Friday 31 January 2014

பெண்ணின் பருவங்கள் ஏழு...

பெண்ணின் பருவங்கள் ஏழு...

> பேதை 1 முதல் 8 வயது வரை

> பெதும்பை 9 முதல் 10 வயது வரை...

> மங்கை 11 முதல் 14 வயது வரை...

> மடந்தை 15 முதல் 18 வயது வரை...

> அரிவை 19 முதல் 24 வயது வரை...

> தெரிவை 25 முதல் 29 வயது வரை...

> பேரிளம் பெண் 30 வயது முதல்...

தமிழக தலைமை தேர்தல் ஆணையம்

தமிழக தலைமை தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தொகுதியில் 18,555,04 வாக்களர்களை கொண்டு ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தையும், 17,149,87 வாக்காளர்களை கொண்டு தென் சென்னை இரண்டாமிடத்தையும், 16,532,57 வாக்காளர்களை கொண்டு கோயம்புத்தூர் மூன்றாமிடத்தையும் பிடித்தது.

மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட மக்களவை தொகுதியான நாகப்பட்டினம் 11,88,738 வாக்காளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தொகுதிகளில், மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி 4,80,894 வாக்காளர்களுடன் முதலிடத்தையும், 3,49,440 வாக்காளர்களுடன் பல்லாவரம் 2வது இடத்தையும், 3,43,598 வாக்காளர்களை கொண்ட மாதவரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டப்பேரவை தொகுதியான கீழ்வேலூரில் 1,54,656 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

This is patented Railway Crossing at Nagpur, India - the one and only in World called "Diamond Crossing".

இந்தியாவின் முதல் பெண்

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு)

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967)

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்)

இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989)

இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்

இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)

இந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி (1966_1977)

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (1937)

இந்தியாவின் முதல் அய்.ஏ.எஸ். அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)

இந்தியாவின் முதல் அய்.பி.எஸ். கிரண் பேடி (1972)

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி

இந்தியாவின் முதல் விமானி காப்டன் துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா

இந்தியாவின் முதல் விமானப்படை விமானி அரிதா கவுர்

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்

இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)

இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா (யாதவ்).

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.

புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்.

இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி

சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)

இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)

இந்தியாவின் முதல் பெண் மேயர் சுலோச்சனா மோதி.

இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

தமிழர் திருநாள்

'தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது.

அதனை அறிவதற்கு தமிழகத்தின் வரலாற்று ஏடுகளை சற்று பின்நோக்கி புரட்டிப் பார்ப்பதற்கு உவகைக்குரிய இந்த திருநாள் மிகவும் பொருத்தமானது.

மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டு தான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.

இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் 'மெட்ராஸ் பிரெசிடென்சி' (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.

தற்போது காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த.பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.

15-8-1947-ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது. 

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.

இதற்கிடையே, 'தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றம் செய்ய வேண்டும்' என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அன்னாவின் ஆட்சி காலமான 14-1-1969 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு 'தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதே இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று 'மாலை மலர்.காம்' உறுதியாக நம்புகிறது.

விருது

►திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)

►தந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்

►அண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாஷ்.

►பேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்.

►பெருந்தலைவர் காமராஜர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.

►மகாகவி பாரதியார் விருது-கு.ஞானசம்பந்தன்.

►பாவேந்தர் பாரதிதாசன் விருது-ராதா செல்லப்பன்.

►தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது-அசோகமித்ரன்.

►முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-வ.ஜெயதேவன்.

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கடுமையாக போராடி உயிரிழந்த பிரசாத் பாபு என்பவர் அசோக சக்ரா விருதி வழங்கி கவுரவப்படுத்தப்பட்டார்.

பத்மபூஷண் விருதை ஏற்க நீதிபதி வர்மா மனைவி மறுப்பு: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்

பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.
அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதி வர்மா குடும்பத்தினர் தற்போது பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ‘‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி என்ற கவுரவத்தையே விரும்பினார். எனவே அவர் விருப்பத்துக்கு மாறாக அரசு கொடுக்கும் பத்ம பூஷண் விருதை ஏற்க இயலாது’’ என்று கூறியுள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை இவரிடம்தான் அரசு கொடுத்திருந்தது. நீதிபதி வர்மா மிக குறுகிய காலத்தில், 630 பக்க சட்டத்தை உருவாக்கி கொடுத்தார்.
இதற்காக அவரை கவுரவிக்க மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்தது. இந்த விருதை ஏற்க நீதிபதி வர்மா மனைவி மறுப்பு தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் அறிஞர்களின் வரலாறு: பாவேந்தர் பாரதிதாசன்

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பல.

பிறப்பு: பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், புதுவையில், 1891 - ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி (புதன்) இரவு பத்தேகால் மணிக்கு புதுவையில் வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

கல்வி: பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.

1908 ஆண்டில் புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.

ஆசிரியர் பணி: 1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். மிகச்சிறிய வயதிலேயே தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

இல்லற வாழ்க்கை: பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் தலைமகள் சரசுவதி பிறந்தார். இவருக்கு பிறகு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928 ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

1922 ஆம் ஆண்டு கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதி வந்தார்.

பாரதியார் சந்திப்பு: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

நண்பனின் திருமண நிகழ்வின் போது பாரதியாரை நேரில் சந்தித்த பாரதிதாசன், பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தவர், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அச்சமயங்களில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்டது (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

தந்தை மறைவு: 23.1.1916 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் இயற்கை எய்தினார்.

நாளிதழ் ஆசிரியர் பணி: 1930 டிசம்பர் 10 இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.

படைப்புகள்: எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

இறப்பு: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், 1964 ஆண் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுகள்: பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், 1946 சூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த

தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் படைப்புகள்:

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)

• பாண்டியன் பரிசு (காப்பியம்)

• எதிர்பாராத முத்தம் (காப்பியம்)

• குறிஞ்சித்திட்டு (காப்பியம்)

• குடும்ப விளக்கு (கவிதை நூல்)

• இருண்ட வீடு (கவிதை நூல்)

• அழகின் சிரிப்பு (கவிதை நூல்)

• தமிழ் இயக்கம் (கவிதை நூல்)

• இசையமுது (கவிதை நூல்)

• அகத்தியன் விட்ட புதுக்கரடி

• பாரதிதாசன் பதிப்பகம் அமைதி

• செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)

• பாரதசக்தி நிலையம் (1944)

• இசையமுதம் (இரண்டாம் பாகம்)

• பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)

• குடியரசுப் பதிப்பகம் (1939)

• இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்

• பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?

• குயில் (1948) எதிர்பாராத முத்தம்

• வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)

• எது பழிப்பு

• குயில் (1948) கடவுளைக் கண்டீர்!

• குயில் (1948)

• கண்ணகி புரட்சிக் காப்பியம்

• அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு

• காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)

• கற்புக் காப்பியம்

• குயில் (1960)

• காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)

• காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)

• காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)

• குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)

• குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)

• முல்லைப் பதிப்பகம் (1944)

• குடும்ப விளக்கு (முதியோர் காதல்)

• பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)

• குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்

• சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

• சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)

• தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

• தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு

• திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்

• தேனருவி இசைப் பாடல்கள்

• பாரதிதாசன் பதிப்பகம் (1955)

• நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)

• நீலவண்ணன் புறப்பாடு

• பாண்டியன் பரிசு

• முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி

• பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)

• பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)

• பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)

• குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)

• பாரதிதாசன் பதிப்பகம் (1952)

• பாரதிதாசன் நாடகங்கள்

• பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்

• முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)

• பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)

• புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)

• பெண்கள் விடுதலை

• பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)

• மணிமேகலை வெண்பா

• அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது

• முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)

• கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,

• உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)

• வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)

• தமிழுக்கு அமுதென்று பேர்

• வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது

• புகழ் மலர்கள் நாள் மலர்கள்

• தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்

 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்
பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581, நாள்: 3-4-1987-ல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
1. கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.
5. பிறப்பு, இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும் போது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவி செய்தல்.
8. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.
9. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
10. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
11. புதையல் பற்றி மேல் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தல்.
12. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனித்தல்.
13. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
14. முதியோர் ஓய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல்.
15. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.

இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்:
16. கிராமப் பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.
17. நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.
18. சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப்பற்றி அறிக்கை அனுப்புதல்.
19. கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.
20. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையை தெரிவிப்பது.
21. வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.
22. சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றங்களை தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட-ஒழுங்கு பேணுவதற்காக கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
23. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
24. தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.
25. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.
26. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
27. மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல். நிலப் பட்டா, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்குதல், மனுக்கள் மீது அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.
28. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் -  ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கரமிப்புகள் இல்லாமல் தடுப்பது - அவற்றை முறையாக பராமரித்தல்.
29. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் (Sale Statistic Register)  எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.
30. பதிவு மாற்றம் (Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.
31. நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதலுக்குண்டாண (Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
32. அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-ன்படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
33. கிராம அளவில் கடன் பதிவேடு (Loan Ledgers) மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக்க காலாண்டுக்கு ஒரு முறை வட்ட கணக்குகளுடன் சரிபார்த்தல்.
34. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
35. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
36. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
35. உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.

பொதுஅறிவு

1. கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன?
அப்போலோ

2. ஹார்மோன் இல்லாத உயிரினம் எது?
பாக்டீரியா

3. நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது?
இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே

4. டிரான்ஸ்பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஸ்டான்லி

5. உத்தம சோழப்பல்லவராயன் என்ற பட்டப்பெயரை அனபாயசோழன் யாருக்கு வழங்கினார்?
சேக்கிழார்

6. உயிர் வெள்ளி எனப்படுவது எது?
பாதரசம்

7. தேசிய பாதுகாப்பு கல்லூரி எந்த நகரத்தில் உள்ளது?
டில்லி

8. நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது ?
உலோக ஆக்சைடுகள்

9. எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?
பார்மிக் அமிலம்

10. வாங்க வெடியுப்பின் வேதியல் பெயர் என்ன?
பொட்டாசியம் நைட்ரேட்

11. தங்கம் லத்தீனில் எவாறு அழைக்கப்படுகிறது ?
ஆரம்

12. "பாரிசுக்குப் போ" என்ற நாவலின் ஆசிரியர் யார்?
ஜெயகாந்தன்

13. இரும்பு லத்தீன் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெர்ரம்

14. உலகின் மிக பெரிய பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
யான்சே நதி

15. டிரம்ப் எனப்படுவது எது ?
சரக்குக் கப்பல்

16. திருவாரூரில் ஓடும் நதியின் பெயர் என்ன?
குடமுருட்டி

TNPSC தேர்வுகளுக்கான அறிவரங்கம்

TNPSC தேர்வுகளுக்கான அறிவரங்கம்: இந்திய அரசியல் அமைப்பு - 2 .
1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).

2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'

3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.

4. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்

பயன்படுத்தப்பட்டுள்ளன.

5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.

6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.

7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.

8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)

9. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.

10. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்

11. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்

12. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்)

தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

13. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

14. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.

15. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.

16. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்

17. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.

18. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி

19. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் - 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக

இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை

அனைத்திற்காகவும் நீக்கலாம்.

20. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.

21. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.

22. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு

தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.

23. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய

இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.

24. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.

25. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்

26. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்

27. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV

28. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்

29. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

30. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது

31. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை

32. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்

33. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது

34. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி - அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்.

Thursday 30 January 2014

இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கீடு இவருடைய காலத்தில் துவங்கப்பட்டது
A)ரிப்பன் பிரபு
B)லிட்டன் பிரபு
C)கர்சன் பிரபு
D)பெண்டிங் பிரபு



மேயோ பிரபு 1872    
ஒழங்கானது ரிப்பன் பிரபு 1881

2011, ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியக்குழவின் தலைவர் C.சந்திரமௌழி

அதிக மக்கள்தொகை உள்ள மாநிலம் UP, குறைவு சிக்கிம்

பரப்பளவு மிகப்பெரிய மாநிலம் ராஜஷ்த்தான், மிகச்சிறிய மாநிளம் Goa

இந்திய அரசியல் நிர்ணய சபை

இந்திய அரசியல் நிர்ணய சபை

1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946

2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946

3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி

4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்

5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்

6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா

8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4

10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299

11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து

12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22

14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு

15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24

16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947

17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு

18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை

20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்

21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு

22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395

23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450

24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12

25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)

26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு

27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்

28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950

29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949

30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்

31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10

32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா

35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா

37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்

39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947

40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு

41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)

43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947

50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5

51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6

52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1

55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2

56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3

57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4

58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5

59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6

60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8

61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9

62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A

63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18

64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20

65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1

66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை

67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை

68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985

69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை

72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை

73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை

74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை

75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை

76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18

77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29

78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று

81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14

82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து

83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15

85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்

86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்

87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17

88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16

89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18

90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19

91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21

92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23

93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24

94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24

95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை

96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை

97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை

98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30

100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து

Saturday 25 January 2014

நெல்சன் மண்டேலா நினைவுகள்

நெல்சன் மண்டேலா நினைவுகள்
Posted Date : 12:12 (12/12/2013)Last updated : 12:12 (12/12/2013)

உலகப் போர்கள்

உலகப் போர்கள்
Posted Date : 12:12 (12/12/2013)Last updated : 12:12 (12/12/2013)
கோபிநாத்
போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். இதனடிப்படையிலேயே போர்கள் நடைபெற்றன, நடை பெறுகின்றன. ஆதிக்கமுடைய நாடு மற்ற நாடுகளை அடிமையாக்கியது.

உலக நாடுகளிடையே ஏற்பட்ட பகைமை, ஆதிக்கத்தினால், தொழிற்சந்தையை விரிவுபடுத்தி இரு அணிகளாக பிரிந்து உலகையே பங்குபோட்ட நிகழ்வுதான் உலகப் போர் கள். இதனால் இரண்டு உலகப்போர் களால் உலகமே பலவாக பிளவுற்றது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய வல்லரசுகளிடையே பல்வேறு அரசியல் பொருளியல் காரணங்களால் சிக்கல்கள் பல தோன்றின. பரஸ்பரம் போட்டி, பொறாமை, கசப்புணர்வு, பழிவாங்கத் துடிக்கும் மனப்பான்மை, ஆகியவை களால் சிக்கல்கள் அதிகரித்தன.
வல்லரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட ரகசிய கூட்டுடன்படிக்கைகள் அவற்றை மேலும் அதிகரித்தன. இதன் காரணமாக போர் மூண்டது.
இப்போர் ஐரோப்பாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களிலும் நடைபெற்று, உலகின் பெரும்பான்மையான நாடுகளும் கலந்துகொண்டதால் இந்த போர் உலகப்போர் என அழைக்கப்படுகிறது.
முதல் உலகப்போர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக ஐரோப்பா இரு ராணுவ முகாம்களாக பிளவுபட்டிருந்தது. 1870 -71-ல் பிஸ்மார்க் பிரான்ஸைத் தோற்கடித்து ஜெர்மன் பேரரசை நிறுவினார்.
1870-ம் ஆண்டு ஜெர்மனி ஒருங்கிணைந்த பிறகு, அங்கு தொழிற்சாலையில் வளர்ச்சி ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏராளமான மூலப்பொருட்களையும், மற்ற பொருட்களை விற்பனைச் செய்ய சந்தையும் தேவைப்பட்டன.
கெய்சார் இரண்டாம் வில்லியம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை, திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உண்டு என்று அறிவித்தார்.
இத்தகைய ஜெர்மானிய பேராதிக்க பேராசை முதல் உலகப்போருக்கு முக்கிய காரணமானது.
ரகசிய உடன்படிக்கைகள்
ஐரோப்பிய நாடுகள் இருபெரும் பகை பிரிவுகளாக பிரிந்திருந்தன. இந்த இருபகைப்பிரிவு நாடுகளிடையே உருவான ரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள், பகைமையையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி முதல் உலகப் போருக்கு வழிவகுத்தன.
முக்கூட்டு உடன்படிக்கை(Triple Allaiance)  1882-ம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரிய  ஹங்கோரி ஆகிய மூன்று நாடுகளிடையே ஏற்பட்டது.
1907-ம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, முதலிய நாடுகள் தங்களிடையே முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை (Triple Entente)  செய்து கொண்டன. இத்தகைய ரகசிய ராணுவ உடன்படிக்கைகள் ஐரோப்பாவில் பெரும் போர்ச்சூழலை ஏற்படுத்தின.
பிரான்சின் பழிவாங்கும் உணர்ச்சி
1870-- 71-ல் நடைபெற்ற பிராங்கோபிரஷ்யப் போரில் தோல்வியுற்றது. அல்சரஸ், லொரைன் மாநிலங்களைப் பறிகொடுத்தது. நாட்டுப்பற்று மிக்க பிரெஞ்சுக்காரர்கள் உள்ளத்தில் இது ஆறாதவடுவாக மாறிவிட்டது.
அவ்வெற்றியை தொடர்ந்து பிஸ்மார்க் வெர்செய்ல்ஸ் மாளிகையில் விழாவெடுத்து ஜெர்மன் பேரரசைப் பிரகடனப்படுத்தியது. தங்களை மேலும் இழிவுபடுத்தியதாக வேதனையடைந்த பிரெஞ்சுக்காரர்கள்;. அல்சரஸ், லொரைன் பகுதிகளை மீட்க உறுதி புண்டனர்.
ராணுவக் கொள்கை:
புதிய திட்டத்தின் மூலம் ரஷ்யா, பிரான்ஸ் தங்களின் படைபலத்தை விரிவுபடுத்தின.
பிரிட்டன் கப்பல் படையை வலிமைப்படுத்தியது. பிரான்சு தன்னை தாக்கும் என்ற அச்சத்தில் ஜெர்மனியும் தனது படைபலத்தை அதிகரித்தது.
மொரக்கோ சிக்கல்
மொராக்கோவை பிரான்சு கைப்பற்றியது. இதனை பிரிட்டன் அங்கீகரித்தது.
ஜெர்மனி அதனை சர்வதேச குடியேற்ற நாடாக்க விரும்பியது. எனவே தனது போர்க்கப்பலை மொராக்கோவிற்கு அனுப்பியது.
இங்கிலாந்தின் தலையீட்டால் ஜெர்மனி தனது போர்க்கப்பலை திரும்பப்பெற்றது. இதற்கு ஜெர்மனி பழிவாங்க விரும்பியது போருக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
பால்கன் பிரச்சனை
பால்கன் நாடுகள்: செர்பியா, பல்கோரியா, அல்மேனியா, கீரிஸ், மாண்டிநிக்ரோ.
பால்கன் நாடுகள் துருக்கிக்கு எதிரான முதல் பால்கன் போரில் வெற்றி பெற்று தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக்கொண்டன.
1912-ம் ஆண்டு லண்டன் உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுற்றது.
போரில் கிடைத்த பகுதிகளை பிரித்து கொள்வதில் செர்பியாவிற்கும் பல்கேரியாவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, போர் நடைபெற்றது.
போரில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டு செர்பியா பெரும் பகுதிகளை தன்னுடன் இணைத்துகொண்டது.
ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் தங்களது சுய நலக்கொள்கைகளை பால்கனில் திணித்து அரசியல் ஆதாயம் பெற முயன்றன.
தோற்கடிப்பட்ட துருக்கியும், பல்கேரியாவும் இழந்த பகுதியை திரும்ப பெற ஜெர்மனியிடம் உதவி கோரின. இது போருக்கு வழிவகுத்தது.
உடனடிக் காரணங்கள்
1908-ம் ஆண்டு பெர்லின் மாநாட்டின் முடிவிற்கு மாறாக செர்பியாப் பகுதிகளை ஆஸ்திரியா தன் நாட்டுடன் இணைத்து கொண்டதால் இரு நாடுகளிடையே பகைமை ஏற்பட்டது.
1914 ஜூன் 28-ல் செரோஜியாவில் செர்பிய இளைஞனால் ஆஸ்திரிய இளவரசன் பிரான்சிஸ் பொர்னான்டும் அவரது மனைவி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆஸ்திரியா விளக்கம் கேட்க செர்பியாவின் பதில் அதற்கு திருப்தி அளிக்காததால் ஆஸ்திரியா 1914 ஜூலை 28-ல் செர்பியா மீது போர் அறிவித்தது.
ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாக தனது படைகளை போருக்கு அனுப்பியது. இதனால் ஜெர்மனி ரஷ்யாவிற்கு எதிராக போரை அறிவித்தது.
பிரான்சு தனது நட்பு நாடான ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் இறங்கியது. எனவே ஜெர்மனி பிரான்சு மீது போரை அறிவித்தது.
பிரான்சுடன் இங்கிலாந்து சேர்ந்து கொள்ளவே முதல் உலகப்போர் துவங்கியது.
போரின் போக்கு
1914 ஜூலை 28-ல் தொடங்கிய முதல் உலகப்போர் 1918-ல் நவம்பர் 11-ம் தேதி முடிவுற்றது.
ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் மைய நாடுகள் (Central Power)   எனவும் இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் நேச நாடுகள் (Allied)எனவும் அழைக்கப்பட்டன.
இப்போரில் மொத்தம் 33 நாடுகள் பங்கு பெற்றன. எனவேதான் இப்போர் உலகப் போர் என அழைக்கப் பட்டது.
மேற்கு முனை போர்க்களம்
ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்சு மீது படையெடுத்தது. ஆங்கில பிரான்சு படை மார்ன் நதிக்கரையில் ஜெர்மானிய படைகளை தடுத்து முன்னேறாமல் இருக்க செய்தது.
கிழக்குமுனை போர்க்களம்
ரஷ்யப்படைகள் ஜெர்மனியையும் ஆஸ்திரியாவையும் தாக்கின. டானென்பாக் போரில் ரஷ்யா தோல்வியுற்றது. இச்சமயத்தில் ஆஸ்திரியாவுக்கு ஜெர்மனி ஆதரவு அளித்தது. ஜெர்மனியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ரஷ்யப்படை ஆஸ்திரியாவை விட்டு வெளியேறியது.
கிழக்கு முனை அருகாமை போர்க்களம்
1914-ல் அக்டோபாரில் துருக்கி மைய நாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கியது. இது ரஷ்யாவிற்கும் அதன் கூட்டணி நாடுகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கிடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.
போரில் பல்கேரியா ருமேனியா
1915-ல் டார்டனலஸ் போரில் ஆங்கிலப் படைக்கு ஏற்பட்ட தோல்வி பல்கேரியாவை மைய நாடுகள் பக்கம் சேர வழிவகை செய்தது. 1916-ம் ஆண்டு ருமேனியா நேச நாடுகளுடன் சேர்ந்தது.
கடற்போர்
டாகார் நதிக்கரைப் போரில் ஜெர்மானியப் படைகள் ஆங்கிலப்படைகளால் அழிக்கப்பட்டன.
1916-ல் ஜட்லாண்ட் போரில் ஜெர்மானியப் படைகள் தோற்றுப் பின் வாங்கின. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல் போர் முறையினால் நேசநாடு களின் போர்கப்பலை அழித்தது.
அமெரிக்கா போரில் ஈடுபடுதல்
1917-ல் அமெரிக்காவின் லூசிடானியா உட்பட நான்கு வணிகக் கப்பல்களை ஜெர்மானிய நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கடித்தது. இந்நிகழ்ச்சி அமொரிக்க அதிபர் உட்ரோ வில்சனை கோபமுறச் செய்ததால் 1917 ஏப்ரல் 6-ல் புனித வெள்ளி அன்று ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தார்.
ரஷ்யா பின்வாங்குதல்
முதல் உலகப் போரினால் ரஷ்யா வில் பெரும் அளவில் உயிர் இழப்பும் பொருளாதார சீரழிவும் ஏற்பட்டது.
இதனால் 1917-ல் அக்டோபர் புரட்சி ஏற்பட்டு ரஷ்யாவை ஆட்சி செய்து வந்த சார் மன்னரின் ஆட்சி லெனினால் தூக்கி ஏறியப்பட்டது. எனவே, ரஷ்யா போரில் இருந்து விலக்கிகொண்டது.
1918-ம் ஆண்டு பிராஸ்ட்லிடோஸ்க் உடன்படிக்கையினை மைய நாடு களுடன் ஏற்படுத்திக்கொண்டது.
போரின் முடிவு
ஆரம்பத்தில் மைய நாடுகள் சில வெற்றிகளைப் பெற்றபோதிலும் இறுதியில் தோல்வியை தழுவின. ஜெர்மனி போரில் முழுமையாக தோல்வியைத் தழுவியதால் துருக்கியும் பல்கேரியாவும் அச்சம் அடைந்தன.
ஆஸ்திரியா சமாதானத்தினை எதிர்நோக்கியது.
ஜெர்மனி பேரரசர் இரண்டாம் கெய்சார் வில்லியம் போரினை சமாளிக்க முடியாமல் ஹாலந்து நாட்டிற்கு தப்பி ஓடினார்.
எனவே, ஜெர்மனி 1918 நவம்பர் 11-ம் நாள் அமைதியை நாடியது.
போரின் விளைவுகள்
1919-ல் பாரிஸ் அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.  அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள், கிளமென்ஸ் (பிரான்சு), லாயிட் ஜார்ஜ் (பிரிட்டன்), ஆர்லண்டோ (இத்தாலி) மற்றும் உட்ரோ வில்சன் (அமெரிக்கா).
ஜெர்மனி வெர்சைல்ஸ் அமைதி உடன்படிக்கையில் கையப்பம் இட்டது. தோல்வியுற்ற நாடுகளுடன் இம்மாநாட்டில் பல்வேறு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன.
ஜெர்மனியின் உடன்படிக்கை ஆஸ்திரியாவுடனும், டிரியனான் உடன்படிக்கை ஹங்கேரியுடனும், நியூலி உடன்படிக்கை பல்கேரியாஉடனும், செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கியுடனும் செய்துகொள்ளப்பட்டது.
போரின் விளைவாக ஹங்கேரி, யுகேஸ்லேவியா, சேக்கோஸ்லேவியா, போலந்து, பின்லாந்து, லித்துவேனியா, லாட்வியா, எஸ்த்தோனியா போன்ற புதிய நாடுகள் தோன்றின.
ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி நாடுகளில் புரட்சிகள் தோன்றி முடியாட்சி ஒழிக்கப்பட்டது.
முதல் உலகப்போரில் மூலம் அமெரிக்கா உலக அரங்கில் பிரவேசித்தது. பிரிட்டனை விடவும் வல்லரசு ஆக முதலிடம் வகிக்கலாயிற்று. அமொரிக்க யுகம் தோன்றலாயிற்று.
மதிப்பீடு
ஜெர்மனி கடுமையாக தண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் ராணுவ வெறியும் கொண்டு பிரான்சு போன்ற அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஏற்ற தண்டனையாக அமைந்தது.
ஜெர்மனியின் குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை அளிக்காமல், பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு சுரண்ட துவங்கிய செயல் அவற்றின் ஏகாதிப்பத்திய வெறிக்கு சிறந்த உதாரணமாகும்.
பல பேரரசுகளை உடைத்து தேசிய மற்றும் இன அடிப்படையில் பல புதிய அரசுகளை உருவாக்கிய நிகழ்வு வரவேற்கத்தக்க செயல் ஆகும்.
1920-ல் ஜனவரி 20-ம் தேதி சர்வதேச சங்கம் அமைக்கப்பெற்றது. வரவேற்கத்தக்க ஒரு முயற்சி யாகும்.
இரண்டாம் உலகப்போர்
முதல் உலகப்போர் முடிவுற்று 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப்போர் துவங்கியது. இந்த போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.
முதல் உலகப்போரை காட்டிலும் இரண்டாம் உலகப்போரின் சீற்றம் மிகுதியாக காணப்பட்டது.
முதல் உலகப் போரினை தொடங்கியது, ஆஸ்திரியா  ஹங்கேரியின் பூசல் என்று கூறினாலும் கூட உண்மையில் ஜெர்மனியின் அதிபர் இரண்டாம் கெய்சார் வில்லியம் தான் இப்போருக்கு அடிப்படை காரணம். அதே வகையில் இரண்டாம் உலகப் போருக்கும் ஜெர்மனியே காரணமாக இருந்தது.
இரண்டு உலகப்போரிலும் ஜெர்மனியானது , பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு நாடுகளிடம் நேரடியாக போரிட்டது.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அச்சு நாடுகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டது. இப்போரில் ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல் நடுநிலை நாடுகளாக இருந்தன.
இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள்
வொர்செயில்ஸ் உடன்படிக்கை
முதல் உலகப் போரின்போது போடப்பட்ட இந்த உடன்படிக்கை அநேக நாடுகளுக்கு திருப்தி அளிக்க வில்லை.
ஜெர்மனி போருக்கான முக்கிய குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டு ஜெர்மனியின் குடியேற்றங்கள் பறிக்கப்பட்டன.
கனிமவளம் நிறைந்த அல்சேஸ், லொரைன் பகுதிகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், இதன் ராணுவ பலம் குறைக்கப்பட்டது. ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.
தேசிய உணர்வு
ஜெர்மனி  ஜெர்மனியர்களுக்கே, இத்தாலி  இத்தாலியர்களுக்கே என்ற கொள்கைகள் தேசிய எழுச்சியை உருவாக்கின. ஜெர்மானியர்கள், தாங்கள் மட்டுமே உலகத்தை ஆளத் தகுதி உடையவார்கள் என்று கருதினர்.
சர்வதேச சங்கத்தின் தோல்வி
முதல் உலகப் போர் முடிவுற்ற நிலையில் எதிர்காலத்தில் போர்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
படைகளைக் குறைத்து போர்களைத் தடுப்பது அதன் நோக்கம். ஆனால், அச்சங்கம் அமைதி காக்க தவறிற்று.
வல்லரசு நாடுகள் இச்சங்கத்தில் அதிக செல்வாக்கு பெற்று சங்கத்தினை மதிக்கத் தவறின. மேலும், அமெரிக்கா இச்சங்கத்தில் உறுப்பு நாடாக இடம் பெறவில்லை.
ஜப்பானின் எழுச்சி
முதல் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பான் பெரும் வலிமை மிக்க நாடாக விளங்கிற்று.
ஜப்பான் தனது தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார உயர்வு காரணமாக ஏகாதிபத்தியக் கொள் கையை பின்பற்றத் தொடங்கியது.
1937-ம் ஆண்டு ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு ஒப்பந்தம் உருவானது.
சர்வாதிகார எழுச்சி
முதல் உலகப் போருக்குப் பின் உலகில் ஜனநாயகம், பொதுவுடைமைக் கொள்கைகள், பாசிசம், நாசிசம் போன்றவை உருவாகின.
ஐரோப்பாவில் உருவான புதிய குடியரசு ஆட்சியின் தோல்வி, ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் சர்வாதிகார வளர்ச்சிக்கு வழி செய்தன.
இந்த சர்வாதிகாரிகள் போர் தொடுத்தல், கைப்பற்றுதல் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றினர்.
போலியான அமைதிக் கொள்கை
வல்லரசு நாடுகள் தங்களது கொள்கைகளை முற்றிலும் மறந்து போலியான அமைதிக் கொள்கைகளைப் பின்பற்றின. இதனை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன.
அச்சு நாடுகளின் கூட்டு
ஜெர்மனியில் ஹிட்லர் இனவெறி பிரசாரத்தில் ஈடுபட்டார். வெர்செயில்ஸ் உடன்படிக்கையில் கூறப்பட்ட ஆயுதகுறைப்பைக் கைவிட்டு ஒரு புதிய விமானப்படையை ஏற்படுத்தி னார். கட்டாய ராணுவ சேவையை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு கொள்கை
1938-ல் ஹிட்லர்,  சுவிட்சர்லாந்தைக் கைப்பற்றப் போவதாகக்கூறி செக்கோஸ்லோவேகியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக இங்கிலாந்து பிரதமர் நிவில் சேம்பர்லைன் தலையிட்டு, ஹிட்லருடன் மியூனிச் என்னுமிடத்தில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஹிட்லர் மியூனிச் தவிர செக்கோஸ்லோவேகியாவின் எந்த பகுதியையும் கைப்பற்றமாட்டேன் என உறுதி கூறினார்.
அடுத்த ஆறு மாதகாலத்திற்குள் ஹிட்லர் செக்கோஸ்லோவேகியா முழுவதையும் கைப்பற்றிக்கொண்டார்.
உடனடிக் காரணம்
1939-ல் ஹிட்லர் ஜெர்மனியையும் கிழக்கு ரஷ்யாவையும் போலந்து வழியாக இணைக்கும் ராணுவச் சாலை ஒன்று அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டைக் கேட்டுக்கொண்டார். மேலும் டான்சிக் துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தினார்.
போலந்து இதனை ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஹிட்லர் 1939-ல் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தி போலந்தினை கைப்பற்றினார்.
இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகள்
துவக்கம்
1939 செப்டம்பர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கிற்று.
ஹிட்லர் அதிர்ச்சியடையும் வகையில் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தன.
சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு (1939 - 41)
ஏற்கெனவே சோவியத் ரஷ்யா ஜெர்மனியுடன் ரகசிய ஆக்கிரமிப்பு உடன்படிக்கை செய்திருந்தது. இந்த உடன்படிக்கையின்படி ரஷ்யா நடுநிலைமை வகித்தது.
பிரிந்து சென்ற எஸ்தோனியா, லாட்வியா, லூதுவேனியா, கிழக்கு போலந்து ஆகிய பகுதிகள் போருக்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன.
இத்தருணத்தில் முசோலினி நேச நாடுகளின் மீது போர் அறிவிப்பு செய்து பிரான்சினுடைய பல பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார்.
பிரிட்டனுக்கு எதிராக போர்
ஹிட்லர் பிரிட்டனுக்கு எதிராக தனது கவனத்தைத் திருப்பினார். குறிப்பாக லாஃப்ட்வோஃப் என்ற விமான தாக்குதலை நடத்தினார்.
U வடிவ நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இங்கிலாந்து கப்பல்களை நாசப்படுத்தினார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து லாஃப்ட்வோஃப் என்ற விமானத் தாக்குதல் லண்டன் மேலும் மற்ற நகரங்களில் நடைபெற்றது.
துவக்கத்தில் பிரிட்டன் பல தோல்விகளை சந்தித்தாலும் பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஜெர்மனியைத் தடுத்து நிறுத்தினார் ஜெர்மனிக்கு எதிராக வான்வழி தாக்குதலைத் தொடர்ந்தனர்.
பார்போரிய கடல்போர் நடவடிக்கைகள்
பிரிட்டனுடன் நடந்த போரில் தோல்வியை கண்ட ஹிட்லர் தனது கவனத்தை ரஷ்யா மீது திருப்பினார். ரஷ்யா அதிபர் ஸ்டாலினுடன் செய்து கொண்ட போர்தடை ஒப்பந்தத்தை துணிச்சலாக மீறினார்.
ஹிட்லா, கம்யூனிசக் கொள்கையை அது தோன்றிய மண்ணிலேயே அழிக்க முயற்சித்தார்.
யூகோஸ்லோவியா, கீரிஸ் நாடுகள் மீது ஹிட்லர் பயங்கர தாக்குதல் நடத்தினார். இத்தாலி மற்றும் ஜெர்மானிய படைகள் கிரிஸ் நாட்டைக் கைப்பற்றின.
அச்சு நாடுகள் தங்கள் வலிமையை பயன்படுத்தி பால்கன் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
சோவியத் யூனியன் தாக்குதல் அழித்து பின்வாங்கும் கொள்கை:
1941-ம் ஆண்டு ஜூன் 22-ம் நாள் ரஷ்யாவுடன் செய்த போர் தடை உடன்படிக்கையை ஹிட்லர் மீறினார்.
ரஷ்யா மீது போர் தொடுத்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் ரஷ்யாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது.
ஜெர்மானிய படைகள் ரஷ்யாவிற்குள் நுழைய முடியாதபடி மாஸ்கோவில் தங்கிவிட்டனர். ஸ்டாலின் மாஸ்கோ நகரத்தினை அழித்தார்.
அட்லாண்டிக் சாசனம்
1941 ஆகஸ்ட்ல் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்கா ஜனாதிபதி தி.ஞி. ரூஸ்வெல்ட் இருவரும் அகஸ்டா என்ற போர் கப்பலில் சந்தித்து அட்லாண்டிக் சாசனத்தில் கையெழுத்திட்டனர். பிரிட்டனும், அமெரிக்காவும் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்குவது என தீர்மானித்தனர்.
அமெரிக்கா போரில் பங்கு பெறுதல்
1941 டிசம்பரில் ஜப்பான், அமெரிக்கா கப்பற்படைத்தளமாகிய முத்து துறைமுகத்தை(Pearl Harbour) திடீரென தாக்கியது.
இந்தத் தாக்குதலால் அமெரிக்காவுக்கு அழிவு ஏற்பட்டது. உடனடியாக அமெரிக்கா போரில் இறங்கியது. மறுநாளே ஜப்பான் மீது போர் அறிவிப்பு செய்தது.
முசோலினி ஆப்பிரிக்காவில் ஆக்கிரமிப்பு
முசோலினி, எத்தியோப்பியாவை கைப்பற்றினர். அதன்பின், கென்யா, சூடான் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து படைகள் எதிர்த்து போராடி எரிட்டீரியா, சோமாலியா, எத்தியோப்பாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
போரின் முடிவு
கூட்டுப்படைகள், இங்கிலாந்திலிருந்து பிரான்ஸை எதிர்த்து போராட முடிவு செய்தனர். மே மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டுப்படைகள் நார்மண்டி என்ற இடத்தில் முகாமிட்டனர்.
பிரான்ஸின் உளவுப்படையும் இந்த கூட்டுப் படைகளுடன் சேர்ந்து கொண்டது.
அனைத்து திசைகளிலுமிருந்தும் ஜெர்மனி தாக்கப்பட்டது. கிழக்கிலிருந்து ரஷ்யப்படைகள் ஜெர்மனிப் படைகளைத் துரத்தின.
இரு பக்கங்களிலிருந்து படைகள் வருவதைக் கண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
இத்தாலி படைகள் தோற்கடிக்கப்பட்டன. கூட்டுப்படைகள் இத்தாலியைக் கைப்பற்றின. முசோலினி கொல்லப்பட்டார்.
கூட்டுப்படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்தன. மே 7, ஜெர்மனி சரண் அடைந்தது.
ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 6-ல் ஜப்பான் ஹீரோசிமா மீதும் ஆகஸ்ட் 9-ல் நாகசாகி மீதும் அணுகுண்டுகளை வீசி ஜப்பானிய நகரங்களை அழித்தன. ஜப்பான் பெரும் சேதம் அடைந்தது.
ஜப்பான் எவ்விதமான நிபந்தனை எதுவும் இல்லாமல் சரணடைந்தது. இவ்விதம் இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.
இப்போரின் விளைவுகள்
ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்த சர்வாதிகார ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. கூட்டு நாடுகளால் ஜெர்மனி கைப்பற்றப்பட்டது. ஜெர்மனி இரு பிரிவாக பிரிக்கப்பட்டது.
அமெரிக்கப் படை தளபதி ஜெனரல் மெக் ஆர்தர் தலைமையில் ஜப்பான் கைப்பற்றப்பட்டது.
இரண்டாம் உலகப்போர், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை வலுவிழக்கச் செய்து இரண்டாம் நிலைக்குத் தள்ளியது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் வல்லரசுகள் என்ற அந்தஸ்தை அடைந்தன.
இப்போரினால் ரஷ்யாவின் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு வராத காரணத்தினால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் திகழ்ந்தது.
இரண்டாவது உலகப்போர் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
மலேசியா, இந்தியா, பர்மா, எகிப்து, இலங்கை, சுதந்திரப் போராட்டத்தை நடத்தி பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தன.
பிலிப்பைன்ஸ், அமெரிக்காவிடமிருந்தும், இந்தோ சீனா, பிரான்சிடமிருந்தும், இந்தோனேசியா, டச்சுக்காரர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்றன.
அகில உலக அளவில், சமாதானம், ஒற்றுமையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organization) ல் ஏற்படுத்தப்பட்டது.
உலக மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இந்த சபை பாடுபட தொடங்கியது.
முடிவுரை
பன்னாட்டு அரசியலிலும், உறவுகளிலும், சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது.
அணு அயுதங்கள் உற்பத்தி என்பது படைக் குறைப்பு சக்திச் சமநிலை, கூட்டுப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் நிலைகளையும் உருவாக்கியது.
பன்னாட்டு அரசியல் எனும் சதுரங்கத்தில் அமெரிக்காவும் சோவியத் நாடும் முக்கிய பங்கேற்பினைப் பெற்றன.
(கட்டுரையாளர் பொது அறிவு ஆர்வலர்)

உலகமும் உலகப் பொதுமறையும்! -

உலகமும் உலகப் பொதுமறையும்! -
Posted Date : 10:12 (12/12/2013)Last updated : 11:12 (12/12/2013)
தீபிகை கந்தசாமி
திருக்குறள் 'உலகப் பொதுமறை’ என்று அழைக்கப்படுவது வெறும் சம்பிரதாயம் கருதி அன்று. தனது ஐம்பது வயதுக்குள் ஐம்பது நூல்கள் அல்லது ஐநூறு நாவல்கள் எழுதும் எழுத்தாளரைப்  போலில்லாமல் வள்ளுவர் தான் வாழ்நாள் முழுக்க திட்டமிட்டு எழுதிய ஒரே நூல் ஒப்பற்ற நூல் திருக்குறள். தமிழ், மூவேந்தர், கங்கை, காவிரி போன்ற உள்ளூர் பெயர்கள் எதுவுமின்றி, மாறிவரும் அறிவுக்கு (Knowledge)அழுத்தம் தராமல் மாறாத மெய் அறிவுக்கு(Wisdom)  அதிக அழுத்தம் தந்து இலக்கியல் Idealism) மற்றும் இயல்பியல்(Realism)ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டதால்தான் காலம், இடம் என்னும் இரு பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக திருக்குறள் இருக்கிறது என்பார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.
காலந்தோறும் உலகில் உருவாகி வந்துள்ள புத்தம் புதிய இலக்கிய- தத்துவக் கோட்பாடுகளைத் தழுவியும், மாறிவறும் புதிய உலகத்திற்கு பொருந்தி வரக்கூடிய பற்பல சிந்தனைகளை தன்னுள் பொதிந்து வைத்தும், உலகின் நிகழ்வுகளுக்கு உதாரணமாக சுட்டவல்ல சில பொன்னான கருத்துகளை உள்ளடக்கியும் திருக்குறள் உண்மையிலேயே ஓர் உலகப் பொதுமறையாக நீடித்த நிலைத்த வளர்ச்சி (Sustainable Development)   அடைந்து வருவதை எடுத்துக்காட்ட முயல்வோம்.
உலக இலக்கியத் தத்துவ கோட்பாடுகளும் குறளும்
துறவு, முயற்சி, அறிவு போன்றவற்றைப் பற்றி பேசும்போது திருக்குறளில் இலக்கியலும், இயல்பியலும் மிளிர்கிறது. எண்ணங்களையும், உள்ளத்தையும் பற்றி பேசும்போது நேர்மறை சிந்தனையும் (Positive thinking) சில சூழல்களில் இருத்தலியல் வாதமும்(Existensialism) ஒளிர்கின்றன.
துறவு
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்று சாமியார்களுக்கு இலக்கணம் வகுப்பது இலக்கியல்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதம்
ஐந்தும் அகத்தே நகும்.
என்பது இவ்வுலகை ஏமாற்றும் போலிச்சாமியார்களுக்கான எச்சரிக்கையாக வெளிப்படும் இயல்பியல்.
மனத்தது மாசாக மாண்டர் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
என்பது உலாவரும் சாமியார்களில் பலபேர் போலிச் சாமியார்கள்தான் என்ற இயல்பியல் உண்மையை இந்த உலகுக்கு அடையாளங்காட்டும் முயற்சி.
மனத்தை சுத்தம் செய்யாமல் மண்டையை மட்டும் மழித்து என்ன பயன் என்று தம்மபதம் புத்த பிட்சுகளுக்கு கூறும் அறிவுரையை அடிஒற்றி அதை மொட்டையுடன் திகழும் பௌத்தத் துறவிகளுக்கும் (மழித்தல்) தாடி வளர்க்கும் இந்தத் துறவிகளுக்கும் (நீட்டல்) பொதுவாக்கி ஒரு துறவியின் அடையாளம் என்பது அவனது புற அடையாளம் அல்ல; இந்த உலகம் பழிக்கும் செயல்களில் இருந்து விலகி ஒழுகும் அக அடையாளமே என்று இலக்கியல் பேசுகிறது. அதே சமயத்தில் மனதில் வஞ்சனையோடு வெளி உலகத்திற்கு துறவி போல் நடிப்பவர்களைப் பார்த்து ஐம்பூதங்களும் சிரிக்கும் என்று அபாய மணி ஒலிக்கிறார் வள்ளுவர். அதுமட்டுமில்லாமல், பலர்/சிலர் என்ற சொற்களை இடம் அறிந்து நுணுக்கமாக பயன்படுத்தும் வள்ளுவர், மனத்தது மாசாக வெளி உலகுக்கு மட்டும் தூய்மையானவர்களாக காட்சி அளிக்கும் போலித் துறவிகள் பலராக இருக்கும் இயல்பியல் பார்வையை தனது குறளில் தயக்கமின்றி பதிவு செய்கிறார்.
முயற்சி
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாஅது உஞற்று பவர்
என்று முயற்சியை முன்னிலைப்படுத்தி தெய்வத்தை விடவும் விதியை விடவும் முயற்சி சிறந்தது; வெற்றி தருவது என்று சுட்டிக்காட்டி பகுத்தறிவாதமும்(Rationalism)  இலக்கியல் வாதமும் பேசும் வள்ளுவர்,
ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்
என்று விதியினாலும், தன் வலியறியாமையாலும் தோல்வி விளையும்
என்று இயல்பியல் வாதமும் பேசுகிறார்.
இருப்பினும் ஊழ்வினையையும் ஆள்வினையையும் ஒப்பு நோக்கி,
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று நேர்மறை சிந்தனை (Positive thinking)  பேசுவதோடு,
'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’, 'உள்ளத்தனையது உயர்வு’,
'உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று மேன்மேலும் நேர்மறை சிந்தனைக்கு  அழுத்தம் சேர்ப்பதைக் காண முடிகிறது.
அறிவு
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமூக சமத்துவம் பேசிய வள்ளுவர் 'அறிவொக்கம் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவு சமத்துவம் பேசவில்லை. ஏனெனில், ஆளுக்கு ஆள்  IQ (Intelligence Quotient)  வேறுபடும் என்பதை Alfred-Binetஇருவருக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே உணர்ந்திருந்தவர் வள்ளுவர். அதனால்தான்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
என்று தெளிவாகப் பேசுகிறார். அதாவது நுணுக்கமான நூல்கள் பலவற்றைக் கற்றாலும் ஒருவருக்கு இயல்பாக என்ன அறிவு இருக்குமோ அதுவே பெருகும் என்கிறார். இது இயல்பியல்.
இப்போது, ஒருவன் பிறப்பிலேயே என்னைவிட அறிவாளியாக இருக்கிறான். நான் அவனை விட அறிவாளியாக முடியாதா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அந்தக் கேள்விக்கு வள்ளுவரிடமிருந்து நேர்மறையாக பதில் வருகிறது. ''முடியும். நீ அவனை விடவும் அதிகம் முயன்று கற்றால், அவனை விடவும் ஆழமாக தோண்டித் தோண்டி உழைத்து படித்தால், அவனைவிட அறிவாளியாகி விடலாம்,, என்று நம்பிக்கை ஊட்டி நம்மைப் படிக்கத் தூண்டுகிறார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி  மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.
 திருக்குறளில் நேர்நிலை இயல்
நேர்மறை சிந்தனை(Positive thinking) என்பதற்கும் நேர்நிலை வாதம்(Positivism) என்பதற்கும் வேறுபாடு உண்டு. நேர்மறை சிந்தனை என்பதை ஒருவாறு இலக்கியலின் ஓர் அங்கமாக அடக்க இயலும். நேர்நிலை வாதம் என்பது முற்றிலும் வேறான ஒரு தத்துவம்.
சமூகவியலின் தந்தை எனப்படுபவரான அகஸ்டிகாம்டே இந்த உலகத்தின் நிகழ்வுகளை அறிவியலில் எவ்வாறு புவியீர்ப்பு விசைபோன்ற சில விதிகளின் அடிப்படையில் விளக்க முடிகிறதோ, அதேபோல் சமூக இயல்புகளையும் சில விதிகளுக்குள் கொண்டுவந்து விட முடியும் என்று நம்பினார். அவர் ஒரு நேர்நிலை வாதி  நேர்நிலைவாதிகள் இச்சமூகத்தில் மறுநிகழ்வுத் தன்மை(Replicability),நம்பகத் தன்மை (Realiability),  மற்றும் செல்லுபடியாகும் தன்மை (Realiability), கொண்ட செயல்களே மீண்டும் மீண்டும் நிகழ்வதாகக் கருதுவர்.
40க்கும் மேற்பட்ட குறள்களில் 'உலகு’ என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவர்,  இந்தச் சமூகத்தின் செயல்களை கூர்ந்து கவனித்து  பல குறள்களில் உலக சமூகத்தின்  இயல்பை வரைறுக்க முயல்கிறார்.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவி லாதார்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு
உலகப் புகழ் பெற்ற கிரேக்க தத்துவஞானியும் நேர்நிலைவாதியுமான பிளாட்டோ, கவிஞர்கள் குறித்து கடுமையாக விமர்சிப்பார். கவிஞர்கள் நேர்நிலை வாதத்துக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்றும், எப்போதும் கற்பனா வாதத்தில் திளைப்பதால் கவிஞர்களே நாட்டுக்குத் தேவையில்லை என்றும் வாதிடுவார். ஆனால், உலக பொதுமறையைத் தந்த வள்ளுவரோ அறம் மற்றும் பொருட்பால்களில் நேர்நிலைவாதியாகவும் இன்பத்துப் பாலில் கற்பனாவாதம் மிக்க கவிஞராகவும் திகழ்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
 திருக்குறளில் இருத்தல் இயல்

 இருத்தல் இயல்(Existensialism) என்பது பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுகளில் பிரான்ஸில் உருவாகிய இலக்கியக் கோட்பாடு தாஸ்தாவெஸ்கி, தனக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்த பிரெஞ்சு எழுத்தாளரான ழான் பால் சார்தர் போன்றோர் முக்கிய இருத்தல் இயல்வாதிகள்.
இருத்தல் இயல் கோட்பாட்டின்படி ஒருவரின் தொடக்கப்புள்ளி இருத்தல் இயல் மனப்பான்மையை (The Existential attitude)  அடிப்படையாகக் கொண்டது. இருத்தல் இயல் மனப்பான்மை என்பது அடிப்படையில் பொருளற்றதும் அடிமுட்டாள்தனமானதுமான இந்த உலகத்தை எதிர்கொள்ளும்போது மனிதனுக்கு ஏற்படும் குவியமற்றதும் குழப்பமானதுமான உணர்வைக் குறிக்கும் (The existential attitude is a sense of disorientation and confusion in the face of apparently meaningless and absurd world).
பல குறள்களில் நேர்நிலைவாதியாக நின்று இந்த உலகத்தின் இயல்பை தெளிவாக வரையறுக்கும் வள்ளுவர், இந்த உலகத்தின் இயல்பு என்னவென்று புரியாமல் குழப்பமாக பார்கும் ஒர் இடமும் உண்டு.
 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமு செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
இந்த குறளில் பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய  ஆக்கமும் பொறாமை இல்லாத நல்லனுடைய கேடும் ஆராயத்தக்கவை என்கிறார். நல்லவனுக்கு நல்லதும், கெட்டவனுக்கும் கேடும் நிகழும் என்ற கருத்து இருத்தல் இயலில் ஏற்படுவதில்லை. இந்த உலக நிகழ்வுகள் தம்போக்கில் நிகழ்பவை என்னும் இருத்தல் இயல் கோட்பாடு இந்தக் குறளில் நிழலாடக் காண்கிறோம் .
திருக்குறளில் பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம்(Post Modernism) என்னும் இலக்கியக் கோட்பாடு 'சுருக்கமான தத்துவத்தின் மீதான அடர்த்தியான அனுபவம்’(Concrete experience on abstract principles)  பற்றிப் பேசுகிறது.
ஒவ்வொருவரும் இந்த உலகின் உண்மைநிலை என்ன என்பதை சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக அமைவது அவர்கள் பொருள் கொள்ளும் முறையே ஆகும். (Reality comes into being through our interpretations of what the world means to us independently) இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே 'பன்முக வாசிப்பு’ என்னும் நடைமுறை. 'பன்முக வாசிப்பு’ நடைமுறையின்படி ஓர் இலக்கியம், அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரவர் அறிவின் நீள அகலங்களுக்கு ஏற்பவும் அனுபவ பின்புலத்திற்கு தக்கவாறும் பல பொருள்களைத் தர வேண்டும். அப்படித் தந்தால்தான் அது இலக்கியம். அப்படித் தர இயலாதது வெறும் சமூகச் செய்தியாகவே நின்றுவிடும். இலக்கியமாகாது, என்பர் பின் நவீனத்துவவாதிகள்.
நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா ஒரு சமயம் ‘A drop of crocodile on the wall’என்றொரு வரி எழுதி இருந்தாராம். அதன் பொருள் என்ன என்பது குறித்து ஆளாளுக்குத் தங்கள் அறிவின் நீள அகலங்களுக்கு ஏற்ப பல பொருள் கூறி விவாதித்து, நிறைவாக கவிஞரிடமே சென்று கேட்டனராம். அதற்கு அவர் 'சுவரில் ஒரு மரப்பல்லி’ என்பதைத்தான் தான் அப்படி எழுதியதாகக் கூறினாராம். அந்தக் கவிதையில் இருந்த இருண்மை உத்தி அவ்வாறு பல பொருள்களை வாசகர் உருவாக்கிக்கொள்ளக் காரணமானது.
வள்ளுவரும் தன் 'சொற்செட்டு; அர்த்த அடர்த்தி’ என்ற உத்தி மூலம் ஒரு குறளுக்குப் பல பொருள் ஏற்படச் செய்து ஒரே நேரத்தில் பகுத்தறிவுவாதிகள், இலக்கியவாதிகள், இயல்பியல்வாதிகள் எனப் பலரையும் திருப்திப்படுத்துவார். இதற்குப் பல சான்றுகளை ஆய்வறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டி உள்ளனர்.
'நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்று வள்ளுவரே கூறி இருப்பதுபோல ஒரு குறளே மாறிவரும் உலகத் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளைத் தரக் காண்கிறோம்.
பண்முக வாசிப்பு என்னும் பின் நவீனத்துவ உத்தியைக் கொண்டு ஐந்து குறள்களுக்குப் புதுப்பொருள் தேடலாம்.
சில சமயங்களில் சில குறள்களுக்கு வள்ளுவரே கற்பனை செய்திராத பல புதுப்புதுப் பொருள்களை காலப் பரிமாணத்திற்கேற்ப நாம் கொள்வதற்கு அவர் பின்பற்றிய 'சொற்செட்டு; அர்த்த அடர்த்தி’ என்ற உத்தி துணைபோகிறது.
பெண்ணின் கற்பும், பொருளாதார சுதந்திரமும்
 தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்ற குறள் 'வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் கீழ் உரையாசிரியர்கள் பின்பற்றிய வைப்பு முறையால் அடைபட்டுக் கிடப்பதால் இது இல்லறத் தலைவிக்கான இலக்கணமாக குறுகிப் போகிறது. இதை கட்டுடைப்பு (Deconstruction) செய்து வெளியே கொணர்ந்தால் பெண்ணுக்கான பொது இலக்கணமாக இருக்க முடியும்.
இந்தக் குறளில் உள்ள 'தற்காத்து’ என்ற சொல்லுக்கு 'தன் கற்பைக் காத்து’ என்று உரையாசிரியர்கள் 'கற்பு’ என்ற சொல்லை வருவித்துச் சொல்கின்ற பொருளைப் புறந்தள்ளி இக்காலப் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு ஏற்ப 'தன்னை பொருளாதாரரீதியாகக் காத்து’ என்று புதுப்பொருள் கூறலாம். பெண் விடுதலையில் முக்கியமானதாக பார்க்கப்படுவது பொருளாதார விடுதலைதான். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாததே பெண்ணடிமைத் தனத்துக்கு தலையாயக் காரணம் என்றார் தந்தை பெரியார். பொருளாதாரச் சுதந்திரம் (Economic independence) ஒரு பெண்ணுக்கு முதன்மையானது என்ற இந்த 20-21-ம் நூற்றாண்டு சிந்தனையைத் தன்னுள் பொருத்திக் கொள்வதற்கு வழிவைத்து அமைகிறது குறள். காரணம் அதன் சொற்செட்டு.
தற்காத்து என்று வள்ளுவர் எழுதியதற்கு 12-ம் நூற்றாண்டுக்காரர் 'தன் கற்பைக் காத்து’ என்று பொருள் வருவிக்கும்போது 21-ம் நூற்றாண்டுக்காரர் 'தன்னை பொருளாதாரரீதியாக காத்து’ என்று புதுப்பொருள் வருவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. எழுதிய கவிஞனே எண்ணிப் பார்த்திராத புதுப்பொருளை, படிக்கும் வாசகன் உருவாக்கிக்கொள்ளும் இலக்கிய சுதந்திரத்தை பின்நவீனத்துவம் நமக்கு வழங்குகிறது. பின்நவீனத்துவம் தரும் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக குறளைப் படைத்த வள்ளுவரின் எழுத்துத் திறன் இங்கே மெச்சத்தக்கது.
'தற்காத்து’ என்னும் குறளுக்கான மரபுப் பொருளையும், புதுப் பொருளையும் இப்போது பார்க்கலாம்.
கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி தகுதி அமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் - மு.வ.உரை.
 She is a wife who unweariedly guards herself, takes care of her husband and preserves an unsulled fame.
-G.V.Pope Explanation.
Who guards herself, for husbands comfort cares, her household’s fame. In perfect wise with sleepless soul preserves give her a woman’s name.
-G.V.Pope (Direct Translation)
Who guards herself என்பதற்குப் பதில் Who economically guards herself என்று பொருள் வருவித்துக்கொண்டால் வள்ளுவர் புகழ்பெற்ற பெண்ணியல்வாதி ஆகி விடுவார்.
இந்தக் குறளைப் பொருத்தமட்டில், தகைசான்ற சொற்காத்து என்பதிலேயே கற்பையும் உள்ளடக்க முடியும் என்பதால் தற்காத்து என்ற சொற்றொடருக்கு இடையே கற்பு என்ற சொல்லை வருவிக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே ''பொருளாதாரரீதியாக தன்னைக் காத்துக்கொண்டு, தன் துணைவனையும் கவனித்து, தகுதி அமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்'' என்று புதுப்பொருள் கூறி இரண்டாயிரம் ஆண்டு பழமையான கவிதையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கருத்தை ஏற்றிவைக்க முடிகிறது. அதனால்தான் அது நீடித்த நிலைத்த வளர்ச்சி (Sustainable Development) பெறும் உலகப் பொதுமறையாக உள்ளது.
 மரண தண்டனையும், என்கவுன்டரும்
இதைப் போலவே பல குறள்களுக்கு 21-ம் நூற்றாண்டு நியாயங்களுக்கு ஏற்ப புதுப்பொருள் வருவிக்க முடியும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்
(கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் தண்டித்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்)
-இந்தக் குறள் மரண தண்டனைக்கு ஆதரவாக வள்ளுவர் தரும் Voice  ஆகவும், Encounterசெய்யும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு வள்ளுவர் கொடுக்கும் அனுமதியாகவும் பார்க்கப்படுகிறது.
 இல்லறமும், மணமுறிவும்
இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்வான் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
என்று இல்லறத்தின் சிறப்பைப் பேசும் வள்ளுவத்தில் மணமுறிவு பற்றிய குறளா என்று வியப்படையாதீர்கள். மணமுறிவு என்பது சில நேரங்களில் சேதம் அதிகமாகாமல், குழந்தைகளின் எதிர்காலம் கருதி எடுக்கப்படும் பாதுகாப்பான தீர்வாக அமையும்போது அதற்கான ஆதரவைத் தரும் குறளாக,
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்களுள்
பாம்போடு உடனுறைந் தற்று
(அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது) என்ற குறளை ஒரு வழக்கறிஞர் பார்க்கிறார்.
 தடுப்பு மருந்தும், வள்ளுவமும்
இந்த குறள் அறத்துப்பால் இல்லறவியலில் இடம் பெறவில்லை. பொருட்பாலில் அரசனுக்குரிய உட்பகை பற்றிய குறளாகத்தான் உள்ளது. இருப்பினும் அதிகாரத்தை கட்டுடைத்துப் பார்க்கும் பின் நவீனத்துவ சுதந்திரத்தோடு வள்ளுவரை அணுகும்போது இக்குறள் புதுப்பொருள் தரும் இல்லறவியல் குறளாகவும் பின் நவீனத்துவவாதி ஒருவருக்குத் தெரிக்கிறது.    உலகிலேயே அதிக கால்நடை வளங் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவின் ஆன்மா மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பாலான கால்நடைகளும் கிராமங்களிலேயே வாழ்கின்றன. கால்நடை வளம் பேணுவதற்கென்று கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளை அரசாங்கமே இலவசமாகப் போடுகிறது. ஆனால் சில தடுப்பு ஊசிகள் போடும்போது அயர்ச்சி (Stress)காரணமாக கால்நடைகள் தரும் பால் அளவு ஓரிரு நாட்கள் குறையும். ஆனால் பால் குறைந்துவிடுமே என்று கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்கள், நோய் தாக்குதல் காரணமாகத் தங்கள் வாழ்வாதாரமான கால்நடைகளையே சில சமயங்களில் இழக்க நேரிடும். இந்தப் பிரச்னை பற்றி வள்ளுவருக்குத் தெரியாது. இருந்தாலும்,
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
என்ற குறளைக் கூறி கால்நடை தடுப்பூசிகளுக்கு ஆதரவாக ஒரு கால்நடை மருத்துவர் பிரசாரம் செய்ய முடியும்.
நிர்வாகத்தில் ரகசிய காப்பு
உலகின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கெல்லாம் உளவு பார்க்கும் அமெரிக்காவின் கண்களுக்கு எட்டாமல் 1998-ல் Operation Shakthiஎன்ற வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இந்தியா. Operation Shakthi என்ற பெயரும் கர்னல் பிருத்விராஜ் (Dr.அப்துல்கலாம்), கர்னல் நடராஜ் (Dr.சிதம்பரம்), மாமாஜி (அனில் ககோட்கர்) என்ற புனைபெயர்களும் இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கியதால்தான் Operation Shakthi   என்ற அணுகுண்டு சோதனை வெற்றி சாத்தியமானது. கடும் மந்தனம் (Strictly Confidential)இருந்தால்தான் சில வெற்றிகள் சாத்தியமாகும். இதைத்தான்,
கடைக்கொட்க செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கி
எற்றா விழுமந் தரும்
என்று உலகப் பொதுமறை கூறிச் செல்கிறது.
 திருக்குறளும் உலக வரலாறும்
இரண்டாம் உலகப் போரில் Little Boy, Fat man என்னும் குண்டுகள் ஹிரோஷிமா, நாகாசாகி மீது போடப்பட்டபின் வளமான ஜப்பான் வாடிப் போனது. இருப்பினும் சில ஆண்டுகளில் தனது மனித வளத்தால் மகத்தான எழுச்சி பெற்று எழுந்து நின்றது. ஜப்பானின் இந்த வரலாறு எதுவும் அறியாமலேயே
கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
என்று ஜப்பானுக்கென்றே ஒரு குறள் உலகப் பொதுமறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில குறள்கள் உலக வரலாற்று நிகழ்வுகளோடு வரலாற்று நாயகர்கள் சிலரின் பெயரையும் நேரடியாக நம் நினைவுக்கு கொண்டு வருகின்றன.
காலம் கருதாமல் கடுங்குளிர் காலத்தில் ரஷ்யாவின் மீது படையெடுத்து தங்கள் வாழ்வுக்கு நிறைவுரை எழுதத் தொடங்கிய நெப்போலியன் போனாபர்ட், ஹிட்லர் இருவரையும் நினைவுபடுத்தும் குறள்...
பகல்வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
இந்த உலகத்தை வெல்ல நினைத்து தன் சோம்பல் இல்லா சுறுசுறுப்பான வீரத்தால் அதை நிறைவேற்றியும் காட்டிய மஹா அலெக்ஸாண்டரை நினைவூட்டும் குறள்...
மடியில மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
அரிச்சந்திரன் நாடகம் பார்த்தபோது தன் மனதில் பதிந்த உண்மையை தன் வாழ்வில் இறுதி வரை பழுதுபடாமல் காத்த உலக உத்தமர் காந்தியை நினைவூட்டுவது
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
எனும் குறள்.
இப்படி உலக இலக்கியக் கோட்பாடுகளையும், உலகியல் நிகழ்வுகளையும், உலக வரலாற்று சம்பவங்களையும் நம் உலகப் பொதுமறை என்னும் கண்ணாடி வழியாகக் கண்டு ஒளி பெறலாம்.
பின்குறிப்பு: உலகப் பொதுமறையை தற்கால உலக இலக்கியக் கோட்பாடுகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு மழலை முயற்சியே இக்கட்டுரை. மழலையின் மொழியில் பிழைகள் மலிந்து கிடக்கலாம். அதற்காக குரல் வளையை நெரிக்கும் அளவுக்கு யாரும் கோபப்பட வேண்டாம்.