Wednesday 22 July 2015

செல்ல மகளே.....!!

செல்ல மகளே.....!!

தைரியமாயிரு...
திமிராய் அல்ல,

கனிவாய் பேசு....
குழைவாய் அல்ல,

வெளிப்படையாக இரு...
வெகுளியாய் அல்ல,

சுய ஒழுக்கம் தவறாதே...
சுயநலவாதியாய் இராதே,

எளிமையாய் இரு .....
சுத்தம் மறவாதே,

தெளிவாக முடிவெடு....
குழப்பி கொள்ளாதே,

துணிச்சலோடு இரு.....
துணிகரமாய் அல்ல ,

தன்னம்பிக்கை தளராதே.....
கர்வம் ஒருபோதும் வேண்டாம் ,

பிறரை மதிக்க தவறாதே....
சுயமரியாதையை விட்டுதராதே
smile emoticon

No comments:

Post a Comment