Wednesday 9 November 2016

இரட்டைக் குழந்தை..

சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை யூனியோவலர்ட் ட்வீன்ஸ் என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்‘ என்கிறார்கள். குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு கிட்னி, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.

இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்‘ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட, இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.

அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் கேட்டால் எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தில் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.

இந்திய மாநிலங்கள் குறித்த முக்கிய தகவல்கள்...


இந்திய மாநிலங்கள் குறித்த முக்கிய தகவல்கள் :::
● இந்திய சுதந்திரத்தின் போது part-A , part -B, part- C, part-D (part -A, part -B --> states , part -C,part - D--> union territories ) என நான்கு வகை மாநிலங்கள் இருந்தன.
● மொழி,பண்பாடு,கலாச்சாரம் வாரியாக மாநிலங்களை பிரிக்க 1947 ஜூன் மாதத்தில் எஸ்.கே.தார் தலைமையில் குழு அமைககப்பட்டது. இக்கழு 1948 டிசம்பரில் மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்த பரிந்துரைத்து அறிக்கை அளித்தது.
● தார் குழுவின் அறிக்கையை ஆராய 1948 டிசம்பர் ஜெய்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு,வல்லபாய் படேல்,பட்டாபி
சீதாராமையா ஆகிய மூவர் அடங்கிய JVP குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1949 ஏப்ரல் 1 ல் தார் குழுவின் பரிந்துரையை நிராகரித்து அறிக்கை அளித்தது.
● 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரபிரதேசத்தின் மாநில கோரிக்கையை வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
● இதனால் ஆந்திரபிரதேச மாநில சட்டம் இயற்றப்பட்டு 1-10-1953 ல் கர்னூலை தலைநகரமாக கொண்டு புதிய ஆ.பிரதேச மொழிவாரி மாநிலம் ஏற்படுத்தப்பட்டது.
● 1953 டிசம்பரில் பாசல் அலி தலைமையில் கே.எம்.பனிக்கர் , எச்.எம்.குஸ்ரு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
● இக்குழு 1955 செப்டம்பரில் மாநிலங்களை மொழிவாரியாக 16 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பரிந்துரைத்து அறிக்கை அளித்தது.
● இதன்படி 1956-ல் மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 7-வது சட்டத்திருத்தம் மூலம் இந்தியாவை மொழிவாரியாக 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
● மொழிவாரி மாநிலங்கள்
1. ஆந்திர பிரதேசம்
2. அஸ்ஸாம்
3. பீகார்
4. பம்பாய்
5. ஜம்மு காஷ்மீர்
6. கேரளா
7.மத்திய பிரதேசம்
8. மெட்ராஸ்
9. மைசூர்
10. ஒரிஸா
11. பஞ்சாப்
12.ராஜஸ்தான்
13. உ.பிரதேசம்
14.மே.வங்காளம்
● யூனியன் பிரதேசங்கள்
1.அந்தமான் நிக்கோபர்
2.டெல்லி
3.ஹிமாச்சல் பிரதேசம்
4.இலட்சத்தீவு மினிகாய் அபினி தீவு
5.மணிப்பூர்
6. திரிபுரா
● 15-வது மாநிலம் குஜராத் -1960 ( பம்பாயிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 16-வது மாநிலம் நாகலாந்து- 1962
(அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 17-வது மாநிலம் ஹரியானா -1966( ஷ கமிஷன் பரிந்துரைப்படி பஞ்சாப்பிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 18-வது மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம் - 1970
●19-வது மாநிலம் மணிப்பூர்-1970
● 20-வது மாநிலம் திரிபுரா - 1970
● 21-வது மாநிலம் மேகாலயா - 1970
● 22-வது மாநிலம் சிக்கிம் -1970
● 23-வது மாநிலம் மிசோரம் -1987
● 24- வது மாநிலம் அருணாச்சல பிரதேசம் - 1987
● 25- வது மாநிலம் கோவா-1987
● 26- வது மாநிலம் சத்தீஸ்கர் - 1.11.2000.(ம.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 27- வது மாநிலம் உத்ராஞ்சல் - 9.11.2000( உ.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 28- வது மாநிலம் ஜார்கண்ட் - 15.11.2000 ( பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டது)
● 29- வது மாநிலம் தெலுங்கானா - 2.6.2014 ( ஆ.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 1961-ல் தாத்ரா நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசமானது( 10 -வது ச.திருத்தம்)
● 1962- ல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமானது( 14 -வது ச.திருத்தம்)
●1966-ல் சண்டிகர் யூனியன் பிரதேசமானது
● 1991- டெல்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. ( 69 -வது ச.திருத்தம்)
●●● மாநிலங்களின் பெயர் மாற்றம்:::
● 16.4.1967 தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் மற்றும் 1968 மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டப்படி 14.1.1969 ல் மெட்ராஸ் என்பது தமிழ்நாடு என அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மாற்றப்பட்டது.
● 1973-ல் மைசூர் என்பது கர்நாடகா என மாற்றப்பட்டது.
● 1973 இலட்சத்தீவு மினிக்காய் அபினிதீவு என்பது இலட்சத்தீவு என மாற்றப்பட்டது.
● 2006- ல் பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி என மாற்றப்பட்டது.
● 2006- ல் உத்ராஞ்சல் என்பது உத்ரகாண்ட் என மாற்றப்பட்டது.
● 2010-ல் ஒரிஸா என்பது ஒடியா என மாற்றப்பட்டது.
●1991 - டெல்லி --> நியூ டெல்லி
●1995- பம்பாய் --> மும்பை
● 1996 - மெட்ராஸ் --> சென்னை
● 2000- கல்கத்தா --> கொல்கத்தா
● 2000- மைசூர் --> மைசூரு
● 2000- பெங்களூர் --> பெங்களூரு

கே.ஆர். நாராயணன்

இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்... 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர்  நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன். அவரது நினைவு தினம் இன்று...

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கொச்சேரில் ராமன் நாராயணன். இவர்,  1920-ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பிறந்தார்.

குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார். இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார். பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் (London School of Econmics) அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன். தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்த கே.ஆர். நாராயணன், ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றி, நேருவின் பாராட்டைப் பெற்றவர். ஐ.எஃப்.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, கடந்த 1984-ம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர்,  ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையின்பேரில், 1992-ம் ஆண்டு இந்தியாவின் 9-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சங்கர் தயாள் சர்மாவின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், 1997-ம் ஆண்டு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.

ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் பிரதமர்களாக இருந்த அக்காலகட்டத்தில், 1997 ஜூலை 25 முதல் 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர். தலித் பிரிவில் இருந்து நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்த ஒரே தலைவர் இவரே. இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டபோது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்து பெருமைக்குரியவர். நாட்டின் சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த சிறப்பும் கே.ஆர். நாராயணனுக்கு உண்டு.

கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி சாதனை புரிந்தார். அதுவரை இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்த வேறு எவரும் தேர்தலில் பொதுவாக வாக்களிப்பதில்லை. ஆனால், அந்த மரபை முதல்முறையாக மாற்றியதுடன், குடியரசுத் தலைவரும் வாக்களிக்கக் கடமைப்பட்டவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர்.

மேலும் குடியரசுத் தலைவர் என்றால், மத்திய அரசின், 'ரப்பர் ஸ்டாம்ப்'  என்ற முத்திரையையும் உடைத்தெறிந்த பெருமை கே.ஆர். நாராயணனையேச் சேரும். மத்திய அமைச்சரவை அனுப்பி வைக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவர் அதனை பலமுறை தனது பதவிக் காலத்தில் நிரூபித்தும்  உள்ளார். உதாரணத்திற்கு, 1998-ல், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பீஹார் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முடிவு செய்து, மத்திய அமைச்சரவை அனுப்பிய  பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பினார். காங்கிரஸ்காரராக அரசியல் வாழ்க்கையைத தொடங்கிய போதிலும், கடந்த 1992-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் இது" என தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினார்.

மத்திய அமைச்சராக பதவி வகித்தபோதும், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த போதிலும், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட தன்னால் இயன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்வியில், கேரள மாநிலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றம் அடைய அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்றத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

குடியரசுத் தலைவராக உயர்ந்த நிலையில் இருந்தாலும், பல்வேறு மரபுகளை மாற்றி, தனது வாழ்நாள்வரை மிகவும் எளிய மனிதராகவே வாழ்ந்த கே.ஆர். நாராயணன், 2005-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 9), தனது 85-வது வயதில், உடல் நலக்குறைவால், டெல்லியில் காலமானார்.

அவர் மறைந்தாலும் முன்னாள் ஜனாதிபதியாக அவர் நிலைநாட்டி விட்டுச் சென்றுள்ள பல்வேறு சமூக மாற்றங்களும், மரபுகளும் இந்தியாவில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.