Thursday 17 December 2015

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
5..இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
8..அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
14..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
15..அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

விடைகள்..
1..திருக்குறள்.
2..சீவக சிந்தாமணி.
3..கம்பராமாயாணம்.
4..பெரிய புராணம்.
5..கலித்தொகை.
6..புறநானூறு.
7..குறிஞ்சிப்பாட்டு.
8..பெருங்கதை .
9..நேமிநாதம்.
10..பத்துப்பாட்டு.
11.திருவாசகம்.
12..பதிற்றுப்பத்து.
13..தேவாரப்பதிகங்கள்.
14..சுந்தரரின் பதிகங்கள்.
15..முதுமொழிக்காஞ்சி.
16..மணிமேகலை.
17..குண்டலகேசி.
18..ஏலாதி.
19. திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
20..இலக்கண விளக்கம்..

மரபுக்கவிதை

பொதுத்தமிழ் பிரிவில் ***மரபுக்கவிதை *** பகுதியில் இருந்து முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன .

1..பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?
2..மக்கள் கவிஞர்,பொது உடைமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
3..செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
4..எனது வலது கை என்று பட்டுக்கோட்டையைப் பார்த்து புகழ்ந்தவர் ?
5..தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர்?
6..அவர் கோட்டை நான் பேட்டை என்று கூறியவர்?
7..பெரியார் பெருந் தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?
8..பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர்?
10..கவி வாணர் என்று அழைக்கப்பட்டவர்?
11..எத்திராசுலு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..முத்தையா என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..இராச கோபாலன் என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..துரைராசு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர்?
14..துப்பாக்கி என்று அழைக்கப்பட்டவர்?
15..பாவலர் மணி என்று அழைக்கப்பட்டவர்?
16..தமிழகத்தின் வர்ட்ச்வொர்த் என்று அழைக்கப்பட்டவர்?
17..ரமி என்ற புனைப் பெயர் கொண்டவர்?
18..எழிலோவியம் எழுதியவர்?
19..பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?
20..பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவ்வாலியர் விருது பெற்றவர்?
21..குழந்தை இலக்கியம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
22..கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி க்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த வருடம்?
23..அனார்கலி,ஊமையன் கோட்டை,குமரி காண்டம் எழுதியவர்?
24..கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்ற பாடலை எழுதியவர்?
25..வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே என்ற பாடலை எழுதியவர்?
26..ஏர்முனை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
27..திரைக்கவித்திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
28..ஊன்றுகோல் எழுதியவர்?
29..பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் என்று அழைக்கப்பட்டவர்?
30..முடியரசனை அண்ணா அவர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
31..யார் கவிஞன் எழுதியவர்?
32..பூங்கொடி எழுதியவர்?
33..கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
34..தேன்மழை எழுதியவர்?
35..சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?
36..சுரதாவின் முதல் நூல் எது?
37..சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?
38..உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?
39..பட்டத்தரசி ,மங்கையர்க்கரசி எழுதியவர்?
40..விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

உடல் நலம், மன நலம் காக்க சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

உடல் நலம், மன நலம் காக்க
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…
(கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி
கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது ­.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ­ ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச்தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும். உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும் ­. ஒழுங்காகசாப்பிடத்தோன்று ம். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருட ­ன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்

ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்திலிருந்து

ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்திலிருந்து (Who will cry when you die?") சில மேற்கோள் வாக்கியங்கள் (in whatsapp post)

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். (Negative or Positive Experience)

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். (அதே நேரத்தில் நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்)

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

13. எதிலும் தனித்துவமாக (Unique) இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

14. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

15. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

Wednesday 9 December 2015

ராஜாஜி

டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..
இளம்வயதிலேயே கிட்டப்பார்வையால் கண்ணாடி போட்ட அவருக்கு பள்ளிக்காலத்தில் நண்பர்கள் வெகு குறைவாகவே இருந்தனர். அரசுப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் மெட்ரிகுலேசன் தேர்வில் சாதித்துக்காட்டினார் அவர். பின்னர் சட்டம் படித்து முடித்த பின்னர் சேலத்தில் பிரபல வழக்கறிஞர் ஆனார் அவர். அப்பொழுதே ஆயிரம் ரூபாய் ஒரு வழக்குக்கு வாங்குகிற அளவுக்கு வருமானம்
உடையவராக இருந்தார் அவர். 1917 இல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார் அவர். சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் ஆறு மணிநேரம் தினமும் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.
1909-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாருடன் பழகும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்கான போராட்டம் குறித்து இருவரும் பல சந்திப்புகளில் விவாதித்தனர். இது பற்றி காந்தியடிகளையும் சந்தித்து ராஜாஜி பேசினார். சென்னையில் இருந்த ராஜாஜியின் வீட்டில்தான் மகாகவி பாரதியார் முதன்முறையாக காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஈர்க்க பல்லாயிரம் ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை துறந்தார் அவர். உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் அவர்.
1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றபின்னர் முதல்வர் ஆனார் அவர். மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர். ஆலய பிரவேசத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியப்படுத்தினார் விவசாயிகளின் கடன் சுமையை
குறைக்கவும் சட்டமியற்றினார்.
அடுத்து ஹிந்தி மொழியை 125 பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் கொண்டு வந்தார். இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என்று ராஜாஜி நினைத்தார். "குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பலவந்தம் செய்தாலும் பரவாயில்லை. தமிழ்மொழி கால் போன்றது ; ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி !" என்று விளக்கம் தந்தார் அவர். நாவலர்
சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ஹிந்தி எதிர்ப்புக்குழு உருவானது. பெரியார் ,"ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார். இங்கே தமிழ் எங்கே இருக்கிறது ?" என்று முழங்கினார். அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார் ராஜாஜி . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியதால் ஹிந்து திணிப்பு அதோடு நின்று போனது.
ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். போர்க்காலத்தில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் என்று சொன்னார் அவர். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 1951 ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதிக இடங்களில் வென்றிருந்தார்கள். ராஜாஜியை அழைத்தார்கள். காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் அவர். ராஜாஜி தன் வாழ்நாளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறார்.
பதவிக்கு வந்ததும் போட்ட முதல் உத்தவரவு கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான். குலக்கல்வி முறையை அடுத்து கொண்டுவந்தார் அவர். ஐந்து பாடவேளைகள் என்பதை மூன்று பாடவேளைகள் என்று குறைத்தார் ராஜாஜி. ஷிப்ட் முறையில் ஒரே நாளில் இரண்டு பிரிவாக வகுப்புகள் நடக்கும். காலையில் பள்ளியில் படித்துவிட்டு மதியம் போய் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் பிள்ளைகள் உதவவேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அது சாதியத்தை காப்பாற்றவும், வலுப்படுத்தவும் செய்யும் என்று எதிர்த்தார்கள். பெரியார் ,"ராஜாஜி கிராமத்து பையனுக்கு கல்வி வேண்டாம் என்று சொல்கிறாரா ? மூன்றே பாடவேளைகள் என்பதால் மிச்ச நேரத்தில் அவன் கழுதை மேய்த்துக்கொண்டும், முடி வெட்டிக்கொண்டும், துணி துவைத்துக்கொண்டும்
இருக்க வேண்டுமா ?" என்று பொங்கினார். தொழிற்கல்வித்திட்டம் குலக்கல்வி என்று அழைக்கப்பட்டது.
ராஜாஜி அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவை எடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. "ராமானுஜர்,சங்கரர் முதலானோர் மற்றவரை கேட்டுவிட்டா தங்களின் தத்துவங்களை வெளியிட்டார்கள் ? இது நிர்வாக ரீதியான முடிவு " என்றார் ராஜாஜி. ஆனாலும்,ஆசிரியர்கள் ஆறு பாடவேளைகள் பாடமெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த சம்பள
உயர்வையும் ராஜாஜி வழங்கவில்லை. அவர்களை கலந்தாலோசிக்கவும் இல்லை. பருலேகர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து தான் செய்தது சரியென்று சொன்னார் ராஜாஜி. அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் அவர்.
அவருக்கு பின்னர் காமராஜர் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
ராஜாஜியின் வாழ்க்கையில் இருந்த நேர்மை சிலிர்க்க வைப்பது. கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்த அவர் வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் பீரோக்களில் அடுக்கி கொடுத்துவிட்டு கையில் தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறியவர் அவர்.
தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படியே இயங்குவார் அவர். சத்தியமூர்த்தியின் சிஷ்யர் என்று காமராஜரை எதிர்த்தார் இவர். அண்ணாவுடன் கூட்டணி போட்டு அவரின் தோல்விக்கு அடிகோலினார். பின்னர் அதே காமராஜருடன் இணைந்தார். கம்யூனிஸ்ட்கள் முதல் எதிரி என்றவர் அவர்களோடும் கூட்டணி வைத்தார். இவை சுய லாபத்துக்காக என்று சொல்ல முடியாது. அவரின் சுய சிந்தனைக்கு எது சரியோ அப்படி இயங்கினார் அவர். அமெரிக்கா சென்றிருந்த பொழுது கென்னடியை சந்தித்து அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று அற்புதமாக எடுத்துரைத்து விட்டு வந்தார் ராஜாஜி.
சுதந்திரா கட்சியை ஆரம்பித்து தொழிலதிபர்களுக்கு தன்னுடைய ஆதரவைக்காட்டிய அவர் மேடைகளில் யாரேனும் பேசிக்கொண்டு இருக்கிற பொழுது ஒரு காதில் கைவைத்துக்கொண்டு விடுவார். அவருக்கு இன்னொரு காது கேட்காது. இரண்டு காதுகளும் இப்படி கேட்காத சமயத்தில் அந்த இதழுக்கு என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசிப்பார் அவர். சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய நூல்களை எழுதிய அவர் மதபீடங்களின் தலைவர்களை சந்தித்தது இல்லை. கோயில்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தார். அவரின் கீழே வங்கத்தில் மதக்கலவரங்கள் பெருமளவில் நின்றன. ராஜாஜியின் மதச்சார்பின்மை அவரை படேல் 'அரை முஸ்லீம் !' என்று குறிக்கிற அளவுக்கு இருந்தது. அந்த குணமே அவரை ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தது. குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மரணமடைந்து இருந்த சூழலிலும் ,"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !" என்று பாடல் எழுதினார் அவர். டாக்டர் ராஜாஜி என்றொரு கூட்டத்தில் அழைத்த பொழுது ,"எனக்கென்று பெயர் இருக்கிறது. எதற்கு இந்த பட்டங்கள் எல்லாம் ?" என்று கடிந்து கொண்டார் அவர்.
நேருவின் அமைச்சரவையில் இருந்த ராஜாஜி நேருவின் கம்யூனிஸ்ட்கள் மீதான பாசத்தை கண்டித்தார். தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேரு குறைத்ததை ஏற்க மறுத்தார் ராஜாஜி. நேருவின் சோவியத்துடன் நட்பு என்கிற கொள்கையையும் குறை சொன்னார். சீனா ஆபத்தானது என்று முன்கூட்டியே எச்சரித்தார். இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரி ஹிந்து மகா சபை என்றார் நேரு. கம்யூனிஸ்ட்கள் என்றார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கி சுதந்திரா கட்சியை துவங்கினார்.
ராஜாஜியிடம் எல்லையில்லா நாகரீகம் இருந்தது. நேருவுடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,"என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !" என்று பதிவு
செய்தார்.
பெரியாருக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கமானது.ராஜாஜியை வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாக பெரியார் எதிர்த்தாலும் மணியம்மையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் அது குறித்து ராஜாஜியிடமே ஆலோசனை கேட்டார். ஒருமுறை ஒரு விஷயத்தில் இப்படி செய்யலாமா என்று பெரியாரிடம் கேட்ட பொழுது வேறொரு யோசனையை சொன்னார் பெரியார். "மக்கள் என்ன நினைப்பார்கள் ?" என்று கேட்டார் ராஜாஜி. "மக்கள் யாரு ? ஒண்ணு நீங்க இல்லை நானு ஆச்சாரியாரே !" என்று சொன்னார் பெரியார். ராஜாஜி தள்ளாடும் வயதில் தமிழக முதல்வர் கலைஞர்
மதுவிலக்கை நீக்க முடிவு செய்த பொழுது கொட்டும் மழையில் அவரை சந்தித்து அவரின் கைபிடித்து அதை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவர் இறந்த பொழுது அவரின் வாழ்நாள் நண்பர் பெரியார் கதறி கதறி அழுதார்.

Tuesday 8 December 2015

★☆★2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்★☆★

★☆★2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்★☆★

★கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
★உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
★கம்பர் விருது – கோ. செல்வம்
★சொல்லின் செல்வர் விருது – முனைவர் சோ. சத்தியசீலன்
★ஜி.யு. போப் விருது - மதுரை இளங்கவின்
(எம்.ஆரோக்கியசாமி)
★உமறுப்புலவர் விருது – மு. சாய்பு மரைக்காயர்
★இளங்கோவடிகள் விருது – முனைவர். நிர்மலா மோகன்
★மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
★அண்ணல் அம்பேத்கார் விருது – ஆழி. கு. மகாலிங்கம்
★பேரறிஞர் அண்ணா விருது – திருமதி. கஸ்தூரி ராஜா
★தமிழ்த்தென்றல்திரு.வி.க. விருது - கரு. நாகராஜன்
★திருவள்ளுவர் விருது – திருக்குறள். க. பாஸ்கரன்
★தந்தை பெரியார் விருது – தாவூஜி குப்தா
★பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கண்மதியன்
★பெருந்தலைவர் காமராஜர் விருது – கருமுத்து. தி. கண்ணன்
★முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – பேராசிரியர் எம்.ஏ. ஜேம்ஸ்
★தமிழ்த்தாய் விருது – திருவனந்தபுரம் தமிழ்சங்கம்

பாரதிதாசனை

 பாரதி தாசன் என்ற சுப்புரத்தினம்(புரச்சி கவிஞர்)!!!


பெற்றோர்:கனகசபை-லட்சுமி


29.4.1891 முதல் 21.4.1964 வரை 73 வயது ( புதுச் சேரி)


1938-->இந்தி எதிர்ப்பு.

பாரதிதாசன் நூல்கள்:

1.பாண்டியன் பரிசு, 2.சேர தாண்டவம், 3.அழகின் சிரிப்பு ( இயற்கையை வர்ணிப்பது), 4.குடும்ப விளக்கு ( கற்ற பெண்களின் சிறப்பை கூறுவது), 5.இருண்ட வீடு ( கல்லாத பெண்களின் இழிவை கூறுவது), 6.குறிஞ்சித் திட்டு, 7.கண்ணகி, 8.புரட்சிக் காப்பியம் ( பில்கணியத்தின் தழுவல்), 9.மணிமேகலை வெண்பா, 10.காதல் நினைவுகள், 11.கழைக்கூத்தியின் காதல், 12.தமிழிச்சியின் கத்தி, 13.அமைதி, 14.இளைஞர் இலக்கியம், 15.சௌமியன், 16.நல்ல தீர்ப்பு, 17.தமிழ் இயக்கம், 18.இரண்யன் அல்லது இணையற்ற வீரன், 19.காதலா கடமையா???, 20.சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ( பொதுவுடைமை வலியுறுத்தியது)

பாரதிதாசன் நடத்திய இதழ்--> "குயில்"

♪பாரதியின் கட்டளைக்கிணங்க பாரதிதாசன் பாடியது:
"எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா"

பாரதிதாசனின் மேற்கோள்கள்:::
♪"கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்"

♪"தமிழுக்கும் அமுதென்று பேர்"

♪"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்"

♪"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"

♪"கொலை வாளினை எடடா-மிகு
கொடியோர் செயல் அறவே"

♪"மங்கை ஓருத்தி தரும் சுகம்-எங்கள்
மாத்தமிழூக்கு ஈடில்லை"

♪"தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்".


புதுமைப்பித்தன் பாரதிதாசனை "அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்"


கு.ப.ரா என்பவர் பாரதிதாசனை "பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி"


அ.சிதம்பரநாத செட்டியார் என்பவர் பாரதிதாசனை " அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்"

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்

நவம்பர் 27: விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார்
மனிதர்; கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார். இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார், அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின்  நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார்.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன. சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

 காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் இவரே.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நாளில் மரணம் அடைந்தார்...

GK TAMIL

இராமலிங்க அடிகளாரை திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைத்தவர் யார்?தொழுவூர் வேலாயுத முதலியார்
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?d பாரதிதாசன்
திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று புகழ்ந்தவர் யார்?ஆதிசங்கரர் - சொஸ்தலிகிதம் என்ற நூலில்
முதன் முதலில் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்’ - என்று கூறியவர் யார்?விடை - மு.வரதராசனார்
இக்கால அருணகிரி, தெய்வக் கவிராயர் – என்று போற்றப்படுபவர் யார்?குமரகுருதாசர் - பாம்பன் சுவாமிகள் (குமரகுருதாசர் என்பது இவருடைய இயற்பெயர்)
குமரகுருபரர் பேசும் திறன் பெற்றவுடன் முதலில் பாடிய நூல் எது?கந்தர் கலிவெண்பா
குமரகுருபரர் அவர் ஞானாசிரியர் மீது பாடிய நூல் - பண்டார மும்மணிக்கோவை
காசிம் புலவரை ‘இஸ்லாமிய மதுரகவி’ என்று புகழ்ந்தவர் யார்?
‘தமிழ் மொழி பண்டாரம்’ - என அழைக்கப்பட்டவர் யார்?ஒப்பிலாமணிப் புலவர்
பாரதிதாசனின் பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் - என்று கூறியவர்?சிதம்பர செட்டியார்
 பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி என்று கூறியவர் - கு.ப.ரா
அறிவு கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் என்று பாவேந்தரை புகழ்ந்தவர் - புதுமைப்பித்தன்
திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி என்று புகழ்ந்தவர் யார்?ஜி.யூ.போப்
டென்சிங் நார்கே விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது ?