Thursday 19 March 2015

புலம்பாதே போராடு ...

எப்போதும் புகழ்ச்சிக்கு
மயங்காதிரு ...
எக்கணமும் இகழ்ச்சிக்கு
கலங்காதிரு ...
காலம்கொடுத்த வேலையென்று
கடமைசெய் ...
காலம்என்றும் முடியக்கூடும்
விரைந்துசெய் ...
உன்கணக்கு முடிந்துவிட்டால்
ஒய்வுதான்
உயிரிருக்கும் நேரமெதற்கு
ஒய்வுதான் ?
கொண்டுபோக இவ்வுலகில்
ஏதுமில்லை ...
தந்தபோனால் கொண்டுபோவாய்
பேருதான் ...


புலம்பாதே போராடு ...
================

புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...

வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...

திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...

எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...

ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...

போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...

No comments:

Post a Comment