Wednesday 26 November 2014

பாரதிதாசன்

"எளிமையினால் ஒரு தமிழன்
படிப்பில்லை என்றால் இங்குள்ள
எல்லாரும் நாணிடவும் வேண்டும்"
இது யாருடைய வரிகள் ? பாரதிதாசன்

வில்மா ரூடால்ப்

 வில்மா ரூடால்ப், வறுமையான குடும்பத்தில் பிறந்த இருபதாவது குழந்தை. அவள் குறை மாதத்தில் பிறந்தாள். வில்மா பிழைப்பாளா என்றே மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். அவளுக்கு 4 வயதானபோது, டபுள் நிமோனியா, போலியோ மற்றும் செங்காய்ச்சல் அவளைத் தாக்கியது. ஊன்றுகோல்கள் இல்லாமல் அவளால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் நினைத்தார்கள். அவளது சூம்பிப்போன இடது கால் அவளது நடையைப் பாதித்தது.

போலியோவை ஜெயித்த வில்மா

அவள் தனது உத்வேகத்தை இழக்கவேயில்லை. 9 வயதில், தனது காலில் மாட்டியிருந்த உலோக உறுப்புக் கவ்வியை நீக்கிவிட்டாள். அது இல்லாமலேயே நடக்கத் தொடங்கினாள். அவளது விடாமுயற்சியால் நம்மைப் போன்ற சீரான நடையை 13 வயதில் அவள் பெற்றாள். மருத்துவர்கள் அதை அற்புதம் என்றனர்.

அந்த ஆண்டே அவள் ஓட்டப் பந்தய வீராங்கனை ஆனாள். அவள் ஓடுவாள் என்று அந்த நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் அவள் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற மாட்டாள் என்று கருதினார்கள். அவள் பந்தயத்தில் பங்குபெற்றாள். கடைசியில் வந்தாள். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அவள் பங்குபெற்ற பந்தயங்களில் கடைசியாகவே வந்தாள். இந்த முயற்சியைக் கைவிடு என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் கூறினார்கள். ஆனால் அவள் ஓடிக்கொண்டேயிருந்தாள். ஒரு நாள் அவள் வென்றாள். அடுத்த போட்டியிலும் கலந்துகொண்டு வென்றாள். அடுத்துக் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியை விட வெற்றி அதிகமாயிற்று. அடுத்து எல்லாப் போட்டிகளிலும் வெல்லத் தொடங்கினாள்.

உலகின் வேகமான பெண்

வில்மா உடல் பலவீனத்துடன் குறைப் பிரசவத்தில் பிறந்தவள், நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டவள், ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெறுவது சாத்தியமேயில்லை என்று நம்பப்பட்டவள். அவள் 1960-ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். உலகின் வேகமான பெண் என்ற பெயரைப் பெற்றாள்.

ஒரு வெற்றியாளர் தோல்வியே காணாதவர் அல்ல... ஒருபோதும் பின்வாங்காதவர்! என்பதற்கான உதாரணமாக இது இருக்கிறது.

சராசரிகள்

வாழ்க்கையில் தாங்கள் இன்னும் கூடுதலாகத் தைரிய மான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும் என்பது மரணப் படுக்கையில் உள்ளவர்களின் மனக்குறையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதன் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எனக்குச் சிறிது நேரம் பிடித்தது.

ரிஸ்க் எடுத்துச் செயல்படாதது ஏன் ஒருவரை இத்தனை ஆயாசத்துக்கு உள்ளாக்குகிறது? நான் அதைப் பற்றி யோசித்தேன். கடைசியில் அதற்கான விடை தெரிந்தது. தைரியமான முடிவை எடுப்பதற்கு ஒரு தருணம் தேவை. அப்படி எடுக்காமல் இருந்தால் அதுவே வாழ்க்கை முறையாக மாறிவிடும். சராசரிகள் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவே மாட்டார்கள். அதனாலேயே அவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்கின்றனர்.

மேலும் தீவிரமாக

வெற்றியாளர்கள் தைரியமாக முடிவெடுப்பது பற்றிப் பயப்பட மாட்டார்கள். ஏனெனில் வெற்றிபெறுவதற்கு இன்னும் கூடுதலாகப் பயணிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கு மற்றவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். தோல்விக்கு உள்ளாகும்போது சுற்றியுள்ளவர்களின் கேலிக்கு ஆளாவதை விடச் சராசரிகளாக இருப்பது பற்றி அவர்கள் கூடுதல் அச்சத்துடன் இருப்பார்கள். முயற்சியே செய்யாதவர்கள் மட்டுமே தோல்வியே அடையாதவர்கள்.

நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்தே ஆக வேண்டும். நீங்கள் இதற்கு முன்பு போகாத பாதையில் போகும் விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் ஆழமாகத் தோண்டுங்கள். மேலும் தீவிரமாக முனையுங்கள். கூடுதலான துணிச்சலுடன் முடிவெடுங்கள். இதுவரை அடையாத அனுபவம் கிடைக்கும்.

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர்கள்: 4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா :-

உலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகிலுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்யும் நிபுணர்களால், "டாப்500' என்ற பட்டியல் ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில்

இரண்டாவது முறையாக வெளியிடப்பட்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், சீனாவின் "தியான்ஹே-2' சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தக் கணினி, இந்தப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே, நவம்பர் 2010, ஜூன் 2011 ஆகிய மாதங்களில்

வெளியிடப்பட்ட அதிவேகக் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் சீனாவின் தியான்ஹே-1ஏ சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ள தியான்ஹே-2, வினாடிக்கு 33.86 "பெட்ஃபிளாப்புகள்' (கணினிகளின் வேகத்தைக் கணக்கிடும் அலகு) வேகத்தில் இயங்குகிறது.

அதாவது, இதனைக் கொண்டு ஒரு வினாடிக்கு 3,38,600 கோடி கோடி கணக்கீடுகளை செய்ய முடியும். இந்தப் பட்டியலில், இந்தியாவின் புணே பருவநிலை ஆய்வு

மையத்திலுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் 71-ஆவது இடத்திலும், மத்திய அரசின் "சி-டாக்' அமைப்பின் "பரம் யுவா-2' 131-ஆவது இடத்திலும் உள்ளன. மிக அதிக எண்ணிக்கையிலான

சூப்பர் கம்ப்யூட்டர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், 231 கணினிகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

வ.உ.சி

 தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார்.

அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர். வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பிவருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.

வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்!

வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.

இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி

ரூ. 200-தான்! சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார். சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே!” என்று கர்ஜித்தார். சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது. ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர். வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.

பற்றியெரிந்த திருநெல்வேலி

தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள். இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது. வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.

முடக்கிப்போட்ட சிறை

ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடுசெய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாதபோது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார். சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பிவைத்தார் நெல்லையப்பர்.

விடுதலைக்குப் பின்னரும் துயரம்

1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள்

தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.

சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.

இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.

தமிழ்ப் பணி

பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.

வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார். வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது. இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக மட்டுமல்லாமல் கப்பலோட்டிய இந்தியராகவும் கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி.!

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

 நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

குரூப் 4 தேர்வு எழுதவிருக்கும் நண்பர்களுக்காக :

குரூப் 4 தேர்வு எழுதவிருக்கும் நண்பர்களுக்காக :

இது அறிவுரை அல்ல .என் வழிமுறைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எவற்றை படிக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் எப்படி படிக்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை அதற்காகவே இந்த பதிவு.

தினமும் படிக்க அமரும் முன் தியானம் செய்யுங்கள்.அது அவ்வளவு கடினம் அல்ல,நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை குறித்தே ஒரு 15 நிமிடம் கண்களை மூடி தியானியுங்கள்...

இறைவனை வழிப்பட்டு பின் படிக்க துவங்குங்கள்...நாம் படிக்கும் புத்தகமும் தெய்வமே.....

படிக்க வேண்டியவற்றை முன்பே அட்டவணைபடுத்தி கொள்ளுங்கள்...அதை முடிந்த வரை அன்றே முடித்துவிட முயலுங்கள்... 100 % அட்டவணையை முடிப்பது எளிதல்ல..ஆனால் அட்டவணையிட்டு படிப்பதால் 75 % நம்மால் நிச்சயம் முடிக்க இயலும்.

படிக்கும் போது மனம் சோர்வடைகிறதா? உடனே மூச்சு பயிற்சி செய்யுங்கள்... உற்சாகம் பிறக்கும்.. நிறைய தண்ணீர் குடியுங்கள்...மூளை சுறுசுறுப்பாக இருக்கும்...

காற்றோட்டம் உள்ள இடத்தில் அமர்ந்து படியுங்கள்...படிக்கும் போது கண்கள் சோர்வடையும் வலி கொள்ளும் ..அப்போது விரல்களால் கண்களுக்கு அடிக்கடி ஒத்தடம் கொடுங்கள்....

உங்கள் மூளையின் அபார சக்தியை உபயோகிக்க முயலுங்கள்...அது மிக எளிது ..உங்கள் மூளைக்கு தகுந்த பயிற்சியை அளித்தால் எதையும் உங்களால் எளிதில் நினைவில் கொள்ள இயலும்.

எதையும் நிதானமாக படியுங்கள்...அதை கிரகித்துக் கொள்ள மூளைக்கு அவகாசம் கொடுங்கள்...அதை நன்கு மூளையில் பதிய வையுங்கள்.. அடிக்கடி திருப்புதல் செய்யுங்கள்..சிறு பிள்ளைக்கு சொல்லி கொடுப்பதை போல் உங்களின் மூளைக்கு நீங்களே பொறுமையாக வாய் விட்டு சொல்லி புரிய வையுங்கள்...

எதையும் மனப்பாடம் செய்ய முயல வேண்டாம் ...எந்த ஒரு பாடத்தையும் ஒன்றுக்கு பத்து முறை படியுங்கள் ...உங்களை அறியாமலே மூளை அதை என்றும் மறக்காத வகையில் உட்கிரகித்து கொள்ளும்..

நன்றாக படித்து கொண்டு இருப்போம் தேர்வு நெருங்கும் போது மனம் பதற்றமடையும் .எனவே தேர்வு நாளை மனதில் கொள்ளாமல் பதற்றமடையாமல் எப்போதும் போலவே படியுங்கள்..

சிலர் சிறிதளவே படித்தாலும் தான் அனைத்தையும் முடித்து விட்டதாக எண்ணுவார்கள்...போதும் என்ற மனம் படிப்பில் வேண்டாம்... ஒரு பாடம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை படியுங்கள் தவறில்லை...

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் தவறில்லை...ஆனால் அதீத நம்பிக்கை போட்டி தேர்வில் கூடவே கூடாது ...

படிக்கும் காலத்தில் இந்த வேலையை வாங்கியே தீருவேன் என்று படியுங்கள்..ஆனால் தேர்வு எழுத போகும் போது இந்த வேலை கிடைத்தாலும், இல்லைஎன்றாலும் எனக்கு கவலை இல்லை...பயிற்சிக்காக எழுத வந்ததை போல உணருங்கள்...அப்போது பதற்றமின்றி தேர்வை அருமையாக செய்ய இயலும்..

உங்களை குறை கூறவே அனைவரும் வருவர்..தட்டிக் கொடுக்க குடும்பத்தினர் கூட வரமாட்டார்கள்...எப்போதும் நீங்களே உங்கள் நலம் விரும்பியாய் இருங்கள்...நீங்களே உங்களை தட்டி கொடுத்து கொள்ளுங்கள்...தோல்வியை கண்டு துவளாதீர்கள்

அதிகமாக படிப்பதை விட எது தேவையோ அதை மட்டும் படியுங்கள்..எதை படிக்க கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்..

விழாக்கள் ,தொலைக்காட்சி போன்றவற்றை தவிருங்கள்...செய்திக்காக மட்டும் தொலைகாட்சியை பாருங்கள்..

தேர்வுக்கு 1 மாதமே உள்ளதால் இனி தமிழ் திறனறி பகுதிகளில் அதிக கவனம் செலுத்தினாலே போதும்.

குறைந்தது தினமும் எட்டு மணி நேரம் படியுங்கள். வேலைக்கு செல்வோர் தாரளமாக நான்கு மணி நேரம் படிக்கலாம்.

மனதை ஒருநிலை படுத்துங்கள் .நீங்கள் உங்கள் இலட்சியத்தை நாடி நரம்பு அனைத்திலும் பதிய வையுங்கள்.உங்கள் தியானம் அந்த அளவிற்கு வலிமையானதாக இருக்கட்டும்.

தியானத்திற்கு பின் காலை மற்றும் மாலை நேர வானத்தை பார்த்து உங்கள் இலட்சியத்தை நினைத்து அண்டத்தின் சக்தியை உங்களுக்குள் உட்கிரகித்து கொள்ளுங்கள்..படிக்கையில் விளையாட்டாக இருக்கலாம்.ஆனால் எதையும் நேர்மறையாக நினைத்து வானத்தை பார்த்து அதன் சக்தியை உட்கிரகிதால் எதையும் அடையும் சக்தி உங்களுக்கு பிறக்கும்...நினைத்ததை சாதிக்க செய்யும் .

உழைப்புக்கு ஏற்ற பலனே எப்போதும் கிடைக்கும்...அது தள்ளி போகலாம் ..ஆனால் நிச்சயம் மறுக்கபடாது...

விரைவில் வெற்றி பெற நிறைய உழைப்பும் தியாகங்களும் செய்ய வேண்டி இருக்கும். கடின உழைப்பை விட புத்திசாலிதனத்துடன் கூடிய உழைப்பே வெற்றியை தரும்...

இவை அறிவுரை அல்ல ...நான் படிக்கும் முறையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே..
நீங்கள் அனைவரும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே...

29

அறிவியல் மற்றும் பொது அறிவியல்
856. ஜிப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?
857. சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன?
858. அடர் குளோரிக் அமிலம், அடர் கந்தக அமிலம் கலந்த கலவை (3:1) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
859. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
860. பாலில் உள்ள அமிலம் எது? 861. ஸ்பிரிட் எனப்படுவது யாது?
862. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது எது?
863. சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?
864. போட்டோ தொழிலில் பயன்படும் வேதிப்பொருள் எது?
865. அலுமினிய தாதுவின் பெயர் என்ன?
866. பழங்களை பழுக்கவைக்கும் வாயுவின் பெயர் என்ன?
867. பூமியில் தனித்து கிடைக்கும் ஓர் உலோகம் எது?
868. பென்சிலில் உள்ள வேதிப்பொருள் எது?
869. ஒளி புகுந்துசெல்லக்கூடிய உலோகம் எது?
870. மிகவும் லேசான வாயு எது?
871. "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" என்பது என்ன?
872. "Quick Silver" என அழைக்கப்படும் உலோகம் எது?
873. நியூட்ரான் இல்லாத தனிமம் எது?
874. 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம் என்ன?
875. "பச்சை துத்தம்" எனப்படுவது எது?
876. தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
877. மணலின் வேதிப்பெயர் என்ன?
878. சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன?
879. திண்ம நிலையில் உள்ள அமிலம் எது?
880. எப்சம் என்பது என்ன? 881. இரும்பின் முக்கிய தாது எது?
882. பித்தளையின் சேர்மங்கள் யாவை?
883. சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை?
884. வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?
885. சிமெண்டில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள்கள் யாவை?
886. புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது?
887. மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
888. இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
889. டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
890. சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது?
விடைகள்
856. கால்சியம் சல்பேட் 857. சலவை சோடா 858. ராஜதிராவகம் 859. சிட்ரிக் அமிலம் 860. லாக்டிக் அமிலம் 861. மெதில் ஆல்கஹால் 862. நைட்ரஸ் ஆக்சைடு 863. 24 காரட் 864. வெள்ளி நைட்ரேட் 865. பாக்ஸைட் 866. எத்திலின் 867. தங்கம் 868. கிராஃபைட் 869. மைக்கா 870. ஹைட்ரஜன் 871. ஜிப்சம் 872. பாதரசம் 873. ஹைட்ரஜன் 874. 91.6 சதவீதம் 875. நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட் 876. ஃபார்மிக் அமிலம் 877. சிலிக்கன்-டை-ஆக்ஸைடு 878. சுக்ரோஸ் 879. பென்சாயிக் அமிலம் 880. மெக்னீசியம் சல்பேட் 881. ஹேமடைட் 882. தாமிரம், துத்தநாகம் 883. ஹீலியம், ஹைட்ரஜன் 884. ஜீரோ டிகிரி செல்சியஸ் 885. சுண்ணாம்பு, அலுமினா, சிலிகா 886. நிக்கோடின் 887. வைட்டமின்-டி 888. ஃபார்மால்டிஹைடு 889. யூக்கலிப்டஸ் 890. மீத்தேன்
பொது அறிவியல்
குரூப்-4 தேர்வு வினாக்களில் பொது அறிவியல் பாடத்திட்டத்தில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து குறைந்தபட்சம் 15 கேள்விகள் முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுவது முந்தை ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்தால் தெரிய வரும். சில வருடங்கள் இயற்பியல், வேதியியலில் 10 கேள்விகளும், சில ஆண்டுகள் தாவரவியல், விலங்கியலில் 10 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. கேள்விகள் எல்லாம் அடிப்படை அறிவியலில் இருந்து கீழ்க்கண்டவாறு கேட்கப்படுவதை அறிய முடிகிறது. இயற்பியல் - கண்டுபிடிப்புகள், சூரியன், சூரிய ஆற்றல், சூரிய கோள்கள், காந்தம், மின்சாரம், மின்அறிவியல், இயற்பியலின் அனைத்து அடிப்படை விதிகள், அவற்றின் செயல்பாடுகள் வேதியியல் - தனிமங்கள், அமிலம், காரம், பயிர்களுக்கான உரங்களின் வேதியியல் பெயர்கள், ஆக்சிஜனேசன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம் கார்பனேட், பயோ-டீசல், யுரேனியம், பிளிச்சிங் ஏஜெண்ட், குளோரோபாம், தங்கம், வெள்ளி, காட்மீயம், இயற்கை வாயு தொடர்பான விவரங்கள் தாவரவியல் - தாவர செல்கள், கிளைக்காலஜிஸ், புரோட்டோ பிளாசம், உணவுப்பயிர்கள், தாவரப்பெயர்கள், தாவரங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கை உயிரியல் - நாளமில்லா சுரப்பிகள், ரத்தங்கள், வைட்டமின்கள், டிஎன்ஏ, மனித உடல் உறுப்பு நோய்கள் விவரம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் எனவே, தேர்வெழுதுவோர் 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொது அறிவியல் புத்தகங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக குறிப்புகள் எடுத்துப் படித்தால் அறிவியல் கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம்.

28

அறிவியல்
816. ஒலியைப் பற்றிய அறிவியல் பிரிவு எது?
817. காற்றின் ஈரப்பதத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?
818. 100 டிகிரி செல்சியஸ் எத்தனை டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம்?
819. செல்சியஸ் என்ற அலகை உருவாக்கியவர் யார்?
820. பாரன்ஹீட்டை உருவாக்கியவர் யார்?
821. அணு உலையில் பயன்படும் நீர் எது?
822. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?
823. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
824. காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் என்ன?
825. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
826. கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி எது?
827. ஸ்டவ் திரியில் எண்ணெய் மேலேறக்காரணம் என்ன?
828. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
829. அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
830. கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண பயன்படும் கருவி எது?
831. மின்இஸ்திரி பெட்டியில் உள்ள மின்வெப்ப இழை எது?
832. பென்சில் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
833. தண்ணீர் குழாய்கள் குளிர்காலத்தில் வெடிப்பது ஏன்?
834. தெர்மாஸ் குடுவையில் வெப்பக்கதிர் வீசலைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எது?
835. மின்விளக்கில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
836. மத்திய சுரங்க ஆய்வு நிலையம் எங்குள்ளது?
837. கார் என்ஜினில் கார்பரேட்டரின் வேலை என்ன?
838. விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது?
839. வாகனங்களில் என்ஜினைக் குளிர்விக்க உதவும் சாதனம் எது?
840. கப்பல்களில் துல்லியமாக நேரத்தை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?
841. வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி எது?
842. யானை எந்த ஒலி மூலம் செய்தியை பரிமாறிக்கொள்கிறது
843. ஓசோன் படலம் குறையக் காரணமான வாயு எது?
844. அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
845. வளிமண்டல உயர் அடுக்குகளின் பெயர் என்ன?
846. குக்கரில் சமைக்கும்போது சமையல் விரைவாக நடப்பது ஏன்?
847. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
848. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
849. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
850. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
851. அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
852. இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் எங்குள்ளது?
853. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
854. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?
855. அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார்?
விடைகள்
816. Acoustics 817. Hygrometer 818. 212 டிகிரி பாரன்ஹீட் 819. ஆன்ரூஸ் செல்சியஸ் (1742, சுவீடன்) 820. கிரேபியல் டேனியல் பாரன்ஹீட் (1715, ஜெர்மனி) 821. கனநீர் 822. ரஷ்யா 823. சர் சி.வி. ராமன் 824. அனிமோ மீட்டர் 825. டெல்லி 826. சோனார் 827. தந்துகி கவர்ச்சி (நுண்துளை வழியே திரவம் தானாக மேலேறுதல்) 828. கந்தக அமிலம் 829. ஆட்டோவான் 830. பெரிஸ்கோப் 831. நிக்ரோம் 832. கிராபைட் 833. குளிரில் நீர் உறைந்து விரிவடைவதால் 834. வெள்ளி 835. டங்ஸ்டன் 836. தன்பாத் (பிஹார்) 837. காற்றுடன் பெட்ரோலை கலப்பது 838. டேகோ மீட்டர் 839. ரேடியேட்டர் 840. குரோனோ மீட்டர் 841. ஓடோமீட்டர் 842. குற்றொலி 843. குளோரோ புளுரோ கார்பன் (CFC) 844. சர் வில்லியம் ஹெர்ஷெல் 845. ஸ்ட்ரேடோஸ்பியர் 846. நீரின் கொதிநிலை உயர்த்தப்படுவதால் 847. பனாஜி (கோவா) 848. கிரகாம்பெல் 849. ரான்ட்ஜென் 850. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 851. பிப்ரவரி 28 852. கொடைக்கானல் 853. பாதோம் மீட்டர் 854. அமிலம் 855. ஜான் டால்டன்

27

இந்திய அரசியலமைப்பு
781. பாராளுமன்றத்தில் இரு அவைகளும் கூட்டப்படாமல் இருக்கும்போது சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடியரசு தலைவருக்கு அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
782. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனையாவது சட்டத்திருத்தத்தால் திருத்தப்பட்டது?
783. இந்தியாவில் நிதி நெருக்கடி எத்தனை தடவை நடைமுறைப்படுத்தப்பட்டது?
784. கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கு மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை எந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
785. தற்போதுள்ள லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும்?
786. பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டவடிவம் பெறுவதற்கு எத்தனை நிலைகளை கடந்துவர வேண்டும்?
787. மரண தண்டனையை நீக்கி மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
788. இந்திய துணை பிரதமராக பதவி வகித்த காலத்தில் இறந்தவர் யார்?
789. குடியரசுத் தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவியில் யாரும் இல்லாதபோது, யார் அப்பணியை மேற்கொள்ள முடியும்?
790. தூக்குத்தண்டனையை ரத்துசெய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
791. மகாராஷ்டிரம், குஜராத் எந்த மாநி லத்தில் இருந்து எப்போது பிரிக்கப் பட்டு தனி மாநிலம் ஆனது?
792. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி என அழைக்கப்படுபவர் யார் ?
793. உள்ளாட்சி அரசாங்க அமைப்பில் கடைசி நிலை என எதை அழைக்கிறோம்?
794. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?
795. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது பாராளுமன்றம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?
796. மத்திய அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கும் மிகாமல் பிரதமர் நியமித்துக்கொள்ளலாம் என எத்தனையாவது சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
797. இந்திய அரசியலமைப்பின் முகவுரை முதன்முதலில் எப்போது திருத்தம் செய்யப்பட்டது?
798. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் தகராறை தீர்த்துவைக்கும் அமைப்பு எது?
799. மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை எப்போது கொண்டுவரப்பட்டது?
800. நெருக்கடி காலத்தில் ஒரு மாநில சட்டப்பேரவையின் காலத்தை நீட்டிப்பு செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
801. இந்திய பாராளுமன்ற வரலாற்றில் எந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் "குற்றஞ்சாட்டப்படல்" (Impeachment Proceeding) நடவடிக்கை எடுக்கப்பட்டது?
802. உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
803. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
804. இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
805. மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசு தலைவருக்கு எந்த விதியில் வழங்கப்பட்டுள்ளது?
806. நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது?
807. எந்த மாநிலம் 10-வது மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தது?
808. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா (Soul) என அழைக்கப்படுவது எது?
809. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
810. லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
811. இந்தியாவில் பிரிந்த முதல் மொழிவாரி மாநிலம் எது?
812. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?
813. தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை?
814. மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
815. தற்போதைய மக்களவை (16-வது மக்களவை) சபாநாயகர் யார்?
விடைகள்
781. பிரிவு 123782. 42-வது சட்டத்திருத்தம் 783. ஒருதடவை கூட இல்லை 784. 97-வது சட்டத்திருத்தம் (2012) 785. 2026-ம் ஆண்டு வரை 786. 5 நிலைகள் 787. குடியரசுத் தலைவர் 788. சர்தார் வல்லபாய் படேல் 789. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 790. இல்லை 791. மும்பை மறுசீரமைப்பு சட்டம் 1960-ன்படி 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது 792. பி.ஆர்.அம்பேத்கர் 793. கிராம பஞ்சாயத்து 794. குடியரசுத் துணைத்தலைவர் 795. ஏப்ரல் 1957 796. 91-வது சட்டத்திருத்தம் 797. 1976-ம் ஆண்டு 798. உச்சநீதிமன்றம் 799. 1959-ல் 800. பாராளுமன்றம் 801. நீதிபதி வி.ராமசாமி 802. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் 803. ஆர்.கே. சண்முகம் செட்டியார் 804. 1957 805. விதி எண் 72 806. 76-வது சட்டத்திருத்தம் 807. ஜம்மு-காஷ்மீர் 808. முகப்புரை 809. ஜனவரி 2, 1957 810. தலா ஒரு உறுப்பினர் 811. ஆந்திரா 812. 39 813. 18 814. 356 சட்டப்பிரிவு 815. சுமித்ரா மகாஜன்

26

இந்திய அரசியலமைப்பு
746. இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் (Central List) உள்ள துறைகள் எத்தனை?
747. மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன?
748. பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை?
749. இந்திய தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்து எந்த பதவிக்கு இணையானது?
750. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பங்கீடு குறித்து பரிந்துரை செய்ய எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு நியமிக்கப்படுகிறது?
751. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளும், நீதித்துறையின் நீதிப்புணராய்வு அதிகாரமும் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
752. சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்டத்திருத்தம் எது?
753. மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார்?
754. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவு தேர்தல் ஆணையம் அமைக்க வகைசெய்கிறது?
755. மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சட்டப்படி யாரிடம் இருக்கிறது?
756. குடியரசுத்தலைவர் ஓராண்டில் குறைந்தபட்சம் எத்தனை முறை பாராளுமன்றத்தை கூட்டுகிறார்?
757. லோக்சபா எனப்படும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
758. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது குடியரசு துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பொறுப்பு வகிக்கலாம்?
759. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக நியமிக்கப்படும் ஒருவர், எவ்வளவு காலத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
760. எந்த ஒரு அமைச்சரையும் பதவி விலகக்கோரும் அதிகாரம் படைத்தவர் யார்?
761. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம்பெற்ற அமைப்பு எது?
762. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக செயல்படுவது எது?
763. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) எப்போது கொண்டுவரப்பட்டது?
764. மாநில ஆளுநரை எந்தவித காரணமும் குறிப்பிடாமல் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார்?
765. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?
766. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பவர் யார்?
767. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின்னரும் அடுத்த புதிய சட்டப்பேரவை முதல் தடவையாக அமரும் வரை பதவியில் நீடிப்பவர் யார்?
768. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
769. இந்திய தலைமை தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
770. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எந்த தேர்தல் ஆணையம்?
771. நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
772. மாநகர தந்தை, மாநகரின் முதல் குடிமகன் என அழைக்கப்படுவர் யார்?
773. கிராம சபை ஆண்டுக்கு எத்தனைமுறை கூட வேண்டும்?
774. குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
775. உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
776. கிராம ஊராட்சித் தலைவர் எந்த முறையில் தேர்வுசெய்யப்படுகிறார்?
777. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆனது?
778. மன்னர் மானிய ஒழிப்புக்கு வகை செய்த சட்டத்திருத்தம் எது?
779. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
780. குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அதிகாரம் எந்தப்பிரிவில் உள்ளது?
விடைகள்
746. 97
747. 66
748. 47
749. உச்சநீதிமன்ற நீதிபதி
750. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
751. கனடா
752. 1978-ம் ஆண்டின் 44-ஆம் சட்டத்திருத்தம்
753. குடியரசுத்தலைவர்
754. சட்டப்பிரிவு 324
755. குடியரசுத்தலைவர்
756. இரண்டுமுறை
757. குடியரசுத்தலைவர்
758. 6 மாதங்கள்
759. 6 மாதங்கள்
760. பிரதமர்
761. பாராளுமன்றம்
762. உச்ச நீதிமன்றம்
763. 2005
764. குடியரசுத்தலைவர்
765. ஆளுநர்
766. ஆளுநர்
767. சட்டப்பேரவை சபாநாயகர்
768. 62
769. 6 ஆண்டுகள்
770. மாநில தேர்தல் ஆணையம்
771. 74-வது சட்டத்திருத்தம்
772. மேயர்
773. 4 முறை
774. 1984
775. ரிப்பன் பிரபு
776. மக்களால் நேரடியாக
777. 11 மாதங்கள், 17 நாட்கள்
778. 26-வது சட்டத்திருத்தம்
779. 31-வது சட்டத்திருத்தம்
780. சட்டப்பிரிவு 143

பிரபாகரன்

பிரபாகரன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ளும் முன் அவரது வரலாற்றை பார்ப்போம்.
"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு...!" இப்படிச் சொன்னவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.
அப்படிப்பட்ட மாமனிதனின் பிறந்ததினம் இன்று: அவரை பற்றி கூற இந்த ஒரு இணையப்பக்கம் போதாது. இருந்தாலும், எவ்வளவு முடியுமே அவ்வளவு சுருக்கமாக எனக்கு தெரிந்த கடுகளவு விசயங்களை கூறுகின்றேன்.
பிரபாகரன் பற்றியும் விடுதலைப்புலிகளின் வீரத்தைப் பற்றியும் சொல்ல சொல்ல மகா கோழைக்கு கூட வீரம் தானாகவே முறுக்கேறும். அப்படி பட்ட வீர மாந்தர்கள் இன்று அடையாளமற்றுப்போயுள்ளனர்.
வாழ்க்கைக் குறிப்பு: இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில்   திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில்  பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். கடந்த 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
வீட்டிலிருந்து வெளியேறினார்: மாணவராக இருந்த போதே பிரபாகரன் தமிழ் ஆதரவாளர்கள் குழுவில் இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார் தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.
பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, “உங்களுக்கோ, குடும்பத் துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம். என்போக்கில் விட்டு விடுங்கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின் வீடு திரும்பவேயில்லை. கடந்த 1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறையும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது.
புதிய தமிழ்ப் புலிகள்: பார்லிமென்டில் தமிழ்த்தலைவர்களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாணவர் பேரவை துவங்கப்பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை “தம்பி’ என்றே எல்லாரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பஸ்சை எரிப்பது என்று முடிவு செய்தனர். அதன் படி 16 வயதாக இருந்த பிரபாகரன், பஸ்சை எரித்து தனது போராட்டத்தை  துவக்கினார்.
மாணவர் பேரவையில் இருந்தவர்களை, சிங்கள போலீசார் கைது செய்து கொழும்பில்  சித்திரவதை செய்தனர். இச்சூழ்நிலையில் பிரபாகரன் தமிழகம் வந்தார். பின் 1972ல் இலங்கை திரும்பிய அவர், “புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தை துவக்கினார். ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.
முதல் ராணுவ நடவடிக்கை: கடந்த 1974ம் ஆண்டில் யாழ்ப்பான நகரில் தமிழ் ஆதரவு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒன்பது பேர் பலியாயினர்.  இச்சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, 1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த, யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப் பட்டார். துரையப்பா, இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர், தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தவர். இச்சம்பவத்தை முன்னின்று நடத்தியவர் பிரபாகரன். இதுதான் பிரபாகரனின் முதல் கொலை  நடவடிக்கை.
கடந்த, 1975ல் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்து, ஐந்து லட்சம் ரூபாய் மற்றும், இரண்டு லட்சம் ரூபாய் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றார். இதனால் சிங்கள போலீசார் புதிய தமிழ்ப் புலிகளை அழிக்க தீவிரம் காட்டினர். கடந்த, 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை – தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக,  புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார். இலங்கை உளவுப் படையினரை அழித்தல், போலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், ராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.
கொரில்லா இயக்கம்: கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை ராணுவம் அவரை தேடத் தொடங்கியது.  போலீசார் மீதும், ராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த, 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் இலங்கை பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தனா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப்படுத்தும் வேலையில் பிரபாகரன் ஈடுபட்டார். 1981ல் சிங்கள ராணுவமும், ஐக்கிய தேசிய கட்சியினரும் இணைந்து யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். தெற்காசியாவில் சிறந்ததாக கருதப்பட்டது இந்த நூலகம். 94 ஆயிரம் புத்தகங்கள் சாம்பலாகின.
கடந்த, 1981ல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே ராணுவத்தினர் மீது புலியினர் நடத்திய முதல் தாக்குதல். 1982ல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணிவெடிகுண்டுகளை புதைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த, 1983 உள்ளூராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், ராணுவத்தினரை நிலைகுலைய செய்தது, கண்ணிவெடித்தாக்குதலில் 13 ராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபாகரன் நேரில் நடத்தினார். இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின. இதையடுத்து  கண்ட இடத்தில் போராளிகளை சுடவும், சுட்டுத் தள்ளிய பின் பிணங்களை பிரேத பரிசோதனை இன்றி புதைக்கவும் வழிசெய்யும் ஆணையை சிங்கள அரசு பிறப்பித்தது.
கருப்பு ஜூலை: அப்பாவி தமிழர்கள் மீதான  தாக்குதல்களை  சிங்கள ராணுவம் அதிகரித்தது  கருப்பு ஜூலை என்று அழைக்கப்படும், 1983 ஜூலை 23ல்,  சிங்களர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடந்த, 1983 ஜூலை, தமிழ் ஈழப் போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம்.  ராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபாகரன் தொடங்கினார். அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.
இந்தியா ஆயுத பயிற்சி: கருப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திரா, இலங்கை பிரச்னையில் தலையிடுவது என்று முடிவு செய்தார். இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முயற்சி செய்தார். புலிகளுக்கு ராணுவ பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இந்நேரத்தில், தமிழ் ஈழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர். இந்நேரத்தில் இலங்கை அரசு கலக்கம் அடைந்திருந்தது. தமிழ் ஈழ மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவ்காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார். இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு அக்., 1ம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர்.
திம்பு மாநாடு: கடந்த, 1985ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் போர்நிறுத்தம் ஏற்பட்டது. பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்பின், திரிகோணமலை அருகே, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது. இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவுக்கும் – பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்பு: கடந்த, 1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப்பட்டன. 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், “தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்’ என்றார்.
கடந்த, 1987ம் ஆண்டில் டில்லியில் ராஜிவ்வைச் சந்திக்கும் வழியில், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையும் பிரபாகரன் சந்தித்தார். ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் பற்றி அப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக பிரபாகரன் கூறினார். மற்ற தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்று கூறி, அப்போது ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் நிறைவேறியது.
அமைதிப்படை: இந்த ஒப்பந்தப்படி, ஆயுதங்களை புலிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இந்திய அமைதிப் படை இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடக்காமல் கண்காணிக்கும். இதுபற்றி பேசிய பிரபாகரன், “மக்களது விடுதலைக்காக, விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து, தமிழ் ஈழ மக்களின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறது.
நாங்கள் ஆயுதங்களை அளிக்காவிட்டால் இந்திய ராணுவத்துடன் மோதும் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழ் ஈழ தனி அரசே நிரந்தரத் தீர்வைத் தரும்’ என்றார். பலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலிருந்த விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கோரி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய கொள்கை உறுதியால் உண்ணாவிரதத்திலேயே மரணமும் அடைந்தார்.
திலீபன் மரணத்துக்குப் பின், விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. “இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது’ என்று கூறிய ஏழு புலிகள் சயனைடு குப்பிகளைச் சாப்பிட்டு மரணம் அடைந்தனர். புலிகளும் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் போராடுவது குறித்து, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், “இந்திய ராணுவம் புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் எங்களது தற்காப்புக்காகப் போராடி வருகிறோம்’ என்று பிரபாகரன் எழுதியிருந்தார்.
1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவ்வுக்கு எழுதினார் பிரபாகரன். இந்த சமயத்தில் பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார். பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடந்து கொண்டது எனக் கூறி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராணுவத்தினரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை. அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.
குற்றச்சாட்டுகள்: கடந்த, 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். ராஜிவ் - ஜெயவர்தனே மற்றும் அமைதிப்படை விவகாரங்களில் பிரபாகரன் அதிருப்தி அடைந்தது அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. 2006ல் ராஜிவ்படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, 'ஒரு துன்பியல் சம்பவம்’ என்றார்.
தமிழ் ஈழ விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலைகளிலும், 1990ல் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் பத்மநாபா மற்றும் அவரது சகாக்கள் 14 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதிபர் பிரேமதாசா, அதிபர் வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன்  குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது.
முப்படை அமைப்பு: புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை – 1984 ம் ஆண்டு முதல் பிரபாகரன் முயற்சி செய்ததன் விளைவாக 1992ல் உருவாக்கப் பட்டது) மற்றும் வான்புலிகள் (விமானப்படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.
கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம்போல் வெற்றி பெறவில்லை. இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது.
2005ல் ராஜபக்ஷே அதிபர் ஆனபின், நார்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில் பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.
கடந்த ஆண்டு இறுதியில், புலிகளின் கிழக்குப் பகுதியில் கடுமையாக சண்டை நடந்தது. 2009 புலிகளுக்கு சோகமானதாகவே இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது. ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. இப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.
இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக் கணக்கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். புலிகள் இருக்கும் இடத்துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் அந்தோணி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஈழப் போராட்டத்தில் லச்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.
வான்படை உருவாக காரணமான சார்லஸ்: புலிகளின் வான்படை உருவாக காரணமாக இருந்த சார்லஸ் அந்தோணி பலியானது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அதிகாலை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிவுக்கு வந்த பின், ராணுவ வீரர்கள் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டையில் பலியான புலிகளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், 24 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் சடலம் என தெரிய வந்துள்ளது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் சண்டையில் பலியானார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் அந்தோணி இறந்த நிலையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. சார்லஸ், ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர். புலிகள் வான்படையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். தகவல் தொடர்பு பிரிவையும் கவனித்து வந்தார். சமீப காலமாக நடந்த சண்டைகளை சார்லஸ் தான் தலைமையேற்று நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதேபோல், தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின் புலிகள் அரசியல் பிரிவு தலைவராக பதவியேற்றவர் நடேசன். இவர், இலங்கையில் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பிரபாகரனை உயிருடன் பிடித்து கோடரியால் தலையை வெட்டி கொன்றனர். மேலும் பிரபாகரன் இறந்ததற்கான முழுஆதரத்தையும் வெளியிடாமல் தமிழர்களை குழப்பநிலையிலேயே வைத்திருந்தது ராஜபக்சே அரசு. பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவர் வரும் வரை அனைவரும் அமைதிகாப்போம் என உலகத்தமிழகர்கள் எண்ணி எண்ணி நாட்கள் ஓடியது.
இதை எல்லாம் அறிந்தும் அறியமாலும் சில போலி தமிழ் தேசியவாதிகள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என இன்று வரை உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்துவருகின்றனர். இன்னும் தமிழ் மக்களும் அவர்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து ஏமாந்து கொண்டுதான் இருகின்றனர்.
பிரபாகரன் உடல் தான் பிரிந்ததே தவிர அவருடைய உயிர் இன்னும் உணர்வு பூர்வமான, உண்மையான தமிழர்கள் இதயத்தில் வாழ்த்துகொண்டு தான் இருக்கின்றது. போலி தமிழர்களை கூறுவதை கேட்டு யாரும் ஏமாற வேண்டாம். அவர் கூறியது போன்றே 2009 ஆம் ஆண்டே அடுத்த தலைமுறையினரிடம் தமிழிழ பொறுப்பை ஒப்படைத்து விட்டார். இந்த உண்மை தமிழர்களுக்கு புரியக்கூடாது என்பதற்கே பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை என்ற நாடகம்.
இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள் உண்மை என்ன என்று. பிரபாகரனை எங்கும் தேட வேண்டாம்; உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார். உங்கள் வீரத்தை தட்டி எழுப்புவதன் மூலமே அவர் மீண்டும் உயிர் பெறுவார்
பிரபாகரனின் பிறந்த தினம்: இன்று நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இது மணிவிழா ஆண்டு. வழக்கமாகவே நவம்பர் மாதக் கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப் போராளியான கேப்டன் சங்கர் மரணித்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள். எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27ம் தேதிதான் வானொலியில் பேசுவார். அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காகக் காத்திருப்பார்கள். 2009ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை.
பிரபாகரன் 60வது பிறந்த நாள், மணிவிழா பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர் ஈழ ஆதரவாளர்கள்.

விஸ்வநாத் பிரதாப் சிங்

: விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார்
மனிதர்; கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார். இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார், அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.
காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.
தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின்  நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார்.
இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன. சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

 காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் இவரே.
ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நாளில் மரணம் அடைந்தார்...

Sunday 23 November 2014

25

இந்திய அரசியலமைப்பு
711. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிறது?
712. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்?
713. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்?
714. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?
715. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன?
716. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்?
717. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
718. ஓர் அரசியல் கட்சி, தேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்?
719. அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது?
720. இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படும்?
721. 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
722. எந்த சட்டங்களுக்கு எதிராக நீதிப்பேராணை (Writ) வரம்பு வழங்கப்படுவதில்லை?
723. இந்திய அரசியலமைப்பு பற்றிய இடைவிளக்கங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த தலைப்பின்கீழ் இடம்பெறுகின்றன?
724. மத்திய அரசு ஊழியர் ஒருவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து எங்கு முறையிடலாம்?
725. இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
726. எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது?
727. இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை?
728. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
729. தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது?
730. இந்திய மாநிலங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
731. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு எந்த வகையான குடியுரிமையை வழங்கியுள்ளது?
732. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
733. அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை?
734. நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை என்ன?
735. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
736. ஜார்கண்ட், சதீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
737. இந்திய அரசியலமைப்பில் எந்த விதியில் மைய நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன?
738. மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
739. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
740. 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
741. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
742. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபாவுக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
743. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
744. ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வுபெறுகிறார்கள்?
745. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்?
விடைகள்
711. குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும் 712. 35 713. லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம் 714. குடியரசுத்தலைவருக்கு 715. 65 716. 6 மாதங்கள் 717. 61-வது சட்டத்திருத்தம் 718. 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் 719. நாட்டின் பொருளாதார வளம் ஒரு சாராரிடம் மட்டுமே குவிவதை தடுத்து சமமான பகிர்வை உறுதி செய்வது 720. ராஜ்ய சபாவை கலைக்க இயலாது. 721. போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தலி ஆகிய 4 மொழிகள் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரத்தை சட்டமாக்கியுள்ளது. 722. MISA, NSA 723. மேல்முறையீட்டு நீதி வரம்பு (Appellate Jurisdiction) 724. உச்சநீதிமன்றம் 725. ஜூன் 1947 726. இந்திய சுதந்திரச் சட்டம் 1947 727. 299 728. நவம்பர் 26, 1949 729. 69-வது சட்டத்திருத்தம் 730. மக்கள் பேசும் மொழி அடிப்படையில் 731. ஒற்றைக்குடியுரிமை 732. 1955-ம் ஆண்டு சட்டம் 733. 6 734. அடிப்படை உரிமைகள் 735. 11 736. 84-வது சட்டத்திருத்தம் 737. விதி 52-151 738. 77-வது சட்டத்திருத்தம் 739. 545 740. 86-வது சட்டத்திருத்தம் 741. 250 742. 12 743. 6 ஆண்டுகள் 744. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 745. லோக் சபா

24

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்
676. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்? 677. முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
678. இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? 679. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?
680. தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?
681. கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
682. விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
683. சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார்?
684. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?
685. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது?
686. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
687. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார்?
688. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது?
689. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?
690. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது?
691. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்?
692. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?
693. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது?
694. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
695. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?
696. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?
697. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்?
698. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்?
699. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்?
700. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
701. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்
702. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்?
703. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?
704. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்?
705. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?
706. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
707. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
708. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
709. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
710. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
விடைகள்
676. மேஜர் மன்ரோ 677. வாரன் ஹேஸ்டிங்ஸ் 678. டல்ஹவுசி பிரபு 679. மெக்காலே பிரபு 680. மருது சகோதரர்கள் 681. நானா சாகிப் 682. 1858 683. பெண்டிங் பிரபு 684. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் 685. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 686. ரிப்பன் பிரபு 687. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் 688. கிலாபத் இயக்கம் 689. நேரு 690. 1931 691. லிண்லித்தோ பிரபு 692. லட்சுமி 693. 1919 - 1947 694. 1938 695. 52 வினாடிகள் 696. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 697. அன்னிபெசன்ட் 698. கர்சன் பிரபு 699. பாலகங்காதர திலகர் 700. சுவாமி தயானந்த சரஸ்வதி 701. லாலா லஜபதி ராய் 702. கான் அப்துல் கபார்கான் 703. பங்கிம் சந்திர சட்டர்ஜி 704. சுவாமி விவேகானந்தர் 705. அக்டோபர் 2, 1869 706. வினோபா பாவே 707. ஜனவரி 30 708. ராபர்ட் கிளைவ் 709. 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி 710. அன்னிபெசன்ட் அம்மையார்

23

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்
656. லண்டனில் இந்திய சுயாட்சி சங்கத்தை (Society of Indian Home Rule) தோற்றுவித்தவர் யார் ?
657. “இந்திய முசல்மான்கள்” என்ற நூலை எழுதியவர் யார்?
658. “யுகாந்தர்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?
659. பைசாகி தினம் எந்த மதத்தினரால் புனித தினமாக கொண்டாடப்படுகிறது?
660. லக்னோ உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன?
661. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் தினம் என்று கொண்டாடப்பட்டது?
662. காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தை எப்போது ஆரம்பித்தார்?
663. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது?
664. லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாள் எது?
665. காந்திஜி உப்பு சத்தியாkdகிரகத்தின் போது கைதுசெய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
666. 1935 இந்திய அரசாங்க சட்டம் வருவதற்கு முன்னோடியாக இருந்தது எது?
667. இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார்?
668. இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் யார்?
669. இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
670. சுயராஜ்ஜிய தினம் எப்போது கொண்டாடப்பட்டது?
671. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான தீர்மானம் எங்கு எப்போது நிறைவேற்றப்பட்டது?
672. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடந்தது?
673. காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார் ?
674. வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார் ?
675. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?
விடைகள்
656. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
657. வில்லியம் ஹண்டர்
658. விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா
659. சீக்கியர்கள்
660. முஸ்லீம் லீக், காங்கிரசுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது
661. 17.10.1919
662. 1922 பிப்ரவரி 12 சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின்பு
663. முடிமன் குழு
664. 26.1.1930
665. புனேயில் உள்ள எரவாடா சிறை
666. 1933 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை
667. நேரு மற்றும் போஸ் (1928-ல்)
668. வின்லித்கோ பிரபு
669. 1947 ஜூலை 18,
670. 1932 ஜனவரி 26
671. 1942 ஆகஸ்ட் 7, 8-ம் தேதியில் பம்பாய் நகரில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில்.
672. பம்பாய்
673. 1930 மார்ச்
674. ராஜாஜி
675. அமிர்தசரஸ்
(கடந்த 18-ம் தேதி அன்று வெளியான “இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? (வினா எண் 586) என்ற கேள்விக்குப் பதில் 1986 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1956 என்பதுதான் சரி.)
புவியியல் பாடத்தை எப்படி படிக்க வேண்டும்?
புவியியல் பாடத்திலும் கணிசமான எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. புவியியலை பொருத்தமட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், காடுகள், முக்கிய நதிகள், ஆறுகளின் பிறப்பிடம், கடலில் கலக்குமிடம், மண்வகைகள், அங்கு விளையும் பயிர்வகைகள், போக்குவரத்து வசதிகள் (நெடுஞ்சாலை, ரயில்வே, விமானவழி, நீர்வழி), துறைமுகங்கள் (இயற்கை துறைமுகம், செயற்கை துறைமுகம் என பிரித்துப் படிக்க வேண்டும்), குன்றுகள், மலைகளின் வரிசைப்படியான அமைப்புகள், சுற்றுலாத்தலங்கள், பருவமழை பொழியும் இடங்கள், மக்கள்தொகை விவரம் என பட்டியலிட வேண்டும். இந்தியா, தமிழ்நாடு, மாவட்ட வாரியாக வரைபடங்களை வீட்டின் சுவரில் மாட்டி தினமும் பார்த்து பயிற்சி பெற வேண்டும்.
மேற்சொன்ன விவரங்களில் தமிழ்நாட்டுக்கு மட்டும் குறிப்பாக படித்து குறிப்பெடுத்துக்கொள்வது முக்கியம். தமிழ்நாட்டில் கரும்பு, நெல், பருத்தி, பயறு வகைகள் எங்கெங்கு விளைகின்றன? எங்கெங்கு விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன? இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் பற்றிய விவரம், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள், தானே புயல், ஜல்புயல் ஹூத் ஹூத் புயல் போன்ற புயல்கள் எப்போதெல்லாம் ஏற்பட்டன? அவற்றுக்கு எவ்வாறு எந்தெந்த நாடுகள் பெயர் சூட்டுகின்றன? என்பது முதற்கொண்டு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் பூகோளநிலை, ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, கலை போன்றவை குறித்து விளக்கமாக தெரிந்துகொண்டு குறிப்பெடுத்துப் படித்தால் புவியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.

Wednesday 19 November 2014

1

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத் தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
`வெற்றிக்கொடி' பகுதி மூலம் உயர்கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக ஏராளமான தகவல்களை மாணவ, மாணவி களுக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்
இந்து' நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவி களுக்கு உதவும் வகையில் நல்ல தரமான மாதிரி வினா-விடைகளை வெளியிட இருக்கிறது.
டிப்ஸ்.. டிப்ஸ்..
• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!

2

குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.
அலகு-1 (பொது அறிவியல்)
இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.
வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.
தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.
விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.
அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)
வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.
அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.
புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.
பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.
அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.
அலகு 3 (புவியியல்)
பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.
அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)
சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.
அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)
அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அலகு 6 (இந்திய பொருளாதாரம்)
இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)
இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.
அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)
கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு.

3

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.
5 உலக புற்றுநோய் தினம் எது?
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?
விடைகள்:
1. 52 ஆண்டுகள்
2. செம்ஸ்போர்டு பிரபு
3. கிருஷ்ணா நதி
4. 1. ராஜஸ்தான்
2. மத்திய பிரதேசம்
3. மகாராஷ்டிரா
5. பிப்ரவரி 4
6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. அமெரிக்கா
9. ஜப்பான்
10. 60
11. குஜராத் (அகமதாபாத்).
12. 962
13. 1912
14. லடாக் விமானத்தளம்.
15. விவசாயத் துறையில்
16. முதலாவது திட்டம்
17. பிரித்வி
18. 5 ஆண்டுகள்
19. 1945
20. 1944
21. Income
22. Rate of Indirect Tax
23. 2002
24. 4-வது இடம்
25. சாளுக்கியர்கள்
26. ஜோகன்ஸ்பர்க்
27. அமெரிக்கா
28. அயர்லாந்து
29. டாக்டர். ஜன் மத்தால்
30. 2002
31. 1951
32. வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்
33. பிளிம்சால் கோடுகள்
34. 2003
35. சிக்கிம் (0.05%)
36. ஏழாவது இடம்
37. 640
38. 74.04% (2001-ல் 64.38%)
39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. வாரன் ஹேஸ்டிங்ஸ்

4

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?
43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?
44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது?
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
51. உலோகங்களில் லேசானது எது?
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?
54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்?
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?
61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது?
63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது?
64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?
65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்?
67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்?
68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை?
69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?
70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
விடைகள்: 41. சுவிட்சர்லாந்து 42. 8.10.1932 43. 8 தலைப்புகள் 44. நெதர்லாந்து 45. நரசிம்மவர்மன் 46. இத்தாலி 47. 65 48. பத்திரிக்கை 49. பாதுகாப்புத்துறை 50. கோபால கிருஷ்ண கோகலே 51. லித்தியம் 52. அரிஸ்டாட்டில் 53. கொன்றைவேந்தன் 54. மூதுரை 55. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 56. 47 57. 61 58. 42-வது சட்டத்திருத்தம் 59. 6.8.1952, பிரதமர் 60. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர் 61. 1945 62. பிரிவு 315 (Article 315) 63. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL) 64. பிரிவு எண் 136 65. கர்ணம் மல்லேஸ்வரி 66. சரோஜினி நாயுடு 67. சிவபாக்கியம் 68. 1 கோடியே 20லட்சம் 69. சீனா 70. மகாராஷ்டிரா

5

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?
72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?
73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?
82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?
83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?
84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?
85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?
88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?
89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?
91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?
93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?
94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?
95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?
96. தமிழக அரசின் மாநில மரம் எது?
97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?
101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது? 104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?
105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?
106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?
107. உலகின் மிகப்பெரிய நாடு எது?
108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?
109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?
110. யூத மதத்தின் புனித நூல் எது?
விடைகள்:
71. 1,492
72. வாஷிங்டன்
73. ரா.பி.சேதுப்பிள்ளை
74. 1955
75. 1967
76. 1968
77. 1996
78. 12,500
79. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
80. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
81. ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு
82. மேட்டூர் அணை
83. பீஜிங் (சீனா)
84. கனடா - வான்கோவர் நகரம்
85. ஓடோஸ்கோப் (Odoscope)
86. பெங்களூரு
87. மகாராஷ்டிரா
88. பீகார்
89. 18 சதவீதம்
90. 2 சதவீதம்
91. பாலகங்காதர திலகர்
92. 7,516 கி.மீ
93. அல்பேனியா
94. வங்காளதேசம்
95. 4,120
96. பனை மரம்
97. 47 வருடங்கள்
98. 19 வருடங்கள்
99. AB
100. 32,80,483 ச.கி.மீ.
101. 75,166 கி.மீ
102. 15,200 கி.மீ
103. பிரம்மபுத்திரா
104. ஜெர்மனி
105. அகிலன் - ஜெயகாந்தன்
106. குஜராத், ஆந்திரம்
107. ரஷ்யா
108. பரம்வீர் சக்ரா
109. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
110. தோரா (Torah)

6

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
111. "சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்?
112. "வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?
113. குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?
114. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது?
115. Femicide என்றால் என்ன?
116. Genocide என்பது என்ன?
117. இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?
118. ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?
119. சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
120. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?
121. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
122. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?
123. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?
124. Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?
125. "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?
126. இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?
127. நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?
128. "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?
129. பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?
130. பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
131. இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?
132. காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
133. இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?
134. "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?
135. I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?
136. "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
137. கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?
138. "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?
139. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?
140. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
141. தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?
142. அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?
143. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
144. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
145. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை?
146. இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?
147. சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
148. இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?
149. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை?
150. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?
விடைகள்
111. முதலாம் குலோத்துங்கன்
112. முதலாம் நரசிம்ம பல்லவன்
113. முதலாம் மகேந்திர வர்மன்
114. உருகுவே - 1930
115. பெண்ணை கொல்வது
116. இனப்படுகொலை
117. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)
118. எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ
119. 1711-12-ல் டேனியர்களால்
120. 1935-ம் ஆண்டு சட்டம்
121. 20.12.1996-ல்
122. பல கட்சி முறை
123. இரு கட்சிமுறை
124. மத்தியப் பிரதேசம்
125. சோலி சொராப்ஜி
126. மகாராஜா ரஞ்சித் சிங்
127. டல்ஹவுசி பிரபு
128. ராஜாராம் மோகன்ராய்
129. நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது
130. அன்னி பெசன்ட் அம்மையார்
131. ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்.
132. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
133. தாதாபாய் நௌரோஜி
134. தாதாபாய் நௌரோஜி
135. சுரேந்திரநாத் பானர்ஜி
136. பிபின் சந்திரபால்
137. பால கங்காதர திலகர்
138. பால கங்காதர திலகர்
139. ஹென்றி டுனான்ட் (Henri Dunant)
140. மேரி கியூரி (இயற்பியல் - 1903)
141. 31 நாடுகளில்
142. ஜனநாயகக் கட்சி
143. ராஜாஜி
144. பிரிவு 106
145. 1. வரதட்சணை தடுப்பு சட்டம்-1961
2. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978
3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002
146. புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்
147. ஜெனீவா
148. மும்பை
149. 906
150. 1,706