Wednesday 22 July 2015

ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பன் - மரியாதை கொடுப்போம்.

3. பணம் - அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகள்- முறிக்க மாட்டோம்.

5. வியாபாரம் - அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கை - உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

ஜெயித்தது எப்படி?

 ‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.

தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.


சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.


கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.

‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.


சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.
காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!


வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.


ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.


ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!


என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!


மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!


*******
இறை நம்பிக்கை
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!


ஜெயித்தது எப்படி?
சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!


இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!
கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?
கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!


ஒரே கனவு
அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?

கேப்டன் விக்ரம் பத்ரா

மூவர்ண கொடியோடு வருவேன்,
அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன்
- கேப்டன் விக்ரம் பத்ரா

உங்களின் வாழ்நாள் சாகசம், எங்களது தினசரி வாழ்க்கை

என் ரத்தத்தின் வீரத்தை உணர்த்துவதற்கு முன்பாக,
எனக்கு மரணம் வருமானால்,
மரணத்தை துரத்தி கொள்வேன் - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே

தேசிய கொடி காற்றினால் அசைவதல்ல,
அதை காக்க முயன்ற வீரர்களின் கடைசி மூச்சினால்

கடவுளுக்கு வேண்டுமானால் கருணை இருக்கலாம்,
எங்களின் எதிரிகளின் மேல்,
ஆனால் எங்களுக்கு இல்லை..

வாய்ப்புகளினால் வாழ்கிறோம்,
சந்தர்ப்பங்களால் நேயமுருகிறோம்,
உத்யோகத்தினால் உயிரிழக்கிறோம்..

மரணம் எனக்கு பயமில்லை என்று ஒருவன் சொன்னால்,
அவன் கூறுவது பொய்யாக இருக்கலாம்,
அல்லது அவன் படைவீரனாக இருக்கலாம்.

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!

1. அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.

2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானமளியுங்கள்.

3. இரத்தம் தானமளியுங்கள்.

4. வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.

5. தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.
6. அனைவரிடமும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள்.

7. உங்கள் சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்களை தட்டிக் கொடுங்கள்.

8. யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள்.

9. உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள்.
10. உங்கள் திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

11. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துரோகம்
செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள். மேலும்
அவர்களுக்காக பிராதித்துக்கொள்ளுங்கள்.

12. வயதானவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உங்கள்
இருக்கையை விட்டுக்கொடுங்கள்.

13. நல்ல செய்திகளை உலகிற்குஉரக்க சொல்லூங்கள்.

14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன் அவர்களை
தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில் தட்டிக் கொடுங்கள்.

15. உங்களை இதயப்பூர்வமாக, ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள், பின்னர் உலகம் உங்களை நிச்சயம்
கண்டுக்கொள்ளும் மேலான அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

16. கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.

17. தொல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.

18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த புத்தகங்களை பரிசளியுங்கள், இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.

19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.

20. மக்களையும் அவர்களின் போக்கையும் விரும்புங்கள், அவர்கள் என்னதான் ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல் இருந்தாலும் சரி காலம் அதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

21. ஜாதி, மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள்,
அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள்.

22. தெருவில் அனாதையாய் திரியும் குட்டி நாய்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள் (இருக்கும் காலம் வரை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்).

23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள், உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள் உலகமும் தன்னை நிச்சயம் மாற்றிக்கொள்ளும் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்.

24. இதுபோன்ற நல்ல விடையங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காலம் காஸ்ட்லி ஆனது!

ஒரு ஆண்டின் மதிப்பு
ஒரு மாணவனுக்கு தெரியும் !

ஒரு மாதத்தின் மதிப்பு
கருவுற்ற தாய்க்கு தெரியும் !

ஒரு வாரத்தின் மதிப்பு
சினிமாக்காரர்களுக்கு தெரியும் !

ஒரு நாளின் மதிப்பு
காதலர்களுக்கு தெரியும் !

ஒரு நிமிடத்தின் மதிப்பு
ரயிலை தவறவிட்ட பயணிக்கு தெரியும் !

ஒரு நொடியின் மதிப்பு
விபத்துக்குள்ளானவர்கள் அறிவார்கள் !

ஒரு மில்லி நொடியின் மதிப்பு
ஒலிம்பிக் வீரர்கள் உணர்வார்கள் !

நீதி : காலம் காஸ்ட்லி ஆனது!

அடிமையாகாதே

அடிமையாகாதே! ! !
► போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில்
வீழ்ந்திடுவாய்!
► மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு
அலைந்திடுவாய்!
► சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை
இழந்திடுவாய்!
► பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை
இழந்திடுவாய்!
► புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!
► தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில்
மாட்டிக்கொள்வாய்!
► புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை
இழந்திடுவாய்!
► கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில்
வீழ்ந்திடுவாய்!
► உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே
நீ இழந்திடுவாய்!
► அன்பிற்கு அடங்கு ► அறிவுக்கு அடிபணி
அத்தனையும் பெற்றிடுவாய்!!!

இறந்தவன் மீண்டும் உயிர்ப்பிழைப்பதில்லை.கடந்த போன காலம் திரும்புவதில்லை. நடந்ததை எண்ணி மனம் தளர வேண்டாம்.

இதை விட சிறப்பான பணி உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது தன்னபிக்கையை இழக்கமால் உழைப்பை அதிகப்படுத்துங்கள்.

தோ்வுக்குரிய பாடத்திட்டத்தை நன்கு அறிந்து ஒரு வித வெறியுடன் படியுங்கள் வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.



உன் தன்னம்பிக்கையத் தவிர
தன்னலமற்ற ஜீவனாக மாறு
தடைகளை உடைத்தெறி
தீவிரமாக முயற்சி செய்
தீஞ்சுவாலை போல் முன்னேறு
திசையெங்கும் உன் புகழ் பரவும்
திகைத்து போவர் உன்னை இழிந்தவர்கள் !!


மரணப் படுக்கையிலிருந்த இராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த இராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேச ம் கேட்டான் .

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது ,

என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .


சுடுகாட்டு ஞானம்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி
-ஆசான் கடுவெளிச் சித்தர்

இப்பூலோகம் எனும் நந்தவனத்தில் மனிதப்பிறவியை அடைய தாயின் கருவறையில் பத்து மாத காலம் ஈசன் கருணையினால் கருவாக உதித்து உடம்பு வளர்ந்து வெளிவருகிறான். இவ்வாறு பெற்று வந்து உடம்பை உணராமல் இவ்வுடம்பிலேயே தீயாக நின்ற ஈசனை அறியாமல் அத்தீயாலேயே காம கோப வழிகளில் சென்று கூத்தாடி கூத்தாடி இவ்வுடம்பை இழந்துவிடுகிறான். இப்பிறவி அருமையை அறியாமலேயே நீராக நின்ற வாலையான உயிர்போய் இறந்துவிடுகிறான் என்பதையே கடுவெளி சித்தர் பாடுகிறார்.

இறந்த உடம்பை இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு சில சடங்குகளை செய்த பின்னே சிதையில் வைத்து தீயிடுவார்கள். அதில் இறந்தவரின் வாரிசு தோளில் ஒரு மண்குடத்தில் நீரை நிரப்பி வைத்து சடலத்தை மூன்று முறை சுற்றிவர சொல்வார்கள். ஒவ்வொரு சுற்று வரும் போதும் அம்மண்பானையில் அரிவாளால் ஓட்டை போட்டு பானையில் உள்ள நீர் வெளியேறும் போது புறங்கையால் தட்டி விடுவார்கள். இவ்வாறு மூன்று ஓட்டைகளைப் போட்டு சுற்றி முடித்த பின் அப்பானையை கீழே போட்டு உடைப்பார்கள். இச்சடங்கின் உண்மைக் காரணமே இந்த மூன்று மண்டலங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டியே.
இவ்வுடம்பு பஞ்சபூதங்களின் கூட்டுறவு. அவ்வுடம்பில் தீயாக நின்ற ஈசன் உடம்பைவிட்டு போனதாலேயே உயிரும் போகின்றது. இவ்வாறு தீயாக நின்ற முக்கண் ஈசன் நம் உடம்பில் சு10ரிய சந்திர அக்னி மண்டலங்களில் இயங்கியதை அறிந்து அதைப் பற்றியிருந்தால் இறவா நிலை பெற்றிருக்கலாம் என்பதைச் சொல்லவே இச்சடங்கு சுடுகாட்டில் நடத்திக்காட்டப்படுகின்றது. இவ்வுடம்பில் மூன்று வாசல் வழியாக உள்ள மூன்று மண்டலங்களை அறிந்து கொள்ளாமல் அதனை பலவழிகளிலும் கெடுத்து கொள்வதால் நினைவாக நின்ற ஆகாயமும் வாசியாக இயங்கிய காற்றும் மறைந்து நெருப்பாக நின்ற ஈசனும் உடம்பை விட்டு விலகியதால் வாலையான உயிரும் போய் மரணம் நேரிட்டது. ஆகையினால் உடம்பில் மூன்று மண்டலங்களை அறிந்து யோக சாதனையினால் ஈசனையே பற்றி நின்று தவம் இயற்றினால் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இறவாநிலை அடையலாம் என்பதே இச்சடங்கு சொல்லும் சுடுகாட்டு ஞானம்.

இறந்த உடம்பில் எஞ்சி நிற்பது மண் பூதமே. அதையும் தீக்கே இறையாக்குவார்கள். பஞ்சபூதங்களும் தங்கியிருந்த உடம்பைக் காட்டவே சுடுகாட்டில் மண்பானையில் நீரை நிரப்பி சுற்றி வருகிறார்கள். அப்பானைக்குள் நீரும்ää காற்றும் இருக்கின்றது. பானைக்கு வெளியே ஆகாயமும் உள்ளது. அப்பானையில் இல்லாதது தீ. அத்தீ மூன்று மண்டலங்களாக இருந்ததைக் காட்டவே மூன்று ஓட்டைகள் போடுகிறார்கள். அந்த ஓட்டைகளின் வழியே வெளியேறும் நீரை புறங்கையினால் தட்டிவிடுவார்கள். அத்தீயிலாமல் வெளியேறிய உயிரே வாலையாக நின்ற நீர் என அறிந்து கொள்ளாமல் புறந்தள்ளியதை காட்டவே புறங்கையில் தட்டிவிடுவர். தீயான ஈசன் உடம்பைவிட்டுப் போவதால் நீரான வாலையும் போய் இது ஊத்தைச்சடலம் ஆனது. கடைசியில் அதுவும் நெருப்புக்கோ மண்ணுக்கோ இரையாகின்றது. ஆதலால் இதனை யாவும் அறிந்து உடம்பை விட்டு இறைவன் போய்விடாவண்ணம் தீயை தியானித்தால் வளர்த்து உடம்பை இறவா நிலைக்கு உயர்த்த மூன்று மண்டலங்களையும் நன்கு அறிந்து யோக ஞான சாதனைகளைப் பயிலுங்கள்.






சாக்ரடீஸ்...

சாக்ரடீஸ்...

“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு...

சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் . மதம், கடவுள், அரசு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார் .எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார் .

ஒருவருடன் பேசும் பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார் ;இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள் .உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார் .டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும்,அதற்கு இவர் ,"எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும் அதுவே காரணமாக இருக்கலாம் "என்றார் .

தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார் ;எதிலும் எதையும் வாங்கவில்லை ."ஏன் "எனக்கேட்டதற்கு ,"எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன் ."என்றார் .அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள் .

அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார் .அவர் வருகிற மாதிரி தெரியவில்லை ;கிளம்ப எத்தனித்தார் அவர் .,நண்பரோ ,"அவர் கோவித்துக்கொள்வார் .அரசாங்க பகை வேண்டாம் ."என்றதும் ,"அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால் தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் ."என்றுவிட்டு வெளியேறினார் .மதநம்பிக்கையை கேலி செய்கிறார் ,இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும்,லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர் .

வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ;கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம் ;ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள் .கம்பீரமாக மறுத்தார். .மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும்,எதிராக 220 ஓட்டும் விழுந்தன .சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். தப்பித்து போக நண்பர்கள் ஏற்பாடு செய்ய முற்பட்ட பொழுது ,"எனக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் உண்டு. அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு தான் நான் கேள்வி கேட்பேன். அதை மீறி சென்று நான் தவறான எடுத்துக்காட்டு ஆகமாட்டேன் !" என்றார் அவர்.

.ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டு இருந்தது. .சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,"சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !"என்றார் .

விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் ."அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் "என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .சாவதற்கு கொஞ்சம் முன்," எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !"என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்

- பூ.கொ.சரவணன்..

எவரெஸ்ட்

எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)

மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்

உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .

நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று

ஆபிரகாம் லிங்கன்

 1809- ஆம் ஆண்டு ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் அமெரிக்காவின் 16 வது அதிபராக உயர்ந்தவர். அடிமை முறைக்கு எதிரானவர் மற்றும் அதனை ஒழிக்க பாடுபட்டவர். மேலும், அதற்கான சட்ட திருத்தத்தினை மேற்கொண்டவர்.

மக்களாட்சி குறித்த இவரது கருத்துக்கள் அடித்தட்டு மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்நாட்டுப்போரின் மூலம் பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டை பிளவுபடாமல் காப்பாற்றியவர். குடியரசு கட்சியின் சார்பில் 1860-ல் அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார்.

$ நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.

$ சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு உறுதியாக நில்லுங்கள்.

$ ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்.

$ எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்ற முடியும், சில பேரை எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியும் ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.

$ உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.

$ நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

$ வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.

$ இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது.

$ எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

IMPORTANT GK POINTS (GK Facts)

IMPORTANT GK POINTS (GK Facts)
===============================
• Name of Ganga River in Bangladesh is PADMA.
• President give resignation letter to Vice President.
• Ram tanu pandey is real name of Tansen.
• Hampi Caves are in Orissa.
• Transistor invented in 1948.
• Decibel is the Unit of Sound.
• Gandhi ji birth on 2 october 1869 at porbandher in Gujarat.
• “Karo ya maro” slogan given by Gandhi ji.
• Delhi became capital of India in 1912 shifted from Kolkata.
• Extremely cold places are best for tea farming.
• Currency of Japan is Yen.
• Bhihu Festival celebrated in Assam.
• Arjun Award first given in 1961.
• NATO head office in BRUSSELS.
• Butterfly word used in Swimming.
• 1 horse power equals to 746 watt.
• Moti masjid built by Shahjahan.
• National Library is in Kolkata.
• Mahatma Buddha is known as light of Asia.
• Bandipur national park is in Karnataka state of India.
• Bhakra Nangal dam is built on Satluj river.
• SAARC group head office in Kathmandu (Nepal).
• Microphone invented by Graham Bell.
• Sardar Sarovar Project is on Narmada river in Gujarat.
• Rajasthan according to Area is the largest state in India


மோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்
=====================================

01) பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்)

02) தூய்மை இந்தியா – CLEAN INDIA - Swachh Bharat Abhiyan

03) மகளைக் காப்போம்; மகளுக்கு கற்பிப்போம் BETI BACHAO ; BETI PADHO YOJNA

04) சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (பஹல்) PAHAL-Direct Benefits Transfer for LPG(DBTL) Consumers Scheme

05) முத்ரா வங்கி

06) Pandit Deen Dayal Upadhyaya shramev jayate yojana

07) Deen Dayal Upadhyaya Grameen kaushalya yojana

08) Deen Dayal Upadhyaya Antyodaya yojana

09) Deen Dayal Upadhyaya Gram jyoti yojana

10) Saansad Adharsh Gram Yojana

11) Digital life certificate 'Jeevan Pramaan' for pensioners

12) HRIDAY (National Heritage City Development and Augmentation Yojana) scheme

13) Mission Indra Dhanush

14) பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY)

15) SKILL INDIA

16) செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா)

17) நகர்ப்புறங்களின் முன்னேற்றத்துக்காக நவீன நகரங்கள் திட்டம் - Smart City

18) அம்ருத் என்னும் நகர்ப்புற புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு திட்டம். Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)

19) பிரதம மந்திரி அவாஸ் யோஜனா

20) அடல் இன்னோவேசன் மிஷன்

21) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)

22) பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா (PMSBY)

23) அடல் ஓய்வூதிய திட்டம்

24) DIGITAL INDIA

25) Pragati Scheme

26) e - Kranti Scheme

TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்க கூடியது:


சோழ பேரரசின் நிர்வாக வரிசை - TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்க கூடியது:

ANSWER மண்டலம் - நாடு -கோட்டம் -ஊர்

CODEWORD: மனோகர்

ம - மண்டலம்
நோ - நாடு
க - கோட்டம்
ர் - ஊர்



IMPORTANT DAYS IN OCTOBER:
(WITH SHORTSTORY TO REMEMBER EASILY) - சுவாரஸ்யமான கதையுடன்
OCTOBER 1 : INTERNATIONAL DAY OF ELDERLY
OCTOBER 2 ; AHIMSA DAY, GANDHI JEYANTHI, LALBAHADUR SHASTRI BIRTH DAY
OCTOBER 3 :HABITAT DAY
OCTOBER 4 : ANIMAL DAY
OCTOBER 6 : WILDLIFE DAY
OCTOBER 8: AIRFORCE DAY
OCTOBER 9 : WORLD POST DAY(உலக தபால் தினம்), MENTALLY
AFFECTED DAY
OCTOBER 10: NATIONAL POST DAY(தேசிய தபால் தினம்)
0CTOBER 12: WORLD SIGHT DAY
OCTOBER 13: CALAMITY CONTROL DAY (பூகம்ப எதிர்ப்பு நாள்)
OCTOBER 14: STANDARD DAY
OCTOBER 15: WHITE CANE DAY (GUIDING THE BLIND)
OCTOBER 16: FOOD DAY
OCTOBER 17: POVERTY ERADICATION DAY
OCTOBER 21 : IODINE SHORTAGE DAY
அக்டோபர் மாதம் முக்கிய நாட்கள்:
எளிதில் நினைவில் வைத்து கொள்வதற்கு சிறந்த முறை:
அக்டோபர் 3, 4, 6 அனைத்தும் சுற்றுப்புற சூழல் சம்பந்தமானது.
அக்டோபர் 8, ஆகாயத்துல ஜெட்டு.
SHORTSTORY :அக்டோபர் 9 இல் இருந்து இருக்க கூடிய முக்கியமான நாட்களை கீழ்க்கண்ட சிறுகதை மூலம் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்
SHORT STORY: (சிறுகதை)
WORLD level - ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டெர்
போஸ்ட் (தபால்) குடுக்கிறான்(உலக தபால் தினம் அக்டோபர் 9)
.உடனே metally affected ஆகிறான்(Mentally affected dayஅக்டோபர் 9).
இதுலாம் நமக்கு SET ஆகாதுன்னு National level- ல போஸ்ட் குடுக்கிறான்(தேசிய தபால் தினம் அக்டோபர் 10).
அதுவும் SET ஆக வில்லை. உடனே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கிறான்(WORLD SIGHT DAY OCTOBER 12).
ஒரு பொண்ண சைட் அடிச்சாலே பிரச்னை வரும். எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்ரதுனால பூகம்பம் வந்து விடுகிறது(பூகம்ப எதிர்ப்பு நாள் - CALAMITY CONTROL அக்டோபர் 13).
வீட்டில் நிலையான STANDARD) ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்(STANDARD DAY OCTOBER 14), முதலில் ஒழுங்காக சாப்பிடு என்று கூறுகிறார்கள்.
அதனால் கரும்பு சாப்பிடுகிறான்(WHITE CANE DAY OCTOBER 15).
அதனால் அவனுக்கு உணவு கிடைக்கிறது(FOOD DAY OCTOBER 16).
உணவு கிடைத்தால் அவனது வறுமை ஒழிந்து விடுகிறது. (POVERTY ERADICATION OCTOBER 17).
அவன் சாப்பிட்ட உணவில் அயோடின் குறைவாக காணப்படுகிறது (IODINE SHORTAGE OCTOBER 21).



முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்கள் :
"சித்திரகாரப்புலி, விசித்திரசித்தன், சேத்தகிரி, மத்தவிலாபிரசணன்,சத்யசித்தன்,சத்ருமல்லன்,போத்தரையன்."

இவை அனைத்து பெயர்களையும் உச்சரிக்கும்போது "த்" என்ற எழுத்து பொதுவாக வரும். எனவே "த்" என்ற எழுத்து எங்கெல்லாம் பொதுவாக வருகிறதோ, அவையெல்லாம் முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்களாகும்.

மேலும் முதலாம் மகேந்திரவர்மனை பற்றிய குறிப்புகளுக்கு " கு" என்ற எழுத்தினையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கு - குணபரன் (மற்றொரு சிறப்பு பெயர்)
கு - குடுமியான் மலைக்கல்வெட்டு(மகேந்திரவர்மனை பற்றியது)
கு - குடைவரைக்கோவில் கட்டும் முறையினை அறிமுகப்படுத்தியவர்.


 மார்ச் 21 உலக வன தினம்
மார்ச் 22 உலக தண்ணீர் தினம்
மார்ச் 23 உலக வானிலை தினம்

ஞாபகம் வைத்து கொள்ள

வனம் இருந்தால் தான் மழை பெறுவோம் எனவே மறுநாள் தண்ணீர் தினம் வனமும் தண்ணீரும் இருந்தால் தான் வானிலை பற்றி அறிய முடியும் எனவே மறுநாள் வானிலை தினம்

TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்ககூடிய முக்கியமான கேள்வி.

TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்ககூடிய முக்கியமான கேள்வி.
சுதந்திரத்துக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் வருடம் மற்றும் அதன் தலைவர் யார் என்பது?

இந்த கேள்வி இல்லாமல் பெரும்பான்மையான கேள்வித்தாள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வருடங்களையும், அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் தலைவராக இருந்தவர்களையும் எளிதில் நினைவில் வைப்பதற்கு சிறந்த வழி.

தமிழகத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெற்ற வருடங்கள் மற்றும் தலைவர்களாக இருந்தவர்கள்:
(The Sessions of Indian National Congress which was held in Tamilnadu and its presidents)

வருடம்(year) - தலைவராக இருந்தவர்(presidents name)
1887 - பத்ருதீன் தியாப்ஜி(சென்னை)- BADRUDDING TYABJI(1st FUJI
PRESIDENT)
1894 - ஆல்ப்ரெட் வெப் (சென்னை)- ALFRED WEBB(1st ENGLISH
PRESIDENT)
1898 - ஆனந்த் மோகன் போஸ்(சென்னை)A.M.BOSE
1903 - லால் மோகன் கோஸ்(சென்னை) L.M.GHOSH
1908 - ராஸ் பிஹாரி கோஸ்(சென்னை) RASH BEHARI GHOSH
1914 - பூபேந்திரநாத் போஸ்(சென்னை) BHUPENDRANATH BOSE
1923 - மவுலான முஹம்மது அலி (காகிநாடாவில் நடந்தது -
காகிநாடா அப்போது தமிழகத்தில் இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.பெரும்பான்மையான
புத்தகங்களில் காகிநாடா தவறுதலாக இடம்பெறவில்லை)
1927 - M.A.அன்சாரி(சென்னை)-M.A.ANSARI

மேற்கண்ட அணைத்து வருடங்களையும் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம் .
அனைத்து வருடங்களும் 7 அல்லது 8, 4 அல்லது 3-ல் முடியும்
என்ற எண்ணில் முடியும்.(All years will be end by the number either 7 or 8, or 4 or 3 only)

மேலும் 1898 இல் இருந்து 1914 வரை தலைவராக இருந்தவர்களின் பெயர்கள் போஸ், கோஸ், கோஸ், போஸ் என்றும் முடியும்.( The name of the PRESIDENTS from the year 1898 to 1914 will be end by BOSE, GHOSH,GHOSH,BOSE)

செல்ல மகளே.....!!

செல்ல மகளே.....!!

தைரியமாயிரு...
திமிராய் அல்ல,

கனிவாய் பேசு....
குழைவாய் அல்ல,

வெளிப்படையாக இரு...
வெகுளியாய் அல்ல,

சுய ஒழுக்கம் தவறாதே...
சுயநலவாதியாய் இராதே,

எளிமையாய் இரு .....
சுத்தம் மறவாதே,

தெளிவாக முடிவெடு....
குழப்பி கொள்ளாதே,

துணிச்சலோடு இரு.....
துணிகரமாய் அல்ல ,

தன்னம்பிக்கை தளராதே.....
கர்வம் ஒருபோதும் வேண்டாம் ,

பிறரை மதிக்க தவறாதே....
சுயமரியாதையை விட்டுதராதே
smile emoticon

இன்றைய நமது கனவு நாயகர்கள் பலரும் தேர்வில் தோற்றவர்கள்

 இன்றைய நமது கனவு நாயகர்கள் பலரும் தேர்வில் தோற்றவர்கள் அல்லது பள்ளிக் கல்வியில் பலவீனமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

* ஆர்.கே. நாராயணன். பல்கலைக்கழகத்தின் ஆங்கில தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர். பின்னாட்களில் ஆங்கில இலக்கியத்தில் அசைக்க முடிக்யாத ஆளுமையாக உயர்ந்தார்.

* பள்ளிப் பாடங்களை வெறுத்தவர் ஜி.டி.நாயுடு. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியை ஐந்து ஆண்டுகள் கற்பிப்பதை கண்டு சலிப்புற்றவர், ஓர் ஆண்டிலேயே அந்த பொறியியல் கல்வியை தனது மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று சொல்லி செய்துகாட்டினார்.

* விமானி ஆக ஆசைப்பட்டார் அப்துல் கலாம். அதற்கான தேர்வில் ஒரு கிரேடு மதிப்பெண் குறைந்தது. ஜனாதிபதி ஆகிவிட்டார்.

* பள்ளியில் டிராவிட் சரியாக படிக்கவில்லை. பல ஆண்டுகள் அணியிலும் இடம் பெற முடியவில்லை. அந்த காலகட்டத்தில் தனது பைக்கில் அவர் எழுதி வைத்த வாக்கியம்: “கடவுள் தாமதப்படுத்துவது என்பது தரவே மாட்டார் என்று அர்த்தம் அல்ல”

* பத்தாம் வகுப்பு தேறாத சச்சினின் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

* பணிச்சூழல், குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இசையால் உயர்ந்தார். ஆஸ்கர் தேடிவந்தது.

* இந்தியாவில் முதியோர் சிகிச்சைத் துறையை உருவாக்கியவர் மூத்த மருத்துவர் வி.எஸ்.நடராஜன். மதிப்பெண் குறைவாக பெற்றதால் மறுதேர்வு எழுதிய பின்பே எம்.எம்.சி-யில் இடம் கிடைத்தது.

* ஸ்டீவ் ஜாப்ஸ். பள்ளிக் கல்வியில் மிக, மிக சுமார் ரகம். இவர்தான் பின்னாட்களில் ஆப்பிள் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார்.

* ஆறாவது கிரேடு தோல்வி அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில்தான் பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமர் ஆனார்.

* பதினாறு வயதில் படிப்பு பிடிக்காமல் உதறிய வால்ட் டிஸ்னி அள்ளியது ஆறு ஆஸ்கர் விருதுகள்.

* முதல் வகுப்புடன் ‘டாமி படிக்க லாயக்கில்லை’ என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன்தான் இன்று எல்லோர் வீட்டில் ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்.

* பள்ளி படிப்பில் தோல்வி அடைந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்ததுதானே விமானம்.

* டார்வினை அவருக்கு பிடிக்காத மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். மயக்க மருந்து இல்லாமல் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதைப் பார்த்து பயந்து படிப்பை உதறியவர், பின்னாளில் தனக்கு பிடித்த பரிணாமவியல் தந்தை ஆனார்.

* அலெக்சாண்ட்ரே குஸ்தவ் ஈஃபிள். பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பித்தார். தகுதி இல்லை என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னாட்களில் அவர் கட்டியதுதான் ஈஃபிள் டவர் மற்றும் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

* ஐன்ஸ்டின் மற்றும் எடிசன் ஆகியோர் கற்றல் குறைபாடு (Dyslexia) கொண்ட குழந்தைகள். இவர்கள் இல்லை எனில் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாத்தியம் இல்லை

வெல்லும்வரை விடமாட்டேன் ... உலகே என்பெயர் சொல்லும் வரை விடமாட்டேன் ...

யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதீர்கள், முடிந்தால் அதைவிடச் சிறந்த ஒன்றை அவனுக்குக் கொடுங்கள். முடிந்தால் ஒருவன் எங்கு நிற்கிறானோ, அங்கிருந்து அவனை முன்னுக்குத் தள்ளுங்கள். அதைச் செய்யுங்கள். மாறாக அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள். ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக் கொள்ள யாரால் முடியுமோ, அவர்தான் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனத்தை மாணவனின் மனத்திற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் அவனது காதுகளால் கேட்கவும் முடியுமோ அவர்தான் உண்மையான ஆசிரியர். இத்தகைய ஆசிரியரால்தான் கற்றுக் கொடுக்க முடியும், மற்ற யாராலும் முடியாது




வெல்லும்வரை விடமாட்டேன் ...
உலகே என்பெயர்
சொல்லும் வரை விடமாட்டேன் ...



‘பெரிதினும் பெரிது கேள்’


“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு...

சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் . மதம், கடவுள், அரசு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார் .எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார் .
ஒருவருடன் பேசும் பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார் ;இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள் .உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார் .டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும்,அதற்கு இவர் ,"எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும் அதுவே காரணமாக இருக்கலாம் "என்றார் .
தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார் ;எதிலும் எதையும் வாங்கவில்லை ."ஏன் "எனக்கேட்டதற்கு ,"எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன் ."என்றார் .அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள் .
அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார் .அவர் வருகிற மாதிரி தெரியவில்லை ;கிளம்ப எத்தனித்தார் அவர் .,நண்பரோ ,"அவர் கோவித்துக்கொள்வார் .அரசாங்க பகை வேண்டாம் ."என்றதும் ,"அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால் தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் ."என்றுவிட்டு வெளியேறினார் .மதநம்பிக்கையை கேலி செய்கிறார் ,இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும்,லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர் .
வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ;கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம் ;ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள் .கம்பீரமாக மறுத்தார். .மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும்,எதிராக 220 ஓட்டும் விழுந்தன .சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். தப்பித்து போக நண்பர்கள் ஏற்பாடு செய்ய முற்பட்ட பொழுது ,"எனக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் உண்டு. அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு தான் நான் கேள்வி கேட்பேன். அதை மீறி சென்று நான் தவறான எடுத்துக்காட்டு ஆகமாட்டேன் !" என்றார் அவர்.
.ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டு இருந்தது. .சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,"சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !"என்றார் .
விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் ."அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் "என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .சாவதற்கு கொஞ்சம் முன்," எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !"என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்

படித்தது ....


வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.