Friday 22 January 2016

GOOD

1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

 பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா..

நாளை உயிர்போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா..

DO

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /
மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பி
ரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

செய்தி துளிகள்

செய்தி துளிகள்
==============

01) இந்திய தலைமை தகவல் ஆணையராக ஆர்.கே.மாத்தூர் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.மாத்தூர், பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

.
02) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யு.சி. பெர்க்லி ஹாஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், வெளிப்படையான புதிய திட்டங்களை செயல்படுத்தும் உலகத் தலைவர்களில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து கார்வுட் விருது வழங்குகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகச்சிறந்த புதுமையான திட்டங்களை அமல்படுத்தியதற்காக பிரணாப் முகர்ஜிக்கு "கார்வுட் சர்வதேசத் தலைவர்”' விருது வழங்கி கவுரவித்துள்ளது.

.
03) அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அன்னை தெரசா, 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

அரசியல்

அரசியல் பிரிவில் *** பாராளுமன்றம்*** குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன..விடை அளியுங்கள்..
விடைகள் நாளை பதிவேற்றம் செய்யப்படும்..

1..பாராளுமன்றம் குறித்து கூறும் பகுதி எது?
2..பாராளுமன்றம் குறித்த சரத்துகள் யாவை?
3..லோக்சபா நடைமுறைக்கு வந்த நாள்?
4..ராஜ்ய சபா நடைமுறைக்கு வந்த நாள்?
5..லோக்சபா முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
6..ராஜயசபா முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
7..பாராளுமன்றத்தின் அமைப்பு பற்றி கூறும் சரத்து?
8..மக்களவையின் தந்தை?
9..மக்களைவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கூறும் சரத்து?
10..தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
11..எந்த சரத்தின் படி மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ இந்தியர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
12..அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?எத்தனை?
13..தமிழ் நாட்டிலுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
14..மிகக் குறைந்த மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?
15..மக்களவையின் பதவிக் காலம்?
17..மக்களவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என்ற சட்ட திருத்தம்?
18..மக்களவையின் பதவிகாலம் 6 ஆண்டிலிருந்து மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றிய சட்ட திருத்தம்?
19..தற்போதைய மக்களவை சபாநாயகர்?
20..தற்போதைய மக்களவை துணை சபாநாயகர்?
21..தற்போதைய மக்களவைதலைவர்?
22..தற்போதைய மக்களவை எதிர் கட்சித் தலைவர்?
23..மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்களை சட்டம் ஏற்றுக் கொண்ட ஆண்டு?
24..தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
25..12 நியமன உறுப்பினர்களை மாநிலங்களவையில் நியமிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சரத்து?
26..மாநிலங்களவையின் பதவிக் காலம்?
27..தமிழகத்திலுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
28..அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?எத்தனை?
29..நாடாளுமன்ற உறுப்பினராவதர்க்கான தகுதிகளைக் கூறும் சரத்து?
30..மக்களவை உறுப்பினர் ஆவதற்க்கான வயது?
31..மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்க்கான வயது?
32..உறுப்பினர்களின் தகுதி இழப்பு குறித்து இறுதி முடிவு எடுப்பவர்?
33..தற்போதைய மாநிலங்களவை சபாநாயகர்?
34..தற்போதைய மாநிலங்களவை துணை சபாநாயகர் ?
35..தற்போதைய மாநிலங்களவைத்தலைவர் யார்?
36..தற்போதைய மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் யார்?
37..மக்களவையின் அவைத்தலைவர் பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு?
38..மக்களவை சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் முன் தகவல் அளிக்க வேண்டிய நாட்கள் ?
39..கட்சித் தாவல் தடை சட்டம் பற்றிக் கூறும் அட்டவணை?
40..கட்சித் தாவல் தகுதி இழப்பு பற்றி முடிவு எடுப்பவர்?
41..கட்சித் தாவல் தகுதி இழப்பு பற்றிய சபாநாயகரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று எந்த வருடம் தீர்ப்பளித்தது?
42..மக்களவை சபாநாயகர் தனது வாக்கை எப்போது செலுத்துவார்?
43..சபாநாயகர் தேர்தலை அறிவிப்பவர் யார்?
44..துணை சபாநாயகர் தேர்தலை அறிவிப்பவர் யார்?
45..இந்தியாவின் முதல் சபாநாயகர்?
46.. இந்தியாவின் முதல் துணை சபாநாயகர்?
47..இந்தியாவின் முதல் இந்திய சபாநாயகர்?
48..சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் சபாநாயகர்?
49..சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் துணை சபாநாயகர்?
50..தர்க்காலிக சபாநாயகரை நியமிப்பவர்?
51..மக்களவை நடைபெற எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்?
52..நடைபெற எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்?
53..மக்களவைத் தலைவரை அமெரிக்காவில் எவ்வாறு குறிப்பிடுவர்?
54..மக்களவைத் எதிர்கட்சித் தலைவரை அமெரிக்காவில் எவ்வாறு குறிப்பிடுவர்?
55..மக்களவைத் எதிர்கட்சித் தலைவரை இங்கிலாந்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?
56..பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் யாவை?நடைபெறும் மாதம்?
57..கூட்டத் தொடர்களை சம்பிரதாயப்படி முடித்து வைப்பவர்?
58..மக்களவை கலைந்தாலும் காலாவதியாகாத மசோதாக்கள் யாவை?
59..கோரம் என்றால் என்ன?
60..பாராளுமன்ற நடவடிக்கை மொழி இந்தி மற்றும் ஆங்கிலம் என்று கூறும் சரத்து?
61..உறுப்பினர்கள் அவர்களது சொந்த மொழியில் பேச உரிமை வழங்கும் சரத்து?
62..நட்சத்திர குறியிட்ட கேள்விகள் என்றால் என்ன?
63..நட்சத்திர குறியிடாத கேள்விகள் என்றால் என்ன?
64..பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன?
65..பூஜ்ஜிய நேரம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
66..கில்லட்டின் என்றால் என்ன?
67..கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?
68..ஒத்தி வைப்பு தீர்மானம் மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்?
69..நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி கூறும் சரத்து?
70..அரசாங்க மசோதா என்றால் என்ன?
71..தனி நபர் மசோதா என்றால் என்ன?
72..இரு அமர்வுகளின் கூட்டு அமர்வுகள் பற்றி கூறும் சரத்து?
73..கூட்டு அமர்வுகளின் தலைவர்?
74..கூட்டு அமர்வை எந்த மசோதாக்களுக்கு கூட்ட இயலாது?
75..இதுவரை கூட்டு அமர்வு எத்தனை முறை நடந்துள்ளத்தி? அது யாவை?
76..பண மசோதா பற்றிக் கூறும் சரத்து?
77..நிதி மசொதா1 பற்றிக் கூறும் சரத்து?
78..நிதி மசோதா 2 பற்றிக் கூறும் சரத்து?
79..எல்லா பண மசோதாக்களும் நிதி மசோதாக்கள்..எல்லா நிதி மசோதாக்களும் பண மசோதாக்கள் அல்ல..சரியா தவறா?
80..பண மசோதா அறிமுகப்படுத்த யார் அனுமதி வேண்டும்?
81..மாநிலங்களவை எத்தனை நாள் பண மசோதாவை நிறுத்தி வைக்கலாம்?
82..பட்ஜெட் பற்றி கூறும் சரத்து?
83..ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் காலம்?
84..பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் காலம்?
85..ரயில்வே பட்ஜட்டை பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்க பரிந்துரைத்த கமிட்டி?ஆண்டு?
86..பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள்?
87..மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நாட்கள்?
89..கொள்கை வெட்டு தீர்மானத்தின் படி மானியக் கோரிக்கையாக ஒதுக்க வலியுறுத்தும் தொகை?
90..அடையாள வெட்டு தீர்மானத்தில் கழிக்கப்படும் தொகை?
91..ஒருங்கிணைப்பு நிதி பற்றிக் கூறும் சரத்து?
92..பொதுக் கணக்கு நிதி பற்றி கூறும் சரத்து ?
93..அவசர கால நிதி பற்றி கூறும் சரத்து?
94..மாநிலப்பட்டியளிலுள்ள இனங்கள் மேல் சட்டம் இயற்ற மசோதா 95..மாநிலங்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று கூறும் சரத்து?
96..புதிதாக இந்திய அரசுப் பணிகள் ஏற்ப்படுத்த விரும்பினால் அதை மாநிலங்கள் அவையே செய்யும் என்று கூறும் சரத்து?
97..RULES COMMITTY இன் தலைவர் யார்?
98..வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18ஆக மாற்றிய சட்ட திருத்தம்?
99..மக்களவைக்கு சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
100..உறுப்பினர்களின் தகுதி இழப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சந்தேகம் வந்தால் அவர் யாரிடம் கேட்பார்?

SHORT CUT : :

2015-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்ஜோ :-

SHORT CUT : :

CHINNA PAIYAN KONJAM JOLLY MODE

98வது அறிவியல் மாநாடு
- ( C ) சென்னை

99வது அறிவியல் மாநாடு
- ( P ) புவனேஷ்வர்

100வது அறிவியல் மாநாடு
- ( K ) கொல்கத்தா

101வது அறிவியல் மாநாடு
- ( J ) ஜம்மு காஷ்மீர்

102வது அறிவியல் மாநாடு
- ( M ) மும்பை

103வது அறிவியல் மாநாடு
- ( M ) மைசூர்

என்ஜாய்

வாழ்க்கைய என்ஜாய் பண்றோம்னு நாமெல்லாம்
சொல்றோம். என்ஜாய்மெண்ட் அப்படிங்கிறத இவங்க
எத வைச்சி முடிவு பண்றோம்?

நல்ல வேலை, நிறைய சம்பளம், வசதியான வீடு
கார் பைக் இன்னும் நிறைய தொழில்நுட்ப பொருட்கள் வைத்திருப்பது அலுவலகத்தில் அரட்டை, இரட்டை
வசனம் சிலர்.. அப்புறம் வரக் கடைசியில் புதுப்படம்,
பர்சேசிங், மாதத்திற்கு ஒரு அவுட்டிங் இல்ல கெட் டு கெதர்.

இப்படியே ஒரு சுழற்சியாக செல்கிறது வாழ்க்கை இதுவா மகிழ்ச்சி??

மேல சொன்னவற்றிற்காக ஓடி ஓடி பின்வரும் தவறை இழைத்துக் கொண்டிருக்கிறோம்.

🌀
தாய் தந்தையை மதிப்பது கிடையாது
🌀
உறவுகளை வளர்ப்பது கிடையாது
🌀
யாருக்கும் உதவுவது கிடையாது
🌀
குடும்பத்தில் ஒற்றுமை கிடையாது உண்மை கிடையாது
🌀
ஏன் பெற்ற குழந்தையின் மீது கூட பாசம் கிடையாது
🌀
கரியர் கரியர் பணம் பணம்னு ஓடி என்ன சாதித்து விட்டோம்
🌀
பணம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!!

உண்மையில் மகிழ்ச்சி என்பது

💧
தாய் தந்தையை பேணி கவனிப்பது மகிழ்ச்சி
💧
கணவன்\மனைவி உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
காதலன்\காதலி உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
நட்பில் உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
பிறருக்கு உதவுவது மகிழ்ச்சி
💧
தன் மனதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மகிழ்ச்சி
💧
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மகிழ்ச்சி
💧
செய்யும் தொழிலை நேசித்து செய்வது மகிழ்ச்சி
💧
இயற்கையை நேசிப்பது மகிழ்ச்சி
💧
பாதுகாப்பது மகிழ்ச்சி
💧
உறவுகளை வளர்ப்பது மகிழ்ச்சி
💧
ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி
💧
பயனுள்ள நிகழ்வுகளை உருவாக்குவது பகிர்வது மகிழ்ச்சி
இன்னும் பல நிகழ்வுகள் இருக்கின்றன. உண்மையில் பிறரை மகிழ்வித்து மகிழ்வதுதான் பிகப்பெரிய மகிழ்ச்சி!!

மொத்தத்தில் மகிழ்ச்சி என்பது நமக்குள்ளே இருக்கிறது.

நம்மை சுற்றியுள்ளவர்களிடம் நாம்தான் அதை வெளிப்படுத்த வேண்டும் அதை விடுத்து நமக்கு வெளியே எதோ ஒரு பொருளில் அதைத் தேடி தேடி அலைகிறோம். அன்பு நமக்குள்ளயே இருக்கிறது அதை மலரச் செய்வோம்
மகிழ்ச்சி எங்கும் தானே பரவும்.

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

1.மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்
- சீவக சிந்தாமணி

2.தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
- திருக்குறள்

3.செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்
- சிலப்பதிகாரம்

4.இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

5.நெடுந்தொகை - அகநானூறு

6.கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

7.பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8.மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் -மணிமேகலை

9.புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு

10.வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

11.பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

12.பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

13.புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

14.வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

15.சின்னூல் என்பது - நேமிநாதம்

16.வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்

18.ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19.முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
22.குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23.குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.உழத்திப்பாட்டு - பள்ளு

25.இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26.அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.தமிழர் வேதம் - திருமந்திரம்

28.தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
- திருவாசகம்

29.தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30.குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34.புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35.தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37.தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45.இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.பாவைப்பாட்டு - திருப்பாவை

49.பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 – சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 – கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 – விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 – இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 – கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

-----சாணக்கியர்

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்.

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்.
============================
1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம்=டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம்=ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ நிறுனம்=சென்னை
4. யுனானி மருத்துவ நிறுவனம்=பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம்=கொல்கத்தா
6. இயற்கை உணவு நிறுவனம்=பூனே
7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்=டெல்லி
8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்=டேராடூன்
9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்=ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = ஜோத்பூர் (ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி=ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆ.நி=சிம்லா
13. காபி வாரியம் ஆ.நி=பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆ.நி=கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆ.நி=கொல்கத்தா
16. புகையிலை வாரியம்=குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்=கொச்சி
18. இந்திய வைர நிறுவனம்=சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்=போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி=ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு=வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு=சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)=கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)=பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு=பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்=மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்=கோவா
28. தேசிய கால்நடை ஆ.நி=இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆ.நி=டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்=ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்=பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்=டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.=ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.=போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.=டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்=லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்=பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.=மானோசர்(ஒரிசா)
-------------------------------------------------------------------------------
அமிலங்களும் அவற்றின் மூலங்களும்
====================================
1) எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்.
2) சிறுநீரில் உள்ள அமிலம் எது?
யூரிக் அமிலம்.
3) எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.
4) புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
லாக்டிக் அமிலம்.
5) கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம்.
6) புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
டார்டாரிக் அமிலம் .
7) வினிகரில் உள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம்.
8) ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
மாலிக் அமிலம்.
9) தக்காளியில் உள்ள அமிலம் எது?
ஆக்ஸாலிக் அமிலம்.
10) கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
ஸ்டீயரிக் அமிலம்.
11) பித்தநீரில் உள்ள அமிலம் எது?
கோலிக் அமிலம்.

முக்கிய தினங்கள்

 அக்டோபர் , நவம்பர் , டிசம்பர் ஆகிய மாதங்களில் செய்திதாள்களில் இடம் பெற்ற முக்கிய தினங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
சமீபித்திய TNPSC வினாத்தாள்களை நோக்கும் போது இது பயன்னுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் நண்பர்களுக்கு பகிர்ந்து வெற்றி பெற உதவிடுகள்.

உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11
உலக சேமிப்பு நாள் – அக்டோபர் 31
தேசிய சேமிப்பு நாள் – அக்டோபர் 30
National Disaster Risk Reduction Day ( தேசிய பேரிடர் அபாய குறைப்பு நாள்) – அக்டோபர் 29
உலக சிக்கன ( Thrift ) நாள் – அக்டோபர் 30
தேசிய ஒற்றுமை தினம் & சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் – அக்டோபர் 31
உலக ஆண்கள் கருத்தடை தினம் ( வாசக்டமி தினம் ) – நவம்பர் 13
‘உலக சகிப்புத்தன்மை நாள் ( 1995 – ல் இருந்து ஐ.நா.அனுசரித்து வருகிறது. – நவம்பர் 16
உலக கழிவறை தினம் ( world toilet day ) – நவம்பர் 19
உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக ( ஐ.நா- சபை கடைபிடித்து வருகிறது. – நவம்பர் 25
தேசிய பால் உற்பத்தி தினம் ( C.V.குரியன் பிறந்த நாள் ) – நவம்பர் 26
உடல் பருமன் எதிர்ப்புத் தினம் அல்லது உடல் பருமன் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 26
தேசிய சட்ட தினம் ( அரசியல் அமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்ட தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது. – நவம்பர் 26
138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்த நாள் – நவம்பர் 27 , 2015
உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
உலக அடிமை ஒழிப்பு தினம் ( ஐ.நா. சபை – 1859 முதல் ) – டிசம்பர் 2
மாற்றுதிறனாளிகள் தினம் – டிசம்பர் 3
தேசியக கப்பற்படை தினம் – டிசம்பர் 4
உலக மண் தினம் – டிசம்பர் 5
இந்தியாவில் முதன்முறையாக “ பயோ – டிசல் “ மூலம் விரைவு ரயில் கர்நாடக மதநிலம் ஷிப்ளி - பெங்களூரு இடையே இயக்கப்பட்ட தினம் – டிசம்பர் 5
உலக ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 9
உலக மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10
தேசிய மின்சிக்கன பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14 ( டெல்லியில் அனுசரிக்கப்பட்டது )
தேசிய எரிபொருள் சேமிப்பு நாள் – டிசம்பர் 14
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய போரிட்டு ( வங்க தேசம் உருவாக காரணமாக ) வெற்றி பெற்றது – வெற்றி தின நாள் (or) விஐய் திவாஸ் – டிசம்பர் 16
நிர்பயா நினைவு நாள் – டிசம்பர் 16
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் – டிசம்பர் 18
தேசிய கடற்படை தினம் – டிசம்பர் 22
உலக அரபு மொழி தினம் – டிசம்பர் 18
சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் & தேசிய உழவர் தினம் – டிசம்பர் 23
தேசிய கணித தினம் ( கணிதமேதை இராமனுஐர் பிறந்த நாள் ) – டிசம்பர் 22
தேசிய நுகர்வோர் தினம் ( MGR & பெரியார் நினைவு தினம்) – டிசம்பர் 24
தேசிய நள்ளாட்சி தினம் – டிசம்பர் 25
11 வது சுனாமி நினைவு நாள் – டிசம்பர் 26

உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

டிசம்பர் 26: உத்தம் சிங் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு
இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய்
விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.

உத்தம் சிங்…

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். உத்தம் சிங் பிறந்தநாள் இன்று.

தெரிந்து கொள்ளுங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்!!
------------------------------------------
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை

துறைகளின்(கண்டுபிடிப்புகளின்)தந்தை!!!

துறைகளின்(கண்டுபிடிப்புகளின்)தந்தை!!!

1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்
தந்தை?
அவினாசி மகாலிங்கம்

GK

# சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
# கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது
# குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா
# மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது – தட்டைப்புழு
# மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு – வெலாமன்
# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
# பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.
# ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
# விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை
# புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு – 90 சதவீதம்
# அடர்த்தி குறைவான பொருள் – வாயு
# கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு
# மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் – மீன்தூண்டில்
# உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்
# மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்
# யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்
# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
# புவி நாட்டம் உடையது – வேர்
# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்
# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
# ஆடு ஒரு தாவர உண்ணி
# தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்
# தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்
# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்.

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை.




உலகில் மிகப்பெரிய

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை

தமிழ்

1.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,30.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16.அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
43.அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45.அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்.