Thursday 25 August 2016

மருதநாயகம்

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதது மருதநாயகம் எனும் கான்சாஹிப்பின் வரலாறு. அதை புரட்டிப் பார்ப்போம்!

இவர், திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி மற்றும் பூலித்தேவனின் சமகாலத்தில் வாழ்ந்தவர். மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம், முகம்மது கான் சாஹிப் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார். மதுரை அருகே உள்ள பனையூரில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார். வீர,தீர சாகசங்களில் சிறந்து விளங்கினார்.

இவர் தனது முதல் ராணுவ அனுபவமாக, தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டு ஆட்சி புரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹனின் படையில் சிறிது காலம் பணி புரிந்தார். பின்னர் புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு படையில் சாதாரண படை வீரராக சேர்ந்தார். அவருடைய அறிவு, தலைமைப்பண்பு, போர் நுட்பம் ஆகியவை பிரெஞ்சு தளபதிகளை வியக்க வைத்தது. அதன் விளைவாக குறுகிய காலத்தில் பல முக்கிய பதவிகளை பெற்றார்.

இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதில் கோபம் அடைந்த மருதநாயகம், ஆங்கிலேயப் படையில் இணைந்தார்.

ஆங்கிலேயர் படையில் இணைந்த சில காலங்களில், மைசூர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஹைதர் அலியை மருதநாயகம் தோற்கடித்தார். இதனால் புகழின் உச்சிக்கே அவர் கொண்டு செல்லப்பட்டார். தெற்கு சீமையின் கவர்னராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். மக்களை காப்பதிலும், அவர்களின் வாழ்வை உயர்த்துவதிலும், மருதநாயகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார். விவசாயம்தான் நாட்டின் உயிர்நாடி என்பதை உணர்ந்து, அதற் காக அனைத்து வகையிலும் பாடுபட்டார். ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கொடைக்கானலுக்கு முதல் முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் ஆட்சியில் தான். திறமையான ஆட்சியால் அவரை மக்கள் கொண்டாடினார்கள்.

இவை எல்லாம், ஆற்காடு நவாப்பாக இருந்த முகம்மது அலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்கக்கூடாது என்று ஆற்காடு நவாப்பால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆற்காடு நவாப்பிடம் கப்பம் கட்டுமாறு மருதநாயகத்திற்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். இதனை மருதநாயகம் ஏற்க மறுத்தார். அதன்பிறகே, ஆங்கிலேயர் களின் சூழ்ச்சியை மருதநாயகம் உணர்ந்தார். அதன் விளைவு, நாட்டை நாமே ஏன் ஆளக்கூடாது? என்ற சிந்தனை மருத நாயகத்துக்கு உதித்தது.

1763-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு, தன்னுடைய கொடியான மஞ்சள் நிற கொடியை ஏற்றினார். அத்துடன் பிரெஞ்சுக் காரர்களின் கொடியையும் ஏற்றி பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது.

மருதநாயகத்தை வீழ்த்த ஆங்கிலேயர் படை 3 முறை படையெடுத்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் போரிட்டும் ஆங்கிலேயர் படை தோல்விகளையே தழுவியது. அவரை, வீரத்தால் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்களும், ஆற்காடு நவாப்பும், சூழ்ச்சியால் வீழ்த்த முயற்சித்தனர். அதன்படி, மருதநாயகத்தின் அமைச்சர் சீனிவாசராவ் உள்பட சிலரை கைப்பாவையாக்கினார்கள்.

இதையடுத்து, 1764-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி மருதநாயகம் தனது கோட்டையில் தனி அறையில் தொழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசராவ் உள்ளிட்டோர் மருதநாயகத்தை சிறைபிடித்து, ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைத்து விட்டனர். மருதநாயகத்திற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1764-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரமாண்டமான மாமரத்தின் கிளையில், வலுவான தூக்குக்கயிற்றில் தூக்கிலிடப்பட்டார். 2 முறை தூக்கிலிட்டும் சாகவில்லை. புதிய கயிறு தயாரிக்கப்பட்டு, 3-வது முறையாக தூக்கிலிடப்பட்டார். இதில் அவர் இறந்து விட்டார். நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டு, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பிறகே உடல் இறக்கப்பட்டது. 3-வது முறை தூக்கில் போடும் முன்பு அவர் காலில் கட்டி இருந்த தாயத்தை அகற்றியதாகவும், அதன்பிறகே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மருதநாயகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாக செய்தி பரவியது. இதனால் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி வெளியே எடுக்கப்பட்டு, உயிர் இருக்கிறதா? என்று ஆங்கிலேயர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். பின்பு உடலை பல பாகங்களாக வெட்டி, பல இடங்களில் புதைத் துள்ளன

G K




01. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட்

02. கிலாஃபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

03. சிவப்புச் சட்டை இயக்கம் - அப்துல் கபார்கான்

04. சர்வோதய இயக்கம் - ஆச்சார்யா

05. கால்சா இயக்கம் - குருகோவிந்த சிங்

06. சிப்கோ இயக்கம் - சுந்தல்லால் பகுகுணா

07. பக்தி இயக்கம் - சைதன்யர், ஜெயதேவர்.

08. பகுத்தறிவு இயக்கம் - ஈ.வே.ரா. பெரியார்.

09. தமிழியக்கம் - பாரதிதாசன்

10. பூதான இயக்கம் - விநோபா பாவே



11. சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை - பால கங்காதர திலகர்

12. வந்தே மாதரம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி

13. இன்குலாப் ஜிந்தாபாத் - முகமது இக்பால்

14. செய் அல்லது செத்து மடி - காந்திஜி

15. ஜெய் ஹிந்த் - சுபாஷ் சந்திரபோஸ்

16. நான் ஒரு இந்தியன் - விவேகானந்தர்

17. டில்லி சலோ - சுபாஷ் சந்திரபோஸ்

18. என்மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டீஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் - லால லஜபதிராய்

19. பிரித்துவிட்டு, வெளியேறு - முகமது அலி ஜின்னா

20. வேத காலத்திற்குத் திரும்பிப்போ - சுவாமி தயானந்த சரஸ்வதி.



21. கலிங்கப்போர் - கி.மு.26

22. ஹைதாஸ்பஸ் போர் - கி.மு.326

23. அராபியர் சிந்தி படையெடுப்பு கி.பி. 712

24. இரண்டாம் தரைன் போர் - கி.பி.1192

25. முதலாம் பானி்பட்டோர் - கி.பி. 1526

26. ராக்ஷ்சிதங்கடி போர் - கி.பி. 1565

27. பிளாசிப்போர் - கி.பி - 1757

28. வந்தவாசி போர் - கி.பி. 1760

29. மூன்றாம் பானிபட்போர் - கி.பி. 1761

30. 3-ஆம் ஆங்கில-மராத்தியப்போர் - கி.பி.1818.



31. பீகார் காந்தி - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

32. குருஜி - எம்.எஸ். கோல்வார்கள்.

33. இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நெளரோஜி

34. ஆந்திரகேசரி - டி.பிரகாசம்

35. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

36. தென்னாட்டு திலகர் - வ.உ.சி.

37. லோக் நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்.

38. லோகமான்யா - ஜவஹர்லால் நேரு.

39. சாச்சா - ஜவஹர்லால் நேரு

40. Feuhrer - ஹிட்லர்.



41. ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம் - அருணாசலப் பிரதேசம்

42. இந்தியாவின் ஆபரணம் - மணிப்பூர்

43. உதய சூரியன் நாடு - அருணாசலப் பிரதேசம்

44. இந்தியாவின் தேயிலைத்தோட்டம் - அசோம்

45. இந்தியாவின் கோகினூர் - ஆந்திரப் பிரதேசம்

46. தேவபூமி - உத்தரகாண்ட்

47. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் - உத்திரப்பிரதேசம்

48. இதிகாசங்களின் நாடு - குஜராத்

49. கடவுளின் சொந்த நாடு - கேரளம்

50. இந்தியாவின் தானியக்களஞ்சியம் - பஞ்சாப்



51. ஹாரிபாட்டர் - ஜே.கே. ரெளலிங்

52. டின்டின் - ஹெர்ஜின்

53. ஆஸ்டெரிக்ஸ் - கோசின் உடர்சோ

54. சுவாமி - ஆர்.கே - நாராயணன்.

55. ஜெம்ஸ்பாண்ட் - இயான் பிளமிங்

56. டாக்டர் ஹட்ஸன் - ஆர்தர்கானன்டோய்லி

57. ராபின்சன் குருசோ - டானியன் டிம்போ

58. ஹாம்லெட் - ஷேக்ஸ்பியர்

59. டான் குவிக்ஸெட் - வெர்வின்ரஸின்

60. டார்ஜான் - எட்கார் ப்ரோஸ்



61. புலிட்சர் பரிசு: பத்திரிகையாளர்களுக்கான விருது.

62. கலிங்கா விருது: அறிவியல்

63. பூக்கர் பரிசு: இலக்கியம்

64. கிராமி விருது: இசை

65. ஞானபீட விருது: இலக்கியம்

66. சங்கர் விருது: இந்தியத்தத்துவம், நாகரிகம்

67. துரோணாச்சார்யா விருது: விளையாட்டு பயிற்சி

68. பட்நாகர் விருது: அறிவியல்

69. தன்வந்திரி விருது: மருத்துவ அறிவியல்

70. போர்லோக் விருது: விவசாயம்

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

Wednesday 10 August 2016

திட்டமிடத் தவறுவதே ஒரு தோல்விதான்

வெற்றிபெறுவதற்காக நீங்கள் திட்டமிடா விட்டால், தோல்வியடைவதற்கான திட்டத்தோடு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று பொருள்”. அதாவது “திட்டமிடத் தவறுவதே ஒரு தோல்விதான்” – என்பதை நாம் உணர்வதற்காகச் சொல்லப்படும் பழமொழி அது. அதுமட்டுமல்ல… திட்டமிடுதல் குறித்த நேர்மறையான பழமொழி ஒன்று நமது நம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

“வேலையைத் திட்டமிடுங்கள்…. பிறகு திட்டமிட்டபடி வேலையைச் செய்யுங்கள்”
என்பதுதான் அது. இதையே ஆங்கிலத்தில்!

“PLAN THE WORK AND WORK THE PLAN” என்பார்கள்.



’நல்லவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகிறார்கள், சில முரண்பட்ட மனிதர்கள் தான் உலகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கப்பாடுபடுகிறார்கள். அவர்களால் தான் உலகம் இயக்கம் பெறுகிறது’ என்பது பெர்னாட்ஷாவின் வாக்கியம். 

ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்:

ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்:

1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள்.

2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள்.

3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கப் போகும் போது நாம் இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் எனக்கு பெரிய விஷயமாகும்.

4. எனக்கு 17 வயதாக இருக்கும் போது சில வார்த்தைகள்  என்னை மிகவும் கவர்ந்தது. " உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து வாழ்ந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது "இன்று தான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எனக்கு நானே  சொல்லிக்கொண்டு என் வேலைகளை ஆரம்பிப்பேன்.

5. சில நேரங்களில் இந்த வாழ்க்கை உங்கள் தலையை செங்கல் கொண்டு அடித்து நொறுக்கும். எந்த நேரத்திலும்  நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

6. வாழ்க்கை என்பது வரையறுக்கப்பட்டது. அன்பு மட்டுமே பல மைல்கள் கடந்து பயணிக்கும்.

7. பொருட்களை, செல்வங்களை தொலைத்து விட்டால் திரும்ப கண்டுபிடித்து விடலாம். ஒன்றே ஒன்றை மட்டும் தொலைத்து விட்டால் மீண்டும் அதை கண்டுபிடிக்கவே முடியாது அந்த ஒன்று தான் வாழ்க்கை.

எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் உள்ள ரயில்களில் அதிவேகமானது என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற ரயில்?

‪#‎டால்கோ‬ எக்ஸ்பிரஸ்

நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையை, ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட டால்கோ எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியாணாவில் உள்ள பல்வால் வரை இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது

கதிமான் எக்ஸ்பிரஸ் – 160 கி.மீ /மணி

சதாப்தி எக்ஸ்பிரஸ் – 150 கி.மீ/ மணி

ராஜ்தானி எஸ்க்பிரஸ் – 130 கி.மீ/ மணி



நாட்டின் சுத்தமான மற்றும் அசுத்தமான ரெயில் நிலையங்கள் குறித்து அண்மையில் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டில் உள்ள 407 பெரிய ரெயில் நிலையங்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சிறந்த 10 ரெயில் நிலையங்களாக பயணிகள் தேர்வு செய்தவை வருமாறு:-

1.பியாஸ், 2.காந்திதாம், 3.வாஸ்கோடா காமா, 4.ஜாம்நகர், 5.கும்பகோணம், 6.சூரத், 7.நாசிக்ரோடு, 8.ராஜ்கோட், 9.சேலம், 10.அங்லேஷ்வர். நாட்டின் சுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் காந்திதாம், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட், அங்லேஷ்வர் ஆகிய 5 ரெயில் நிலையங்கள் இடம் பிடித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அசுத்தமான ரெயில் நிலையங்களில் மதுபானி (பீகார்) முதலிடம் பிடித்து இருக்கிறது. 

EXAMS

TNPSC EXAMS for 2016-17*
*NOTIFICATION MIGHT DELAY FOR A FEW WEEKS*
*NEVER EVER WAIT FOR NOTIFICATION*
*KEEP PREPARING FOR THE EXAMS*

*GROUP-4 EXAM* _(JUNIOR ASSISTANTS CADRE)_
ELIGIBILITY : TENTH STANDARD
EXAM DATE : 16.10.2016
Posts : Junior assistants and Typists

*GROUP-1 EXAM* _(GAZETTED OFFICERS CADRE)_
ELIGIBILITY : ANY DEGREE
Prelims Exam date : 27.11.2016
Posts:
1.Deputy Collectors
2.Deputy Superintendent of Poice.
3.Assistant commissioners
4.Assistant director of rural development department ETC

*GROUP-2 INTERVIEW POSTS* _(OFFICERS CADRE)_
ELIGIBILITY : ANY DEGREE
Prelims Exam Date: 11.12.2016
Posts:
1.Deputy commercial tax officer
2.Sub register
3.Probation officer in prison dept
4.Asst inspector of labour dept
5.Junior employment officer
6.Special asst in the vigilance and anti corruption dept
7.Special branch asst intelligence in police dept
8.Asst section officer in tnpsc
9.asst inspecter in local and audit dept
10.superviser in industrial and commerse dept ETC

*VAO EXAM*
ELIGIBILITY : TENTH STANDARD
Exam Date: 8.1.2017
Village administrative officers

*GROUP-2A EXAM* _(ASSISTANTS CADRE)_
ELIGIBILITY : ANY DEGREE
Non-Interview post
Exam Date :5.2.2017
Posts:
1.Personal clerk in tn public sevice
2.asst in industrial and commerse dept
3. Asst in commisioner of revenue administration dept
4. Asst in land administration department
5. Asst posts............etc.

“என் கனவு.. அரசு வேலை..”

“என் கனவு.. அரசு வேலை..” -
திரு.ஸ்ரீவில்லிபுத்தூர் க.மாரித்து.

டிஎன்பிஎஸ்சி (Group-IV) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முடிவு செய்தவுடன் முதலில் மனநிலையை அதற்கேற்றவாறு உருவாக்கி விடவேண்டும். பொதுவாக குரூப்-4 தேர்வினை 10 லட்சம் முதல் 13 லட்சம் மாணவர்கள் வரை எழுதுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வளவுபேர் எழுதக்கூடிய தேர்வில் நமக்கெல்லாம் வேலை கிடைக்கவா போகிறது? என்று தான் நமது மனதில் முதலில் நினைக்கிறது.

முதலில் இம்மாதிரி எண்ணங்கள் தான் நமக்கு முதல் எதிரி. இடையூறு… தடைக்கல்…. எல்லாமே. இந்த எதிர்மறை எண்ணத்தை போக்கிட அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தாற் போல் சொல்கிறேன் நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால்…… எத்தனை லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினாலும் நாம் நன்கு எழுதினால் நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. இந்த நம்பிக்கை தான் நம்மை கரை சேர்க்கும். இது போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைந்தவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் முதல் வேத வார்த்தை நம்பிக்கை பற்றி தான்.

தினசரி குறைந்தது 5 மணி நேரம் படிக்கத்தொடங்குங்கள். 15 நாட்கள் கடந்தவுடன் 5 மணி நேரம் என்பதை படிப்படியாக அதிகரித்து 8 மணிநேரம் வரை தினசரி படியுங்கள். ஒரு மாதம் இதனை ஒரு தவமாக நினைத்து தினசரி 8 மணி நேரம் படித்து முடியுங்கள். இப்போது நீங்கள் சொல்வீர்கள் நான் ஜெயித்து விடுவேன் என்று ஆம்மனமென்ற மந்திரச்சாவி உங்கள் வசப்பட்டு விடும்.

பணியில் சேர்ந்த பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு அரசு எனபொறிக்கப்பட்ட ஜீப்பில் நானும் உயர் அதிகாரியாக வலம் வருவேன் என தினசரி ஒரு மூன்று நிமிடம் இதயப்பூர்வமாக நினைத்து இன்புறுங்கள். "கிரிக்கெட் ரிப்ளே" போன்று காட்சிப்படுத்தி மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் திரையிட்டுப் பாருங்கள்.

அதிகாலை எழுந்து படிப்பது நல்ல பழக்கமாகும். தினசரி ஒரு மணி நேரமாவது பத்திரிகைகள் படித்து உலகம், இந்தியா, தமிழகம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை ஒரு நோட்டில் குறிப்பெடுத்து அதனை மனதில் பதிய வையுங்கள். எப்போதும் உற்சாகமாக சிரித்த முகத்துடன் நாளை நமதே என நம்பிக்கையுடன் இருங்கள். உங்களை எப்போது பார்த்தாலும் மட்டம் தட்டி ஏளனமாக எள்ளி நகையாடும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

நாம் இந்த ஜென்மத்தில் பிறந்திருப்பது ஒரு தடவை தான். இப்பிறவியில் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடமாவது அழுத்தமாக நினையுங்கள். இப்போது நல்ல முயற்சி செய்யத் தவறிவிட்டால் இப்பிறவி முழுவதும் கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

எல்லாரும் ஏங்குவது ஒரே ஒரு வெற்றிக்குத்தான். அந்த வெற்றியைநோக்கி ஆர்வம் கொண்டு பீடுநடை போடுங்கள். வெற்றியை அடையும் வரை அலுப்பில்லை…. சளைப்பில்லை…… களைப்பில்லை…. காரியத்தில் கண்ணாயிருங்கள். உங்களுக்கு ஒர் அரசுப்பணி காத்திருக்கிறது. தபால்காரர் உங்களது நியமன ஆணையினை (Appointment Order) உங்களை தேடிக்கொண்டு வரும் நாளை எதிர்நோக்குங்கள். மீண்டும் சொல்கிறேன் நம்பிக்கைதான் வாழ்க்கை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்.

பொதுத்தளங்கள்

 தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்

அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .

www.waytosuccess.com

www.padasalai.net

www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com

www.tamilasiriyarthanjavur.blogspot.com

www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

வாழ்க்கை

 மற்றவர்களை நோக்கிய நமது அணுகுமுறையே, நம்மை நோக்கிய அவர்களது அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றது.

நமக்கான வெகுமதிகள் எப்போதும் நமது சேவைக்கான சரியான விகிதத்தில் இருக்கும்.

நமது தற்போதைய கம்பீரமான எண்ணங்களின் திசையிலேயே மனதின் நகர்வுகள் அமைகின்றன.

எங்கு சரியான திட்டமிடல் இல்லையோ அங்கு உங்களால் சலிப்பைக் காணமுடியும்.

நமது ஆர்வம் மற்றும் உற்சாகத்தின் விரிவாக்கப்பட்ட செயல்பாடே படைப்பாற்றல்.

பெரிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருப்பதே.

நாம் வாழும் இந்த உலகமானது, நமது அணுகுமுறை மற்றும் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியினைப் போன்றது.

இலக்கு உடையவர்களே வெற்றிபெறுகிறார்கள் ஏனென்றால், எங்கு செல்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஒவ்வொரு விஷயமும் திட்டத்தின் மூலமே தொடங்குகின்றது.

நமது ஆழ் மனதில் நாம் பதியக்கூடிய எதுவாயினும், ஒருநாள் அது உண்மையாகும்.

திட்டம், வழிமுறை மற்றும் இலக்கை நோக்கிய அழுத்தத்திற்கான தைரியம் ஆகியவையே உங்கள் அனைவரின் தேவை.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உட்புறத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்புறத்தில் தெரிந்துவிடுகின்றது.