Monday 26 September 2016

பொது அறிவு

 பொது அறிவு

1. பூமியின் வடிவமானது

(a) கோள வடிவம் (b) ஜியாய்டு வடிவம்

(c) முட்டை வடிவம் (d) நீண்டகோள வடிவம்

2. பின்வருவனவற்றுள் எந்த நேரக்கோடு இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

(a) 53.5 கி (b) 82.5 மே

(c) 53.5 மே (d) 82.3 கி

3. வளிமண்டலத்தில் காற்று சுழற்சி எதன் அடிப்படையில் சுழல்கிறது?

(a) பூமியின் சுழற்சி

(b) தோன்றக்கூடிய அழுத்த மண்டலம்

(b) 10 ஆகஸ்ட் கி.பி.1939

(c) 8 ஆகஸ்ட் கி.பி.1942

(d) எதுவும் இல்லை

4. ஒரு நாட்டில் மக்கள் தொகைக்கும் அந் நாட்டில் உள்ள நிலப்பகுதிக்கும் இடைப் பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப் படுகிறது.

(a) இந்திய தலைமை நீதிபதி (b) பிரதமர்

(c) ஜனாதிபதி (d) சபாநாயகர்

5. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப் பெரிய கோள் எது?

(a) புதன் (b) வௌ்ளி

(c) சனி (d) வியாழன்

6. உலகிலேயே மிகப்பெரிய தீவு

(a) மடகாஸ்கர் (b) கிரேட் பிரேட்டன்

(c) கிரீன்லாந்து (d) நியூ கினியா

7. ஆரவல்லி மலை எப்பொழுது உருவானது?

(a) மீசோசோயிக் சகாப்தம்

(b) டொ்சியரி சகாப்தம்

(c) பிரிகேம்ப்ரியான் சகாப்தம்

(d) லேட் பிரிகேம்ப்ரியான் சகாப்தம்

8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தீபகற்ப பீடபூமியில் காணப்படுவதில்லை

(a) ஆரவல்லிஸ் (b) பூர்வாஞ்சல்

(c) மால்வா பீடபூமி (d) தக்காண பீடபூமி

9. உலகிலேயே மூன்றாவது உயரமான கஞ்சன் ஜங்கா சிகரம் எங்கு உள்ளது?

(a) ஜம்மு காஷ்மீர் (b) உத்தரகாண்ட்

(c) சிக்கிம் (d) அருணாச்சலப்பிரதேசம்

10. இந்தியாவில் எது நகர மாநிலமாக உள்ளது?

(a) சண்டிகார் (b) சத்தீஸ்கார்

(c) டெல்லி (d) டேராடூன்

11. பொருத்துக

A. ஹரப்பா 1. பி.பி.லால்

B. லோத்தல் 2. ஜே.பி. ஜோ

C. காலிபங்கன் 3. சர் ஜான் மார்ஷல்.

D. தொளவீரா 4. எஸ்.ஆர். ராவ்

கீழ்கண்டவற்றுள் சரியான குறியீடுகளை தேர்ந்தெடுக்கவும்

A B C D

(a) 3 1 4 2

(b) 3 4 1 2

(c) 4 3 2 1

(d) 4 2 3 1

12. பொருத்துக

A. முதல் புத்த மாநாடு - 1. பாடலி புத்திரம்

B. 2ம் புத்த மாநாடு - 2. இராஜகிருகம்

C. 3ம் புத்த மாநாடு - 3. குண்டலவனா

D. 4ம் புத்த மாநாடு - 4. வைசாலி

கீழ்கண்டவற்றுள் சரியான குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்

A B C D

(a) 2 1 4 3

(b) 2 4 1 3

(c) 1 4 2 3

(d) 1 4 3 2

13. இந்தியாவின் மாக்கியவல்லி எனப் படுபவர் யார்?

(a) மெகஸ்தனிஸ் (b) கவுடில்யா

(c) ஃபாஹியான் (d) யாரும் இல்லை.

14. ஏக பிராமணா என்ற பட்டத்தை யார் பெற்றார்?

(a) கவுதமிபுத்திரா சதகர்னி

(b) சிமுகா

(c) வசிட்ட புத்திர புலுமாயி

(d) எதுவும் இல்லை.

15. மத்தவிலாசபிரகாசனம் எந்த மொழியில் எழுதப்பட்டது

(a) தமிழ் (b) பிராகிருதம்

(c) சமஸ்கிருதம் (d) தெலுங்கு

16. கவிராஜமார்கம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது

(a) வீராச்சார்யா (b) மூன்றாம் கிருஷ்ணா

(c) அமோகவிருத்தி (d) முதலாம் அமோகவர்

17. எந்த முஸ்லீம் அரசர் இந்துக்களை ஜிம்மி என்றும் அவா்கள் மீது ஜிஸியா என்ற வரிவிதிப்பையும் முதலில் அறிமுகப் படுத்தினார்?

(a) இல்துமிஷ் (b) முகமது பின் காசிம்

(c) கோரி முகமது (d) கஜினி முகமது

18. எந்த டெல்லி சுல்தான் வேளாண்மையை ஊக்குவிக்க எண்ணி தக்காவி என்ற வேளாண்மை கடன்களை வழங்கினார்

(a) ஐபக் (b) அலாவுதீன் கல்ஜி

(c) முகமது பின் துக்ளக் (d) பிரோஸ் துக்ளக்

19. பின்வரும் எந்தத் திட்டத்தில் நிலத்தின் உற்பத்தியின் அடிப்படையில் வருவாய் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது?

(a) ரயத்துவாரி முறை

(b) மகல்வாரி முறை

(c) நிலையான நிலவரித்திட்டம்

(d) ஐந்தாண்டு நிலவரித்திட்டம்

20.பொருத்துக

A. மெக்காலே அறிக்கை- 1. கி.பி.1904

B. உட்ஸ் அறிக்கை- 2. கி.பி.1882

C. ஹண்டர் ஆணையம்- 3. கி.பி.1854

D. இந்திய பல்கலை. சட்டம்- 4. கி.பி.1835

A B C D

(a) 1 2 3 4

(b) 3 2 1 4

(c) 4 3 2 1

(d) 1 4 3 2

21. பின்வருபவர்களில் யார் மிதவாதிகள் தலைவர் இல்லை?

(a) தாதாபாய் நவுரோஜி (b) எம்.ஜி.ரானடே

(c) கோபால கிருஷ்ண கோகலே (d) திலகர்

22.வெள்ளையனே வெளியேறு தீர் மானத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றிய நாள்

(a) 8 ஆகஸ்ட் கி.பி.1940 (b) 10 ஆகஸ்ட் 1939

(c) 8 ஆகஸ்ட் கி.பி. 1942 (d) ஏதுவுமில்லை

23. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத் தத்தின் மூலம் சிக்கிம் இந்தியாவின் கூட்டாட்சி மாநிலமாக இணைக்கப் பட்டது?

(a) 1972, 30-வது சட்டத்திருத்தம்

(b) 1973, 32-வது சட்டத்திருத்தம்

(c) 1974, 35-வது சட்டத்திருத்தம்

(d) 1975, 33-வது சட்டத்திருத்தம்

24.கலாச்சார மற்றும் கல்வி உரிமைகளை வழங்கும் ஷரத்துகள் எவை?

(a) ஷரத்து 25-28 (b) ஷரத்து 29-30

(c) கண்டத்துக்கும் கடலுக்கும் உள்ள பரவல்

(c) ஷரத்து 23-24 (d) ஷரத்து 32

25. எந்த அரசியலமைப்பு சட்டதிருத்தம் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமை யிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டது?

(a) 42-வது சட்டத்திருத்தம் கி.பி.1976

(b) 44-வது சட்டத்திருத்தம் கி.பி.1978

(c) 73-வது சட்டத்திருத்தம் கி.பி.1992

(d) 74-வது சட்டத்திருத்தம் கி.பி.1992

26. நெறிமுறை கோட்பாடுகள் இதனை அடிப்படையாக கொண்டது

(a) காந்திய கொள்கைகள்

(b) பரந்த-அறிவுசார் கொள்கைகள்

(c) சமூகவியல் கொள்கைகள்

(d) வெப்பச் சமநிலை

(d) மேற்கூறிய அனைத்தும்.

27. நாடாளுமன்றத்தின் கூட்டமர்வு யாரால் கூட்டப்படும்?

(a) மக்களவை சபாநாயகர்

(b) பிரதமர்

(c) குடியரசுத் தலைவர்

(d) மாநிலங்களவை தலைவர்

28.ஒரு மசோதாவை பண மசோதா (அல்லது) மற்ற மசோதா என தீர்மானிப்பது யார்?

(a) சபாநாயகர் (b) ஜனாதிபதி

(c) பிரதமர் (d) மாநிலங்களவை தலைவர்

29. மாநில அரசுத் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்வது?

30. எந்த மாநிலத்தில் முதன்முதலாக ஊராட்சி அரசாங்கம் அறிமுகப்படுத் தப்பட்டது?

(a) குஜராத்

(b) ராஜஸ்தான்

(c) பீகார்

(d) ஆந்திரப்பிரதேசம்

31. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(a) அமைச்சர் (b) சேர்மன்

(c) மேயர் (d) அங்கத்தினர்

(a) மக்கள் தொகை அடர்த்தி

32.சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எப்போது தொடங்கப்பட்டது?

(a) 2001 (b) 2002

(c) 2003 (d) 2004

34. ஒரு புவி நிலை செயற்கைக் கோளின் சுற்றுக்காலம்

(b) மக்கள் தொகை குறியீடு

(a) 24 மணிநேரம் (b) 30 நாட்கள்

(c) 365 நாட்கள் (d) தொடர்ந்து மாறும்

35.ஒலி அதிவேகமாக பயணிப்பது எவற்றில்

(a) வெற்றிடத்தில் (b) காற்றில்

(c) தண்ணீரில் (d) இரும்பில்

36.முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பூஞ்சைக் கொல்லி எவை?

(a) போர்டியாக்ஸ் கலவை

(b) டிடிடீ (DDT)

(c) நைட்ரஜன்

(d) சுரமின் பூ

(c) மக்கள் தொகை பரவல்.

37. வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கும் நொதிகளை தூண்டிவிடும் முக்கிய நொதிகள் கிடைப்பது?

1. ரிபோஃளேவின்.

2. நிக்கோடின்நமைடு.

3. அஸ்கார்பிக் அமிலம்.

4. குளுட்டமேட்

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான வற்றை தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2. (b) 2 மற்றும் 3

(c) 3 மற்றும் 4 (d) 1 மற்றும் 4.

38. பின்வருவனவற்றுள் துணைக்கோள்கள் இல்லாதவை எவை?

1. செவ்வாய் 2. வௌ்ளி

(d) பாலின விகிதம்.

3. புதன் 4. நெப்டியூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2 (b) 2 மற்றும் 3

(c) 1 மற்றும் 3 (d) 2 மற்றும் 4

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

விடைகள்: 1.b 2. d 3. d 4. a 5. d 6. c 7. c 8. b 9. c 10. c 11. b 12. b 13. b 14. a 15. c 16. d 17. b 18. c 19. b 20. c 21. d 22. c 23. c 24. b 25. b 26. d 27. c 28. a 29. c 30. b 31. b 32. d 33. c 34. a 35. d 36. a 37. a 38. b

ஹீமோபீலியா

உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.
ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
'ஹீமோபீலியா' மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், 'ஹீமோபீலியா' உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.
தாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். அவை, ஆணின் உடலில் 'எக்ஸ், ஒய்' குரோமோசோம்களாகவும், பெண் உடலில், 'எக்ஸ், எக்ஸ்' குரோமோசோம்களாகவும் இருக்கும். 'எக்ஸ்' குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, 'ஹீமோபீலியா' வர முதன்மை காரணம். அதனால், ஒரு 'எக்ஸ்' குரோமோசோம் கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால், சமாளிக்க முடியாது.
இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு, ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு 'எக்ஸ்' குரோமோசோமில் உள்ள மரபு பண்புகளை கொண்டு, ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.
இந்த நோயின் தன்மைக்கு ஏற்றவாறு, சிகிச்சைகள் உள்ளன. 'க்ரையோ பிசிபிடேடர்' எனும் ஊசி உள்ளது. ஆனால், இதை தயாரிக்கும் செலவு அதிகம். நம் நாட்டில் இம்மருந்து அதிகம் கிடைப்பதில்லை.

லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா

1966 ல், மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில், Administrative Reforms Commission (ARC) அன்மிஸிஸ்டிரேடிவ் ரிபார்ஸ் கமிஷன் ஒன்றின் பரிந்துரையில், மத்திய அரசில் லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியது. லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா என்பவர் மத்திய மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அதிகாரி. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம். அவர் கீழ் அமையும் அமைப்புக்கு, பொது மக்கள் தொடுக்கும், புகாரின் பேரில், அரசு ஊழியர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல்களை, தவறுகளை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் அதிகாரம் இருக்கும். அந்த மாதிரியான விசாரனையில், பொது மக்களின் குறைகளை விரைவில் களைய ஒரு வழி கிடைக்கும் என்று முடிவானது.
1971 ல் முதன் முதலாய், மகாராஷ்டிர மாநிலத்தில், லோக் ஆயுக்தா நியமிக்கப் பட்டார். அடுத்து 19 மாநிலங்களில் லோக் ஆயுத்தா நியமிக்கப் பட்டனர். மற்ற இதர மாநிலங்களில் இன்னும் நியமிக்கப் படவில்லை, குறிப்பாக இதுவரை தமிழகத்தில் லோக் ஆயுத்தா உள்ளே நுழையவே இல்லை. கர்நாடக மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சந்தோஷ் ஹெக்டே அவர்கள் லோக் ஆயுத்தா வாக தீவிர மாக செயல் பட்டு, 12,000 கோடி சுரங்க ஊழலை கண்டு பிடித்து, முதலமைச்சராய் இருந்த திரு யெடியூரப்பா அவர்களை சிறைக்கு அனுப்பினார். குஜராத்தில், திரு நரேந்திர மோடி பல காலமாய் லோக் ஆயுக்தா நியமிக்க தடையாய் இருந்து, இறுதியில் கவர்னரின் குறிக்கீடில் நியமிக்கப் பட்டார்.
சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா செயல் படுத்தப் பட்டதே தவிர, மத்திய அரசில் வரவேண்டிய, லோக் பால் என்ற அமைப்பு வரவே இல்லை. அப்படி ஒரு அமைப்பை கொண்டு வரவே, திரு அன்னா ஹாசாரே அவர்கள் தலைமையில் ஒரு புரட்சி துவங்கியது

பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்

பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்

உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே. சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.

கருவின் நிலையும் இந்த செல்களின் தொகுப்பு என்பதால், செல்லின் செயல்பாடுகள் பற்றியும், அதன் அங்கங்கள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது, கருவறையில் சங்கமமாகும் விந்தணு, சினை முட்டை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு துணை புரியும்.

மேலும், அங்கு உருவாகும் கருவின் பாலை (Sex) விந்தணு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
ஒரு செல்லின் சராசரி எடை, ஒரு கிராமின் நூறு கோடியில் ஒரு பகுதியாகும் என்றால், செல் எந்தளவிற்கு நுண்ணியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் சில நிமிடங்கள் மட்டும் உயிர் வாழக் கூடியது, இரண்டு மாதங்கள், பல வருடங்கள், அதற்கும் மேலாக உயிர்வாழக் கூடியது என பல வகையான செல்கள் உண்டு. நாம் மனிதக் கருவியல் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளதால் மனித செல்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன்படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பழைய செல் செயலிழந்து இறந்து விடும் போது, புதிய புதிய செல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் அறியாமலேயே இந்நிகழ்ச்சி நமது உடலில் இடை விடாது தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மனித செல்களில் மிகச் சிறியது ஆண் உயிரணுவாகவும், மிகப் பெரியது பெண் கருமுட்டையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



    இணையாநிலை


Add FavoritesShare to FacebookCopy Link
#2

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:02 pm
செல் அங்கங்கள்

முக்கியமாக செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும் ஒரு செல். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல் சுவாசிப்பதற்கு துணை புரிவதாகும்.

இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை தொடர முடியாது. இந்த நியூக்ளியஸித்திற்குள் மிக சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இதனை குரோமோசம் என்று கூறப்படும்.

ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு. அதனைச் சுருக்கமாக டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறப்படும். இது முதன் முதலில் 1953ம் ஆண்டுதான் பிரட்னில் காவண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என்.ஏ ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத் தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

வம்ச பரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பல செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு வெவ்வேறு செய்திகளை குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பல தொகுப்புகள் இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. இந்தத் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். கண், காது, மூக்கு, கை, கால், உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில், எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான். முன்னோரின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்கும் இந்த டி.என்.ஏ.வில் உள்ள ஜீன்தான் காரணம்.
கருவில் வளரும் குழந்தை பிறந்து, இறக்கும் வரை அதன் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும், கேட்கும், விளங்கும் திறன் அனைத்தையும் தீர்மானிப்பதும் இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும் எவ்வாறு உடலமைப்பு இருக்கும் என்பதையும் இந்த டி.என்.ஏ.வில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட, கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும். மேலும், பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய் தோன்றுவதற்கும் காரணமாகவும் அது அமைகிறது.

இதில் வியப்பு என்னவெனில், டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்? திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது. அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம். இது அதற்குரிய இடம் இல்லை. எனவே, நமது நோக்கத்திற்கு வருவோம்.



    இணையாநிலை


#3

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:03 pm
செல் பெருக்கம்

செல் பெருக்கம் மனித உடலில் இடையுறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தோம். உடலியல் செல், இனவிருத்தி செல் என இருவகை செல்கள் உள்ளன. இந்த இரண்டின் பெருக்கமும் இரு வேறு முறையில் நடைபெறுகிறது.

ஒரு உடலியல் செல் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தன்னைத் தானே இரட்டிப்பாக ஆக்கிக் கொள்கிறது. அப்போது, அதன் உட்கருவான நியூக்ளியஸ் குறுக்கு வாக்கில் இரண்டாக பிரிந்து, அதனுள் இருக்கும் 46 குரோமோசோம்கள் 23, 23 என பிரிந்து எதிரெதிராக ஒதுங்கிவிடுகிறது. அப்போது குரோமோசோம்களில் உள்ள டி.என்.ஏ. வானது நீளவாக்கில் பிளந்து கொள்ளும். அதனால் ஏற்கனவே இரண்டாகப் பிரிந்து, ஒதுங்கியிருந்த ஒவ்வொரு 23 குரோமோசோம்களும் நீளவாக்கில் பிளந்து கொள்கின்றன.

நீளவாக்கில் பிரிந்த குரொமோசோம்கள், ஆர்.என்.ஏ. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்)வின் துணையுடன் எதிர் எதிராக உள்ளதுடன் இணைந்து, இரண்டு தனிச்செல்களாக ஆகிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு செல்லும் 46 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். தாய் செல்லில் இருந்த அனைத்து தகவலும், பிரிந்த செல்கள் இரண்டிலும் ஆர்.என்.ஏ. வின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையான செல் பெருக்கத்தினை மைடாஸிஸ் (Mitosis) என்று கூறப்படும். அதாவது மிகுதல் பிரிகை ஆகும்.



    இணையாநிலை


#4

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:03 pm
இனவிருத்தி செல் பெருக்கம்
இனவிருத்தி செல் பெருக்கம் இதற்கு சற்று மாறு பட்ட முறையில் நடைபெறும். இனவிருத்தி உறுப்புகளில் உருவாகும் ஆணுயிர் செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களையும், பெண் கருமுட்டை செல்லானதும் 23 ஜோடி குரோமோசம்களையும் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொன்றிலும் முள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப் பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இதனை உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) என்று கூறப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல் கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும்.

23 வது ஜோடியானது பாலினத்தை (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனை பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். Y என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், X பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும்.இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாக பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு
X எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு Y எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும்.

சினை முட்டை செல்லிலும் இதே போன்றுதான் இரு பாதிகளாகப்பிரிந்து நிற்கும். ஆனால், இங்கு இரு பாதியிலும் X எனும் பெண் இனக் குரோமோசம்தான் இருக்கும். இதனை மையாஸிஸ் (Meosis) குன்றுதல் பிரிகை என்று கூறப்படும்.விந்தணுச் செல், சினை முட்டையை அடையும் போது இரண்டிலும் உள்ள பிரிந்த 23, 23 செல்கள் ஒன்றிணையும். அப்போது ஒரு செல்லுக்குத் தேவையான 46 குரோமோசம்களைக் கொண்ட ஒரு செல்லாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு ஒன்றிணையும் போது விந்தணுச் (ஆணுயிர்) செல்லின் இனக் குரோமோசோம்
X ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு பெண்ணாகவும், விந்தணுச் செல்லின் இனக் குரோமோசோம் Y ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு ஆணாகவும் இருக்கும் என இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது. சினை முட்டை செல்லின் பாலினக் குரோமோசம் எல்லா நிலையிலும் ஒன்றுபோலவே இருக்கும். பாலினத்தை (Sex) தீர்மானிப்பதில் இதற்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, விந்தணுவும், சினை முட்டையும் ஒன்றிணையும் போதே அந்தக் கருவின் பாலினம் என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கபட்டுவிடுகிறது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் திறனோ, அதனை கண்டு பிடிக்கும் அறிவியல் ஆற்றலோ மனிதனிடம் இல்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாக உள்ளது. இந்த இடத்தில், கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே! என்ற இறை வசனம் விஞ்ஞானத்தை மிகைத்து நிற்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.



    இணையாநிலை


#5

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:05 pm
செல் தியரி

செல் எனும் வார்த்தைப் பிரயோகமே 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள செல் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.

அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம் ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி செல்லின் மையப்பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) எனவும் பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.

பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது. மேலும் பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற் கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரிய (Mitochondtia) என்று நாம் அறிந்து வருகிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனால், 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பல் வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக்கூறான டி.என்.ஏ. (D.N.A) வில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல இலட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது மேதைகளுக்கே தலை சுற்றாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்று அறிவிப்புச் செய்தார். அதன் பொருள்: இது வரையும் செல் பற்றிய செய்திகளையும், அதில் சார்ந்திருக்கும் மரபணுக் கூறான டி.என்.ஏ. பற்றியும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர் பறை சாற்றுகிறார்.

செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம், 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும், அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

GK

--இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்
--சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்
--சுதந்திர கட்சி - ராஜாஜி
--இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
--சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்
--இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
--இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி
--இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்
--இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்
--இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்
--பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
--ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்
--சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்
--பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே
--சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா
--லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
--தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
--தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
--தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
--தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
--வைக்கம் வீரர் - தந்தை பெரியார்
--ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
--பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்
--அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி
--சாரதா சதன் - பண்டித ராமாபாய்
--லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்
--இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
--பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி
இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்
--கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
--சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி
--வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்
--சாரணர் படை - பேடன் பவுல்
--இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
--ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்
--செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

GK

. எலக்ட்ரோ கார்டியோ கிராமை (ECG) கண்டுபிடித்தவர் யார்?/ Who invented Electro Cardio Gram (ECG) ?

பதில்: - வில்ஹெல்ம் இததோவன் (Wilhelm Eithovan)

2. இரத்தத்தன் PH அளவு எவ்வளவு? / What is the pH value of blood?

பதில்: - 7.4

3. இரத்தத்தில் ஆக்சிஜன் போக்குவரத்துக்கு உதவுவது எது? / What present in blood helps in the transportation of oxygen?

பதில்: - ஹீமோகுளோபின் / Hemoglobin

4. 'கிறிஸ்துமஸ் நோய்' என்று அழைக்கப்படும் நோய் எது? / Which disease is also known as 'Christmas Disease'?

பதில்: - ஹீமோபீலியா / Hemophilia

5. ' யுனிவர்சல் டோனர்' எது? / Which blood group is known as 'Universal Donor'?

பதில்: - ஓ வகை இரத்தம் / O group

6. மனித உடலில் தூய்மையான இரத்தத்தை கொண்டு செல்வது எது? / Which is the only vein in the human body that carries pure blood?

பதில்: - பல்மோனரி நரம்பு / Pulmonary vein

7. மனித உடலில் மிக பெரிய சுரப்பி எது? / Which is the largest gland of human body?

பதில்: - கல்லீரல் / Liver

8. மனிதனின் சராசரி கர்ப்ப காலம் எத்தனை நாள்? / What is the average period of human pregnancy?

பதில்: - 36 - 38 வாரங்கள் / 36 - 38 weeks

Thursday 22 September 2016

இந்திய அரசியலமைப்பு









அகில இந்திய 16வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் திகதி  முதல் மே 12ம் திகதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பெற்றுள்ள நிலையில் அரசியல் சம்பந்தமான விபரங்களை அறிந்திருப்பது முக்கியம் என்பதனால்  நாம் அறிந்தவரையில் விபரங்களை அறியத்தருகின்றோம்.

இந்திய மக்கள் தொகை: 120 கோடி
வாக்காளர்கள் தொகை: 81.4 கோடி
தேர்தல் தொகுதிகள்: 545
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 370
புதிய வாக்காளர்கள்: 10 கோடி
தேர்தல் முடிவுகள்: 16.05.2014 வெளியாகும் என அறிவிக்கப்பெற்றுள்ளது

இந்தியக் குடியரசு (India) என்றழைக்கப்பெறும் பாரத தேசம்; சுமார் 70 வருடங்களிற்கு முன்னர் இந்தியப் துணை கண்டத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் சேர்ந்த ஒரு பெருநிலப்பரப்பாக இருந்துள்ளது.



இந்திய பெருநிலப்பரப்பானது பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் 1947, ஓகத்து 15 அன்று (சுதந்திரம்) விடுதலை பெற்றது. அதனைத் தொடர்ந்து 1950, சனவரி 26 அன்று குடியசு நாடாக பிரகடனப் படுத்தப் பெற்று உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது



ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது.



அப்போது, இந்திய துணைக் கண்டமானது மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளாக இருந்த மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானிடையே 1971-இல் மூண்ட உள்நாட்டுப் போரின்போது இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது.



இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலும், (இந்துசமுத்திரம்) மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும்  எல்லைகளாக அமைந்துள்ளது. அத்துடன் இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியனவும் அமைந்துள்ளன. இலங்கை, மாலத்தீவு இலட்சத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருநிலத்திற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவுகளாகும்.



உலகநாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடாகவும், 7,517 கிமீ (4,700 மைல்) நீளம் வரை கடலை எல்லையாக கொண்ட நாடாகவும் நூற்றி இருபது கோடி மக்கள் தொகையையும் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகின்றது



மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.



அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.



முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது.



இந்திய அரசியல் சாசனம்
இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒன்றியங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன.



இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.



செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது.



பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.



இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை ”மாநிலங்களவை” மற்றும் ”மக்களவை” ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.



இந்திய நாடாளுமன்ற மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.



ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.



2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் மூலம் நாட்டின் 16 வது மக்களவை பொதுமக்களால் தெரிவு செய்யப்பெறுவார்கள் இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பின்னர் இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும்.



இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை அல்லது ”ராஜ்ய சபா” இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிட மேலவை ஆகும்.



இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறர்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.



இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.



மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது.



இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்ட அமருவின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.



மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.



மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில- பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.



இந்திய மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் மத்திய ஆட்சிப்பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளில் இருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.



இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.



இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன.



ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.



1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.



அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது.



மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.



1.    ஆந்திரப் பிரதேசம்
2.    அருணாச்சல் பிரதேசம்
3.    அஸ்ஸாம்
4.    பிஹார்
5.    சத்தீஸ்கர்
6.    கோவா
7.    குஜராத்
8.    ஹரியானா
9.    இமாசலப் பிரதேசம்
10.    ஜம்மு காஷ்மீர்
11.    ஜார்க்கண்ட்
12.    கர்நாடகம்
13.    கேரளம்
14.    மத்தியப் பிரதேசம்
15.    மகாராஷ்டிரம்
16.    மணிப்பூர்
17.    மேகாலயா
18.    மிசோரம்
19.    நாகாலாந்து
20.    ஒரிஸா
21.    பஞ்சாப்
22.    ராஜஸ்தான்
23.    சிக்கிம்
24.    தமிழ் நாடு
25.    திரிபுரா
26.    உத்தரகண்ட்
27.    உத்தரப் பிரதேசம்
28.    மேற்கு வங்காளம்
29.    தெலுங்கானா((* மாநில பிரிவு/உருவாக்கம் முழுமை அடையவில்லை))

யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
A.    அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B.    சண்டிகர்
C.    தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
D.    தாமன், தியு
E.    லட்சத்தீவுகள்
F.    புதுச்சேரி
G.    தில்லி

இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.



இந்தியாவில் மாவட்டம் (district, அல்லது Zilā, ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின் பகுதியை நிர்வகிக்கும் மண்டலமாகும். இந்தியா இருபத்தியெட்டு மாநிலங்கள் மற்றும் ஏழு ஆட்சிப்பகுதிகள் (ஆ.ப) ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.



2008இல் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.



மாவட்ட ஆட்சியர் (சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர்) மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சி பணிசேவை (இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார்.காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையர் (இந்திய காவல் பணிசேவை (இ.கா.ப) அதிகாரி) இப்பணியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.



மாவட்டங்கள் மேலும் வருமான மண்டலங்கள்,தாலுகாக்கள் (தெகிசில்கள்),வட்டாரங்கள் (பஞ்சாயத்து யூனியன்),பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமங்களாக பிரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.



சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.

அரசியல் கட்சிகளும் தேர்தல்களும்:
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.



இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும்.



குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது.



எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.



1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின.



தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.



2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இதுவாகும்.



16வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் முதல் மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 80 தொகுதிகள் உள்ளன.



நடப்பு மக்களவையின் (15வது மக்களவையின்) பதவி காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிகிறது. புதிய மக்களவை மே 31க்குள் அமைக்கப்படும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்



2004 ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மொத்தம் 67.10 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னர் 2009 தேர்தலில் 71.40 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2014 தேர்தலில் நாடு முழுவதும் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள்.



2014ல் நடைபெறும் தேர்தலுக்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன், மொத்தம் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 2.5 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாராகி வருகின்றன என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.



ஆந்திர பிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியும், ஒடிசா சட்டசபையின் பதவி காலம் ஜூன் 7ம் தேதியும்,  சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 21ம் தேதியும் முடிகிறது.



ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களில் இரண்டு வாக்குகள் பதிவு செய்ய இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு தொகை உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009ல் ரூ.25 லட்சமாக இருந்த தொகை 2011ல் ரூ.40 லட்சம் ஆக உயர்த்தப்பட்டதுடன் இந்த தேர்தலில் ரூ.70 லட்சம் வரையில் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Save



அத்துடன் இந்த தேர்தலில் முதல் முறையாக, ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிடும் Ôநோட்டாÕ என்ற பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது. 



நாடு முழுவதும் தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க மொத்தம் 1.1 கோடி தேர்தல் பணி ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் பாதிப்பேர் பாதுகாப்பு படையினர். மீதி சுமார் 55 லட்சம் சிவில் அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்திய திருநாட்டின் கடந்தகால  பிரதமர்கள் விபரம்:

எண்     பெயர்                            தொடக்கம்    முடிவு
1.    ஸ்ரீ ஜவகர்லால் நேரு    15-08-1947     27-05-1964
2.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    27-05-1964     09-06-1964
3.    ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி    09-06-1964    11-01-1966
4.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    11-01-1966    24-01-1966
5.    இந்திரா காந்தி    24-01-1966    24-05-1977
6.    ஸ்ரீ மொரார்ஜி தேசாய்    24-03-1977    28-07-1979
7.    ஸ்ரீ சரண் சிங்    28-07-1979    14-01-1980
8.    ஸ்ரீ இந்திரா காந்தி    14-01-1980    31-10-1984
9.    ஸ்ரீ ராஜீவ் காந்தி    31-10-1984    02-12-1989
10.    ஸ்ரீ வி. பி. சிங்    02-12-1989    10-11-1990
11.    ஸ்ரீ சந்திரசேகர்    10-11-1990    21-06-1991
12.    ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்    21-06-1991    16-05-1996
13.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    16-05-1996    01-06-1996
14.    ஸ்ரீ தேவ கௌடா    01-06-1996    21-05-1997
15.    ஸ்ரீ ஐ. கே. குஜரால்    21-05-1997    19-03-1998
16.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    19-03-1998    22-05-2004
17.    ஸ்ரீ மன்மோகன் சிங்    22-05-2004    Till Date

இந்திய குடியரசுத் தலைவர்
1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்
2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்
3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்
10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)
11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை
13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்
16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35
17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்
19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை
20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்
22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்
29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை
47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை
50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000
73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000
74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை

இந்திய அரசியல் அமைப்பு - 2
1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
4. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.
6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.
7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)
9. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.
10. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
11. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்
12. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்)
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
13. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
14. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
15. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
16. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்
17. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.
18. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி
19. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் - 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக
இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை
அனைத்திற்காகவும் நீக்கலாம்.
20. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
21. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.
22. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு
தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
23. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய
இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.
24. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.
25. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
26. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
27. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV
28. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்
29. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
30. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
31. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை
32. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்
33. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
34. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி -  அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள். 

இந்திய அரசியல் நிர்ணய சபை
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்
5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்
6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4
10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299
11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து
12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22
14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு
15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24
16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947
17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு
18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை
20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு
22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395
23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450
24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12
25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு
27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்
28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949
30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்
31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா
35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா
37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்
39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947
40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு
41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5
51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6
52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1
55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2
56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3
57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4
58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5
59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6
60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8
61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9
62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A
63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18
64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20
65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1
66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை
67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை
68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985
69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை
72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை
73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை
74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை
75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை
76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18
77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29
78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று
81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14
82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து
83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15
85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்
86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்
87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17
88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16
89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18
90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19
91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21
92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23
93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24
94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24
95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை
96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை
97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை
98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30
100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து

6ஆம் வகுப்பு தமிழ்

6ஆம் வகுப்பு தமிழ்
1.தமிழ் தாத்தா என போற்றப்படுபவர் யார்?
   உ.வே.சா
2.தமிழ் தாத்தா பிறந்த ஊர்?
   உத்தமதானபுரம்
3.உ.வே.சாவின் பெற்றோர் பெயர்?
   தந்தை:வேங்கட சுப்பையர்
   தாய்:  சரசுவதி
4.உ.வே.சா பிறந்த ஆண்டு?
   19-02-1855
5.உ.வே.சா மறைந்த ஆண்டு?
   28-04-1942
6.வள்ளலார் பிறந்த ஆண்டு?
   05-10-1823
7.வள்ளலார் மறைந்த ஆண்டு?
   30-01-1874
8.பாரதியார் பிறந்த ஆண்டு?
   11-12-1882
9.பாரதியார் மறைந்த ஆண்டு?
   11-09-1921
10.இராமலிங்க அடிகளின் பெற்றோர் பெயர்?
   தந்தை : இராமையா
   தாய் : சின்னமையார்
11.அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக வள்ளலார் நிறுவிய அமைப்பு?
   சமரச சுத்த சன்மார்க சங்கம்
12.ஏழை மக்களின் பசியை போக்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய தரும சாலை
13.ஞான நெறி விளங்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய ஞான சபை
14.வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
    திருவருட்பா
15.திருவருட்பாவில் எத்தனை திருமுறைகள் பாடல்கள் உள்ளன?
    6 திருமுறைகள், 5818 பாடல்கள்
16.அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை எதை போன்றது என வள்ளுவர் கூறுகிறார்?
    பாலை நிலத்தில் காய்ந்த மரம் மீண்டும் துளிர் விடுவது போன்றது
17.அன்புடைமை எனும் அதிகாரம் எப்பால், எந்த இயலில் அமைந்து உள்ளது?
    அறத்துப்பால், இல்லற இயல்
18.தற்போது நிகழும் திருவள்ளுவர் ஆண்டு?
   2046
19.சிறுமி சடகோ சசாகி எந்த நாட்டை சார்ந்தவர்?
  ஜப்பான்
20.சடகோ சசாகி வசித்த நகரம்?
   ஹிரோஷிமா
21.ஜப்பானியர் வணங்கும் பறவை?
  கொக்கு
22.குழந்தைகள் அமைதி நினைவாலயம் அமைந்துள்ள இடம்?
    ஹிரோஷிமா
23.இது எங்கள் கதறல்,இது எங்கள் வேண்டல், உலகத்தில் அமைதி வேண்டும் என்ற தொடர் எங்கு இடம் பெற்றுள்ளது?
   குழந்தைகள் அமைதி நினைவாலயம்
24.சடகோ சசாகி மறைந்த நாள்?
   25-10-1955
25. டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற நூலை எழுதியவர்?
    அரவிந்த குப்த்தா
26.ஓலை சுவடியை ஆற்றில் விட்ட நாள்?
    ஆடி பெருக்கு
27. ஆற்றில் விட்ட ஓலை சுவடிகளை உ.வே.சா கண்டெடுத்த இடம்?
    கொடுமுடி, ஈரோடு
28.உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்
    பெசன்ட்நகர், சென்னை
29.உ.வே.சா நூலகம் அமைக்க பட்ட ஆண்டு?
    1942
30. உ.வே.சா நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
    2006
31.ஓலைச் சுவடிகளில் எது இருக்காது?
    புள்ளி இருக்காது,ஒற்றைக் கொம்பு இரட்டை கொம்பு வேறுபாடு இருக்காது
32.ஓலைசுவடி எந்த ஓலையால் ஆனது?
    பனை ஓலை
33.ஓலை சுவடியை பாதுகாக்கும் இடங்கள் எவை?
    1. கீழ்திசை சுவடிகள் நூலகம்-சென்னை
    2. அரசு ஆவண காப்பகம்-சென்னை(1999)
    3.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை(1970)
    4. சரசுவதி மகால் நூலகம்- தஞ்சாவூர்(1918)
34.இந்தியாவில் உள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை?
   2400
35.உணவு அடிப்படையில் பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
   5வகை
36.அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும்,அதிக வெப்பத்திலும் வாழும் ஒரே வகை  பறவை?
   பூ நாரை
37.பறவைகள் பருவ கால மாற்றத்தின் போது இடம் பெயர்தல்?
   வலசை போதல்
38.தமிழகத்தில் பட்டாசு வெடிகாமலும், மேள தாளாம் இல்லாமலும் உள்ள ஒரே சிற்றூர்?
  கூந்தன் குளம்
39.தமிழகத்தில் உள்ள பறவைகள் புகலிடங்களின் எண்ணிக்கை?
   13
40.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்?
   திருவள்ளூர்
41.மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்குமுன் பாம்பினம் தோன்றியது?
   10கோடி ஆண்டுகளுக்கு முன்
42.மனிதனின் சிறந்த நண்பன் என அழைக்கபடும் இனம்?
   பறவை
43.உலகின் மிகப்பெரிய விஷபாம்பு?
   ராஜநாகம்
44.உலகில் உள்ள பாம்பினங்களின் எண்ணிக்கை?
   2750
45.இந்தியாவில் மட்டும் உள்ள பாம்பினங்களின் எண்ணிக்கை?
  244
46.விஷப்பாம்புகளின் எண்ணிக்கை?
  52
47.கூடுக்கட்டி வாழும் ஒரேவகை பாம்பு?
  ராஜநாகம்
48.சடகோ சசாகி கொக்கு செய்ய ஊக்கமளித்தவர்?
  தோழி சிசுகோ
49.நல்ல பாம்பின் விஷத்தில் இருந்து தயாரிக்கபடும் மருந்து?
   கோப்ராக்சின் எனும் வலி நீக்கி
50.பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது ஏன்?
   சுற்றுபுறத்தில் உள்ள வாசனையை அறிய
51.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர்?
    பாரதியார்
52.கனவு காண்பதில் இவருக்கு நிகர் இவரே?
    பாரதியார்
53.சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியவர்?
   ஔவையார்
54.ஔவையாரை தமிழ்மகள் என அழைத்தவர்?
   பாரதியார்
55.முயற்சி திருவினையாக்கும் என கூறியவர் யார்?
   திருவள்ளுவர்
56.டேரிபாக்ஸ் எந்த நாட்டை சார்ந்தவர்?
   கனடா
57.டேரிபாக்ஸ் புற்றுநோய் தொடரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் நடைபெறுகிறது?
   செப்டம்பர்15
58.வாய்மொழி இலக்கியம், தாளில் எழுதா பாடல், கிராமிய பாடல் என போற்றப்படும் இலக்கியம் எது?
   நாட்டுபுற பாடல்கள்
59.உலக நாட்டுபுறவியலின் தந்தை?
   ஜேக்கப்கீரிம்
60.தமிழக நாட்டுபுறவியலின் தந்தை?
   நா.வானமாமலை
61.பிறந்த குழந்தைக்கு பாடும் பாடல்?
   தாலாட்டு
62.சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு பாடும் பாடல்?
   விளையாட்டு பாடல்
63.திருமண நிகழ்வின் போது பாடும் பாடலின் பெயர்?
   சடங்கு பாடல்/கொண்டாட்ட பாடல்
64.தொழில் செய்வோர் களைப்பு நீங்க பாடும் பாடலின் பெயர்?
   தொழில் பாடல்
65.சாமி கும்பிடுவோர் பாடும் பாடலின் பெயர்?
   வழிபாட்டு பாடல்
66.இறந்தோற்க்கு பாடும் பாடல்?
   ஒப்பாரி
67.விவேகானந்தரின் இயற்பெயர்?
   நரேந்திரதத்
68.வீரத்துறவி என போற்றப்படுபவர்?
   விவேகானந்தர்
69.புறட்சிதுறவி என போற்றப்படுபவர்?
   வள்ளலார்
70.சமய சார்பற்ற துறவி என போற்றப்படுபவர்?
   இளங்கோவடிகள்
71.தொலைவில் இருந்தாலும் எத்தகைய நட்ப்பை அடைதல் வேண்டும் என நாலடியார் கூறுகிறது?
   வாய்க்கால் போன்றோர் நட்பை
72.எத்தகைய நட்பு கூடாது என நாலடியார் கூறுகிறது?
    ஈக்கால் துணையும் உதவாதவர் நட்பு
73.மனைக்கு விளக்கம் மடவாள் என்ற அடிகள் இடம்பெறும் நூல்?
    நான்மணிக்கடிகை
74.தமிழில் உள்ள எழுத்துகளில் மனித இனத்தை குறிக்கும் எழுத்து?
    அ
75.அ எனும் எழுத்தை எழுதி முடிக்கும் போது போடப்படும் கோடு எதனை குறிக்கிறது?
    மனிதன் முதுகில் சுமக்கும் அம்பு கூடு
76.தமிழ் எழுத்துகளில் நண்பர்கள் அல்லது நட்பு எழுத்துகள் என எவை அழைக்க படுகின்றன?
    வல்லினமும்,மெல்லினமும்
77.சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
    அ,இ,உ
78.வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
   5, எ ஆ ஏ யா ஒ