Friday 24 January 2014

இந்திய மாநிலங்கள் - 7

இந்திய மாநிலங்கள் - 7
Posted Date : 09:12 (14/12/2013)Last updated : 09:12 (14/12/2013)
ஒடிசா
ண்டைய காலத்தில் கலிங்கம் என்று அழைக்கப்பட்ட பகுதியே இன்றைய ஒடிசா. இதன் கோயில், கட்டடக்கலை, பாரம்பரிய நடனம், கைவினைப் பொருட்கள், வரலாறு ஆகியன உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. பூரி ஜெகன்னாதர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. சந்திப்பூர் ராக்கட் ஏவுதளம் அமைந்துள்ள மாநிலம்.
வரலாறு: ஒடிசாவின் வரலாறு  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மகாபாரதக் காலத்தில் இந்தப் பகுதி கலிங்கம் என அழைக்கப்பட்டது. கி.மு. 261-ல் அசோகர் கலிங்கத்தைக் கைப்பற்ற நடத்திய போரில் ரத்த ஆறு ஓடியது. இந்தப் போர் சம்பவமே அசோகரின் மன, மத மாற்றத்துக்கு வழிவகுத்தது. இதன்பிறகு மராட்டியர், விஜய நகரம், முகலாயர்கள் என ஆட்சி மாற்றங்கள் பல கண்டு, கடைசியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது வங்காளத்துடன் இருந்தது. பிறகு, 1912-ல் பீகார்- ஒடிசா மாகாணம் உருவானது. 1936-ல் பீகார், ஒடிசா தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. 1936, ஏப்ரல் 1-ம் தேதி ஒடிசா மாநிலம் உருவானது. பிறகு, 1950-ம் ஆண்டு 24 குறுநில மன்னராட்சிப் பகுதிகள் ஒடிசாவுடன் இணைக்கப் பட்டன
எல்லைகள்: வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கு வங்கமும், வட மேற்கில் ஜார்கண்ட்டும், மேற்கே சட்டீஸ் கரும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் இம்மாநிலத்தின் எல்லைகள்.
முக்கிய ஆறுகள் : மகாநதி, ப்ராமணி, சுவர்ணரேகை, இந்திராவதி, சபரி, சிலோரு, ருஷகுல்யா, புத்தவலங்கை முக்கிய ஆறுகள்.
சில்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று.
முதன்மைத் துறை
 மாநிலத்தின் 73% பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 நெல், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, மஞ்சள் போன்றவை முக்கிய விளைபொருட்கள்.
 இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம் இரும்புத் தாது, நிலக்கரி, க்ரோமைட் போன்றவை இதில் முக்கியமானவை.
இரண்டாம் நிலைத் துறை
 இந்தியாவின் முதல் பொதுத்துறை இரும்பு ஆலை ரூர்கேலாவில் அமைக்கப்பட்டது.
மூன்றாம் நிலைத்துறை
 துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, டோலா பூர்ணிமா, ரதயாத்திரை, கோனார்க் நடனத் திருவிழா, பூரி கடற்கரைத் திருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள்.
 ஒடிசி நடனம் புகழ் பெற்றது. 2 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது.
 சம்பல்புரி, கட்கி, பூம்காய் புடவைகள் நெய்யும் கலைஞர்களின் இருப்பிடம்.
 புவனேஷ்வர், சிலகா, கட்டக், கொனார்க், பாரதீப் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள்.

பஞ்சாப்
பியாஸ், சட்லெஜ், ராவி, ஜீனாப், ஜீலம் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வ தால் ஐந்து ஆறுகள் என்று பொருள் படும்படி பஞ்சாப் எனப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலம். பட்டினி யால் வாடுவோர் மிகக் குறைவாக உள்ள மாநிலம்.
வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம் என்பது இன்றைய பஞ்சாப் வரை பரவியிருந்தது. பண்டைய காலத்தில் இந்தோ-இரானிய நிலப் பகுதியின் கீழ் இருந்தது. அதன்பிறகு மௌரியர், கிரேக்கர்கள், குஷானர் கள், குப்தர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.
இடைக்காலத்தில் இஸ்லாமியர்களின் ஆட்சி இங்கு ஓங்கியது. 15-16-ம் நூற்றாண்டில் சீக்கிய சமயத்தின் வளர்ச்சிக்கு இடமானது. ரஞ்சித் சிங் 18-ம் நூற்றாண்டில் சீக்கிய பேரரசை உருவாக்கினார். 1849-ல் ஆங்கிலேயர் வசமானது. சுதந்திரத்துக்குப் பிறகு பஞ்சாபின் ஒரு பகுதி இந்தியாவுக்கும், மற்றொரு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பிரிக்கப்படாத பஞ்சாபின் தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது.PEPSU (Patiala and East Punjab States Union) என்ற பெயரில் பாட்டியாலாவைத் தலைநகராக்கி ஒரு மாநிலம் உருவாக்கப்பட்டது. 1966-ல் பஞ்சாபில் இந்தி பேசும் பகுதிகளைப் பிரித்து ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: வடக்கில் ஜம்மு- காஷ்மீரும், தெற்கில் ஹரியானா, ராஜஸ்தானும், மேற்கில் பாகிஸ் தானும் இதன் எல்லைகள்.
முக்கிய ஆறுகள்: ஜீனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லெஜ்.
முதன்மைத் துறை
 இந்தியாவின் தானியக் களஞ்சியம், 80 சதவீத நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. நாட்டில் அதிக அளவு ரசாயன உரம் பயன்படுத்தும் மாநிலம்.
இரண்டாம் நிலைத் துறை
 மிதிவண்டி, கைத்தறி, இயந்திர உதிரிபாகங்கள், துணி, சர்க்கரை, சமையல் எண்ணெய், மின்னணுப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் போன்றவை இங்கு உற்பத்தியாகின்றன.
மூன்றாம் நிலைத் துறை
 பஞ்சாபில் பங்ரா நடனம் புகழ்பெற்றது. பெண்களுக்கான நடன வடிவம் 'ஜித்தா!’
 நூற்றாண்டுகள் கடந்தும் இவர்களின் பாரம்பரியம் மாற்றம் அடையாமல் உள்ளது.
 அறுவடைத் திருவிழாவான லோஹரி, பசன்த் பைசாகி மற்றும் தேஜ் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 குருநானக் பிறந்ததினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
 புகழ்பெற்ற அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக், பக்ராநங்கல் அணைக்கட்டு, பதிண்டா கோட்டை, சண்டிகர் நகரம், ஜலந்தர், பதன்கோட், லூதியானா ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள்.
அமிர்தசரஸ், சண்டிகர் ஆகியவை முக்கிய விமான நிலையங்கள்.

ராஜஸ்தான்
ந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமான தார் பாலை வனத்தின் பகுதி இம்மாநிலத்தில் உள்ளது. சலவைக்கல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம்.
வரலாறு: உலகின் முதல் மற்றும் பழைமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அமைந்துள்ள மாநிலம். கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை சௌகான்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர். 1818-ல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசு பகுதிகள் ஆனது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1948-ல் இருந்து 1956 வரை யிலான காலகட்டத்தில் பிகானிர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் போன்ற மன்னராட்சி பகுதிகள் ஒன்றிணைத்து கிரேட்டர் ராஜஸ்தான் உருவாக்கப்பட்டது. 1958-ல் ஆஜ்மீர் ராஜஸ்தானுடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: வடக்கில் பஞ்சாப், வடகிழக்கில் ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களும், தென் மேற்கில் குஜராத், தென்கிழக்கில் மத்தியப்பிரதேசமும், மேற்கில் பாகிஸ்தானும் அமைந்துள்ளன.
முக்கிய ஆறுகள்: லுனி, சம்பல், பனாஸ், மஹி, சபர்மதி.
முதன்மைத் துறை
 80 சதவீத மக்கள் விவசாயம். கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாகும்.
 அரிசி, காய்கறி, கோதுமை, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, புகையிலை முக்கிய விளைபொருள்கள்.
 துத்தநாகம், சிவப்புக்கல், மரகதம் முக்கிய கனிமங்கள்.
 சுண்ணாம்புக் கல் உற்பத்தியிலும் மற்றும் வெள்ளி உற்பத்தியிலும் பெரும் பங்களிப்பினை அளிக்கிறது.
 90% சலவைக் கல் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்.
இரண்டாம் நிலைத் துறை
 துணி, கம்பளி, சிமென்ட், கண்ணாடி, சோடியம், ஆக்சிஜன், பூச்சி மருந்து, உரம் உற்பத்தி இம்மாநிலத்தின் முக்கிய தொழில்துறையாகும்.
 ராஜஸ்தான் கைவினைப் பொருட்கள் அகில உலகப் புகழ் பெற்றவை.
மூன்றாம் நிலைத் துறை
 சுற்றுலா மிக முக்கியத் தொழிலாகும். நாட்டின் மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 14% இம்மாநிலம் ஈர்க்கிறது.
 பிராகிஸ், மங்கணியர், லங்காஸ் போன்ற இனக் குழுக்கள், நாட்டுப்புற இசை மற்றும் நடன வடிவங்கள் முக்கியமானவை.
 தீபாவளி, பாலைவனத் திருவிழா, ஸ்ரீதேவ் நாராயணா ஜெயந்தி, கங்கௌர், தேஜ், புஷ்கார் ஜென்மாஷ்டமி ஆகியவை முக்கியத் திருவிழாக்கள்.
 ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா உதய்பூர், ஜெய்சால்மர் முக்கிய விமான நிலையங்கள்.

சிக்கிம்
க்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலம். உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்ஜன்ஜங்கா இதன் எல்லையில் அமைந்துள்ளது. இந்தியா - சீனா இடையே உள்ள ஒரே தரைவழி பாதை நாதுல்லா கணவாய் இங்கு தான் உள்ளது.
வரலாறு: 8-ம் நூற்றாண்டின் போது புத்த மதகுரு ரின்போச்சி இந்தப் பகுதிக்கு வருகை தந்ததுதான் முதல் பதிவு. இவர்தான் புத்த மதத்தைப் பரப்பினார். கூர்க்காக்கள் இந்தப் பகுதியின் மீது தாக்குதல் நடத்தியபோது, சீனா தன்னுடைய படையை அனுப்பியது.
இதன்பிறகு நேபாளத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் இந்தியாவின் சிறப்பு உரிமைகள் பெற்ற சுயாட்சி பகுதியாக தொடர்ந்தது.
சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை இந்தியாவிடம் இருந்தது. நேபாளிகளின் ஊடுருவல் அதிகரிக்கவே, 1975-ம் ஆண்டு சிக்கிம் பிரதமர் இந்தியாவுடன் சிக்கிமை இணைக்க கோரிக்கைவிடுத்தார். இதன்பிறகு இந்திய ராணுவம் சிக்கிம் சென்று அதன் தலைநகர் கேங்டாக்கைக் கைப்பற்றியது.
பிறகு , வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது. 1975-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் இணைந்தது.
எல்லைகள்: வடக்கில் திபெத் (சீனா), கிழக்கில் பூடான், மேற்கில் நேபாளம் ஆகிய நாடுகளையும்,  தெற்கில் மேற்கு வங்க மாநிலத்தை யும் எல்லையாக கொண்டுள்ளது.
முதன்மைத் துறை
 விவசாயம் முக்கியத் தொழிலாகும். நெல், கோதுமை, சோளம், பார்லி, உருளை, தேயிலை, ஏலக்காய் முக்கிய விளைபொருட்கள்.
மூன்றாம் நிலைத் துறை
 சாகாதாவா, தீபாவளி, துருபகாத்சேஷி, திபெத் புத்தாண்டு ஆகியவை முக்கிய விழாக்கள்.
 லாமாக்களின் முகமூடி நடனம், கக்பாத் நடனம் புகழ் பெற்றவை.
 யுக்ஸம் மிமிமி, டெக் தூவி மடங்கள் முக்கிய இடங்களாகும்.

தமிழ்நாடு
தென் இந்தியாவின் நுழை வாயில். இந்தியாவின் முதல் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்.
வரலாறு: திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தமிழகத்தின் வரலாறு என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம் என கணிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய வரலாற்றை சங்க இலங்கியங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தின் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னதாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. இன்றைய தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதிகளை தமிழ் மன்னர்கள் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆண்டுவந்துள்ளனர். ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், மெசபடோமியர்கள், பெர்ஷியர்களுடன் வாணிபத் தொடர்புகள் இருந்துள்ளன. முத்துக்கள், வாசனைப் பொருட்கள், வைரங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
1336-ல் விஜயநகர பேரரசின் கீழ் தமிழகம் இருந்துள்ளது. அவர் களுக்குப் பிறகு நவாப்கள், நிஜாம்கள் என பலர் கைகளுக்கு மாறி 1801-ல் ஆங்கிலேயர் வசம் சென்றது. ஆங்கி லேயர் ஆட்சியின்போது இந்தப் பகுதிகள் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டுவந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, சென்னை மாநிலம் ஆனது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்படும்போது சென்னை மாநிலத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன. 1969-ம் ஆண்டு சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எல்லைகள்: வடக்கில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலை யும், மேற்கில் கேரளா மற்றும் அரபிக் கடலையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும்  எல்லைகளாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டிற்குள், வங்காள விரி குடாவை ஒட்டி அமைந்து உள்ளன.
முதன்மைத் துறை
 விவசாயம் முதன்மையான தொழிலாகும். 56 சதவீத மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 காவிரி டெல்டா பகுதி தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
 வாழை, மரவளளி மலர்கள் உற்பத்தியில் முதலிடமும், நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடமும் வகிக்கிறது.
 நெல், கம்பு, சோளம், பயறு வகைகளை வாழை, பருத்தி, கரும்பு, வாழை, நிலக்கடலை, தேயிலை, காப்பி, ரப்பர் ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள்.
 இரும்பு, பாக்சைட், சுண்ணாம்புக் கல், ஜிப்சம், கிராஃபைட், கிரானைட், இல்மனைட், லக்னைட் ஆகியவை முக்கியக் கனிமங் களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
 மாநிலததின் மொத்த வருமானத் தில் 24 சதவீதம் தொழில் துறையின் மூலம் கிடைக்கிறது. நெசவுத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், காகிதத் தொழிற் சாலை, தோல் பதனிடும் தொழில், சிமென்ட் தொழிற்சாலை, நெய்வேலி அனல் மின் உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.
மூன்றாம் நிலைத் துறை
 பொங்கல், சித்திரைத் திருவிழாக்கள், தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 பரதநாட்டியம் - உலகப் புகழ் பெற்ற இக்கலையின் பிறப்பிடம் தமிழகம் ஆகும்.

திரிபுரா
ந்தியாவின் இரண்டாவது சிறிய மாநிலம். திரிபுரா பற்றிய பண்டைய தகவல்களை ராஜ்மாலா என்ற நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மாநில மக்கள் தொகையில் 52 % பேர் மலைவாழ் மக்களே.
வரலாறு: தற்போது தனி மாநில அந்தஸ்தில் இருக்கும் திரிபுரா, சுதந்திரத்துக்கு முன்புவரை மன்ன ராட்சியின் கீழ் இருந்தது. 184 அல்லது 179 மாணிக் பகதூர் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் திரிபுரா என்பது பர்மா, வங்கதேசம், வங்காள விரிகுடா வரை பரந்து விரிந்திருந்தது.  இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மாணிக் பகதூர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1949-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் தேதி சி பிரிவு மாநில மானது. 1956-ல் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றானது. 1972-ம் ஆண்டு, ஜனவரி 21-ம் தேதி தனி மாநில அந்தஸ்தை பெற்றது திரிபுரா.
எல்லைகள்: வடக்கு, தெற்கு, மேற்கு வங்கதேசம், கிழக்கில் அஸ்ஸாம், மிசோரம்.
முக்கிய ஆறுகள்: கும்தி, கொவாய், மனு, ஹோரா, தியோ.
முதன்மைத் துறை
 திரிபுரா வேளாணமைப் பின்னணி கொண்ட மாநிலம். 64% மக்கள் வேளாண் தொழிலையே சார்ந்துள்ளனர். மாநில நிலப்பரப்பில் 27% மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.
 அரிசி முக்கிய விளைபொருள். கரும்பு, உருளைக் கிழங்கும் விளைகின்றன.
இரண்டாம நிலைத் துறை
 தேயிலை, சணல் தொழிற்சாலைகள் முக்கிய இடம் வகிக்கிறது.
மூன்றாம் நிலைத் துறை
 மலைவாழ், மலைவாழ் அல்லாத மக்கள் என இருபெரும் கலாசாரப் பின்னணி கொண்டது.
 இசை, கலை, நடனம், போர், கைவினைப் பொருட்கள் என அனைத்திலும் பாரம்பரிய கலாசாரம் கொண்டது.
 மனசா, ஜீர்த்தன், கரிபா, தமெபல் நடன வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
 பவுஸ், சங்கராந்தி, ஹோலி காரியா பூஜை, துர்கா பூஜை ஆகியவை முக்கிய விழாக்கள்.
சுகர்த்தலா, உதய்பூர், கைலாஷ நகர் ஆகியவை முக்கிய இடங்களாகும்.
 அகர்தலா முக்கிய விமான நிலையம்

No comments:

Post a Comment