Thursday 19 March 2015

website

http://www.freejobadda.com/lic-aao-recruitment/1136

http://www.phpjabbers.com/free-computers-store-template-89.php
http://www.maalaimalar.com/2014/01/23084900/AJ-Paulraj-wins-Marconi-Prize.html
http://www.shaadi.com/join-now/fate-reg
http://temple.dinamalar.com/news.php?cat=242&pgno=4
http://aptitude.students3k.com/
http://www.isac.gov.in/CentralBE/advt.jsp
http://www.maalaimalar.com/2014/03/09055124/Women-in-parliament-india-gets.html
 post
http://www.pasadrexam2014.in/
http://mathforum.org/library/drmath/sets/select/dm_handshakes.html
http://www.gr8ambitionz.com/p/aptitude-topics-for-bank-exams.html

புலம்பாதே போராடு ...

எப்போதும் புகழ்ச்சிக்கு
மயங்காதிரு ...
எக்கணமும் இகழ்ச்சிக்கு
கலங்காதிரு ...
காலம்கொடுத்த வேலையென்று
கடமைசெய் ...
காலம்என்றும் முடியக்கூடும்
விரைந்துசெய் ...
உன்கணக்கு முடிந்துவிட்டால்
ஒய்வுதான்
உயிரிருக்கும் நேரமெதற்கு
ஒய்வுதான் ?
கொண்டுபோக இவ்வுலகில்
ஏதுமில்லை ...
தந்தபோனால் கொண்டுபோவாய்
பேருதான் ...


புலம்பாதே போராடு ...
================

புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...

வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...

திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...

எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...

ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...

போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...

நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்

வாழ்க்கை ஓரிரு நாட்களில்.. ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது. நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. இந்த நெடிது நாள் வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமாக உள்ளன. அதை விடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிட்டு அதைச் சரி செய்வதற்கே வாழ்நாள் முழுவதும் அல்ல்ல்படுகின்ற சிலரை நாம் வாழ்க்கையில் காண்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கையாகும்.
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
சிலர் அவசர அவரசமாக முன்னேறிவிட வேண்டும். பொருள் சேர்த்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். அதனால் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.
ஒரு மளிகைக் கடைக்கார்ரை எடுத்துக்கொள்வோம். மக்களுக்குக் கிடைக்காத ட்டுப்பாடான சர்க்கரைப ஓன்ற ஒரு பொருள் அவர் கடையில் மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இயல்பான விலை கிலோ எட்டு ரூபாய். ஆனால் தட்டுப்பாடு என்பதால் பல இடங்களிலும் பத்து ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் எல்லா இடங்களிலும் தீர்ந்துவிட்டது. இவர் ஒருவர் கடையில் மட்டும்தான் இருக்கிறது.
தற்காலிக வெற்றி
இவரது வாடிக்கையாளர்களே வந்து கேட்கிறார்கள். இவர் என்ன செய்ய வேண்டும்? அதே பத்து ரூபாய்க்குக் கொடுத்தால் யாரும் வருத்தப்படமாட்டார்கள். அல்லது இன்னும் ஓரிரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றால்கூட பெரிதாக வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் யாரைப் பற்றியும், கவலைப்படாமல் எவராக இருந்தாலும் எப்படி இருந்தாலும் வாங்கித்தானே ஆக வேண்டும் என்ற கருத்தில் கிலோ 225 ரூபாய் என்று சொல்கிறார் என்றால் மக்கள் என்ன செய்வார்கள்? அவசத் தேவைக்கு வாங்கவே செய்வார்கள். ஆனால், இயல்பான நிலைமை சீரான காலத்தில் – அவர் கடையை நாடமாட்டார்கள். மெல்ல மெல்ல அவரைப் புறக்கணித்து விடுவார்கள்.
அந்தக் குறுகிய காலத்தில் அவர் அடைந்த இலாபத்தைவிட நீண்ட காலத்தில் அவர் ‘அடையப்போகும் இழப்புப் பெரிதாக இருக்கும். இத்தகையவர்கள்தான் தற்காலிக வெற்றியைப் பெரிதாக எண்ணி நிரந்தர வெற்றியை இழந்து விடுகிறார்கள்.
சிலர் உண்மையை மறைந்து அப்போதைக்கு ஏதேனும் ஒன்று சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள். அப்போதைக்கு அவர்கள் தற்காலிமாக வெற்றி பெறுவது உண்மைதான். இப்படியே ஓரிரு சமயங்களில் வெற்றி பெற்றுவிடவும் கூடும். ஆனால், இவர் சொன்னதெல்லாம் பொய்யானவை என்ற உண்மை தெரிந்த பிறகு இவர்கள் தொடர்ந்து தோல்வியையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். பின்னர், இவர்கள் திருந்தி உண்மையாகவே நடந்து கொண்டாலும், இவர் உண்மைக்கு மாறானவர், பொய் சொல்பவர் என்றே உலகம் நினைத்து இவரைக் கைவிட்டுவிடும்.
சிலர் உண்மையைப் புறக்கணித்துவிட்டு ஆளுக்குத் தகுந்தமாதிரி நடந்து கொள்வார்கள். அந்தக் குறிப்பிட்ட மனிதர் உயர் பதவியில் அல்லது செல்வாக்கில் உள்ள வரை இவரது காலம் நன்றாகவே ஓடும். இவர் தனக்கு வேண்டாதவரை இந்தச் செல்வாக்கு உள்ள நேரத்தில் பழி தீர்த்துக்கொள்ளவும் கூடும். ஆனால், மேலே உள்ள ஆள் – அதிகாரி போன பிறகு இந்த மனிதர் கண்ட இடத்தில் கல்லடி படவேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும்.
உண்மை
ஆளுக்குத் தகுந்த மாதிரி பணிவாகவோ – அல்லது வேறு எதிர்பார்க்கிற வகையில் நடந்துகொள்வதில் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும்விட உண்மை பெரிதல்லவா? அதை விட்டுவிட்டு என்ன செய்ய முடியும் ? அவலம்தான் மிஞ்சும்.
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தும், ஆட்சியை இழந்தும் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவரையே மதிக்க முடியாத நிலையில் அந்தக் கட்சியில் உள்ள சிலரை மக்கள் மதிக்கவே செய்கிறார்கள். காரணம் அவர்கள் மக்களுக்கு எது நன்மை என்பதையே மனதுள் கொண்டு செயல்படுவதுதான் என்பதை நாம் அறிவோம்.
ஒரு நாடோ, ஒரு நிறுவனமோ, ஒரு குடும்பமோ தற்காலிக வெற்றிக்கு மட்டுமே உழைத்தால், நம் இந்திய நாடுபோல 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழவேண்டியதுதான். நம் நாட்டின் தேவையை உண்ந்துத அரசியல் தலைவர்கள் உணவு, கல்வி,தொழில்கள், சுகாதாரம் என்று தொலைநோக்குடன் செயல்பட்டிருந்தால் ஜப்பானைப்போல நாமும் முன்னேறி இருக்கலாம். நமது திட்டமாக – வேட்டி சேலைத்திட்டம் இருந்ததால் இன்னும் அதனை வழங்கவேண்டிய நிலையிலேயே – மக்கள் வாங்கவேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள்.
ஆதலால் நிரந்தர வெற்றிக்கு வழி, எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளல். எப்போதும் நேர்மையாக நடந்துகொள்ளல், தொடக்கத்தில் இம்முறை சற்றே துன்பம் தருவதாக இருந்தாலும் காலப்போக்கில் இதுவே சிறந்த வழியாக அமையும்.

State Dances

Bharat Natyam – Tamil Nadu;
Bihu – Assam;
Bhangra – Punjab
Chhau – Bihar, Orissa, W. Bengal and Jharkhand;
Garhwali – Uttaranchal;
Garba – Gujarat;
Hattari – Karnataka;
Kathak – North India;
Kathakali – Kerala;
Kutchipudi – Andhra Pradesh;
Khantumm – Mizoram;
Karma – Madhya Pradesh;
Laho – Meghalaya;
Mohiniattam – Kerala;
Mando – Goa;
Manipuri – Manipur;
Nati – Himachal Pradesh;
Nat-Natin – Bihar;
Odissi – Orissa;
Rauf – Jammu & Kashmir;
Yakshagan – Karnataka.

முழு மனதோடு…

மிக விரைவில் களைப்புற்று விடுகிறீர்களா? சரியான காரணம் இதுவென அறியாம லேயே சோர்வுற்று விடுகிறீர்களா? படுக்கைக்குப் போகுமுன் இருந்த உற்சாகம் எழுந்தவுடன் மறைந்து விடுகிறதா?
முதலாவது கருத்து. ஒரு பணியினைத் தொடங்குகிறீர்கள். வேலைதேடும் பணி, வீடு வாங்கும் பணி, மகளின் திருமண முயற்சி, என்று ஒருபுதிய வேலையைத் தொடங்க வேண்டிய கட்டம் வாழ்வில் ஏதோவொரு வயதில் வருகிறது. 20 வயதில், சிலருக்கு 30 வயதில், சிலருக்கு 50 வயதில் என்று அதனதற்கென்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டவுடன் புதிய இலட்சியத் திற்கான முயற்சிகளைத் தொடங்குகிறோம். இடையில் மனதில் சோர்வும் உணர்ச்சிபூர்வமான தடங்கலும் ஏற்படுகின்றன. புதிய இலட்சியத் திற்கான முயற்சிகளைத் தொடங்கு கிறோம். இடையில் மனதில் சோர்வும் உணர்ச்சிபூர்வமான தடங்கலும் ஏற்படுகின்றன. பணியை தொடங்கி யதும் ஏற்படும் மிகப்பெரும் பிரச்சனை அந்தப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் என்பதல்ல கவனம் செலுத்துவதற்கு உரிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் காப்பாற்று தலே. அதை இழப்பதற்கான முக்கிய காரணம் அப்பணியை விருப்பமில்லாமல் தொடங்குதலே ஆகும். அப்பணியில் செலுத்த வேண்டிய உற்சாகத்தில் பாதி, அப்பணியை செம்மையாக முடிக்க வேண்டுமே என்றகவலையால் அடிபட்டுப் போகிறது. எனவே விருப்பத் தோடும் ஆசையோடும் அப்பணியில் கவனம் செலுத்துதல் அவசியமாகிறது. விருப்பத்தோடு செய்யும் பணியில் ஏற்படும் சோர்வைவிட விருப்ப மில்லாமல் செய்யும் பணியில் பத்துமடங்கு அதிக சோர்வு ஏற்படுகிறது.
உங்கள் மகளுக்கு ஒரு வரன் தேடுகிறீர்கள். தான் ஒரு பையனை காதலிக்கும் ரகசியத்தை மகள் வெளியிடுகிறாள். வாக்கு வாதம். வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு அரை மனதோடு திருமண ஏறபாடுகளில் இறங்குகிறீர்கள். அத்திருமண ஏற்பாட்டுப் பணிகள் உங்களை சோர்வுறச் செய்கின்றன. வேறு சாதி, அறிமுகமில்லாத குடும்பம். அவள் வாழ்க்கை எப்படி அமையுமோ என்கிற கவலை இவை யெல்லாம் உங்கள் மனதைக் களைப்புறச் செய்து, எடுத்திருக்கிற திருமண ஏற்பாட்டுப் பணிகளில் அதிக சுமை உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது. உடல்நலம் சீர்கெடுகிறது. எரிந்து விழுகிறீôகள். எல்லோருக்குமே குடும்பத்தில் ஓர் அச்ச உணர்வு ஏற்படுகிறது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மனநிலையை மணப்பெண்ணும் பெற்று திருமணத்தால் அவள் பெறவேண்டிய கனவுகளையும் சந்தோஷங்களையும் இழந்து விடுகிறாள். தனிமைப் படுத்தப்படுகிறாள். அவளைச் சுற்றி இருக்கும் அன்னை, சகோதர சகோதரியர், மாமா, அத்தை, சித்தப்பா என்று எல்லோருக்குமே ஒருவித சோர்வும் களைப்பும் எரிச்சலும் ஏற்பட நீங்களே வழிவகுக்கிறீர்கள். இவ்வாறு இல்லாமல் அவள் காதலை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு சந்தோஷத் துடனும், ஆனந்தத்துடனும் நீஙகள் திருமண ஏற்பாடுகளில் இறங்கினால், உங்கள் பணிகள் இன்பமூட்டுவதாக அமையும். உங்களைப் பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு திருமணப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவர்.
‘முழுமனதோடு’ என்பதற்கும் ‘அரை மனதோடு என்பதற்கும் இடையே இத்தனை வேறுபாடுகள் உள்ளன. முழுமனதோடு செய்யும் செயல் எளிமையானதாகிறது. அரைமனதோடு செய்யும் செயல் சுமைகூடி உற்சாகத்தை பாதிக்கிறது.
சரி, மனதுக்கு முழுமையாகப் பிடிக்காத ஒரு பணியில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது என்கிறீர்களா? அத்தகைய சூழலில் உங்களுக்கு இரண்டுவித முடிவு எடுக்க வாய்ப்புண்டு. ஒன்று அந்தப் பணியை நீங்கள் கைவிட்டுவிட வேண்டும். அல்லது இரண்டு அந்தப் பணியை முழுமனதோடு ஒருவித நேசிப்போடு செய்யத் தொடங்க வேண்டும். இரண்டாவதாக சொன்னது மேலானது என்று உங்களுக்கு தோன்றுகின்றது அல்லவா? ஏனென்றால் உங்களுக்கு விருப்பமான பணி களிலேயே எப்பொழுதும் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் கருதினால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாது. விருப்பமான பணி என்பது எளிதானதாக இருக்கும் ஆனால் தேவையற்றதாக இருக்கும். சினிமாவுக்குப் போவது, பூங்கா வுக்குப் போவது, ஹோட்டலுக்குப் போவது இதுதான் உங்கள் மனதுக்கு விருப்பமான பணியாக இருக்கக்கூடும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, உறவினர் வீட்டுக்கு போய் சில நாட்கள் தங்கி உண்டுகளிப்பது. மெல்லிசை நாடக நிகழ்ச்சிகளுக்குப் போவது இவைகூட உங்களுக்கு விருப்பமே. இன்னும் சிலருக்கு சீட்டு ஆடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகிய தீய பழக்கங்கள் விருப்பமானதாக அமையக்கூடும். பெண்களுக்கு நகைக்கடை களுக்குப் போய் நகை வாங்குவது. புடவைக் கடைக்கு போய் புடவை வாங்குவது, கோயிலுக்குப் போய் வழிபடுவது ஆகியன விருப்பமானவையாக அமையலாம். இதே செயல்களையே வாழ்க்கை முழுவதும் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள். பிறகு வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்படும்?
மனதிற்கு இசைவான மனதுக்குப் பிடித்த பணிகளையே செய்வதில் எவ்வித பயனும் இல்லை. மனதிற்குப் பிடிக்காத அதே சமயம் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவக் கூடிய கடினமான பணிகளை ஏற்று செயல்படுத்தி வெற்றி காண்பதில் தான் பெருமையும் புகழும் அடங்கி இருக்கிறது. வேலை மனதிற்கு பிடித்ததாக இல்லை என்று வேலையை மாற்று வதைவிட மனதிற்குப் பிடிக்காத கடினமான அதேசமயம் மிகவும் தேவையான அந்த வேலைக்கேற்ப உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? உள்ளார்ந்த ஆர்வத்தை உள்ளார்ந்த நேசத்தை அந்தப் பணியின்பால் வளர்த்துக் கொண்டீர்களென்றால் நீங்கள் எந்தப் பணியையும் எளிதாக செய்து முடிக்க முடியும்.
ஒரு பாட்டி துணி தைக்க தான் வைத்திருந்த ஊசியைத் தொலைத்துவிட்டாள். வீதிக்கு வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் அதைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது பேரன் அவளிடம் வந்து ‘பாட்டி என்ன தேடுகிறாய்?’ என்று கேட்டான். அதற்கு பாட்டி ஊசி ஒன்று வைத்திருந்தேன், அதைத்தான் தேடுகிறேன் என்றாள். பேரன் கேட்டான் ஊசியை எங்கே தொலைத்தாய்? பாட்டி சொன் னாள் ‘வீட்டிற்குள்தான் தொலைத்துவிட்டேன்’
பேரன் கேட்டான்: வீட்டிற்குள் ஊசியைத் தொலைத்துவிட்டு வீதியில் வந்து தேடுகிறாயே?’
பாட்டி சொன்னால்: ‘வீட்டிற்குள் விளக்கு இல்லை எனவே வெளிச்சமில்லை அதனால் வெளிச்சம் உள்ள வீதியில் அதைத் தேடுகிறேன்’
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? பயன் உள்ள செயல் கடினமானது என்று கருதிக் கொண்டு தேவையில்லாத எளிய செயல்களில் ஈடுபடுவதும் இதுபோலத்தான்
“THE MOST DIFFICULT THINGS ONLY CAN BRING YOU SUCCESS, PROSPERITY, FAME AND POPULARITY” என்றார் பென் ஜான்சன் என்ற அறிஞர்.
‘மிகக் கடுமையான பணிகள் முலமே வெற்றி, செல்வம், பெயர், புகழ் ஆகியவற்றை அடைய முடியும்’ என்பதே அதன் பொருள் ‘முழுமனதோடு’ பாடுபடுங்கள் தோல்விகளைக் கண்டு துவளாமல் பாடுபடுங்கள். கடுமையான பணி என்று அஞ்சாமல் பாடுபடுங்கள்! வெற்றி உங்கள் விலாசத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு உங்கள் வீடுவந்து சேரும்!

கலங்காதிரு மனமே

கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!'

உங்கள் கனவு நினைவாக கடுமையாக உழைக்க வேண்டும் இல்லாவிடில் உங்கள் நினைவு கனவாகிவிடும்

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்....

போட்டி தேர்வுகளுக்கு மிகச்சிறந்த புத்தகங்களாக நான் கருதுபவை

 போட்டி தேர்வுகளுக்கு மிகச்சிறந்த புத்தகங்களாக நான் கருதுபவை

• வரலாறு - +1,+2 வரலாறு,NCERT +1,+2,யு.ஜி.சி நெட் வரலாறு வினா வங்கி, இந்திய சுதந்திர வரலாறு - பிபின் சந்திரா ,தமிழக வரலாறு – கே.கே.பிள்ளை ,நவீன வரலாறு – ஸ்பெக்ட்ரம், சென்னை பல்கலைக்கழக பட்டப் படிப்பின் குறிப்பிட்ட புத்தகங்கள்

• புவியியல் – NCERT +1,+2 புத்தகங்கள்,இந்திய புவியியல்- குல்லார்,இந்திய புவியியல் – கோபால் சிங்க், டி.டி.கே அட்லஸ்
• அரசியல் அமைப்பு - NCERT +1,+2 புத்தகங்கள், நமது இந்திய அரசியல் அமைப்பு- சுபாஷ் கஷ்யப், இந்திய அரசியல் அமைப்பு – லக்ஷ்மி காந்த்

• பொருளாதாரம் – NCERT +1,+2 புத்தகங்கள்,பிரதியோகிதா தர்பன் சிறப்பு பதிப்பு,ஏதேனும் ஒரு வணிக பத்திரிகை
• அறிவியல் - NCERT +1,+2 புத்தகங்கள்(6-12) ,பன்னிரெண்டாம் வகுப்பு தரத்தில் உள்ள மருத்துவ நுழைவு தேர்வு வினா வங்கிகள்

• பொது அறிவு – விகடன் இயர் புக், இந்திய இயர் புக்(இந்திய அரசால் வெளியிடப் படகூடியது), பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் (10 SETS)

• நடப்பு நிகழ்வுகள் – தினமணி,தி இந்து, அகில இந்திய வானொலியின் இணைய தளம்,ஏதேனும் ஒரு மாதந்திர பத்திரிகை

• கணிதம்,திறனறி சோதனை – QUICKER MATHS by TYRA, ARITHMETIC by RAJESH VERMA
குறிப்பு – தேர்வுக்கு படிக்க குறிப்பிட்ட ஒரு புத்தகங்கள் என்று வரையறை கிடையாது.
.
மிகச்சிறந்த நோட்ஸ் – உலகிலேயே நாம் தயாரிக்கும் குறிப்புகளே மிகச்சிறந்த நோட்ஸ்

நம்பிக்கை

 # உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.

# ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.

# ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.

# குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே.

# நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

Short Cuts

இணையதளத்தில்
பொழுதுபோக்குவதற்கென்றே
ஒரு
கூட்டம்
மேலை நாடுகளிலும்
கீலை நாடுகளிலும்
முற்றிலும் மோசம்-

thnx to
Thambu Chokkalingam

இணை - 1,2
பொழிப்பு - 1,3
ஒருஉ - 1,4
கூழை - 1,2,3
மேற்கதுவாய் - 1,3,4
கீற்கதுவாய் - 1,2,4

முற்று மோனை - 1,2,3,4

 மகூதி      மதுரையில கூட திருடன்
கமநி

திருவிளையாடல் புராணம்
மதுரை காண்டம் 18
கூடல் காண்டம் 30
திரு ஆலாவாய் காண்டம் 16

அகநானுறு
களற்றியாணை நிரை 120
மணிமிடைபவளம் 180
நித்திலக்கோவை 100

 புவியில்
புத்தகம் படிக்கிறவர்களிடம்
பஞ்சாயத்து பண்ணாதே

ஏப்ரல் 22 உலக புவி தினம்
ஏப்ரல் 23 உலக புத்தக தினம்
ஏப்ரல் 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

 முருகனும் திருமாலும்
இந்திரனின் வருகைக்காக தூதி பாடினார்கள்

குறிஞ்சி முருகன்
முல்லை திருமால்
மருதம் இந்திரன்
நெய்தல் வருணன்
பாலை துர்க்கை

 யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை

அல்லது

யாமவை ஏற்ற நண்பன்

குறிஞ்சி யாமம்
முல்லை மாலை
மருதம் வைகறை
நெய்தல் எற்பாடு
பாலை நண்பகல்

இயற்கையாக விலங்குகள் வாழ வாழ்விடங்கள் தேவை
அக் 3 இயற்கை தினம்
அக் 4 உலக விலங்குகள் தினம்
அக் 5 உலக வாழ்விட தினம்

புயலிலும் மாறாதம்மா.!

* மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம்.
* இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.
* நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.
* கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார்.
* நல்லவர்களின் கோபம் நீடித்து நிற்பதில்லை. தண்ணீரில் இட்ட கோலம் போல உடனே மறையும்.

 * உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!

* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.

* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!

* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'

* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!

* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!


தோற்றங்கள் மாறிப்போகும்,
தோல் நிறம் மாறி போகும்,
மாற்றங்கள் வந்து மீண்டும், மறுப்படியும் மாறிப்போகும்,
ஆற்றிலே வெள்ளம் வந்தால், அடையாளம் மாறிப்போகும்,
போற்றிய காதல் மட்டும்,
புயலிலும் மாறாதம்மா.!

ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக

ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக
உலகத்தில் பெருமிதமாய் வாழ வேண்டும்!
திருநாளே இதுவென்று மகிழ்ச்சி பொங்கத்
திசைவியக்கும் சாதனைகள் புரிய வேண்டும்!

வரலாறு படைத்திடவே வந்தோம் என்று
வலிமையுடன் காலடிகள் பதிக்க வேண்டும்!
அருமைமிகும் மானுடத்தில் சிகரம் காண
அடியெடுத்துப் புகழ்நோக்கிச் செல்ல வேண்டும்!

வழிநெடுக முள்ளிருக்கும்; இருந்தால் என்ன?
வசந்தம் இதோ அருகிலெனும் எண்ணம் வேண்டும்!
பழிச்சொற்கள் ஏளனங்கள் வதைத்தால் என்ன?
பட்டுமலர் தாமரைதான் வேண்டு மென்றால்
இழிவான சேற்றினையும் தீண்ட வேண்டும்!

இரவதனைத் தாண்டாமல் பகலே இல்லை!
விழுமியநற் சிந்தனையை மனத்தில் கொண்டு
வேகம்வி வேகமுடன் தொடர்தல் வேண்டும்!
தனக்குள்ளே உள்ளதுபே ராற்றல் ஒன்று
தன்னம்பிக் கையென்றே அறிந்தால் போதும்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் வெற்றி யாகும்!

நிமிடத்தில் கனவுகளும் நனவாய்ப் பூக்கும்!
எனக்கிங்கே யாரென்று சோர்ந்து விட்டால்
இன்பங்கள் ஓடிவந்து தொடுவ தில்லை!
தனக்குவமை இல்லாத மேன்மை வாழ்க்கை
தனித்தன்மைப் பண்புகளால் மட்டும் வாய்க்கும்!

கவிஞர் நிலவுசேகரன்
அம்மாபேட்டை, சேலம்

மனித உறவுகள் மேம்பட.....!!!

மனித உறவுகள் மேம்பட.....!!!
1. தானே பெரியவன்,தானே சிறந்தவன்
என்ற அகந்தையை விடுங்கள்.
2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3. எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள்.
4. விட்டுகொடுங்கள்.
5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.
7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.
10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
11. எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி
வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்...

நம்பிக்கை

எல்லோருக்கும் நீ
நம்பிக்கைக்கு உரியவராக இரு
ஆனால்,
‪#‎யாரையும்_நம்பிவிடாதே‬
உயிராக நேசித்த உறவு கூட
உன்னை விட்டு பிரியலாம்..


 1. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.

2. உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.

3. சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.

4. சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.

5. இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

6. வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.

7. இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.

8. முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.

9. நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.

10. நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.

11. வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.

12. நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை

வாழ்கையில் முன்னேற முடியவில்லை

'குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே, என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.

ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர், பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார். "எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர், "என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

ஆமாம், நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல..

சிறந்த பழக்கங்கள்



அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்!

அதையே &'The seven habits of highly effective people&' by Stephen R.Covey என்ற புத்தகமாக வடிவமைத்தார். அவர் கண்டறிந்த ஏழு பழக்கங்களும், எல்லோர்க்கும் மிக மிக எளிதானவை; புரிந்து கொள்ளக்கூடியவை; எல்லோரும், எல்லா வயதினரும் பின்பற்றக்கூடியவை!

1. உன் செயலுக்கு, நீயே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்: பிறரது எண்ணம், சொல், உணர்ச்சி, செயல் போன்றவற்றால் நீ தூண்டப்பட்டால், உடனடியாக, உணர்ச்சி வசப்பட்டு, எதிர்வினையைக் காட்டி அவதிப்படாதீர். சற்று சிந்தித்து, சுய பொறுப்புடன் செயல்பட்டால், நல்ல விளைவுகள் உண்டாகும்.

2. இலக்கை மனதில் இருத்தி, பயணத்தைத் தொடங்கு: அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் பதித்து,’கருமமே கண்ணாயினாராய்’ செயல்பட்டால், பயணம் வெற்றிப் பாதையில், உறுதியாய்ச் செல்லும்.

3. முதன்மையானவற்றை முந்திச் செய்: செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, முக்கியமானவற்றை அவசரமின்றி, முனைப்புடன் முதலில் செய்தால், கால நிர்வாகம் கையில் இருக்கும், வெற்றி வீட்டு வாயிலில் நிற்கும்!

4. நீ மட்டுமின்றி, பிறரும் வெற்றி பெற நினை: உங்களது நலனோடு, பிறர் நலனையும் மனதில் இருத்தி, வெற்றி-தோல்வி மனப்பான்மை அற்ற பரந்த மனத்துடன், பிறருடன் பேச்சுவார்த்தை அல்லது பணியில் ஈடுபடும்போது, மனித உறவுகள் மேம்படவும், வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

5. முதலில் புரிந்துகொள்; பிறகு புரிந்து கொள்ளப்பட நாட்டம் கொள்: முதலில் பிறர் சொல்வதை கவனமாகக்  கேட்டு, பின்பு அவரிடம் உரையாடினால், செய்திப் பரிமாற்றம் நல்ல முறையில் நடந்து, இருவரும் பயன் பெறலாம்; உறவும் மேம்படும்.  

6. ஒருங்கிணைந்த, கூட்டு சக்தியாய் செயல்படு: பலர் இணையும்போது, வெறும் சேர்க்கையாக இன்றி, கூட்டு  சக்தியாக, குழுமமாக செயல்பட்டால், பல மடங்கு பயன்களை அடையலாம்.

7. உன்னை தினமும் புதுப்பித்துக்கொள்: தினமும் உடல், உள்ளம், உணர்வு, ஆன்மிக அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நாள் முழுவதும் சோர்வின்றி, உற்சாகத்தோடும், சக்தியோடும் செயலாற்ற முடியும்.

முதல் மூன்று பழக்கங்கள் (1,2,3) தனி மனித வெற்றிக்கானவை. அடுத்த மூன்று பழக்கங்கள் (4,5,6) ஒருவர் பொது வாழ்வில் வெற்றி பெறத் தேவையானவை. கடைசி பழக்கம் (7) அனைத்தையும் உள்ளடக்கி, இணைத்துச் செல்வதாகும். 

வாழ்வில் உயர்ச்சி அடைய, மேற்கூறிய ஏழு பழக்கங்களையும்   கடைப்பிடிப்பது எளிதுதானே!

டைம் மேனேஜ்மெண்ட்

அடிக்கடி டைம் மேனேஜ்மெண்ட் பற்றி என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப்படும்.

'நேரத்தை நிர்வகிப்பது எப்படி?' எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நேரத்தை நீங்கள் எதற்காக நிர்வகிக்க வேண்டும்? தன் சுழற்சி சூரியனை வலம் வரும் பாதை என்று எல்லாவற்றையும் வைத்து நேரத்தை பூமி அல்லவா நிர்வகித்துக் கொண்டு இருக்கிறது? 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் என்பதை எல்லோருக்கும் பொதுவாக பூமியல்லவா கவனித்துக் கொள்கிறது?

எந்த நேரத்தில் எதைச் செய்து முடிப்பது என்று, இருக்கும் நேரத்தைப் பங்கிட்டுப் பயன்படுத்தும் எளிதான வேலைதான் உங்களுடையது. தேவையில்லாமல் அதை ஏன் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள்? கவனியுங்கள் பெரும்பாலான வேலைகளை நீங்களாகத்தான் விரும்பி ஏற்றிருக்கிறீர்கள். யாரும் உங்கள் மீது திணிக்கவில்லை.


எதற்கு முக்கியத்துவம்:


சிலர், வாரம் ஒருமுறை பார்ட்டிக்கு செல்வர். வேறு சிலர் தினமும் கோயிலுக்கு செல்வர். இப்படி ஒவ்வொரு தனி நபரும் அவர் எதை அவசியம் என்று கருதுகிறார், எதற்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என்பதை வைத்துத்தான் இருக்கும் நேரத்தைப் பங்கிட முடியும்.


பெரிய நிறுவனங்களின் அதிபர் அவர். வேலைகள் முடிந்து வீடு திரும்ப தினமும் தாமதமாகிவிடும். ஓர் இரவு வீடு திரும்பியபோது, அவருடைய ஆறு வயது மகன் உறங்காமல் அவருக்காக விழித்திருப்பதைக் கண்டார்.


"என்ன மகனே?”


"அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?”


சிறு வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் மகனை அதிபர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். சில கணக்குகள் போட்டார். "பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். ஏன் கண்ணா?”


மகன் தன் பிஞ்சுக் கைகளை அவரிடம் நீட்டினான். "எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாகக் கொடுப்பீர்களா அப்பா? வளர்ந்து வேலைக்குப் போனதும் திருப்பித் தருகிறேன்”.


தந்தை அதிர்ந்தார். "உனக்கு எதற்கு ஐந்தாயிரம் ரூபாய்?” "உங்களுடைய நேரத்தில் அரை மணி நேரத்தை வாங்குவதற்காக அப்பா!” என்றான் மகன்.


ஒரே விதி பொருந்தாது:


எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகத் தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதி பொருந்தாது.


எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். கிடைத்த நேரத்தில் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு உங்கள் உள்சூழ்நிலை பதற்றமில்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, கவனமின்றி சிந்தனை அலை பாய்ந்து கொண்டு இருந்தால், களைப்பு, அமைதியின்மை, மன அழுத்தம் எல்லாம் வரும். உங்கள் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிடும். உங்கள் உடலும், மனமும், சக்தியும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துதான், குறிப்பிட்ட நேரத்தில் உங்காபல் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலும் என்பது தீர்மானமாகும்.


காலம் கடந்து செய்வதால்...


: ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டு வேலையானாலும் சரி, தொழில் நடத்துவதானாலும் சரி, உடற்பயிற்சி செய்வதானாலும் சரி.. நேரம் கடந்து செய்யும் பல வேலைகள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. வேறு எதைத் தொலைத்தாலும் திரும்பப் பெற வாய்ப்பு உண்டு. தொலைந்துபோன விநாடிகளை எப்பேர்ப்பட்டவராலும் மீட்க இயலாது.


ஒவ்வொரு கணத்திலும், டிக் டிக்.. என்று கரைந்து கொண்டு இருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை. இது தத்துவம் அல்ல. வேடிக்கைப் பேச்சும் அல்ல. சத்தியமான உண்மை. நேரத்தின் மதிப்பைப் பற்றித் தெளிவான கவனத்துடன் இருந்தால், வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக இருப்பீர்கள். அது கண்ணாடியை விடவும் சுலபமாக நொறுங்கக்கூடியது என்பதை உணர்ந்தால், நேரத்தைக் கவனமாகக் கையாள்வீர்கள்.


நேரம் மதிப்பு மிக்கது என்பதால்தான், எங்கள் வகுப்புகளில் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது ஏதோ ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக அல்ல. நேரத்தின் மதிப்பை அறிந்திருப்பது அடிப்படையான கண்ணியம் என்று நினைக்கிறேன். யாரையாவது காத்திருக்க வைப்பது பெருமை என்று நினைப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.


எனக்கு ஒருபோதும் இதில் சம்மதம் இல்லை. என் நேரம் எப்படி என் வாழ்க்கையோ, அப்படி அவர்கள் நேரம் அவர்களுடைய வாழ்க்கை. மற்றவர் வாழ்க்கையை வீண் அடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சிலசமயம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்காக, என் வாழ்க்கையைப் பணயம் வைத்து, வேகமாக பயணங்களில் ஈடுபட்டு இருக்கிறேன்.


என் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால் மட்டும், நேரம் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லாது போய்விடுகிறது. இதை விளக்கிச் சொல்வது கடினம்.


நீங்களே ஒரு கால இயந்திரம்தான். இறந்தகாலமும், எதிர்காலமும் உங்களுக்குள் இக்கணத்தில் பொதிந்திருக்கின்றன. இந்தக் கணத்தில் பிரமாண்டத்தை அனுபவிக்கத் தெரியாதபோதுதான், நீங்கள் இல்லாத ஏதோ வேறு ஒரு கணத்தில் இருக்கப் பார்க்கிறீர்கள்.


மனதுக்கு ஓய்வு:


நேரத்தின் அருமை புரியாதவர்கள்தான், வேலைகளை தள்ளிப்போடுவதே சரியான தீர்வு என்று பழக்கமாக்கிக் கொள்வார்கள். அதே சமயம், இடைவெளியே இல்லாமல் உழைப்பதும் தவறு. உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்தால்தான், முழுமையான திறமை வெளிப்படும். முறையான யோகா இதற்கு உதவும்.


யோகாவுக்கு ஏன் நேரம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். யோகாவை முறையாகப் பயிற்சி செய்தால், தூக்கத்தின் தேவை குறைந்துவிடும். விழித்திருக்கும் நேரம் கூடிவிடும். நீங்கள் உடலும், மனமும் இன்னும் சிறப்பான ஓர் ஓழுங்கமைப்புக்குள் வந்துவிடும்.


நீங்கள் விழிப்பு உணர்வுடன் செயல்பட்டால், உங்கள் உடல் பல தேவையற்ற அசைவுகளைக் கவனமில்லாமல் செய்வதைத் தவிர்த்துவிடும். தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற வார்த்தைகள் இவை காணாமல் போகும். ஆறு வாரங்களில் உங்கள் செயல்திறன் கூடும். எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடியதை மூன்று, நான்கு மணி நேரத்தில் செய்து முடித்துவிடுவீர்கள்.


வெற்றியைத் தீர்மானிப்பது எது:


நீங்கள் எவ்வளவு மணி நேரம் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில், நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.


உங்கள் வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில், நீங்கள் 100 சதவிகிதம் உறுதியாக இருந்தால், அந்தத் தெளிவே அதற்கான நேரத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிடும். போராட்டம் இருக்காது. பதற்றம் இருக்காது. குழப்பம் வராது. களைப்பு தாக்காது.


நீங்கள் நிர்வகிக்க வேண்டியது நேரத்தை அல்ல உங்களை!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.
பள்ளத்தில் ஓர்
யானை வீழ்ந்தாலும்,
அதன் உள்ளத்தை
வீழ்த்திவிட முடியாது!


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.