Wednesday 22 July 2015

அடிமையாகாதே

அடிமையாகாதே! ! !
► போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில்
வீழ்ந்திடுவாய்!
► மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு
அலைந்திடுவாய்!
► சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை
இழந்திடுவாய்!
► பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை
இழந்திடுவாய்!
► புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!
► தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில்
மாட்டிக்கொள்வாய்!
► புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை
இழந்திடுவாய்!
► கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில்
வீழ்ந்திடுவாய்!
► உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே
நீ இழந்திடுவாய்!
► அன்பிற்கு அடங்கு ► அறிவுக்கு அடிபணி
அத்தனையும் பெற்றிடுவாய்!!!

இறந்தவன் மீண்டும் உயிர்ப்பிழைப்பதில்லை.கடந்த போன காலம் திரும்புவதில்லை. நடந்ததை எண்ணி மனம் தளர வேண்டாம்.

இதை விட சிறப்பான பணி உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது தன்னபிக்கையை இழக்கமால் உழைப்பை அதிகப்படுத்துங்கள்.

தோ்வுக்குரிய பாடத்திட்டத்தை நன்கு அறிந்து ஒரு வித வெறியுடன் படியுங்கள் வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.



உன் தன்னம்பிக்கையத் தவிர
தன்னலமற்ற ஜீவனாக மாறு
தடைகளை உடைத்தெறி
தீவிரமாக முயற்சி செய்
தீஞ்சுவாலை போல் முன்னேறு
திசையெங்கும் உன் புகழ் பரவும்
திகைத்து போவர் உன்னை இழிந்தவர்கள் !!


மரணப் படுக்கையிலிருந்த இராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த இராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேச ம் கேட்டான் .

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது ,

என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .


சுடுகாட்டு ஞானம்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி
-ஆசான் கடுவெளிச் சித்தர்

இப்பூலோகம் எனும் நந்தவனத்தில் மனிதப்பிறவியை அடைய தாயின் கருவறையில் பத்து மாத காலம் ஈசன் கருணையினால் கருவாக உதித்து உடம்பு வளர்ந்து வெளிவருகிறான். இவ்வாறு பெற்று வந்து உடம்பை உணராமல் இவ்வுடம்பிலேயே தீயாக நின்ற ஈசனை அறியாமல் அத்தீயாலேயே காம கோப வழிகளில் சென்று கூத்தாடி கூத்தாடி இவ்வுடம்பை இழந்துவிடுகிறான். இப்பிறவி அருமையை அறியாமலேயே நீராக நின்ற வாலையான உயிர்போய் இறந்துவிடுகிறான் என்பதையே கடுவெளி சித்தர் பாடுகிறார்.

இறந்த உடம்பை இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று அங்கு சில சடங்குகளை செய்த பின்னே சிதையில் வைத்து தீயிடுவார்கள். அதில் இறந்தவரின் வாரிசு தோளில் ஒரு மண்குடத்தில் நீரை நிரப்பி வைத்து சடலத்தை மூன்று முறை சுற்றிவர சொல்வார்கள். ஒவ்வொரு சுற்று வரும் போதும் அம்மண்பானையில் அரிவாளால் ஓட்டை போட்டு பானையில் உள்ள நீர் வெளியேறும் போது புறங்கையால் தட்டி விடுவார்கள். இவ்வாறு மூன்று ஓட்டைகளைப் போட்டு சுற்றி முடித்த பின் அப்பானையை கீழே போட்டு உடைப்பார்கள். இச்சடங்கின் உண்மைக் காரணமே இந்த மூன்று மண்டலங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டியே.
இவ்வுடம்பு பஞ்சபூதங்களின் கூட்டுறவு. அவ்வுடம்பில் தீயாக நின்ற ஈசன் உடம்பைவிட்டு போனதாலேயே உயிரும் போகின்றது. இவ்வாறு தீயாக நின்ற முக்கண் ஈசன் நம் உடம்பில் சு10ரிய சந்திர அக்னி மண்டலங்களில் இயங்கியதை அறிந்து அதைப் பற்றியிருந்தால் இறவா நிலை பெற்றிருக்கலாம் என்பதைச் சொல்லவே இச்சடங்கு சுடுகாட்டில் நடத்திக்காட்டப்படுகின்றது. இவ்வுடம்பில் மூன்று வாசல் வழியாக உள்ள மூன்று மண்டலங்களை அறிந்து கொள்ளாமல் அதனை பலவழிகளிலும் கெடுத்து கொள்வதால் நினைவாக நின்ற ஆகாயமும் வாசியாக இயங்கிய காற்றும் மறைந்து நெருப்பாக நின்ற ஈசனும் உடம்பை விட்டு விலகியதால் வாலையான உயிரும் போய் மரணம் நேரிட்டது. ஆகையினால் உடம்பில் மூன்று மண்டலங்களை அறிந்து யோக சாதனையினால் ஈசனையே பற்றி நின்று தவம் இயற்றினால் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இறவாநிலை அடையலாம் என்பதே இச்சடங்கு சொல்லும் சுடுகாட்டு ஞானம்.

இறந்த உடம்பில் எஞ்சி நிற்பது மண் பூதமே. அதையும் தீக்கே இறையாக்குவார்கள். பஞ்சபூதங்களும் தங்கியிருந்த உடம்பைக் காட்டவே சுடுகாட்டில் மண்பானையில் நீரை நிரப்பி சுற்றி வருகிறார்கள். அப்பானைக்குள் நீரும்ää காற்றும் இருக்கின்றது. பானைக்கு வெளியே ஆகாயமும் உள்ளது. அப்பானையில் இல்லாதது தீ. அத்தீ மூன்று மண்டலங்களாக இருந்ததைக் காட்டவே மூன்று ஓட்டைகள் போடுகிறார்கள். அந்த ஓட்டைகளின் வழியே வெளியேறும் நீரை புறங்கையினால் தட்டிவிடுவார்கள். அத்தீயிலாமல் வெளியேறிய உயிரே வாலையாக நின்ற நீர் என அறிந்து கொள்ளாமல் புறந்தள்ளியதை காட்டவே புறங்கையில் தட்டிவிடுவர். தீயான ஈசன் உடம்பைவிட்டுப் போவதால் நீரான வாலையும் போய் இது ஊத்தைச்சடலம் ஆனது. கடைசியில் அதுவும் நெருப்புக்கோ மண்ணுக்கோ இரையாகின்றது. ஆதலால் இதனை யாவும் அறிந்து உடம்பை விட்டு இறைவன் போய்விடாவண்ணம் தீயை தியானித்தால் வளர்த்து உடம்பை இறவா நிலைக்கு உயர்த்த மூன்று மண்டலங்களையும் நன்கு அறிந்து யோக ஞான சாதனைகளைப் பயிலுங்கள்.






No comments:

Post a Comment