Thursday 28 May 2015

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்

மோடி அரசின் ஓராண்டுச் சாதனைகள்


நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அறிவிக்கப்பட்டுள்ள  முக்கியத் திட்டங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு:

மேக் இன் இந்தியா:

தொழில்முனைவோர்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருள்களைத் தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவேண்டும். இதன்மூலம் இந்தியாவிலேயே பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுதான் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளத்தையும் ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளைப் பரிந்துரை செய்துள்ளார் மோடி. இதன்மூலம் இந்தியாவில் தொழில் தொடங்க மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யத் தயாராக உள்ளது என்கிற செய்தியை இந்தத் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இந்தத் திட்டம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். (இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16% மட்டும்தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34%) சீனா அளவுக்கு உற்பத்தியைப் பெருக்க மேன் இன் இந்தியா சரியான வழிமுறையாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் நாடு முழுக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும், 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம்:

இந்தியாவை 5 ஆண்டுகளில் தூய்மைப்படுத்தி ‘தூய்மையான இந்தியா’ என்னும் நிலையை ஏற்படுத்த எண்ணியுள்ளார் மோடி. அதன்படி, மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு விளையாட்டு, சினிமா தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்தத் திட்டப் பணிக்காக ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி இத்திட்டத்தைத் தொடங்கியபிறகு, நாடு முழுக்க பல இடங்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும், பிரபலங்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள்.

நலத்திட்டங்கள்:

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்குகள்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி (ஆயுள் காப்பீடு), பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா (விபத்துக் காப்பீடு), அடல் பென்ஷன் யோஜனா (அமைப்புசாரா துறையினருக்கான ஓய்வூதியம்) போன்ற நல்ல திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா மிக முக்கியமான திட்டம். நாடு சுதந்தரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் 68 சதவிகித மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளனர். மோடி அரசு அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்கிற வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏழை மற்றும் பின் தங்கிய மக்கள், அரசு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடுத்தச் சில நாள்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 7 நாள்களில் நாடு முழுவதும் 5.05 கோடி  மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் 15,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டம் (செல்வமகள்): மோடியின் திட்டங்களிலேயே சூப்பர் ஹிட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம்தான். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் இணையலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 27 லட்சம் பேர் இணைந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 9 லட்சம் பேர். சென்னை மண்டலத்தில் மட்டும் 3.50 லட்சம் பேர். செல்வமகள் திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

எரிவாயு மானியத் திட்டம்:

சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் எரிவாயுக்கான மானியம் நேரடியாகப் பயனாளிகளுக்கே சென்று விடும். உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டம் என்று இத்திட்டம் பாராட்டப்படுகிறது.

அன்னிய முதலீடு
ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.  பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அன்னிய நேரடி முதலீடு 49% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஒரு சில சேவைகளில் 100% வரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ரயில்வே துறையின் செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்றும் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளில் மட்டுமே அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி
மோடி அரசு நாடு முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும், அனைத்து நவீன வசதிகளை கொண்ட 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ஆண்டுக்கு ரூ. 100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.  மத்திய அரசு உருவாக்கும் 'ஸ்மார்ட் சிட்டி', 21ம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக,  மென்பொருள் துறைக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும், அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சுமார் 4,000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது.  

அதிவேக ரயில்கள்
மோடி தலைமையில், ரயில்வே துறை பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. பெரிய நகரங்களையும், வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். மும்பை - அஹமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. இந்தியாவின் 'புல்லட் ரயில்' கனவு நிறைவேறும் காலம் வெகுவிரைவில்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்
2015-16 நிதியாண்டில், தில்லியில் உள்ளதைப் போல ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேசத்துடன் நிலப் பகிர்வு ஒப்பந்தம்
அஸ்ஸாம், மேற்கு வங்கம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே ஆங்காங்கே, அண்டை நாடான வங்கதேசத்தின் சில பகுதிகள் உள்ளன. அதேபோல, வங்கதேச எல்லைக்குள்ளும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகள் உள்ளன. எல்லைகள் முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளிலும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதற்குத் தீர்வு காணும் வகையில், வங்கதேசப் பகுதிகளுக்கு இடையிடையே இருக்கும் இந்தியப் பகுதிகளை அந்நாட்டிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தியாவில் இருக்கும் வங்கதேசப் பகுதிகளை எடுத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு நில எல்லை வரையறைச் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

வங்க தேசத்துடனான எல்லைப் பிரச்னையைத் தீர்க்க வகை செய்யும், நில எல்லை வரையறை மசோதா, மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்ததற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். ‘நில எல்லை வரையறை மசோதா நிறைவேறியிருப்பது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி’ என வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

கருப்புப் பணம்

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும் என்று பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 3வது நாளில் இதற்கான குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மோடி அரசு அமைத்தது.

யோகா தினம்

பிரதமர் நரேந்திர மோடி 2014 செப்டம்பரில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை.

மோடி - ஒபாமா - டைம்
மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா. குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்தியாவுக்கு ஒபாமா வந்தபோது மரபுகளை விலக்கி வைத்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை ஆரத் தழுவி வரவேற்றார். அந்தத் தருணம் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய உறவு மலர்ந்ததற்கான தொடக்கம் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு மோடி சென்றிருந்தபோது அவரை "செயல் வீரர்' என்று ஒபாமா பாராட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே, அவரது தலைமைப் பண்புகளைப் பாராட்டி ஒபாமா பேசி வருகிறார்.
டைம் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலில் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றது. அதே பத்திரிகையில், இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் மோடி பற்றி ஒபாமா கட்டுரை எழுதினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்ததைப் பற்றி அக்கட்டுரையில் ஒபாமா விவரித்திருந்தார். "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி விளங்குகிறார்; மோடியின் வாழ்க்கை எவ்வாறு அடிமட்டத்தில் தொடங்கி உச்ச நிலையை அடைந்ததோ அதைப் போலவே, இந்தியாவின் எழுச்சியும் அமைந்துள்ளது' என்று அந்தக் கட்டுரையில் ஒபாமா தெரிவித்திருந்தார்.
பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி:
இந்தியா, பிரேசில், சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை அங்கமாக கொண்டது "பிரிக்ஸ்' அமைப்பு. கடந்த வருடம் ஜூலையில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கியை ஆரம்பிக்க மோடி ஆலோசனை கூறினார். இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று ஆரம்பக் கட்டமாக, 5 நாடுகளும் தங்கள் பங்களிப்பாக இந்திய மதிப்பில் தலா ரூ. 60 ஆயிரம் கோடி வீதம், ரூ.3 லட்சம் கோடியை முதலீடு செய்தன. இந்த வங்கியின் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டது இது, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக மதிப்பிடப்பட்டது. 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயர் பிரதமர் நரேந்திர மோடியால் சூட்டப்பட்டது. பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி குறித்து பேசிய மோடி, இது குறிப்பிடத்தக்க முயற்சியாகும். 2012-ல் டெல்லியில் எடுக்கப்பட்ட முயற்சி இப்போது சாத்தியமாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 
பள்ளிகளில் கழிப்பறை:
கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுமாறு மாநில முதல்வர்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார். குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியவர், பள்ளிகளில் கழிப்பிடங்களைக் கட்டித்தர இந்தியத் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உயர்கல்வி:
ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படும் என மோடி அரசு அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக 18 உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. 
முத்ரா வங்கி:
சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் மாதம் முத்ரா வங்கியைத் தொடங்கினார் பிரதமர் மோடி. (Micro Units Development Refinancing Agency Bank என்பதன் சுருக்கம்தான் முத்ரா வங்கி) சரியான நேரத்தில் பணவசதி இல்லாமல் அவதிப்படும் தொழில்துறையினருக்கு நிதி கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் முத்ரா வங்கி திட்டம். இதில் ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டிக்குக் கடன் பெற முடியும்.
சிறு வணிகர்களுக்கான மேம்பாட்டுக்காக முத்ரா வங்கிக்கு இந்த பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசாங்கம். இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்க முடியும். நாட்டில் 5.75 கோடி சுய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்காக முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

Tuesday 5 May 2015

சாக்ரடீஸ்

http://tamilblog.ishafoundation.org/7-chakkarangal-patri-neengal-therinthukolla-vendiyavai/
http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=8069
https://www.facebook.com/groups/tnpscnanbargal/files/

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4573

https://www.facebook.com/profile.php?id=100008954375407&fref=ts


 ப்ளேயிங் இட் மை வே - சச்சின்
அன்பிரேக்கபில் - M.C. மேரிகோம்
டெஸ்ட் ஆப் மை லைப் - யுவராஜ் சிங்







உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை

அதிகப்படியான செயல்களைச் செய்வதால் வெற்றி வருவதில்லை, சரியான செயல்களைச் செய்வதால்தான் வெற்றி வருகிறது.

குறிஞ்சி பாடுவதில் வல்லவர் - கபிலர்
உலா பாடுவதில் வல்லவர் - ஒட்டக்கூத்தர்
வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி


என்னால் யாருக்கும் எதுவும் கற்று தர முடியாது.. என்னால் அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்.

-- சாக்ரடீஸ்

நம்பிக்கை

ர்வின்

கிராமத்தில் மிகவும் பலகீனமானர் ஒருவர் இருந்தார். அவருக்கு நம்பிக்கை அதிகமாக இருத்தது. எதனையும் தன்னால் செய்ய முடியும் என்று நம்பினார்.

இறுகிப்போன பாட்டிலின் மூடியையும் பேனாவின் மூடியையும் திறப்பதில் அவருக்குத் தனித்திறமை இருந்தது. மற்றவர்களால் திறக்க முடியாது என்ற மூடியை இவர் முடியும் எனக் கூறித் திறந்து விடுவார்.

ஒருநாள் தன்னுடைய உடல்வலிமையில் அதிக நம்பிக்கையுள்ள ஒருவர் பேனாவைத் திறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தார் பலகீனமானர்.

‘என்னிடம் கொடுங்கள்’ என்று கேட்டார். பேனாவைப் பெற்றதும் ஒரே அழுத்தில் மூடியைத் திறந்து விட்டார்.

இதைப் பார்த்ததும் பலசாலிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. “தாங்கள் என்னை விட பல சாலியா?” என்று கேட்டார்.

உடனே பலவீனமானவர், “நான் உள்ளத் தால் பலசாலி” என்றார்.

முடியும் என்று எண்ணினால் வலிமை வந்துவிடும். முடியாது என்று கருதினால் வலிமை வெள்ளம் போல வடிந்து போய்விடும். ஆற்றல் இருந்தும் அதனை இழந்து விட நேரிடும்.

நம்மால் இயலவில்லை என்று நினைத் தால் நாம் அதன் மேல் அக்கறைப்படவில்லை என்றுதான் அர்த்தம். ஒருசெயலைச் செய்ய முடியும் என்று எண்ணிப்பார்க்கக் கூட விரும்பவில்லை என்றுதான் பொருள்படும்.

செயலை என்னால் ஆற்ற இயலும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். மனத்தை உறுதி படுத்த நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்மாலும் மனதை அலையவிடாமல் அடக்கி ஒரு காரியத்தில் செலுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன் பயிற்சியைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

நம்பிக்கை இல்லாவிட்டால் ஓன்றும் செய்யமுடியாது. செயல்படுவதற்கு முன் நம்பிக்கை கொள்வதை, பயிரிடுவதற்கு முன் நிலத்தை உழுவதற்கு ஒப்பிட முடியும்.

நம்மால் முடியுமா, முடியாதா என்று சபலப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளத்தில் முடியும் என்று உறுதி கொள்ள வேண்டும். மனதை உறுதியுடன் ஒருமைப்படுத்த முடியும். அலையும் மனதை அடக்கி ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்ப முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.

இந்த நம்பிக்கை வந்தபின் மனதைச் செலுத்துவதற்கான ஒரு குறிக்கோளை தேர்ந் தெடுத்து எடுக்க வேண்டும். இதன் பின்பு மனதை ஒரு செயலில் ஒருமைப்படுத்திப் பார்ப்போம் என்று அமர்ந்தும் மனதில் பல எண்ணங்கள் உருவாகும்.

நாம் விரும்பியதைத் தவிர்த்து வேறு எதோ எண்ணங்கள் எல்லாம் வந்து குவியும். இந்த நிலையில் நம் மனம் அலைக்கழியும். கவனம் சிதறும். கருத்து மாறுபடும்.

இந்த நிலையில் நாம்செய்ய வேண்டியது எல்லாம், வந்து குவியும் எண்ணங்களை முற்றிலும் விரட்டி விட வேண்டும். விரும்பும் எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மனதைத் திருப்ப வேண்டும்.

கொல்ல வரும் பகைவரை வெட்டி வீழ்த்தும் வீரரைப் போன்று விளங்க வேண்டும். இப்படி இருந்தால்தான் வேண்டாத எண்ணங் களின் வலிமை குன்றிவிடும் வேம் தனிந்துவிடும்.

அதன் பிறகு நாம் விரும்பிய எண்ணத்தை நெஞ்சின் நிலைக்களனாய் ஆக்கிக்கொள்ள முடியும். அப்பொழுது நெஞ்சத்தில் அது மட்டும் அரியணையில் அமர்ந்து இருக்கும்.

இதைத் தவிர வேறு எதனையும் அங்கு காணமுடியாது. ஒரே எண்ணத்தின் ஒப்பற்ற ஆட்சி உள்ளத்தில் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலைதான் வெற்றியின் அடித்தளமாகும்.

எதனையும் கற்றுக் கொள்வதற்கு சிறந்தவழி, எதைக் கற்க விரும்புகிறோமோ அதனையே செய்து பார்ப்பதுதான்.

நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினால் நீரில் துணிந்து இறங்கி விட வேண்டியதுதான். மன ஒருமைப்பாட்டை அறிந்து கொள்ள எளிதான முறை மனத்தை ஒரு நிலையில் இருக்கும் படி செய்து பார்ப்பது தான்.

விதையை நிலத்தில் ஊன்றி நீர் ஊற்றலாம். ஆனால் நாமே அதனை வளரச் செய்ய இயலுமா வளர்வது விதையின் வேலை தானே! தோட்டக்காரன் மரஞ்செடி கொடி களுக்கு நிர் ஊற்றிப் பாதுகாப்பான். ஆனால் வளர்ந்து மலர்ந்த கனிதர வேண்டியது மரத்தின் வேலை அல்லவா? எனவே முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் எல்லாமே வெற்றி யாக அமையும்.

டாக்டர் இராதா கிருஷ்ணன் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள் “அமெரிக்கா வான வெளியில் செலுத்திய செயற்கைச் சந்திரனைப் பற்றி தங்கள் கருத்தென்ன?”

உடனே டாக்டர் இராதா கிருஷ்ணன் ஒருவர் செய்ததை மற்றவராலும் செய்ய முடியும் என்பதற்குச் சான்று அமெரிக்காவின் சாதனை என்றார்.

உண்மையில் நம்மால் முடிந்த செயலை தான் முடியாது என்று நினைக்கிறோம். ஒரு செயலைச் செய்து கொண்டே அதனை நம்மால் செய்ய இயலாது என்று கூறுகிறோம்.

மனதை ஒரு நிலையில் நிறுதத முடிய வில்லையே என்று அங்கலாய்க்கிறோம். உண்மையில் நாம் மன ஒருமைப்பாட்டை அடைந்து இருக்கிறோம்.

எப்படி என்றால் நம்மை ஒருவர் அவமதித்ததும் என்ன செய்கிறோம்? நம்மை இவர் இப்படி அவமதித்து விட்டாரே என்ற எண்ணத்தை தவிர வேறு எந்த எண்ணமும் இடம் பெறாது.

அப்பொழுது நம்மால் டி.வி.யில் வரும் சினிமாவைக்கூட ரசித்துப் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு மனம் ஒருமையாகிவிட்டது. என்று அறிந்து கொள்ள முடியும்.

நம்முடைய மனம் அவமானத்திலே முழ்கி இருப்பதானால்தான் மற்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற சமயத்தில் மனத்தைக் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் செலுத்த முடியாமல் தவிக்கும் நாம், அவமானம் நேர்ந்த நிலையில் மனத்தை அதை விட்டு அப்புறப் படுத்த முடியாமல் தவிக்கிறாம்.

விரும்பும் விஷயத்தில் வேண்டிய நேரத்தில் மனத்தை ஒருமைப்படுத்தும் இயல்பு நிலையே வலிமையாகும். இதுதான் மனம் ஒன்றிய நிலை. இந்த திறமை வாய்ந்த வலிமையே உண்மையானது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய மனதை ஒரே நிலையில் நிறுத்தும்படி செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் நாம் அதை உணர்ந்து கொள்வதில்லை.

நமக்கு வேண்டியவர்களிடம் பேசும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. இதற்குக் காரணம் அவருடைய பேச்சில் ஒன்றிவிடுகிறோம்.

நம்முடைய மனம் அவருடைய பேச்சில் கவனமாக இருப்பதால் ஒருமைப்பட்டு விடுகிறது. மனதை ஒரு நிலையில் வைக்கமுடியும் இவைகள் எல்லாம் சான்றுகளாக இருப்பதனால் நம்மால் ஒரே மனநிலையில் இருந்து செயலாற்றி வெற்றி பெறமுடியும்.

சிப்பாய்

 "செஸ் ஆட்டத்திலே மிகவும் பலவீனமானதாக நாம் கருதுவது சிப்பாயை தான். முதலில் மட்டும் இரண்டு எட்டு போகும். அப்புறம் ஒவ்வொரு கட்டமாகத் தான் நகரும். ஆனால் இந்த சாதாரண சிப்பாய்க்கும் நம்மவர்கள் ஒரு அசாதாரணமான சக்தியைக் கொடுத்திருப்பார்கள். சதுரங்கத்தில் எந்தக் காய்களும் கடைசி வரை ஒரே விதமாகத் தான் செயல்படும். ஒன்று மற்றொன்றாக மாற முடியாது.

ஆனால் சிப்பாய் மட்டும் இறுதிக் கட்டத்தை எட்டினால் அது எதுவாகவும் மாறலாம். அது போல நீங்களும் உங்களின்
மென்மையான இயல்பை வைத்து போட்டி நிறைந்த இந்த சூழ்நிலையை பார்த்து உங்கள் ஆற்றலை குறைத்து மதிப்பிடாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியை திறமையை வைத்து உங்களை சரியாக மதிப்பிடுங்கள். தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரரைப் போல் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டு கடந்தால் எதுவாகவும் நீங்கள் மாறலாம்!"--திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ்..அவர்கள் கூறியது.

‪#‎நீதி‬: இது போட்டித் தேர்வாளர்களுக்கு முற்றிலும் பொருந்தும். படிக்கும் போது சிப்பாய் மாதிரி தான். கஷ்டப்பட்டு/ திட்டமிட்டு அந்த பக்கம் சென்று விட்டால் நாமும் பவர் பெற்ற அந்த சிப்பாய் போலத்தான்.

ஐந்துவகையான நீதிப் பேராணைகள்

ஐந்துவகையான நீதிப் பேராணைகள்

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas
Corpus) :
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால்,
அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில்
வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத்
திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட
வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச்
செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது
சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல்
துறையின் கடமை, இல்லையேல் அவரை
விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக
செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை
பிறப்பிப்பதாகும். இவ்வாணை
பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர்
அச்செயலை உடனடியாகச் செய்ய
வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை
பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு
செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை
பிறப்பிப்ப தாகும்.
.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo
warranto):
பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான
கோரிக் கையின் அடிப்படையில்,
அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த
அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை
வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக்
கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of
Certiorary):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ
அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை
பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச்
செயல்முறைகளையும் ஆவணங்களையும்
தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ
மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு
அனுப்பச் செய்வதாகும். *

5. பண்பாடு மற்றும்
கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு
29-30): * ்

4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
(அரசிய லமைப்புப் பிரிவு 25-28): *

3.
சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய
லமைப்புப் பிரிவு 23-24): * 2.
சுதந்திரத்திற்கான உரிமை
(அரசியலமைப்புப் பிரிவு 19-22):

* 1. சமத்துவ
உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

* 1978-
ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத்
திருத்தத்தின்படி சொத்துரிமையானது
அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்
பட்டதால், தற்போது ஆறு அடிப்படை
உரிமைகள் உள்ளன. *

இந்திய அரசியலமைப்பு,
தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக்
கொண்டிருந்தது. *
.

இந்தியாவின் 28-வது
மாநிலம் ஜார்கண்ட்.

29

Shour Cut

சிந்து சமவெளி நாகரிகம் பரவி இருந்த ஆற்றங்கரை நகரங்களும் , அவற்றின் மாநிலங்கள் பற்றிய குறிப்புகளை எளிதில் கீழ்க்கண்டவாறு நினைவில் வைத்து கொள்ளலாம்

we can esaily remember the importanat places in indus valley civilisation with their riverbank and province.

1) HARAPPA -
HARAPPA பற்றி அறிவதற்கான CODEWORD - HARAPPA(HA-RA-PA)
HA - HARAPPA (The place)
RA - RAVI (A River bank in which the harappa civilisation had its origin)
PA - PAKISTAN (harappa located in pakistan province)

2)ROPAR
ROPAR பற்றி அறிவதற்கான CODEWORD - ROSI (RO-S-I)
RO - ROPAR (The place)
S - Sutlej (A River bank in which the Ropar civilisation had its origin)
I - Indian Punjab(Ropar is located in Indian punjab province)

3)LOTHAL
LOTHAL பற்றி அறிவதற்கான CODEWORD - LPG(LPG Gas Cylinder)
L - Lothal (The place)
P - Pogova (A River bank in which the lothal civilisation had its origin)
G - Gujarat(lothal is located in Gujarat province)

4) SUTKAGENDOOR
SUTKAGENDOOR பற்றி அறிவதற்கான CODEWORD - SUBADHRA
(SU-BA-DH)
SU - Sutkagendoor (The place)
BA - Baluchisthan (Sutkagendoor is located in Baluchistan province)
DH - Dhast ((A River bank in which the Sutkagendhoor civilisation had its origin)

5) KALIBANGAN
KALIBANGAN பற்றி அறிவதற்கான CODEWORD - KARAGAM(கரகம்)
KA - Kalibangan (The place)
RA - Rajasthan (kalibangan is located in rajasthan)
GAM - Ghagger ( A River bank in which the Kalibangan civilisation had its origin)

6) MOHANJADHORA (The place)
MOHANJADHORA பற்றி அறிவதற்கான CODEWORD - MOSINI(MO-SIN-I)
MO - MOHANJADHORA (The place)
SIN - Sind (Mohanjadhora is located in Sind Province)
I - Indus (A river bank in which Mohanjadhora civilisation had its origin)

"வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
*
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
*
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
*
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
*
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
*
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
*
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
மேற்கூறிய அனைத்jதும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று..

Tamil GK

51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்

52. கரந்தை - ஆநிரை மீட்டல்

53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ

54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்

55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்

56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்

57. கல்கியின் முதல் நாவல் - விமலா

58. கலம்பக உறுப்புகள் - 18

59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்

60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்

61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்

62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்

63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்

64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்

65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா

66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா

67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்

68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150

69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா

70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்

திறமையில்லை என்றால்கூட பரவாயில்லை.. சோம்பேறித்தனத்தை மட்டும் அனுமதித்து விடாதீர்கள், ஜெயிப்பது கடினம்..

பல வருடங்களாக கொத்தனார் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவர், தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். மீதியுள்ள காலத்தை தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்பினார். எஜமானனிடம் தனது நிலையை சொன்னார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
கொத்தனார், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று தரக்குறைவான பொருள்களைக் கொண்டு, முறையான திட்டமிடல் இல்லாமல் வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி சோம்பேறித்தனமாக செய்தது துரதிர்ஷ்டம்தான்.
எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியை கொத்தனாரிடம் கொடுத்து, ''இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு'' என்றார்.
கொத்தனார் அதிர்ச்சியுடன் தலைகுனிந்தார். ''அய்யோ, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே?'' என்று மனம் வருந்தினார். தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்த கொத்தனாருக்கு..

நீதி: திறமையில்லை என்றால்கூட பரவாயில்லை.. சோம்பேறித்தனத்தை மட்டும் அனுமதித்து விடாதீர்கள், ஜெயிப்பது கடினம்..

பறவைகளைப் போல நாம் பறக்க முடியாது

பறவைகளைப் போல நாம் பறக்க முடியாது. ஏனென்றால் நமக்கு அந்த அளவு தன்னம்பிக்கை கிடையாது. நமக்கு இறக்கை என்பது நம்பிக்கையே. இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொருந்தும். பிறந்த குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது, எத்தனை முறை விழுந்தாலும் கடைசியில் எழுந்து நடந்து விடும். ஆனால் குழந்தை பருவத்தில் இருக்கும் இந்த விடாமுயற்சி வயது ஆக ஆக குறைகிறது. காரணம், பயம் இருப்பதில்லை. வாழ்க்கையில் முன்னேற, 'நம்மால் முடியும்' என்ற எண்ணத்தை நம் மனதில் விதைக்க வேண்டும். இன்று வயதானவர்கள் கூட எத்தனையோ தொழில்களில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் போது, இளைஞர்கள் மனதளவில் உழைக்க தயங்குவது ஏன்? இன்றைய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அதற்கான முயற்சி செய்ய விரும்புவதில்லை. முடியாதது என்பது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. 'முன்பு முடியாதது' என நினைத்ததை இன்று விஞ்ஞானிகள் நடத்திக் காட்டவில்லையா? அவர்களால் முடியும் போது... நீங்களும் ஏன் முயற்சி செய்யக்கூடாது.



2010 - செப்டம்பர் 21-ந்தேதி செவ்வாய் கிழமை டாக்டர் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தேன்.

கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் - அடுத்து கணித வகுப்பு -5.30-க்கு வீடு - தொழுகை - 6 மணிக்கு ரயில் நிலயம்- ஓடும் ரயிலிலிருந்து வீசியெறியப்படும் தினமணி - சுதேசமித்திரன்- பத்திரிக்கைகளை பிரித்து ராமேஸ்வரத்தில் வீடு வீடாக விநியோகம்- 8.00 மணிக்கு பழையதை
உண்டுவிட்டு பள்ளி - இரவு, 2 மணி நேரம் படிக்க மட்டும் விளக்கில் எண்ணெய் வசதி. விடுமுறை நாட்களில் அண்ணன் மளிகைக் கடையில் பணி.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் மாதம் 4 ரூ மிச்சப்படுத்த சைவ உணவுக்கு மாறி இன்று 84- ஐ கொண்டாடும் வயதிலும் சைவம்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் ரம்ஜான் - இப்தார் விருந்துச்செலவு 2.50 லட்சத்தை அப்படியே அனாதை விடுதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ் டெல்லி வருகையை முன்னிட்டு இங்கு மாளிகை வராந்தா கம்பளங்களை மாற்ற கேட்டபோது, மகான்களின் பாதம் பட்ட கம்பளத்தில் உங்கள் அதிபரின் பாதம் படுவது பெருமை என்று மாற்ற மறுத்தார்.

ஊரிலிருந்து டெல்லி சுற்றிப் பார்க்க வந்த உறவுகளின் செலவுக்கு கையிலிருந்து பணம் கொடுத்தார்.

பதவி காலம் முடிந்து மாளிகையை விட்டு
வெளியேறும்போது கையில் இரண்டு
சிறுபெட்டிகள், ஒரு பையில் , தான் காசு கொடுத்து வாங்கிய சில நூல்கள்....

எளிமையும் நேர்மையுமாய் என் இதயத்தில் இடம்பிடித்த மாமனிதர்- "யான்' 'எனது' என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்' - என்ற குறளைச் சொல்லி. என் கம்பன் உரையையும் ஓவியங்களையும் பார்த்து, என்னைப் பாராட்டிய போது, அந்தக் குறளின் முழுமையான அர்த்தத்துக்கு நம்மை இன்னும் தகுதியானவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆழ்மனம் சொல்லியது !!

உயிரியல் வினாக்கள்

 உயிரியல் வினாக்கள்
`````````````````````````````````

1) சீதபேதி நோயை உண்டாக்குவது எது?

எண்டமீபா ஹிஸ்டலைடிகா

2) வைரஸ்களை எதன் மூலம் பார்க்க முடியும்?

மின்னணு நுண்பெருக்கு ஆடி

3) வைரஸ் நோய்களுக்கு எடுத்துக்காட்டு

1) சாதாரண சளி 2) தட்டம்மை 3) சின்னம்மை 4) பெரியம்மை 5) வெறிநாய் கடி 6) இளம்பிள்ளை வாதம் (போலியோ)

4) நிமோனியா என்பது யாது?

தட்டம்மை, கக்குவான் இருமல், ஆஸ்த்துமா அல்லது மேல் மூச்• சார்ந்த தொற்று ஆகியவற்றின் சிக்கலான நிலை.

5) புட்டாளம்மைக்கு பயன்படுத்தும் மருந்து?

ஆஸ்பிரின் (வலி மற்றும் காய்ச்சலுக்கு)

6) காசநோயை எவ்வாறு கண்டறியலாம்?

அ) ஆஸிட் ஃபாஸ்ட் பாசில்லைக்கான சளி பரிசோதனை
ஆ) மார்பு எக்ஸ் ரே படம்

7) மாலை நேரக் காய்ச்சல், இரவில் வியர்ப்பது இவை எந்நோயின் அறிகுறிகள்?

காசநோய்

8) காசநோய் முக்கியமாக தாக்கும் உறுப்பு எது?

நுரையீரல்

9) பாக்டீரியாவினால் ஏற்படும் நாள்பட்ட நோய் எது?

காசநோய்

10) குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி எது?

BCG (பிறந்தவுடன் போடவேண்டியது)

11) டைபாய்டை கண்டறியும் சோதனைகள் யாவை?

1) வைடால் பரிசோதனை
2) இரத்தத்தில் நுண்ணுயிர் பரிசோதனை
3) மலத்தில் பாக்டீரியா உள்ளனவா என அறிதல்.

12) காலரா நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது?

விப்ரியோ காலரே.

13) சிறுநீர் அடர்மஞ்சள் எந்நோயின் அறிகுறி?

நோய்தொற்று கல்லீரல் அழற்சி

14) அமீபிக் சீதபேதிக்கான நோய் கிருமி யாது?

எண்டமீபா ஹிஸ்டோலிட்டிகா

15) கல்லீரலில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ள நோய் எது?

அமீபா சீதபேதி

16) போலியோ வைரஸ் எந்த மண்டலத்தை தாக்குகிறது?

நரம்பு மண்டலம்

17) புரதங்கள் எவற்றால் ஆனது?

அமினோ அமிலங்கள்

18) வைட்டமின் ம் Dயின் முக்கியத்துவம் யாது?

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி

19) நிக்கோடினிக் அமிலத்தின் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய் எது?

பெல்லகரா

20) ஃபோலிக் அமிலத்தின் பணி யாது?

அ) இரத்த சிவப்பணுக்களை (யூயளீ) உண்டாக்குவது ஆ) புதிய தி•க்களை உருவாக்குவது

21) வைட்டமின் C யின் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய் எது? -

ஸ்கர்வி

22) பரம்பரை இரத்த சோகை நோய்க்கு எடுத்துக்காட்டு எது?

சிக்கில் செல் இரத்த சோகை

23. இந்தியாவில் பரவும் நோய்களில் முதலிடம் வகிப்பது?

காசநோய்

24. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

1955

25. இந்தியாவில் எந்த ஆண்டு பால்வினை நோய் தடுப்பு முறை ஆரம்பிக்கப்பட்டது?

1946ல்

26. புரதசத்து குறைவினால் ஏற்படும் நோய்கள் யாவை?

1) மராஸ்மஸ் 2) குவாஷியார்க்கர்

9 th உரைநடை வினா வங்கி

9 th உரைநடை வினா வங்கி( For Group 2, S.I.exam)

1)சிங்கவல்லி என அழைக்கப்படுவது
1.கீழாநெல்லி 2.தூதுவளை 3.குப்பைமேனி 4.(1) மற்றும் (2)

2)கற்றாழையின் வேறு பெயர்
1.பரணி 2.குமரி 3. கோவை 4. வைகை

3)கரிசலங்கன்னியின் வேறு பெயர்கள்
1.பிருங்கரசம் 2.தேகராசம் 3.(1) மற்றும் (2). 4.இவை எதுவும் இல்லை

4)சுவரும் சுண்ணாம்பும் என்ற நூலினை எழுதியவர்
1.இராசகோபாலன் 2.சுரதா 3.உவமைகவிஞர் 4.இவை அனைத்தும்

5)தேன்மழை என்ற நூலினை எழுதியவர்
1.இராசகோபாலன் 2.சுரதா 3.உவமைகவிஞர் 4.இவை அனைத்தும்

6)மெய்கண்டான் புத்தக சாலையுடன் தொடர்புடையவர்
1.ராஜாஜி 2.காமராஜர் 3.மெயகொண்டர் 4.அண்ணா

7)காமராஜரின் அரசியல் குரு
1.முத்து ராமலிங்க தேவர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

8)காமராஜர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு
1.1937 2.1938 3.1939 4.1940

9)காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆண்டு
1.1937 2.1938 3.1939 4.1940

10)காமராஜர் முதல் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட ஐந்து ஆண்டு திட்டங்கள்
1.முதலாம் 2.இரண்டாம் 3.மூன்றாம் 4. (2) மற்றும் (3)

11)கூட்டுறவு இயக்கம் வேருன்றியது யாருடைய காலத்தில்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

12)தொழில்நுட்ப கல்லூரிகளை ஒவொரு மாவட்டத்திலும் உருவாக்கியவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

13)தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

14)தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தியவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

15)நில உச்சவரம்பு சட்டத்தின்படி உச்சவரம்பு 15 ஏக்கராக குறைத்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.கருணாநிதி

16)ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

17)காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
1.1965 2.1964 3.1963 4.1962

18)காமராஜர் மணிமண்டபம் உள்ள இடம்
1.விருதுநகர் 2.தேனீ 3.கன்னியாகுமரி 4.சிவகாசி

19)கல்வி வளர்ச்சி நாள்
1.ஜூலை 13. (2).ஜூலை 14. (3) ஜூலை 15 (4) ஜூலை 16

20)காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர்
1.வெங்கட்ராமன் 2.சுப்பிரமணியம் 3.பரமேஸ்வரன் 4.கிருஷ்ணன்

21)தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

22)காந்திய கவிஞர் என்று அழைக்கபடுபவர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

23)மலர் என்று முடியும் அனைத்து கவிதைகளையும் எழுதியவர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

24)வள்ளியம்மை பிறந்த இடம்
1.தென் ஆபிரிக்கா 2.வட ஆப்ப்ரிகா 3. கிழக்கு ஆபிரிக்கா 4,மேற்கு ஆபிரிக்கா

25)வள்ளியம்மையின் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்
1.காந்தி 2.நேரு 3.சுபாஸ் சந்திர போஸ் 4.ராஜாஜி

26)இந்தியன் ஒபினியன் இதழில் யாரை பற்றியது
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

27)காந்தியின் சகோதரி என்று அழைக்கபடுபவர்
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

28)தென்னாபிரிக்க சத்யா கிரகம் என்ற நூலினை எழுதியவர்
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

29)கோ ஆப்டெக்ஸ் விற்பனை மையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

30)கீழ்க்கண்ட எந்த மரபில் பெண்கள் முடிசூடிகொண்டதாக வரலாறு இல்லை
1.பாண்டியர் 2.சோழர் 3.நாயக்கர் 4.பல்லவர்

Website

https://drive.google.com/folderview?id=0B5sDrG7K0n2PM0liVzV1ck12dTQ&usp=sharing#list
www.facebook.com/mylanchijobs
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in

வாழ்க்கையின் ஐந்து மறுக்க முடியாத உண்மைகள் :

வாழ்க்கையின் ஐந்து மறுக்க முடியாத உண்மைகள் :

உங்கள் குழந்தைகளுக்கு "பணக்காரராக" வேண்டும் என்று கற்பிக்காதீர்கள்.! மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள் !! அப்போதுதான் அவர்கள் வாழ்வியல் விஷயங்களின் மதிப்பை தெரிந்து கொள்வார்கள்! விலையை அல்ல!!!!

உணவை மருந்தாகச் சாப்பிடுங்கள்.! இல்லையெனில் மருந்தையே உணவாக சாப்பிட வேண்டி வரும்.!!!!

உங்களை உண்மையிலேயே மிகவும் விரும்புவர்கள் உங்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டார்கள்.!
விலகுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சேர்ந்து இருப்பதற்கு ஒரு காரணத்தை தேடிக் கண்டு பிடுத்துவிடுவார்கள்.!!!!

மனிதனாய் இருப்பதற்கும், மனிதத் தன்மையுடன் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது. ஆனால் அதை ஒரு சிலரே புரிந்து கொண்டுள்ளார்கள்.!!!!

நீங்கள் பிறந்த பொழுதும், இறந்த பிறகும் உங்களை நேசிப்பவர்கள் அதிகம். ஆனால் இடைப்பட்ட காலத்தை நிர்வகிக்கும் திறமை உங்களிடம்தான் உள்ளது !!!!

GK

1. The largest producer of paddy in India----West Bengal
2. The lagest producer of wheat in India---Uttar Pradesh
3. The lagest producer of sugarcane in India ---Uttar Pradesh
4. The lagest producer of groundnut in India ---Gujarat
5. The largest producer of tea in India---Assam
6. The largest producer of coffee in India---Karnataka
7. The largest producer of jute in India ---West Bengal
8. The largest producer of tobacco in India---Andhra Pradesh
9. The largest producer of bananas in India---Tamilnadu
10. The largest producer of saffron in India---Jammu & Kashmir
11. The largest producer of onion in India---Maharashtra
12. The largest producer of black pepper in India---Kerala
13. The largest producer of bamboos inIndia---Assam
14. The largest producer of cotton in India---Gujarat*

பொது அறிவு - விசாரணை கமிஷன்

-மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்

-சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன்

-நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன்

-நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன்

-அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
லிபரான் கமிஷன்

-சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி

-ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஜெயின் கமிஷன்

-பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
மண்டல் கமிஷன்

முடியும், முடியாது இரண்டும் நிஜம் தான்-

முடியும், முடியாது இரண்டும் நிஜம் தான்-தி இந்து நாளிதழ்

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான். இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.

“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”

இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும். “என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.

நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன. “என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்! எல்லாருக்கும் வெற்றி வேண்டும்.

ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா? கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்: “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”

வாழ்க்கை

 நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......
.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

தோல்விகள் என்னை துரத்த..
வெற்றிகள் நோக்கி நான் ஒட...
களத்தில் நிற்கின்றேன்
நம்பிக்கையாக...

நீ செல்லும் வழியை சீர் செய்
அது பிறருக்கு நல்வழியா ஆகட்டும்

தமிழ்நாடு GK

 தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்?
சங்கரலிங்கனார்
* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?
தந்தை பெரியார்
* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?
தந்தை பெரியார்
* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?
ஈரோடு
* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?
வாஞ்சிநாதன்
* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?
மாறவர்மன் சுந்தரபாண்டியன்
* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?
மதுரை
* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?
நாவலர் நெடுஞ்செழியன்
* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?
பூம்புகார்
* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?
ஜனவரி 1, 2000
* மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திய தமிழக முதல்வர்?
மு.கருணாநிதி
* தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
* சுயமரியாதை திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினை வெளியிட்டவர்?
அறிஞர் அண்ணாதுரை
* தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1982
* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது இருந்த முதல்வர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
* வைகை அணை அமைக்கப்பட்டபோது தமிழக முதல்வர்?
காமராஜர்
* திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்?
செப்டம்பர் 17, 1949
* திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்?
அறிஞர் அண்ணா
* அறிஞர் அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்த ஆண்டு?
1935
* அண்ணா என்ற பத்திரிகையைத் துவங்கி நடத்திய கட்சி?
அதிமுக
* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?
1965
* மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை?
5
* அன்னை தெரசா பிறந்த நாடு?
யூகோஸ்லோவியா
* தமிழ்நாட்டில் 1934ல் கட்டப்பட்ட அணை?
மேட்டூர் அணை
* தமிழகத்தின் நில உச்ச வரம்பு எல்லை?
15 ஏக்கர்
* சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு?
14.01.1969
* ராஜ்ய சபையில் தமிழகத்திற்கு உள்ள இடங்கள்?
18
* ஆகஸ்ட் 15 ஆம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடும் மற்றொரு நாடு?
தென்கொரியா
* தமிழகத்தின் கரும்பு ஆராய்ச்சி மையம் இடம்?
கோயம்புத்தூர்
* தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம்?
முண்டந்துறை
* முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
மலேசியா
* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?
1908
* மேட்டூர் அணையின் பழைய பெயர்?
ஸ்டாலின் நீர்த்தேக்கம்
* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்?
ராஜாஜி
* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு?
படகுப்போட்டி
* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை?
யூகலிப்டஸ்
* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு?
சிலி
* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?
அபுல் கலாம் ஆசாத்
* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?
இஸ்ரேல்
* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?
1984
* சென்னை விமான நிலையம் கட்டப்பட்ட ஆண்டு?
1945
* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்?
இந்திரா காந்தி
* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்?
வண்டல் மண்
* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு?
நவம்பர் 1, 1956
* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்
* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
திண்டுக்கல்
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1981
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1984
* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985
* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட ஆண்டு?
1984

என் தந்தை!

1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.

6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.


இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி
தியாகம் செய்த தாயுமானவன்
என் தந்தை!

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு

1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிற்து.?
2. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்?
3. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்?
4. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?
5. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன?
6. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்?
7. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
8. ஓர் அரசியல் கட்சி, தேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்?
9. அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது?
10. இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படும்?
11. 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
12. எந்த சட்டங்களுக்கு எதிராக நீதிப்பேராணை (Writ) வரம்பு வழங்கப்படுவதில்லை?
13. இந்திய அரசியலமைப்பு பற்றிய இடைவிளக்கங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த தலைப்பின்கீழ் இடம்பெறுகின்றன?
14. மத்திய அரசு ஊழியர் ஒருவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து எங்கு முறையிடலாம்?
15. இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
16. எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது?
17. இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை?
18. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
19. தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது?
20. இந்திய மாநிலங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
21. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு எந்த வகையான குடியுரிமையை வழங்கியுள்ளது?
22. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
23. அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை?
24. நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை என்ன?
25. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
26. ஜார்கண்ட், சதீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
27. இந்திய அரசியலமைப்பில் எந்த விதியில் மைய நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன?
28. மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
29. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
30. 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
31. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
32. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபாவுக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
33. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
34. ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வுபெறுகிறார்கள்?
35. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்?

விடைகள்
1. குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும் 2. 35
3. லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம்
4. குடியரசுத்தலைவருக்கு
5. 65
6. 6 மாதங்கள்
7. 61-வது சட்டத்திருத்தம்
8. 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால்
9. நாட்டின் பொருளாதார வளம் ஒரு சாராரிடம் மட்டுமே குவிவதை தடுத்து சமமான பகிர்வை உறுதி செய்வது
10. ராஜ்ய சபாவை கலைக்க இயலாது.
11. போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தலி ஆகிய 4 மொழிகள் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரத்தை சட்டமாக்கியுள்ளது.
12. MISA, NSA
13. மேல்முறையீட்டு நீதி வரம்பு (Appellate Jurisdiction)
14. உச்சநீதிமன்றம்
15. ஜூன் 1947
16. இந்திய சுதந்திரச் சட்டம் 1947.
17. 299
18. நவம்பர் 26,
1949
19. 69-வது சட்டத்திருத்தம்
20. மக்கள் பேசும் மொழி அடிப்படையில்
21. ஒற்றைக்குடியுரிமை
22. 1955-ம் ஆண்டு சட்டம்
23. 6
24. அடிப்படை உரிமைகள்
25. 11
26. 84-வது சட்டத்திருத்தம்
27. விதி 52-151
28. 77-வது சட்டத்திருத்தம்
29. 545
30. 86-வது சட்டத்திருத்தம்
31. 250
32. 12
33. 6 ஆண்டுகள்
34. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
35. லோக் சபா

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்...

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்...

1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).

2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).

3. அதிகமாக உழைத்தல் ( Extra work).

4. தன்னம்பிக்கை ( Self confidence ).

5. சேமிப்பு ( Saving ).

6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).

7. தலைமைப் பண்புகள் ( Leadership ).

8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).

9. கற்பனைத் திறன் ( Imagination )

10. சுயக் கட்டுப்பாடு ( Self control).

11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).

12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).

13. கவனமாக செயல்படுதல் ( Concentration).

14. ஒத்துழைப்பு ( Co-operation)

15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).

16. சகிப்புத்தன்மை ( Tolerance ).

17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).

18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).

19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).

20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature )

~ தன்னம்பிக்கை.

GK

2015 ஆம் ஆண்டு தமிழக அரசு விருது

கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது - கோ.செல்வம்
சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்
ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்
Like · Comment · Share

Current affairs and Gk
1.இந்திர தனுஷ் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்
2.ஆந்திராவின் புதிய தலைநகர் -அமராவதி
3.சாகர் மாலா திட்டம் பெரிய துறைமுகங்களுக்கு அருகே 12 smart சிட்டிகளை அமைப்பது
4.2016 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம் லியோடிஜெனிரோ
5.Playing it my way புத்தகத்தை எழுதியவர் சச்சின் டெண்டுல்கர்
6.ஆபரேஷன் 'மைத்ரி' -நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி
7.2015 ஔவையார் விருது-சாந்தி ரங்கநாதன்
8.IAS தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாற்றுத்திறனாளி பெண்-சரிகா(ஒடிசா)
9.டெல்லி மாணவி நிர்பையா பற்றி BBC எடுத்த ஆவணப்படம் -இந்தியாவின் மகள்
10.உலகின் முதல் சூரிய சக்தி விமானம்-இம்பள்ஸ்2(ஸ்விட்சர்லாந்து)

ஐநா : உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தான் மிகவும் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் கீழ் இயங்கும் சஸ்டெய்னபில் டெவலப்மென்ட் சொலிஷன் நெட்வொர்க் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. டாப்-5 இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகியவை இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா 15வது இடத்திலும், இங்கிலாந்து 21, சிங்கப்பூர் 24, சவுதி அரேபியா 35, ஜப்பான் 46, சீனா 84வது இடத்திலும் உள்ளன.

இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013ல் 113வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் பின்தங்கியுள்ளது. நம்மை விட பாகிஸ்தான் (81), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (109), உக்ரைன் (111) மற்றும் ஈராக் (112) ஆகிய நாடுகள்கூட பட்டியலில் முன்னணியில் உள்ளன. ஆப்கானிஸ்தான், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்ரிக்க நாடுகளான டோகோ, புருண்டி, பெனின், ரிவாண்டா, புர்கினா, பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் சாட் ஆகிய 10 நாடுகள் மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் .

அடுத்த நிமிடத்தைக்கூட நாம்
ஆள முடியாதென்பதே நிஜம் .
இதில் தேவையற்ற திமிர், வெறுப்பு, ஆணவம் போன்ற குப்பைகளைச் சுமந்து சாக வேண்டாம்,
வாழ்க்கையின் முக்கியமான மூன்று கட்டம்ஏப்ரல் 24,2015,13:02 IST


வாழ்க்கையை மூன்று கட்டமாக பிரிக்கலாம். முதல் 25 ஆண்டுகளில் நாம் எதை வேண்டுமானாலும் கற்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 25- 50 ஆண்டுகளில் எதை எல்லாம் ஈட்ட வேண்டும்மோ அதை எல்லாம் ஈட்ட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 50- 75 ஆண்டுகளில் சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி செய்ய வேண்டும். இந்த மூன்று கட்டமும் முக்கியம்தான்.

முதல் கட்டத்தில் கிடைப்பதை படிப்போம் என்று இல்லாமல் நமக்கு தெரிந்த மற்றும் ஆர்வம் உள்ள துறையில் துறைகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். நம்மால் சாதிக்க முடிவும் என்ற நம்பிகையோடு, ஒரு துறையை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த துறையில் நாம் தான் முதலில் இருப்போம் என்ற வெறி இருக்க வேண்டும். இந்த மாதிரி வெறிதான் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களை, குறிப்பாக நாராயண மூர்த்தி போன்றவர்களை முதல் இடத்திற்கு கொண்டு செல்லும்.

சாதிக்க பிறந்திருக்கிறோம்

யாரும் எதையும் செய்ய முடியும். நாம் அதற்காக ஒரே படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும் வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது என்று சொல்லவில்லை. நீங்கள்  சினிமா பார்க்கலாம், நண்பர்களோடு சேர்ந்து விளையாடலாம். இதை எல்லாம் முன்னே சொன்ன மாதிரி 25 வயதிற்குள் முடிக்க வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அதாவது ‘நாம் சாதிக்க பிறந்து இருக்கிறோம்’ என்று. இதை எல்லாம் நம்முடைய அப்பா அம்மாதான் சொல்ல வேண்டும் அல்லது வழி நடத்த வேண்டும் என்று இருக்க கூடாது. நமக்கு என்ன திறமை இருக்கிறது என்று நம்மை விட வேறு யார்க்கும் தெரியாது?

திமிரு வேண்டும்

திருவள்ளுவர் சொன்னது போல் எப்பொழுதுமே எண்ணுவது எல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும். நோபல் பிரைசும் என்னால் வாங்க முடியும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். என்னால் எவருடனும் போட்டி போட முடியும்; எந்த இடமாக இருந்தாலும் என்னால் போட்டி போட முடியும் என்ற திமிரு எப்பொழுதுமே இருக்க வேண்டும்.

இதுபோக, IQ (intelligence quotient), EQ (Emotional quotient)and SQ (Spritual quotient) ஆகிய மூன்றில் திறமையாக இருக்க வேண்டும். IQ என்பது இயற்கையாகவே சிலர்க்கு இருக்கலாம்  சிலர்க்கு குடும்ப ஜீன்களில் இருக்கலாம். படிப்புக்கும் ஐகிம் எந்த தொடர்பும் இல்லை.

படிப்பு இருந்தால் நாம் கொஞ்சம் IQ வை அதிகரிக்கலாம் அவ்வளவுதான். EQ என்பது என்னால் முடியும் என்ற ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் வெறி. SQ என்பது மத நம்பிக்கை. அது எந்த மதமாகவும் இருக்கலாம். மத நம்பிகையும் முக்கியம். முயற்சியுடன் அம்மா அப்பாவின் ஆசிர்வாதம், ஆசிரியரின் ஆசிர்வாதம் மற்றும் இறைவனின் ஆசிர்வாதம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

மனதில் சுமப்போம்...

காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும், மடியிலும், தோளிலும்,
மார்பிலும் சுமப்பவள் தாய் மட்டுமே!
அவளை என்றும் மனதில் சுமப்போம்...

உன் குருதியின் அளவை விட
உன்னில் கொட்டுகின்ற
வியர்வை அதிகம்!

உன் உடல் எடையை விட
நீ சுமக்கின்ற
பாரம் அதிகம்!

உன் தேகச்சுருக்கத்தை விட
உன் வாழ்வில்
வறுமைக்கோடுகள் அதிகம்!

உன் பாதையில் மட்டும்
முட்களும்,கற்களும்
முன்னிலும் அதிகம்!

நீ உழைத்து களைத்து
பெறுகின்ற கூலி மட்டும்
இன்னுமும் குறைவு!

இருந்தும் எதிர்பார்ப்பற்று
உழைக்கிறாய்!
உலகம் உன்னாலே
தழைக்கிறது!

இனிய மே தின வாழ்த்துக்கள் தோழமையே,,,,

ijay Karthikeyan

நம் வெற்றி தோல்விகளை யார் வேண்டுமானாலும் தீர்மானிக்கட்டும்,
நம் உழைப்பை நாமே தீர்மானிக்கிறோம்.

உயர்வை தடுக்கலாம் ஆனால் உழைப்பை என்றும் தடுக்க முடியாது.

பிறரின் உழைப்பை கெடுத்து வருவதில்லை வெற்றி, நம் உழைப்பை கொடுத்து வருவதே !

உழைப்பாளர் தின வாழ்த்துகள் !

சிறகுகளை விரிக்காமல்

சிறகுகளை விரிக்காமல்
வானம் உனக்கு
சொந்தமில்லை
முயற்சியை தொடங்காமல்
முன்னேற்றம் உனக்கு
சொந்தமில்லை
உன்னை உணராமல்
வாழ்க்கை உனக்கு
சொந்தமில்லை
முடியாது என்ற
தாழ்வு மனப்பான்மையை
தகர்த்துவிடு
முடியுமா? என்ற
அவநம்பிக்கையை
அழித்துவிடு
முடியும் என்ற
நம்பிக்கையை
தாரக மந்திரமாக்கு
தன்னை அறிந்தவன்
தரணியில்
சாதிக்கிறான்
உன்னை அறிந்துகொள்
நாளைய விடியல்
உன் சொந்தம் …


குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே,

என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.

ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.

அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,

பொறுமை இழக்கவில்லை.

ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,

யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,

"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.

வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்

குப்பைகளையெல்லாம் என் மனதில்

சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு

பதில் சொல்லிக்கொண்டிருந்தால்

நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய

வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

ஆமாம்,

நண்பர்களே,

நமக்கு இலக்குதான்

முக்கியமே தவிர

இடையில் வரும்,

கொஞ்ச நஞ்ச

இடைஞ்சல்கள் அல்ல.

லட்சியத்தை நோக்கி:-

லட்சியத்தை நோக்கி:-

போர்ப் படைத்தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்

உயா்ப் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்

கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா.

போட்டித்தோ்வுக்கு தயாராகும் நண்பா்களே விழித்துக்கொள்ளுங்கள் விரைவில் குருப் 1,2,2A,VAO மற்றும் குருப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் அடத்தடுத்து வர உள்ளன.

செய்யத் துணிபவனுக்கும், எண்ணித் துணிபவனுக்கும் தான் வெற்றி கிட்டுகிறது-----பாரதிதாசன்.

ஹென்றி டேவிட் தோரா அவா்களின் கூற்றுப்படி தன்னம்பிக்கையுடன் இருங்கள் ; வெற்றி பெறவே பிறந்தோம் என்று நம்புங்கள் .

நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளின் லட்சிய பயணம் இது.

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப லட்சியத்தை நோக்கி பயணத்தை தொடங்கலாம் வாருங்கள்.


http://tamilblog.ishafoundation.org/7-chakkarangal-patri-neengal-therinthukolla-vendiyavai/

தேர்வு முடிவுகள் எப்போது?

இன்றய அளவில் போட்டி தேர்வாளர்களை அதிகம் பாதிக்கும் விசயங்களாக உள்ளவை...கட் ஆஃப் மதிப்பெண் என்ன?

தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு அறிவிப்புகள் எப்போது?

தேர்வுகள் தள்ளி போகுமா?

இந்த நான்கு கேள்விகளுக்கு விடை தேடியே தேர்வாளர்கள் படிக்கும் பொன்னான காலங்கள் வீணாக சென்றுகொண்டு உள்ளன.இதற்கு ஒரு படி மேலே சென்று குருப் I பிரதான தேர்விற்கு தயார் படுத்தும் தேர்வாளர்கள் தங்களின் தயாரிப்புகளை துவங்காமலே இந்த தேர்வு தள்ளி போக வாய்ப்பு உள்ளது என கூறி தன்னை சமாதான படுத்தி கொண்டு உள்ளனர்.தேர்வுகள் தள்ளி போவதால் நாம் தயாரிப்புகளை துவங்காமல் இருப்பது முறையாக இருக்குமா என்பதை சிந்தித்து பாருங்கள்.நீங்கள் எழுதப்போகும் தேர்விற்கு ஒரு வருடம் படித்தால் கூட மூன்று தாள்களின் பாடத்திட்ட முறையை முடிக்க இயலாது.உங்களை கடின உழைப்பிற்கு கீழ் கொண்டு வாருங்கள்.உங்களுக்கு கிடைத்து இருக்கும் வாய்ப்பை நீங்களே இழந்து நிற்காதீர்.

அடுத்து முடிவுகள் என்பது அடுத்த தொடக்கம்.நீங்கள் GROUP IV இல் வெற்றி பெற்று விட்டால் GROUP II விற்கு படிக்க தயாரவீர்கள்,அடுத்த கட்டம் தான் முடிவு என்பது அதற்காக நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.அதை போல் வதந்திகளை கிளப்பி விட வேண்டாம்.இவைகள் தேர்வாளர்களின் சிந்தனையை மாற்றும்.

தேர்வு அறிவிப்புகள் எப்பொழுது வந்தாலும் நாம் அந்த தேர்விற்கு முழுவதுமாக தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை சிந்தித்து பாருங்கள்.அந்த தேர்வின் பாடத்திட்ட முறையை நாம் முழுவதும் படித்து அலகு தேர்வுகள்,மாதிரி தேர்வுகள் எழுதி பத்து விட்டோமா?என்பதை சிந்தியுங்கள்?

போட்டி தேர்வுகளுக்கு நம்மை தயார் செய்து கொண்டு இருப்பதே மன உளைச்சல் தரக்கூடிய ஒன்று.இதில் மேலும் உங்களை சிரமப்படுத்தி கொள்ளாதீர்கள்.நீங்கள் நேர் வழியில் சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிட்டும்.

இறுதியாக....நீங்கள் காலம் கடந்து செய்யும் எந்த ஒரு செயலும் காலத்தை வெல்வது இல்லை.