Thursday 24 September 2015

வள்ளலாரின் அறிவுரைகள்

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.

2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.

3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே.

4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.

5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.

6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே.

7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.

8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே.

9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே.

10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

இன்றைய பொழுது இனிதாகட்டும்...!

படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....

படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை....

அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது--உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்--உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்--உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
இளமையில் நான் அழுதது
காதலில் கலங்கி அல்ல,,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை
பிரிக்குமோ என்ற பயத்தினால்..
நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,,
நான் உழைத்து உன்னை
பார்க்கப்போகிறேன்--என்ற
ஆனந்தத்தில்..
இங்கு தனிமையில் அழுகிறேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல
உன் தாய் அன்பு காணாமல்..
அம்மா!!!
உன் இறப்பின் பின் நான் அழுவேன்-நீ
இறந்ததால் அல்ல,,
உலகில் பாசமே இறந்ததால்..
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா--நீ
அழவேண்டாம்--ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..

போராட மதியையும்

போராட மதியையும்
பொறுமைக்கு விதியையும்
கடைபிடி ...

பாரேஉனை வதைத்தாலும் - உன்
பக்குவம் உன்னை பாதுகாக்கும் ...


காதல் வந்ததும் கண்ணுக்குள் ஆயிரம் நிலவு விளையாடலாம்...ஆனால் உண்மையில் நம் நினைவில் இருக்க வேண்டியது அம்மா என்ற ஒரு சந்திரனும் அப்பா என்ற சூரியனும்தன்...அவர்களை மறந்தால் கண்களை இழக்கவும் நேரிடலாம்...

நல்ல விதை விதைத்தால் தான்,
செடி நன்றாக வளர்ந்து,
நல்ல பலனை கொடுக்கும்...

அதுபோல நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான், வாழ்க்கை பிரகாசிக்கும்!

நிகழ்வுகள் ஆகஸ்டு 23,24,25 : -

நிகழ்வுகள் ஆகஸ்டு 23,24,25 : -

1. குஜராத் 'Agro - solar policy' அறிமுகப் படுத்திய முதல் மாநிலம் ஆகும்.

2. டெல்லியில் முதல் முறையாக நீர் மின் நிலையம் அமைய உள்ளது.

3. பெய்ஜிங் உலக தடகள சாம்பியன் போட்டியில் 100மீ பிரிவில் உசைன் போல்ட் தங்கம்.
i.9.79 வினாடிகளில்.
ii.9th world title.

4. pro-kabaddi league 2015ல் மும்பை (MUMBAI) சாம்பியன்

5. சவூதி அரேபியா முதல் முறையாக தன் நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது.

6. சிங்கப்பூர் நாளிதழ் The straits times ன் "Asian of the year 2014" விருதுக்கு Vijay singh thakur தேர்வு.

7. கேரளா வின் 'செங்கோலிகோடன் வாழைபழம்' (Thrissur) புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

8. சிறு நிதி நிறுவனமாக இருந்து வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம் 'பந்தன்' .
9. MAT-Minimum Alternative Tax குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி A P SHAH கமிட்டி.

10. செசல்ஸ் தீவின் பிரதமர் James alex michael 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

11. 1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு நினைவு சின்னம் ராஜஸ்தான் ஜோத்பூரில் திறக்கப்பட்டது.

12. மத்திய அரசு
PMMY - Pradhan mantri Mudra Yojana திட்டப்படி சிறு நிறுவனங்களுக்கு கடனளிக்க 1.22 லட்சம் கோடி ஒதுக்கீடு.

13. 2015ம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

14. மகாராஷ்ட்ரா லோக் ஆயுக்தா தலைமை பொறுப்பை
Madanlal Laxmandas ஏற்றுள்ளார்.

15. இந்திய ஆஸ்கர் தேர்வுக்குழு தலைவராக Amol palekar நியமனம்.

குழப்பம் இன்றி படித்திட ஒரு பயனுள்ள தொகுப்பு...!

குழப்பம் இன்றி படித்திட ஒரு பயனுள்ள தொகுப்பு...!

குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்

உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் – சுரதா
மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.

சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் – அனுமன்

பாவலர் மணி – வாணிதாசன்
பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை

சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்

தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின்

பெர்னாட்ஷா – மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

குருகைக்காவலன் – நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்

நற்றமிழ் புலவர் – நக்கீரர்
பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்

தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்

ஆசுகவி – காளமேகப்புலவர்
திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி –அருணகிரிநாதர்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்

கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருவாமுரார் – திருநாவுக்கரசர்
திருநாவலூரார் – சுந்தரர்
திருவதவூரார் – மாணிக்க வாசகர்.

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

பிறரால் முடியுமெனில் நம்மாலும் முடியும்!

உதிரங்களே!

மகிழ்ச்சி கொள்ளுங்கள். நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் "உதிரத்தின் உதவிகள்" குடும்பத்தின் வார்த்தைகள் ஆயிரம் மனங்களை தொட்டுள்ளது.
பெறுமிதம் கொள்ளுங்கள்.
தூக்கத்தை விடுத்து, சிரமங்களை கானாமல் சமுதாயத்திற்கு செய்யவேண்டும்
என்று விருப்பம் கொண்டவர்கள் நம்மை போல் யார் இருக்க கூடும்.
நட்டிருப்பது மரக்கன்றுகள் மட்டுமல்ல.,
நமது சிந்தனைகளையும் தான்! மரம் நடப்பட்டதோ மண்ணில், நம் சிந்தனைகள் நடப்பட்டதோ மாணவர்கள் மனதில்! இரண்டுமே 1000 வருடங்கள் நிலைக்ககூடியவை.
நண்பர்களே,
எதற்கும் தயாராகுங்கள்!
சில சமயம் தோல்விகள் நம்மை சந்தித்து வெற்றியின் முகவரியை கொடுக்கும்.
ஏமாற்றங்கள் நம்மை நெறுங்கும்!
நாம் காணவேண்டிய ஏற்றங்கள் அதிகமுள்ளது என்பதற்கான முன்னறிவுப்பு அது!
அடைவது அனைத்தும் வெற்றி அல்ல!
இழப்பது அனைத்தும் தோல்வியுமல்ல!
நம் தேடலில் உள்ள நல்லதை மட்டுமே நாம் காண வேண்டும்.
விதைக்கபட்டோம்... துளிர்கின்றோம்...
வளருவோம்...!

பிறரால் முடியுமெனில் நம்மாலும் முடியும்!

மதிப்பு

நாம் சிலரிடம் மரியாதையாக நடப்போம். அவர்கள் நம்மை அலட்சியத்துடன் 'நம்மை விட்டால் இவனுக்கு வேறு வழி இல்லை' என்பது போல் நம்மை சீண்ட மாட்டார்கள். இவவுலகில் அவரவருக்கு ஒரு மரியாதை உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் உள்ளனர். நமது விண்ணப்பத்தை கண்டு கொள்ளாமல் 'நான் ரொம்ப பிசி நான் எப்போது கவனிப்பேனோ அப்போதுதான் உனக்கு செய்வேன் என்பது போல் நடந்து கொள்வர். அதேசமயம் உண்மையிலேயே அவர்கள் கண்ணியதமானவர்களாக இருந்தால் நமக்கான முறை வரும் வரை பொறுமை காக்கவேண்டும்.

மதிப்பு, மரியாதை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் அவசியமான ஒன்று. மதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Value) வேல்யூ என்று சொல்கிறோம்.  முக்கியத்துவம் என்றும் கொள்ளலாம்.

மதிப்பு

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அது பணமாகவோ, கலை நயமாகவோ, அதன் உபயோகத்தாலோ இருக்கலாம். உதாரணமாக,  கடும் வெயில்; சாலையோர கரடுமுரடாக உள்ளது. நடந்து செல்ல வேண்டிய நிலை. இதுவரை வெறும் காலில் வெளியில் நடந்ததே இல்லை. செருப்புகள் இரண்டும் அறுந்துவிட்டன. அணிந்து நடக்கவோ முடியாது. இந்த நிலையில் செருப்பின் மதிப்பு (Value) என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் கையில் பத்தாயிரம் கொடுத்தாலும் ஒரு செருப்பு கிடைக்காதா என்றுதான் மனம் ஏங்கும்.

எனவே, எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு உயிரையும் மிகச் சாதாரணமாக மதிப்பிட்டு, ஒதுக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது.

மனித மதிப்பு

நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும். இன்று சமுதாய நிகழ்வுகளைக் கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம்.

ஏன், இவர்கள் தங்கள் மதிப்பை அறியாததால்தான். இதற்குக் காரணம் இவர்களது பெற்றோர்கள். பொது வாக மனிதர்கள் மற்றவர்கள் மீது வைத்துள்ள அபிப்ராயங்களை மதிப்பு எனக்கூறலாம். குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள்; கணவன் மனைவி இவை தான் அடிப்படை உறவுகள். இவர்களுக்கிடையிலுள்ள உறவு மேலும் வலுப்பட்டு அன்புடையதாக இந்த அபிப்ராயங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இது மாறாது; மாறக்கூடாது.

சரியும் மதிப்பு

அப்படி, தன் நெருங்கிய உறவுகளிடம் இவர் இப்படித்தான் என்று குறைபட்டுக் கொண்டு, இவரிடம் நேரில் தன் அபிப்ராயத்தை சரியான திருத்தத்துக்கு கூறாமல் விடுபவர்களை நாம் காண்கின்றோம். இதனால் உறவுகளின் மத்தியில் இவரது மதிப்பு சரியும்.

இதுபோல் சரிந்துவிட்ட மதிப்பை உயர்த்துவதென்பது மிகச் சிரமம். பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே பெரிய மாற்றுக்கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், இவர் என்ன தான் முயன்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முழுமையான திருப்தியை குடும்பத்தாரும் உறவுகளும் அடையமாட்டார்கள்.

மதிப்பின் நிலைமாறுமா?

ஆம். மாறும். உயரும் அல்லது தாழும். அழகான, நல்ல வேலைப்பாடமைந்த பொருள் உள்ளது. அதற்கென ஒரு காலம் உள்ளது. நாளாக, நாளாக அதனது இருப்புத் தன்மை குறைந்து கொண்டே வரும்.
இளமைப்பருவத்தில் காண்பித்த திறமை உத்வேகம் முதுமையில் குறைவது போன்றதே இது. மறைவுக்குப் பின்னும் மதிப்பால் உயர்ந்த மனிதகுலச் செம்மல்கள் பலரை அறிவோம்.

மதிப்பை அறிதல்

ஒருவரது மதிப்பை எப்படி, எப்போது அறிய முடியும் என்றால், அவர் இல்லாத போது. அவரைப் பற்றிய விமர்சனங்கள், அபிப்ராயங்கள், கருத்துக்கள் மூலமாக.

மக்களில் பெரும்பாலானவர்கட்கு எதற்கு எப்போது மதிப்பு கொடுப்பது எனத் தெரிவதில்லை. உதாரணமாக ஒருவர் தங்க நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறார். அவரை மறித்து நகையைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். உயிரே போனாலும் நகையை விடமாட்டேன் என்றஉறுதியோடு போராடுகிறார். கும்பல்தான் வெற்றி பெற்றது; இவர் பிணமானார். என்ன தெரிகிறது?

உணர்ச்சி வேகம், பொருளாசை, உயிரைப் பற்றிய அறியாமை அருமையான வாழ்க்கை அவரைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. சமயோசிதமாய் சிந்தித்து செயல்படுவதற்கு ஆறாவது அறிவு இருப்பதையே மறந்து விடுகிறோம். எதற்கு, யாருக்கு, எப்போது, எப்படி மதித்து தரவேண்டும் என்பது மிக முக்கியம்.

செயல்பாடு

அதேபோல் பிறர் கோணத்தில் நமது மதிப்பு சரியாமல் இருக்க என்றும் ஒரே மாதிரியான செயல்பாடும் முக்கியம். சிலரிடம் நமது மதிப்பை உயர்த்திக் காண்பிக்க தேவையில்லாத முயற்சிகள் செய்வர். பின்னர் உண்மை நிலை தெரியும்போது கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்ட கலசம், திடீரென கீழே விழுந்த கதையாகிவிடும்.

ஒவ்வொருவரிடமும் என்ன உள்ளது? என்ன தேவை? இந்த இரண்டும் முக்கியம். இருப்பதை பண்புகள், குணங்கள், செல்வங்கள் என்று கூறலாம். தேவைகளை வேண்டுதல்கள் என்று கூறலாம். அதனால்தான் நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று எப்போதும் வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.

வேண்டுதல் எந்த அளவு முக்கியமானதோ, அதைவிட மேலானது இருப்பதை தக்கவைத்துக் கொள்வது, நல்ல குணங்களை, பண்புகளை நாளும் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வருவதால் மட்டுமே அவைகளை தக்க வைக்க முடியும்.

தியாகம்

பலர், தனி மனித வழிபாட்டின் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட நிலையில் உயிரையும் தியாகம் செய்யுமளவுக்குச் செல்வதை ஊடகங்கள் வழி பார்க்கிறோம். அந்த அளவுக்கு மதிப்பு மிக்கவர்களா என்ற வினாவும் எனலாம். மதிப்பு இங்கு முன்னிலைப்படுத்தாமல் உணர்ச்சியே பிரதானமாக இருப்பதால், திடீரென, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர்.

ஓர் உதாரணம் மூலம் தெளிவு பெறலாம். உலக நன்மைக்காகப் பாடுபட்டு வரும் நல்ல சிந்தனையாளர் ஒருவர், அவரது செயல்களால், நல்ல பழக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என இருவர் ஆற்றில் படகில் செல்கின்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. ஒரு லைஃப் பெல்ட் மட்டும் உள்ளது. படகு கவிழும் சூழல் உருவாகிவிட்டது.

அந்த நல்ல சிந்தனையாளர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டுமென்று உடன் உள்ளவர், லைஃப் பெல்டை அவருக்கு கொடுத்து விடுகிறார். இதுதான் தியாகம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை உலக நலன் கருதி சிந்தித்துச் செயல்படுதல். இதற்கு அடிப்படையாக அமைந்தது அந்தச் சிந்தனையாளரது நற்பண்புகள் மீது இவர் கொண்ட மதிப்பு.

மரியாதை (Respect)

இதை கண்ணியம் என்றும் கௌரவம் என்றும் கூடக் கூறலாம். தோற்றத்தில், ஆடையில் கூட பிறரிடம் நம்மீது மரியாதையை உண்டாக்க முடியும். இது நிரந்தரமில்லாதது; மாறிவிடும் இயல்பு கொண்டது. மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று இந்த மரியாதை. அறிமுகமில்லாத ஒருவர் தொடர்பு கூட, உடனே அவர்மீது ஒரு மரியாதையை உண்டாக்கும். பழகப் பழக இந்த மரியாதையானது மதிப்புக்காக மாறுகிறது அல்லது அவர் தொடர்பை விட்டு விடுகிறோம்.

நல்ல பண்புகள் உள்ளவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி கவலைப்படாமல், தாங்களே நன்றாகச் சிந்தித்து, துன்பமில்லாத வகையில் செயல்படுவதால், மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. பிறரிடமிருந்து தானாக வர வேண்டும். “எனக்கு அவர் உரிய மரியாதை அளிக்கவில்லை’ எனச் சில சமயம் நாம் நினைப்பதுண்டு.

(Give and Take Respect) மரியாதை என்பது கொடுப்பதால் பெறமுடியும் அல்லது தன் தோற்றத்தால், பேச்சால், செயலால் மட்டுமே பெறமுடியும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். ஆறறிவில்லாத தாவரம் உள்ளிட்ட உயிரினங்கள் கூட, தம்மீது அன்பு, அக்கறை காட்டுவோரிடம் தமது நன்றியை வெளிப்படுத்துவதை நாம் அறிவோம்.

வாழ்க்கை

வாழ்க்கை என்பதன் இருப்பிடம் குடும்பம். எனவே, குடும்பத்தில் மரியாதைகள் காலப்போக்கில் மதிப்பாக மாறவேண்டும். சிலர் குறைபட்டுக் கொள்வார்கள். “என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று இங்கு மதித்தல் என்பது மதிப்பு (Value) ஆகாது. அங்கீகாரம் என்று கூறலாம். தன் இருப்பை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை அப்படிக் கூறுகின்றனர்.

அழைப்பிதழ் பெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறோம். கூட்டம் அதிகம். அழைத்தவரைச் சந்திக்க வாய்ப்பில்லை. நிகழ்வு முடிந்து திரும்பும்போது மனதுள் நெருடல். வீடுதேடி வந்து அழைத்தவர்கள் சரியாக மதிக்கவில்லை; உபசரிக்கவில்லை என்று இது தேவையில்லை. நிகழ்வின் முக்கியத்துவம் கருதி நம் முக்கியத்துவத்தை நாம் விட்டுக்கொடுக்கவேண்டும்.

சிறுவயதுக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டிய ஒன்று – பிறருக்கு மரியாதை அளிப்பது; வயதுக்கு மரியாதை பணிவாய் பேசுவது; அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பது; தெளிவுக்காக சந்தேகங்கள் கேட்பது போன்றவை

கல்விக்கு மரியாதை

இன்று கல்வி என்றாலே, வேலைக்கானது என்றாகிவிட்டது. எனவே, எந்தத் துறையைத் தேர்வு செய்கிறோமோ, அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் தேவையான தகவல்கள் பெற, இந்த மரியாதை உதவும்.

அனுபவசாலிகளை மரியாதையுடன் போற்றவேண்டும். அவர்களது அனுபவங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைய வாய்ப்புண்டு. மரியாதையில் போலி மரியாதை என்று ஒன்று உண்டு. நேரில் பார்த்தால், மிகவும் பவ்யமாய் செயல்படுவர்; பிறகு தரக்குறைவாய் பேசுவர். தமிழில் “கூழைக்கும்பிடு” என்றசொல் உள்ளது. காரியம் ஆக வேண்டுமென்றால் காலையும் பிடிப்பார்கள். முடிந்தபின் காலை வாரிவிடவும் தயங்கமாட்டார்கள்.

தன்னம்பிக்கையுள்ளவர்கள் இதுபோன்று கூழைக்கும்பிடு ஆசாமிகளாக மாறமாட்டார்கள். அதே நேரம் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து ஏங்கவும் மாட்டார்கள். இவர்கள் தங்கள் மதிப்பை (Value) நன்கு உணர்ந்துள்ளதால், அதற்கேற்றவாறு செயல்படுவார்கள்.

இந்த வாழ்க்கையில் நமது தோற்றம், பேச்சு, செயல்கள் எல்லாம் மற்றவர்கள் மனதில் நம்மீது முதலில் மரியாதையை உருவாக்க வேண்டும். காலப்போக்கில் இது மதிப்பாக மாறவேண்டும்.-

ஒஷோ உணர்த்தும் 3 முக்கியம் அம்சங்கள்

மீள்பதிவு:

பொதுவாகவே இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசை விடவும் சிறிய தூசு என்பதை உயர் ஆன்மீகமும், நம் ஆழ் அறிவும் உணர்த்தும். அதே நேரம், இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடைய இருப்பும் போதிய அளவு முக்கியத்துவம் கொண்டது தான் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். "உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு! இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலைவிடு!" என்பார் கவியரசு கண்ணதாசன்.

"இதில் உன்னை விட்டால் உலகம் இல்லை" என்ற வரி மிகையாக சொல்லப்பட்டதோ என்று எண்ணத் தோணுகையில் ஒஷோ ஞாபகத்துக்கு வருகிறார்.

ஒவ்வொரு உயிரின் இருப்பும் இந்த உலகில் முக்கியம். நீங்கள் இல்லையென்றால், "இந்த உலகம் கொஞ்சம் கவிதையை இழந்திருக்கும்", "ஒரு பாடலை இழந்திருக்கும்" என்பார் அவர். நீ முக்கியம் இல்லை என்ற எண்ணத்தை இந்த சமூகம் மனிதர்கள் மேல் உருவாக்குகிறது. ஆனால் அந்த அவ நம்பிக்கையை உடைப்பது தான் என் வேலை என்கிறார் அவர்.

ஒஷோ உணர்த்தும் 3 முக்கியம் அம்சங்கள்
1.தன்னை நம்புவது
2.தன்னை நேசிப்பது
3.தன் மதிப்பை உணர்வது

அப்படியானால் ஏற்கனவே மனதிலிருக்கும் வலியை வருத்தத்தை (Disappointment/ Defeat/ Disaster) என்ன செய்வது? அந்த வலியையும் வருத்தத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பது ஆறிக் கொண்டிருக்கும் காயத்தை கீறி விடுவதற்கு சமம். ஆனால் அமைதியாக அந்த வலியை உற்று நோக்குவதன் மூலம் அந்த வலிகளின் மூலத்தை கண்டடைந்து விழிப்புணர்வுடன் அதை அணுகி சமநிலை தன்மையின் மூலம் அந்த வலியை கடந்து விடலாம்.

இந்த சமநிலையும் விழிப்புணர்வும் உறுதிப்பட, உறுதிப்பட உங்களின் வலிகளின் வேர் தோண்டி எறியப்படுகிறது. விழிப்புணர்வு வெளிச்சத்தில் இருட்டு காணாமல் போகிறது. இது தான் கவலையை நேரடியாக எதிர் கொள்ளும் வழி. கவலையை மறைமுகமாக வெல்ல நினைப்பவர்கள் தான் தற்காலிக பொழுது போக்குகளில் தங்கள் உணர்வுகளை மறைத்து கொள்கிறார்கள் என்கிறார்.

கழுதைக்கு முன் தொங்கவிடப்படுகிற கேரட்டை போல துன்பங்களை கட்டிக் கொண்டு அதன் பின்னால் ஒடுகிற மாய வேலையை மனம் செய்யும். ஆனால் அந்த துன்பங்களை பழைய சம்பங்களின் வலிகளை எரித்து விட்டால் கழுதை போல தள்ளாடும் மனம் குதிரைப் பாய்ச்சலால் தூதுகலமாய் ஒடும். ஆனந்தத்தின் பாடலை எப்போதும் பாடும்.

நாம் நினைத்தால்!

நாம் நினைத்தால்!

----------------------

நாம் சாதாரணமானவர்களாகப் பிறந்திருந்தாலும் நாம் நினைத்தால் நம் திறமையைப் பயன்படுத்தி நம்மால் மிகப்பெரிய நிலைக்கு உயர முடியம்.
நாம்
நடுந்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,
நாம் நினைத்தால் மிகப்பெரிய தொழிற்புரட்சியை உருவாக்க முடியும்.நாம் படிப்பறிவில்லாத பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் நாம் நினைத்தால் உலகம் போற்றும் மாமேதையாக உருவாக முடியும்.
குழந்தைப் பருவத்தில் நாம் தகுதியில்லாதவர்களாக,
பலவீனமானவர்களாக கருதப்பட்டாலும் நாம் நினைத்தால் நமது அடுத்த தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரனமாக திகழலாம்.
எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையைவிட,வெற்றி கிடைக்கும்வரை விடமாட்டேன் என்ற வைராக்கியமே முக்கியம்.வாழ்க்கை சில சமயம் சதுரங்க ஆட்டம் போன்றது.
திறமையாக பயன்படுத்தினால் சிப்பாயும் இராணியாக மாறும்!
இதுவரை பிறரால் முடிந்தது நாம் நினைத்தால் நம்மாலும் முடியும்!




பொது அறிவு - வேதியியல்

பொது அறிவு - வேதியியல்

1. பூமிக்கு வரும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பது ஓஸோன்.

2. அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் சல்பர் - டை - ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு.

3. சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்ஸைடு.

4. வளிமண்டலத்தில் அதிகமுள்ளது நைட்ரஜன்.

5. வாகனப் புகையில் அதிகமுள்ளது கார்பன் மோனாக்ஸைடு.

6. தீயணைக்கப் பயன்படுவது கார்பன் - டை - ஆக்ஸைடு.

7. தீயணைப்புக் கருவியில் இருப்பது சோடியம்பைகார்பனேட் கரைசல்.

8. சோடா பானங்களில் அதிகமுள்ளது கார்பன் - டை - ஆக்ஸைடு.

9. உலர்பனிக்கட்டி எனப்படுவது திட கார்பன் - டை - ஆக்ஸைடு.

10. பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது எத்திலீன்.

11. அழுகிய முட்டை மணமுள்ள வாயு ஹைட்ரஜன் பெராக்ஸைடு.

12. அழுகிய மீன் மணமுள்ளது பாஸ்பீன்.

13. மழை நீரின் PH அளவு 5.6க்குக் குறைவாக இருப்பின், அது அமில மழை.

14. ஹைட்ரஜன் அயனிகளைத் தரவல்லவை அமிலங்கள்.

15. அமில மழையில் காணப்படும் அமிலங்கள் சல்பியூரிக், நைட்ரிக்.

16. 'வேதிப்பொருட்களின் அரசன்' சல்பியூரிக் அமிலம்.

17. 'விட்ரியால் எண்ணெய்' எனப்படுவது சல்பியூரிக் அமிலம்.

18. 'வலிமையான திரவம்': நைட்ரிக் அமிலம்.

19. எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.

20. வினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.

21. கார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.

22. ஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியைக் கரைக்கும்.

23. மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் ராஜ திராவகம்.

24. ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

25. எலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.

26. புளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.

27. ஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.

28. மயக்க மருந்தாக உதவுவது பார்பியூச்சுரிக் அமிலம்.

29. நைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.

30. பினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.

31. பீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.

32. கலோரிமீட்டரில் நியமமாக (Standard) பயன்படுவது பென்ஸாயிக் அமிலம்.

33. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.

பெறுவதில்தான் சுகம்அதிகம் ....

அன்பு பாசம் காதல் காமம்
இவை நான்கும் கொடுப்பதைவிட
பெறுவதில்தான் சுகம்அதிகம் ....

இவை நான்கையும் - நான்
ஆயிரம்முறை அள்ளிக்கொடுக்க
முயற்சித்து இருக்கிறேன் ...

ஆனால் ...
ஒருமுறைகூட யாருமெனக்கு
கிள்ளிக் கொடுக்கக்கூட
முயற்சித்ததில்லை ...

இந்தஏக்கம் தாங்காமல் - என்னுள்
நொந்துநித்தம் அழுகிறேன்
வந்தவலி அத்தனையையும் - பின்
வார்த்தையாக்கி மகிழ்கிறேன் ...

பேய்கள் ஜாக்கிரத்தை!

பேய்கள் ஜாக்கிரத்தை!

--------------------------
கடவுள் இருக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு எதிர்முனையில் பேய்கள் இருக்கத்தானே செய்யும்!
எங்கே அவைகள்?
பேய்கள் என்றதும் திரைப்படத்தில் வருவதைப்போன்று பயங்கரமான தோற்றத்தில்,வெள்ளை உருவத்திலும்,நீண்ட தலைமுடியோடும்,கூர்மையான பற்களோடும் இருக்கும் என்று எண்ணக்கூடும்.
ஆனால் இங்கே சொல்லவரும் பேய்கள்
உருவத்தில் அழகாக இருக்க கூடும்.
நிறைய நேரம் நாம் அவைகளை கடந்து வந்திருக்கிறோம்.ஆனால் அடையாலம் காண தவரவிட்டோம்.
ஏனென்றால் அவைகள் நமக்கு நெருக்கமான பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,
உறவினர்கள்,
அலுவலக உடன் பணியாற்றுபவர்கள் வேடமனிந்து அவைகள் வரும்...!
அவர்களின் உடலை தற்காலிகமாக வாடகை எடுத்து நம்மிடம் வரும்.
அவைகளின் நோக்கம் பல.
நம்முடைய இலட்சியத்திலிருந்தும்,
வாழ்வில் இருந்தும் நம்மை திசைத்திருப்பும் எண்ணம் கொண்டு,
அதற்கு தேவையான ஆயுதங்களை அவைகள் பயன்படுத்தும்.
பல சமயம் அழகை காட்டும்.சில சமயம் அழுகையை காட்டும்.
உறவுமுறைகளை காட்டி எச்சரிக்கும்.அடுத்தவனை காட்டி நச்சரிக்கும்.
வசைச்சொற்களால் நம்மை வேதனைப்படுத்தும்.
இழிவுப்படுத்தி பேசும்.
நம்முடைய நம்பிக்கையை குலைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு நெருக்கமானவர்கள் பேசும் வார்த்தைகள் அல்ல.அவைகள் அனைத்தும் பேய்களின் வாயிலிருந்து கடன் வாங்கப்பட்ட வார்தைகள்!
அவைகளின் தூதுவர்கள் எல்லா திசைகளிலும் உண்டு.
அவைகள் இயேசுவை காட்டிக்கொடுத்தது.
கிருஷ்னனுக்கு சாபம் கொடுத்தது.
அன்னை தெரேசாவை பார்த்து காரிஉமிழ்ந்தது.
அம்பேத்காரை இழிவுப்படுத்தியது.
நெல்சன் மண்டேலாவை 27 வருடங்கள் சிறையில் வைத்தது.இந்த பட்டியல்
இன்னும் நீளும்!
அவை அனைத்தையும் செய்தது ஆரறிவைக்கொண்ட மனித பேய்களே!
கடவுள் படைத்ததை திருடுவதும்,
திசைதிருப்புவதுமே அவற்றின் முதன்மையான நோக்கம்.
நமக்குள்ளும்
அவைகள் தற்காலிகமாக செயல்புரியும்...!
நம்
எண்ணத்தில்...
செயலில்...
பேச்சில்...!

பேய்கள் ஜாக்கிரதை!!!

தாய்

 தாய்
--------

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!
கருவிழியாய் எனைக்காத்து வளர்த்து வந்தவள் - நான்
கண்மூடித் தூங்கும்வரை விழித்துக் கிடந்தவள்!

இடைமீது எனைத் தூக்கி நடை போட்டவள் - நான்
விளையாடிப் பார்ப்பதற்கே விழி விழித்தவள் !
மழலைச் சொல் மழைபோல பொழியச் சொல்பவள் - அதில்
பிழை நீக்கி பொருளுணர்ந்து சிரித்து மகிழ்ந்தவள்!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!

பசித்தாலும் நேரத்தில் பசி போக்கிட - தினம்
பாலாக உதிரத்தை மாற்றிக் கொடுத்தவள்!
கட்டிய தொட்டிலில் எனைக் கிடத்தியே - தினம்
கனிவான தாலாட்டால் உறங்கச் செய்பவள் !

கால்களில் சாய்த்தென்னை குளிப்பாட்டுவாள் - புருவம்
கண்ணுக்கு மையிட்டு பொடி பூசுவாள் !
தன் கண்ணே பட்டிடுமோ என்றெண்ணுவாள் - அவள்
தலையிலே விரல் மடக்கி சுடக்கெண்ணுவாள் !

அழும்போது மலையளவு பிழையானவள் - அன்பு
அணைப்பாலே சிரிப்பூட்டி மகிழச் செய்பவள் !
அம்புலியை அழைப்பதுபோல் ஏமாற்றுவாள் - அன்பு
அம்பாலே பிடிசொற்றை தினம் ஊட்டுவாள்!

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்தவள் -அன்பாய்
தரைமேலே தவழவிட்டு தினம் ரசித்தவள்!

நோயாலே வாடுகின்ற நொடி கண்டதும் - தினம்
நோம்பிருந்து மருந்துண்டு சரி செய்பவள் !
கால்களால் மார்பிலே மிதி வாங்கினும் - அன்பாய்
கால்பிடித்து பாதத்தில் முத்தமிடுபவள் !

- அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே,

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே,
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் போதிலே!
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே,
இடைவிடாத முயற்சி என்றும் பொய்ததில்லையே!
தொலைத்தது கிடைத்திடாமல்,
நினைத்தது நடந்திடாமல்,இலக்குகள் முடிவதில்லை...
தோற்பதில்லை வெற்றியே!
அச்சமென்பது எந்த நொடியும் நம்மை வியுங்கும் மறவாதே.
உச்சம் என்பது எட்டும் வரையில் கண்கள் உறங்க நினையாதே!
அறிவெனும் ஆயுதம் நமதுயிர் காக்குமே,போரை ஏற்போமே!
உண்மை என்பது நம்மை தொடரும்வரை துணிவோமே.
நம்பி செய்திடும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே...
தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம்,பாதை மாறாதே!
ஒருமுறை தேறினால் தலைமுறை வாழுமே,வேர்வை காயாதே!
இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே.
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும்போதிலே!

குரூப் 4, VAO, குரூப் 2A......

நண்பர்களே......
🌺

🌺
குரூப் 4, VAO, குரூப் 2A......

🌺
தற்போது நமது கனவுகள் இந்த தேர்வினை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்..... ஏனெனில் போட்டிகள் அதிகம், அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

🌺
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது, படிக்காமலே நான் 100 பதில் அளித்து விட்டேன். அதேபோல் இந்த தடவை எழுதினால் இன்னும் அதிகமா எடுத்து விடுவேன் என வீண் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

🌺
கடந்த 4 அல்லது 5 வருட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் வினாக்கள் கேட்கப் படுகிறது, என்பதை முதலில் பாருங்கள். தமிழ் பகுதியில் நிறைய இலக்கணம் வரும், அதை மிக அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
பொதுத்தமிழ் பிரிவில் 100 வினாக்கள். எப்பாடுபட்டாவது தமிழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நன்றாக படித்து விரல் நுனியில் வைத்து இருங்கள்.

🌺
கடினம் என்றால் எல்லாம் கடினமே...முடியும் என்றால் எல்லாம் முடிமே....
🌺
இதைச் சொல்லி சொல்லிப் பாருங்கள். நம்மால் முடியும்.

🌺
உறவினர்களின் ஏளனம், அவமானம், வறுமை, இதை எல்லாம் ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்து பாருங்கள். கண் முன் என்ன தோன்றுகிறது??? வெற்றி பெற வேண்டும், ஜெய்த்து காட்டணும்னு தோணுதா???
கண்டிப்பாக தோன்றும்.

🌺
இப்ப எழுதப் போற தேர்வுதான் உங்கள் தலையெழுத்தை மாற்றும் என நம்புங்கள். உங்களுக்கு மற்றவர் ஊக்கம் குடுக்க வேண்டும் என்று எதுவுமில்லை. உங்களுக்கு நீங்களே உற்சாகம் கொடுங்கள். ஒரு பாடத்தை முடித்த பின்பு உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். "உங்களால் முடியும்" என்பதை உங்கள் மனதிற்க்கு, அடிக்கடிச் சொல்லி பதிய வையுங்கள்.

🌺
எல்லாம் அறிந்தவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. so உங்களை தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள்.

🌺
முடிந்தவரை போராடுங்கள். முடியவில்லையா?? அடுத்த தேர்வுக்கு போராடுங்கள். அதான் 3 தேர்வுகள் உள்ளதே.....??
அதுக்குன்னு அடுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என கவனக்குறைவாக இருக்க கூடாது.

🌺
தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

🌺
என்னுடைய இந்த பதிவு கண்டிப்பாக சில பேருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம். படிப்பதற்கும் உதவும் என நம்புகிறேன்.

🌺
மீண்டும் கிடைக்கும் நேரங்களில் அடுத்த பதிவை இடுகிறேன்.

🌺
வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.

நன்றி

வளையாத நதிகள் இல்லை

 வளையாத நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை. வரும் காலம் காயங்கள் ஆற்றும்.

பொதுவாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஒரு சில மதிப்பெண்களால் தேர்வில் பின் தங்கியவர்களுக்கு அந்த கணத்தில் தோன்றும் இயல்பான மனவோட்டங்கள் பல. முதலில் நம் அறிவின் மீதே நமக்கு ஏற்படும் கசப்பு, பல ஆண்டுகளின் தீவிர உழைப்பின் Negative பலன், வேலையில்லா நிலைமை, ஏமாற்றம், ஏக்கம், மனமுறிவு, பணமின்மை, தன்னம்பிக்கையின்மை, அன்புக்காக பரிதவிப்பு . அந்த வயதிற்கான வாழ்க்கையின்மை (Fighting Biological Needs) போன்றவை அந்த நேரத்தில் தோன்றி நம்மை கலங்கடிக்கும்.

உண்மையில் இவைகளை அந்த கணத்தில் கடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஒரு சில உணர்வுகளை நம்மாலே கூட புரிந்து கொள்ள இயலாது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கடக்கக் கூடியதே. கொஞ்சம் பொறுமையாக அதை ஏற்றுக்கொண்டு உற்றுக் கவனித்தாலே போதும். ஒரிரு வாரத்தில் அந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.

உண்மையில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்க்கையில் நிறைய சாதித்ததோடு மட்டுமல்லாமல் சாதனையாளராகவும் உள்ளனர். காரணம் தோல்வி தரும் பாடமும் தோல்வியால் வாழ்க்கை தரும் நெருக்கடியும் அவர்களை படிப்படியாக ஆற்றலுடையவராக்குவது தான். தோல்வியால் உண்டாகும் படிப்பினை கூட நோய்களில் இருந்து நம்மை மீட்கும் ஆன்டிபயடிக் போலத் தான்.

இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள், பந்தங்கள், நட்புகள் நம்மை சுற்றி இருந்தாலும் நம்மை நாம் உணரும் தருணம் என்று ஒன்று உண்டு. அது எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. அப்படி அது அவர்களுக்கு வாய்க்கும் பட்சத்தில் அவர்கள் அதை முற்றிலும் உணர்ந்தால் நெறிப்பட்ட மனிதர் ஆகிவிடுவர். எந்த உணர்வுக்கும் ஆட்படமாட்டர்.

இதை இப்படியும் உருவகம் கொள்ளலாம். அதாவது மதம், உட்பிரிவு(Social Group), பந்தம், நட்பு எல்லாமே ஒர் பழத்தில் உள்ள பல லேயர்கள் (surrounding) போலத் தான். பழத்தின் உள்ளே இருக்கும் நட்ஸ் என்பது அதன் தனிப்பொருள் (Human Independent Soul). அது தனித்துவமானது (Unique). அதன் வலிகளையும் உணர்வுகளையும் அவனால்/அவளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆற்றுப்படுத்த முடியும். பெற்றவர்களால் கூட புரிந்து கொள்ள முடியாது. இந்த உணர்வைத் தான் நமக்கு தோல்விகள் ஏற்படுத்தித் தரும்.இது ஒரு Vision. (பழத்தை சாப்பிட்டு விட்டு நட்சை எறிந்து விடுவதன் மூலம் அது ஒரு மரத்தையே உருவாக்கும் வலிமை வாய்ந்தது என்பதை இங்கே நீங்கள் பொருத்திப் பார்க்க வேண்டும்.)

எனவே கொஞ்சம் யோசித்து பார்த்தால், வெற்றி என்பது வெற்றி பெற்று விட்டோம் என்ற கொண்டாட்டத்தோடு அந்த கணத்தோடு முடிந்து விடும். அகம்பாவத்தையும், ஆணவத்தையும் கூடசேர்த்து கொண்டு வரும். ஆனால் தோல்வி என்பது மிகுந்த வலி மிகுந்தது. உங்களை அது நிறைய சிந்திக்க வைக்கும். பக்குவப்பட வைக்கும். வாழ்க்கையில் அனைத்து பரிமாணங்களையும் புரிய வைக்கும். இது அடுத்த தேர்வை புதிய அணுமுறையுடனும் ஒரு வகையான நேர்த்தியுடனும் கண்டிப்பாக உங்களை உயரத்தில் வைக்கும்.

எனவே வருகிற குரூப் 2 (A), வி.ஏ.ஒ மற்றும் குரூப் IV தேர்வை புதிய சிந்தனைகளுடன், புதிய வரையறைகளுடன், புத்தம் புதிய மலர்ச்சியுடன் அணுகத் தொடங்குங்கள். வசந்தம் மிக அருகில்.

வெற்றிகளைத்தேடி ..

வாழ்கையின் கடினம் கருதி சில செயல்களை உதிர்த்து விடலாம்..இலட்சியங்களை உதிர்த்துவிடாதே..
ஏனெனில்..மரங்கள்கூட சாதகமற்ற சூழலில் இலைகளை உதிர்த்து விடுகின்றன..வேர்களையல்ல .. -மு.சிபிகுமரன்

வலிமை இல்லையென்று வீழ்ந்துவிடாதே...
பட்டாம்பூச்சிகள், ஈசல்கள் போராடுகின்றன மறந்துவிடாதே


உதிர்ந்த பூக்களைப்பற்றி பூச்செடி கவலைகொள்வதில்லை ..
பூப்பதற்கு இன்னும் வாய்ப்புள்ளபோது

+


தொலைந்து போய்விட்ட வெற்றிகளைத்தேடி ..
தொலைந்து போய்விடாத தோல்விகளைத்
தூக்கிக்கொண்டு செல்கிறது ..
என் நம்பிக்கை ..

எப்போதும் புகழ்ச்சிக்கு
மயங்காதிரு ...
எக்கணமும் இகழ்ச்சிக்கு
கலங்காதிரு ...
காலம்கொடுத்த வேலையென்று
கடமைசெய் ...
காலம்என்றும் முடியக்கூடும்
விரைந்துசெய் ...
உன்கணக்கு முடிந்துவிட்டால்
ஒய்வுதான்
உயிரிருக்கும் நேரமெதற்கு
ஒய்வுதான் ?
கொண்டுபோக இவ்வுலகில்
ஏதுமில்லை ...
தந்தபோனால் கொண்டுபோவாய்
பேருதான் ...