உபா (UFA) நகரில் (8th to 9th July 2015) ல் நடைபெற்றது. ஆறாவது மாநாடு (2014) ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்றது. எட்டாவது மாநாடு 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது
18. Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்களால் Rashtriya Avishkar Abhiyan (RAA) திட்டம் (09.07.2015) தொடங்கப்பட்டது. இத்திட்டம் பள்ளிகுலந்தைகளின் அறிவியல் வேட்கையை தூண்டுவதாகும்
19. இந்தியாவும் பாகிஸ்தானும் 2016 ம் ஆண்டில் இருந்து சங்காய் ஒத்துளைப்பு அமைப்பில் (Shangai Cooperation Organisation (SCO) ) முழு உறுப்பினராக சேர உள்ளது. SCO அமைப்பு 15th June 2001 –ம் ஆண்டு ஆறு உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு (சீனா, ரஷ்சியா, கஜகஸ்தான்,கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா ,பாகிஸ்தான்)
20. செரினா வில்லியம்ஸ் ஆறாவது விம்பிள்டன் கோப்பையே வென்றார்
21. மகேஷ் பூபதியும் மார்டினா கிங்கிசும் கலப்பு இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
22. சுமித் நாகல் மற்றும் நாம் ஹோஅங் இருவரும் ஆண்கள் இரட்டடையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
23. சானிய மிர்ஸாவும் மார்டினா கிங்கிசும் பெண்கள் இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்
24. இந்தியாவின் மிக நீண்ட குகைப்பாதை பட்னிடோப் 2016 ல் திறக்கப்பட உள்ளது.
25. தமிழ்நாடு 55 வது தேசிய மாநிலங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டியே நடத்தியது.
26. World Youth Skills Day முதன் முதலாக 15th July 2015 ம் நாளிலிருந்து கடைப்பிடிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் World Youth Skills Day திண்மக் 15th July கொண்டாடப்படும்.
27. இந்தியாவின் மிகப் பழமையான துறைமுகம் ரேம்னந்த்ஸ் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
28. Pradhan Mantri Kaushal Yojana என்ற திட்டம் பிரதம மந்திரியால் 15.07.2015 நாளன்று தொடங்கப்பட்டது.
29. நெல்சன் மண்டேலா சர்வேதேச தினமாக ஜூலை 18 – ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

முயல், ஆமை கதையின் "லேட்டஸ்ட் வெர்ஷன்" :-

முயல், ஆமை கதையின் "லேட்டஸ்ட் வெர்ஷன்" :-
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்
.
இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : "டீம்-வொர்க்" வின்ஸ்!

டீம்-வொர்க்:-
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை,

வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.
நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்

முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.

‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬.
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்
.
இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : "டீம்-வொர்க்" வின்ஸ்!

டீம்-வொர்க்:-
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை,

வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.
நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்

முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.

‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬.
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!

புலம்பாதே போராடு ...

புலம்பாதே போராடு ...
================

புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...

வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...

திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...

எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...

ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...

போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...

GK

101தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
106கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
107,திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
108,மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
109,தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்
.
110,தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
111,சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
112,தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
113,தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
114,தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
115,புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
116,வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
117,தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
118,தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
119,தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
.
120,முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
121,தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
122,பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
123,கர்மவீரர் -காமராஜர்.
124,கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
125,மூதறிஞர் -ராஜாஜி.

126,தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
127,சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
128,சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை
.
129,சொல்லின் செல்வன் -அனுமன்.
130. நெடியவன் :ராமன் 131. முதல் அரசர் - சந்திரகுப்த மௌரியர்
132. சந்திரகுப்த மௌரிய மௌரிய புத்ரா என்று அழைத்தவர் விசாகதத்தர்
133. சந்திரகுப்த மௌரிய அரசியல் குரு சாணக்கியர்
134. சாணக்கியர் வேறுபெயர்கள் கௌடில்யர், விஷ்ணு குப்தர்
135. சந்திரகுப்த மௌரிய மனைவி ஹெலன்
136 ஹெலன் தந்தை செல்யூகஸ் நிகேடர்
137. செல்யூகஸ் நிகேடர் தூதர் மெகஸ்தனிசு
138. மெகஸ்தனிசு எழுதிய நூல் இண்டிகா
139. மௌரியர்களின் ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் இண்டிகா
140. சந்திரகுப்த மௌரியர் பின் பற்றிய சமயம் சமண சமயம்
141. சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது சந்திராபாஸ்டி
142. சந்திரகுப்த மௌரியரின் உடன் சென்ற துருவி பத்ரபாகு
143. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்
144. பிந்துசாரர் பட்டப்பெயர் அமித்ரகதா
145. பிந்துசாரர் மகன்கள் சுமனா, அசோகர்
146. முதல் தேசிய அரசர் அசோகர்
147. அசோகர் ஆட்சி செய்த பகுதி உஜ்ஜயினி
148. அசோகர் மனைவி தேவி
149. அசோகர் முதலில் வணங்கிய கடவுள் சிவன்
150. அசோகர் புத்த மதத்திற்கு மாற்றியவர் உபகுப்தர்

GK

1. மிகவும் சிறந்த மின்கடத்தி - வெள்ளி

2. இரு மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைப் பற்றி கூறும் விதி ? கூலும் விதி

3. ஹைட்ரஜன் குண்டுக்குக் காரணமான நிகழ்வு -- அணுக்கரு இணைவு ( nuclear fusion )

4. குறைகடத்தி தனிமங்களின் ( semiconductor ) பிணைப்பு - சக பிணைப்பு ( covalent bond )

5. இரும்பு அதிகம் உள்ள தாது -- ஹேமடைட்

6. கணிப்பொறி மற்றும் மின்னனு சாதனங்களில் உள்ள சில்லுகள் ( chips) எதனால் ஆனவை -- சிலிக்கான்

7. காமா கதிர்கள் - மின் தன்மையற்ற கதிர்கள்

8. குளோரோபில்லில் உள்ள உலோக அணு -- மெக்னீசியம்

9. ஆஸ்பிரின் வேதிப்பெயர் -- அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ( வலி நீக்கி )

10. இஞ்சி என்பது தரைகீழ் தண்டு

11. மரபியல் தந்தை - கிரிகெர் ஜோஹன் மெண்டல்

12. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா -- ரைசோபியம் , அசட்டொபாக்டர்

13. பிரஷர் குக்கரில் உணவு மிக விரைவாக வேகக் காரணம் -- அதிக அழுத்தம் வெப்பநிலையை உயர்த்துவதால்

14. நொதிகள் ( enzymes ) - நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வேதிமப் பொருட்கள்

15. எலிசா சோதனை ( Elisa test ) -- HIV கண்டறிய

16. புளியில் உள்ள அமிலம் - டார்டாரிக் அம்லம்
இரப்பையில் உள்ள அமிலம் -- HCL

17. ஒலியின் வேகம் அதிகம் காணப்படுவது -- இரும்பு ( எஃகு )

18. ஓர் ஏவுகணை வேலை செய்யும் தத்துவம் -- உந்தம் அழிவின்மை விதி

19. கரும்புச் சர்க்கரை ( சுக்ரோஸ் C12 H22 O11 ) என்பது ஒரு
டை சாக்கரைட்

20. மாலைக்கண் நோய் ( நிக்டலோபியா ) எதன் குறைபாட்டினால் வருகின்றது ? வைட்டமின் A குறைவினால்

21. கரையக் கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நிறைந்த நீர் -- மென்நீர்

22. சமையல் சோடாவின் வேதிப்பெயர் -- சோடியம் பை கார்பனேட்

23. ஒரே அணு எண்ணும் ஒரே அணு உடையது ( ஐசோடோப்பு ) -- ஹைட்ரஜன்

24. செல்களுக்கு ஆற்றல் கிடைப்பது -- சுவாசித்தல் மூலம்

25 . ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான நிறமி -- குளோரோபில்

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழகம் என அழைக்கப் பெறும் தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். மதராஸ் மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள் தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்) உள்ளது.

2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

CURRENT AFFAIRS NOTES FOR GROUP 1 PRELIMINARY EXAM (JAN 2015 TO SEPTEMBER 2015)

CURRENT AFFAIRS NOTES FOR GROUP 1 PRELIMINARY EXAM (JAN 2015 TO SEPTEMBER 2015)

IMPORTANT AWARDS:

1) Champions of change (for providing the service to physically challenged) - Swetha prabakaran

2) Champions of change ( Climate change category ) Sunita

3) Champion of earth - sheik hasina

4) Santhiswarup patnagar award
a) Biology - balasubramanian
b) Medicine - vididha vaidhya
c) Mathematics - Reeta
d) Chemistry - srinivasa reddy
e) Engineering - Yokesh

5) A.P.J.Abdul kalam award - N.Valarmathi (director of remote sensing)

6) avvayar award - santhi renganathan

7) Kambar awrad - selvam

8) kabilar award - piraisoodan

9) vu.ve.saaminadhayyar award - bala subramanian

10) Computer tamil award - kumaresan

11) umaruppulavar award - saibu maraikkayar

12) ilangovadigal award - nirmala mihan

13) National tourism awards to - kerala, gujarat and madhyapradesh

14) the 1st sansad peace award - vijaygupta (conferred by southkorea)

15) Tensing norway award - joth singh, arunima sinha and param vir singh

16) ramanujam award - krishnan

17) khelratna award - sania mirza

18) Dhyan chand award - romio james, mishra and nayar

19) Nelson mandela award - jelena and fernando

20) Raman magsaysay award - sanjeev (emerging leader) and anshy gupta

6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்

6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
19. கபிலர் நண்பர் :பரணர்
20. அகநானூறு பிரிவு
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. நான்காம் சங்கம் :மதுரை

NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?

HELLO FRIENDS........
NOTIFICATION வந்த பிறகு படிக்கலாம்னு இருப்பவர்களா நீங்கள்?
"யார் என்ன சொன்னாலும் என்னால படிக்க முடியல" அப்படி என்பவரா நீங்கள்....???
எவ்ளோ ட்ரை பண்ணி படிச்சாலும் மனசுல நிக்கவே மாட்டுது அப்படி என்பவரா நீங்கள்....???
கொஞ்சம் படிச்சாலே tired ஆகுபவரா நீங்கள்?
அப்ப நீங்க இதை கண்டிப்பாக பின்பற்றி பாருங்கள்.
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
வரும் தேர்வுகளுக்கு முக்கியம் தமிழில் நன்றாக, தெளிவாக படித்து இருக்க வேண்டும், அப்படி படித்தால் 100 மதிப்பெண்களுக்கு நம்மால் கட்டாயம் 85 முதல் 90 வினாக்களுக்கு விடை அளிக்க முடியும். உங்களுக்கு இது தெரிந்த செய்தி தான்.
ஆனால் 6 முதல் 12 வரை படிக்க என்னால இந்த குறைந்த நேரத்தில் எப்படி படிக்க முடியும்? இது உங்கள் கேள்வியாக இருந்தால் என் பதில்.......
உங்களால் (முடியும் OR முடியாது)
அனால் படிச்சு முடிச்சவங்க, தமிழில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து கேள்வி "கேட்க கேட்க" தெரிந்தவர்கள் பதில் "கூற கூற" அதை நீங்கள் நன்றாக கவனித்தால் உங்கள் மனதில் நன்றாக பதியலாம். எல்லாரும் பதில் கூறுவதை பார்த்து உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்,
மற்றவர்கள் போஸ்ட் பண்ணும் கேள்விகளுக்கு தப்போ, சரியோ பதில் அளியுங்கள். இன்னும் உற்சாகம் ஆவீர்கள்.
சில பேருக்கு Book ah எடுத்தாலே தூக்கமாக வரும், அனால் SYSTEM, CELLஅதிகமா use பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்கலாம் இப்படி ட்ரை பண்ணலாம். இது உங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் சேர்த்து தான். JOB பார்க்கிற நிறைய பேருக்கு கண்டிப்பா நேரம் கிடைப்பது மிக கடினம்.
தமிழ் நன்றாக படித்து முடித்தவர்களுக்கு எது முக்கியமான கேள்வி, புத்தகத்தில் எப்படிலாம் கேள்வி கேட்கலாம்னு நன்றாக தெரியும்........நீங்கள் கேள்விகள் POST பண்ணுவதால் உங்களுக்கும் ஒரு தடவ Revise பண்ண மாதிரி இருக்கும்....
இன்றைக்கு 6th தமிழில் நான் ஆரம்பித்து வைக்கிறேன் friends...
எவ்ளோ சீக்கிரம் வேகமா படிக்கிறோம் என்பது நம்ம கைல தான் இருக்கு......
இந்த குரூப்ல இருக்க, கண்டிப்பா அரசு வேலைக்கு போகணும்னு நினைக்கிற எல்லாரும் support பண்ணுங்க. அப்ப தான் சாதிக்க முடியும்.
பொதுநலமா யோசிங்க, கண்டிப்பா உங்களுக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் friends......
கேள்விகள் POST பண்றவங்க SUPPORT ரொம்ப முக்கியம்.
இது நான் எப்பவோ சொன்ன ஐடியா தான், அப்ப follow பண்ணல , but இனி தீயா உழைக்கணும், நம்ம கிட்ட நேரமும் இல்லை, நாட்களும் இல்லை.
தமிழ் முழுவதும் முடித்தவர்களுக்கு இது ஒரு REVISION மாதிரி இருக்கும்.
குறைந்தது TNPSC கு ஒரு வருடமாவது கடினமாக படித்தால் தான் PASS பண்ண முடியும் னு சொல்வாங்க, அத நீங்க நினைச்சால் மாத்தலாம்.
"எதுக்குமே நம்ம மனசு தான் காரணம்", முடியாதுன்னு நினைச்சாலே கண்டிப்பா முடியாது, "முடியும்" னு நினைச்சு முயற்சி தான் பண்ணிப் பாருங்களேன்.
"வெற்றியோ, தோல்வியோ ஒரு கை பார்ப்போம்". எது வந்தாலும் ஏத்துகுவோம்.
நன்றி,

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!
--------------------------------------------------

மனிதன் போடும் சிலகணக்குகள் பிழையாகும் போது அங்கே சந்தோசம் முற்றிலும் வடிந்துபோகிறது..

அதே நேரத்தில் கணக்கு சரியாக இருந்திருப்பின் உற்சாகம் குடிகொள்கிறது...

ஏன் நம்மில் பலர் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்வதில்லை...

தோல்விகள் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என எடுத்துக்கொண்டால் துக்கமும் மனஉளைச்சலும் நம்மை நெருங்குமா....

நம் அறிவை சோதிக்க சரியான தருணம் இன்னும் வரவில்லை என நினைத்துக்கொண்டால் என்ன...

இது ஓர் சிறிய சறுக்கல்தான்....எதையும் பாசிடிவ்வாக யோசிக்க வேண்டும்...அவ்வாறு யோசிக்க யோசிக்க மனம் தெளிந்து நல்வழிப் பிறக்கும்....

நம்தோல்வியை நினைத்து துவண்டுபோவதை விட வெற்றி பெற்றவரின் மதிநுட்பத்தை நினைத்து சந்தோசப் பட்டோமேயானால் நிச்சயம் அடுத்து நமக்கும் வெற்றிதான்...

நமக்குமுன் ஏகப்பட்ட பாதைகள் உள்ளன....எனவே,வாழ்வின் மொத்த சந்தோசமும் நம்மிடம் மட்டுமே உள்ளது...

நம்வெற்றியும் தோல்வியும் நம் நம்பிக்கையில் மட்டுமே உள்ளது...

நாம் தடுமாறி கீழே விழும்போதெல்லாம் சிலரின் அனுபவக் கருத்துகள் நம்மை நிமிர்ந்து எழச் செய்கின்றன..

நம்பிக்கை உள்ளவனுக்கு உலகமே தன் உள்ளங்கையில் அடங்கும்...அது இல்லாதவனுக்கு பூமியே...சின்ன புள்ளியாய் சுருங்கும்...

நம்பிக்கை கொண்டு நாம் விஸ்வரூபம் எடுப்போம்..
என்றும் நட்புடன்.....உங்கள் நம்பிக்கை சக்தி..!!!!