Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள் - 6

இந்திய மாநிலங்கள் - 6
Posted Date : 13:12 (13/12/2013)Last updated : 08:12 (14/12/2013)
மணிப்பூர்
ந்தியாவின் சுவிட்சர்லாந்து. பச்சைப்பசேல் சமவெளிகள், அடர்ந்த வனப்பகுதி, நீலநிற ஏரிகள் நிறைந்த மாநிலம். சிறப்பு ராணுவ சட்டத்தை விலக்கக் கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரும்புப் பெண்மணி ஷர்மிளாவின் மாநிலம்.
வரலாறு: இயற்கை வளத்தில் மட்டுமல்ல, நீண்ட நெடிய வரலாற் றுப் பின்னணியும் கொண்டது மணிப்பூர். மகாபாரதத்தில் அர்ஜுனன் இங்குவந்து மணிப்பூர் இளவரசியை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கி.பி. 33 - 154-ல் நாங்டாலைரன் பகாங்கபாவின் ஆட்சி தொடங் கியது. தொடர்ந்து பர்மியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. 1891-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட் பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, 1949-ம் ஆண்டு இந்தியாவின் சி பிரிவு மாநிலமாக இணைந்தது. 1972-ல் தனி மாநிலம் ஆனது.
எல்லைகள்: வடக்கில் நாகலாந்தும், தெற்கில் மிசோரமும், மேற்கில், கிழக்கில் மியான்மரும் இம்மாநிலத்தின் எல்லைகளாக உள்ளன.
முக்கிய ஆறுகள்: பாரக், மணிப்பூர், யு, லான்யீ ஆகிய நான்கு முக்கிய நதிப் படுகைகள்  இம்மாநிலத்தில் உள்ளன.
முதனிலைத் துறைகள்
கைத்தறி, விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்களாகும். கைவினைப் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 வனப்பகுதி நிறைந்த மாநிலம்.
மூன்றாம் நிலைத் துறைகள்
 இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய நடன வடிவமான மணிப்புரி இம்மாநிலத்தில் உருவானது.
 இங்குள்ள ஒவ்வாரு இனக் குழுவுக்கு என பிரத்தியேக இசை, நடன வடிவங்கள் உள்ளன.
 லைஹோபோ திருவிழா, ராதா ஜன்த்ரா போன்றவை முக்கியமான திருவிழாக்கள்.
 பாரக், மணிப்பூர், யு.லான்மீ ஆகியவை முக்கிய நதிகள்.
 இம்பால், பிஷ்ணுபூர் முக்கிய நகரங்கள்.
 விமான நிலையம் இம்பால்.
 ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தஜி கோயில், ஷாகித் மினார், மணிப்பூர் உயிரியல் பூங்கா முக்கிய சுற்றுலா தலங்கள்.
 இந்தியாவின் நன்னீர் ஏரியான லோக்தக், உலகின் ஒரே மிதக்கும் தேசியப் பூங்கா கைபூல் லாம்ஜாவோ இம்மாநிலத்திலுள்ளது.

மேகாலயா
லகின் அதிக மழைப்பொழிவு உள்ள சிரபுஞ்சி, மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம். ரயில்பாதை இல்லாத மாநிலம்.
வரலாறு : இம்மாநிலத்தில் உள்ள காசி, காரோ மற்றும் ஜைந்தியா பழங்குடியினங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு தனியாக ஆட்சி செய்துவந்தன. ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றியதும் இதை அசாம் மாகாணத்தின் ஒருபகுதியாக இணைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகும் இது அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு மாவட்ட மாகவே இருந்து வந்தது. 1970-ம் ஆண்டில், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் தன்னாட்சி பெற்ற பகுதியாக மேகாலயா உருவாக்கப் பட்டது. 1972-ம் ஆண்டு தனி மாநிலமாக இது உருவானது.
எல்லைகள் : வடக்கில் அஸ்ஸாம், தெற்கில் வங்க தேசத்தால் சூழப் பட்டுள்ளது இம்மாநிலம்.
முக்கிய ஆறுகள்: கிருஷியானி கலு, நிதாய், உம்கோடா, டாம்ரிங், கோமேஸ்வரி.
முதனிலைத் துறைகள்
 வேளாண் சார்ந்த தொழில்களே இங்கு பிரதானம். நெல், மக்காச்சோளம் முக்கிய உணவுப் பயிர்கள்.
 நிலக்கரி, சுண்ணாம்புக்கல், டோலமைட் முக்கிய கனிமங்கள்.
 மேகாலயாவில் விளைவிக்கப்படும் ’மாண்டரின் ஆரஞ்சு’ உலகத் தரம் வாய்ந்தது.
இரண்டாம் நிலைத் துறைகள்
 பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள். மலர்கள். மருந்து தாவரங்கள், காளான்கள் இம்மாநிலத்தில் விளைவிக்கப் படுகின்றன.
மூன்றாம் நிலைத் துறைகள்
 ஷில்லாங்கிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உம்ரோவ் என்னுமிடத்தில் சிறிய விமான நிலையம் உள்ளது.
 சிரபுஞ்சி முக்கிய சுற்றுலா தலம் ஆகும். மர வேர்களினால் ஆன பாலங்கள் புகழ் பெற்றவை.
 அதிக வனப் பரப்பையும், உயிர் பல் வகைமையையும், நீர் நிலைகளையும் கொண்டுள்ளது.
முக்கிய விழாக்கள்: காசி இனத்தவர்களின் ஐந்து நாள் முக்கியத் திருவிழாவாக நாங்க் ரெம் நடனம் நடைபெறுகிறது. சூரிய கடவுளை பெருமைப்படுத்தும் வகையில் வாங்லா என்ற திருவிழா கொண்டாடப் படுகிறது.
முக்கிய நகரங்கள்: ஷில்லாங் (கிழக்கின் ஸ்காட்லாந்து), வில்லியம் நகர், துரா.
முக்கிய இடங்கள்: உமியாம் ஏரி, கில்லாங் பாறை, மாஸ்மாய் குகைகள்.

மிசோரம்
யரமான மலைச் சிகரங்கள், சமவெளி, ஆறுகள், ஏரிகளின் மாநிலம். வனம் மற்றும் நில மலைகளின் சொர்க்கம். மலையக மக்களின் நாடு. மூங்கில் நடனம் பிரசித்தி பெற்றது.
வரலாறு: சீனாவின் யலாங் நதிக்கரைப் பகுதியில் இருந்து மிசோக்கள் இந்தப் பகுதியில் குடியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மிசோக்கள் நிறைந்த பகுதியானது வங்காளத்திலும், அஸ்ஸாம் மாகாணத்தில் இருந்தன. அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இருந்த இந்தப் பகுதி 1972-ல் பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப் பட்டது. 1987-ல் இந்தியாவின் 23-வது மாநிலம் ஆனது.
எல்லைகள்: வடக்கில் திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களையும், தெற்கு மற்றும் மேற்கில் மியான்மரையும், கிழக்கில் வங்க தேசத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.
முக்கிய ஆறுகள்: கலாடன், தலாங், சோனை.
முதன்மைத் துறை
 மாநிலப் பொருளாதாரத்தில் மூங்கில் முக்கிய இடம் வகிக்கிறது. காப்பி, தேயிலை முக்கியப் பயிர் வகைகள்.
மூன்றாம் நிலைத் துறை
 சேரோ மற்றும் வண்ணமயமான மிசோ நடனம் மிகவும் புகழ்பெற்றது.
புல்ரூட் அறுவடைத் திருவிழா, மிம்குட் போன்றவை முக்கியத் திருவிழாக்கள்.
 கலைத்துவமிக்க அய்ஸ்வால், தம்பில் மற்றும் தாவங் நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலா தலங்கள்.
சிலச்சார் முக்கிய விமான நிலையம்.
 கலாடஸ், தலாங், சோனை ஆகியவை முக்கிய ஆறுகள்.
 அய்ஸ்வால் முக்கிய நகரம்.

நாகாலாந்து
நாகா மக்களின் வண்ணமயமான நடனத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் பெயர்பெற்ற மாநிலம்.
வரலாறு: நாகா என்பதற்கு பர்மிய மொழியில் துளையிட்ட காதுகளைக் கொண்ட மக்கள் என்பது பொருள். நாகா பழங் குடியினர் அஸ்ஸாம், பர்மா அரசியல், சமூக, பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகும் அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. நாகா இனத்தினர் சிலரிடையே பிரிவினைவாதம் ஏற்பட்டு அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. 1955-ல் இது உச்சத்தை அடைந்தபோது இந்திய ராணுவம் அங்கு சென்று தனது கட்டுக்குள் கொண்டு  வந்தது. 1957-ல் இனக் குழுக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், 1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவின் 16-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: அருணாச்சலப் பிரதேசம் வடக்கிலும், மேற்கில் அஸ்ஸாமும், கிழக்கில் மியான் மரும், தெற்கில் மணிப்பூரும் எல்லைகளாக உள்ளன.
முக்கிய ஆறுகள் : தன்சாரி, டோபாங், ஜம்ஜி போன்றவை முக்கிய ஆறுகள்.
 கொஹிமா, மோக்கோக்சுங், வொக்ஹா, டூவென்­ ஆகியவை முக்கிய நகரங்கள்.
முதனிலைத் துறைகள்
 விவசாயம் முக்கியத் தொழில். மாநிலத்தின் 70% மக்கள் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அரிசி, சோளம், பயறு வகைகள், புகையிலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, உருளைக்கிழங்கு ஆகியவை முக்கிய விளைபொருட்கள்.
 பெருமளவிலான நிலக்கரி, இரும்புத் தாது, நிக்கல், கோபால்ட் படிவுகள் உள்ளவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலைத் துறை
 கொஹிமா, கொனோமா கிராமம், ஸுகோ பள்ளத்தாக்கு, ட்ரின்சங் முக்கிய சுற்றுலா தலங்கள்.
 செக்ரேனிப் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
 பழங்குடி இனங்களுக்கு இடையே உறவை மேம்படுத்துவதற்காக மாநில அரசு 2000-ம் ஆண்டில் ஹார்ன்பில் விழாவை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment