Friday 22 January 2016

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

1.மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்
- சீவக சிந்தாமணி

2.தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
- திருக்குறள்

3.செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்
- சிலப்பதிகாரம்

4.இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

5.நெடுந்தொகை - அகநானூறு

6.கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

7.பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8.மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் -மணிமேகலை

9.புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு

10.வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

11.பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

12.பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

13.புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

14.வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

15.சின்னூல் என்பது - நேமிநாதம்

16.வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்

18.ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19.முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
22.குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23.குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.உழத்திப்பாட்டு - பள்ளு

25.இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26.அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.தமிழர் வேதம் - திருமந்திரம்

28.தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
- திருவாசகம்

29.தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30.குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34.புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35.தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37.தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45.இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.பாவைப்பாட்டு - திருப்பாவை

49.பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

No comments:

Post a Comment