Thursday 22 September 2016

தாவரவியல்

தாவரவியல்



தாவரவியல்
* தாவரவியல் என்பது தாவர வாழ்க்கையைப் பற்றி கூறும் அறிவியலாகும்.
* தாவரங்களின் அமைப்பு, உருவம், வாழ்க்கை, உணவு முறை, வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவை இதனுள் அடங்குகின்றன.
* பல்லுயிர் தன்மை மற்றும் தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களை வகைப்படுத்தும் எண்ணத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
* சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி இந்த பூமியில் 10 முதல் 40 மில்லியனுக்கு மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் 1.7 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 7,50,000 பூச்சிகளும், 2,50,000 பூக்கும் தாவரங்களும், 47,000 முதுகெலும்பு பிராணிகளும் அடங்கும்.
* பல்வேறு உயிரினங்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளை பல்லுயிர்த்தன்மை (Bio-diversity) என்கிறோம்.
* உயினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியல் (Taxonomy) எனப்படும்.
Systematics என்ற இந்த சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் -நூல் Systema Naturae.
* ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட இந்திய மருத்துவர் சாரக்(சரகர்) சில தாவரங்களையும், விலங்குகளையும் இனம் கண்டறிந்து விவரித்தார்.
* மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த சில உயிரினங்களைப் பட்டியலிட்டவர் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஹிப்போகிரேட்டஸ் ஆவார்.
* ப்ளைனி தி எல்டர் (Pliny the Elder) என்பவர் தன்னுடைய ஹிஸ்டாரியா நாச்சுராலிஸ் (Historia Naturalys) என்ற நூலில் முதன் முறையாக செயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.
* சிற்றினம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜான் ரே.
* இரு சொல் பெயரிடும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி கரோலஸ் லின்னேயஸ்.
* வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரோலஸ் லின்னேயஸ்.
* அகஸ்டின் பரமாஸேடே கண்டோல் என்ற சுவிட்சர்லாந்து பிரெஞ்சு தாவரவியல் நிபுணர் வகைப்பாட்டியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
* கரோலஸ் லின்னேயஸ் எழுதிய ஸ்பீசிஸ் பிளேண்ட்டேரம் என்ற நூலில் 5900 தாவர சிற்றினங்களையும், சிஸ்டமே நேச்சுரே என்ற நூலில் 4200 விலங்கு சிற்றினங்களையும் விவரித்துள்ளார்.
* வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் (Species)  ஆகும்.
* ஒரு வகைப்பாட்டில் காணப்படும் 7 முக்கிய குடும்பங்களாவன: 1. உலகம் அல்லது பேரரசு 2. ஃபைலம் அல்லது பிரிவு 3. வகுப்பு 4. துறை 5. குடும்பம் 6. பேரினம் 7.சிற்றினம் ஆகியன.
* ஒரு குழுமத்தின் பரிணாம வரலாறு ஃபைலோஜெனி எனப்படும்.
* இரண்டுலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்ப படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார். 1. தாவர உலகம் 2. விலங்குலகம் ஆகியன.
* ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் ஆர்.எச்.விட்டேக்கர்.
* விட்டேக்கரின் ஐந்து உலகங்களாவன 1.மொனிரா 2. புரோட்டிஸ்டா 3. பூஞ்சைகள் 4. தாவரங்கள் 5. விலங்குகள் ஆகியன.
* மொனிரா (Monera) என்பதில் அனைத்து புரோகேரியாட் உயிரினங்களும் அடங்கும். மேம்பாடு அடையாத உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்களே புரோகேரியாட் ஆகும்.
* புரோட்டீஸ்டுகள் (Protists) உலகத்தில் ஒரு செல்லால் ஆன நீர் வாழ் யூகேரியாட்டுகள் அடங்கும். மேம்பாடு அடைந்த உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் யூகேரியாட் ஆகும்.
* பூஞ்சைகள் (Fungi) உலகத்தில் மோல்டுகள், மஷ்ரூம்கள், நாய்க்குடைகள், நிலக்குடைகள், பஃப் பந்துகள் ஆகியவை அடங்கும்.
* தாவர உலகத்தில் மிகப்பெரிய பிரிவுகளான ஆல்காக்கள், பிரையோ ஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் ஆகியவை அடங்கும்.
* பல செல்களாலான யூகேரி்யாட் உயிரினங்கள் விலங்குலகத்தில் அடங்கும்.
* 1990-ஆம் ஆண்டு இவோஸ், ஒகாண்ட்லர் மற்றும் எம்வீலிஸ் என்ற மூலக்கூறு அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்தனர் அவை: 1. யூகேரியா 2. பாக்டீரியங்கள் 3. ஆர்க்கியா
* ஆர்க்கியா என்பது அதிக கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் பாக்டீரியங்கள் ஆக்சிஜனற்ற நிலை, 80 டிகிரி செல்சியஸ் போன்ற மிக அதிக வெப்பநிலை, அதிக உப்புச் செறிவு, அமிலத்தன்மை வாய்ந்த மண் மோன்றவற்றில் இவ்வகை பாக்டீரியங்கள் உயிர் வாழ்கின்றன.
* தாவரங்களைப் பற்றிப் படிப்பது ஃப்ளோரா (தாவரவியல்) எனப்படும். தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தியோபிராஸ்டல் ஆவார்.
* தாவர உலகத்தைப் பொதுவாக இரண்டாகப் பிரிப்பர். அவை: 1. பூவாத் தாவரம் (ஃபெனரோகேம்ஸ்) 2. பூக்கும் தாவரம் (கிரிப்டோகேம்ஸ்)
* பூவாத் தாவரத்தை 1. தாலோபைட்டா (பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா) 2. பிரையோபைட்டா (ரிக்சியா, மார்கன்ஷியா 3. டெரிடோ பைட்டா (பெரணி வகைகள்) என மூன்றாகப் பிரிக்கலாம்.
* பூக்கும் தாவரத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் அவை: 1. ஜிம்னோஸ்பெர்ம் (சைகஸ், பைனஸ்) 2. ஆஞ்சியோஸ் பெர்ம்
ஆஞ்சியோஸ்பெர்ம் பிரிவை 1. ஒருவித்திலைத் தாவரம் 2. இரு வித்திலைத் தாவரம் என்று மேலும் பகுக்கலாம்
வைரஸ்கள்
* உயிருள்ளவற்றின் பண்புகளையும், உயிரற்றவற்றின் பண்புகளையும் பெற்றுள்ளவை வைரஸ்கள் ஆகும்.
* மிக நுண்ணிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய, நோயை உருவாக்கும், செல்லுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று வைரஸ் வரையறுக்கப்படுகிறது.
* வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
* புகையிலையில் பல்வண்ண இலை நோயினால் தாக்கப்பட்ட இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் மேயர் ஆவார்.
* விரியான் (Virion) என்பது விஷம் என்று பொருள்படும்.
* வைரஸ்களைப் படிக வடிவில் பிரித்தெடுத்தவர் W.M .ஸ்டான்லி ஆவார்.
* வைரஸ்களின் உயிர் பண்புகளில் ஒம்புயிர் தாவர செல் அல்லது விலங்கு செல்லினுள் மட்டுமே பெருக்கம் அடையும்.
* நோயை உருவாக்கும் திறன் வைரஸ்களின் உயிருள்ள தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
* வைரஸ் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. வைரஸ் சாதாரண செல் அமைப்பைக் கொண்டிருப்பதில்லை.
* வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான அமைப்பை வரைஸ் பெற்றிப்பதில்லை.
* கனசதுர வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு அடினோ வைரஸ்கள், எச்..வி.ஆகியன.
* சுருள் வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு புகையிலை மொசைக் வைரஸ், இன்புளுயென்சா வைரஸ் ஆகியன.
* சிக்கலான அல்லது அசாதாரண வடிவமுடைய வைரசுக்கு எடுத்துக்காட்டு பாக்டீரியோஃபேஜ், பாக்ஸ் வைரஸ் ஆகியன.
* வைரஸ்களின் இரு முக்கிய பாகங்கள் 1.கேப்சிட் என்னும் புரத உறை 2. நியூக்ளிக் அமிலம் ஆகியன. டி.என்.., ஆர்.என்.. நியூக்ளிக் அமிலங்களில் ஏதேனும் ஒன்று மட்டுமே வைரசில் காணப்படும்.
* கேப்சிட் எனப்படும் புரத உறை கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை.
* வைரசின் தொற்றுத் தன்மைக்கு காரணம் நியூக்ளிக் அமிலம். ஒம்புயிர் திட்டவட்டத் தன்மைக்கு வைரசின் புரத உறை காரணமாகிறது.
* ஒம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத தொற்றுத் தன்மை வாய்ந்த ஒரு முழுமையான வைரசிற்கு வீரியான் (Virion) என்று பெயர்.
* புரத உறையற்ற வட்ட வடிவமான ஒரிலை ஆர்.என்..வே வீராய்டுகள் (Viriods)  என்று அழைக்கப்படுகிறது.
* பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத் துகள்களாகும்.
* வீராய்டுகளால் உருவாகும் நோய் சிட்ரஸ் எக்சோ கார்ட்டிஸ் ஆகும்.
* ஃபிரியான்களால் உருவாகும் நோய் க்ருயிட்ஸ்ஃபெல்ட் ஜேகப் நோய், ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி ஆகியன.
வைரஸ்களின் வகைப்பாடு
* ஒம்புயிரின் அடிப்படையில் வைரஸ்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. தாவர வைரஸ்கள் 2. விலங்கு வைரஸ்கள் 3. பூஞ்சைகளின் வைரஸ்கள் 4. பாக்டீரியாவின் வைரஸ்கள்
* தாவர வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு புகையிலை, வெள்ளரி மற்றும் காலிஃபிளவரின் பல்வண்ண இலைநோயை உருவாக்கும் வைரஸ்கள், வாழையின் உச்சிக்கொத்து நோய், தக்காளியின் புள்ளி அழுகல் நோய் போன்றவற்றை உருவாக்கும் வைர்ஸக்ளும் தாவர வைரஸ்களாகும்.
* காலிஃபிளவர் மொசைக் வைரஸ் தவிர அனைத்து தாவர வைரஸ்களும் ஆர்.என்..வை மரபுப் பொருளாகக் கொண்டிருக்கும்.
* விலங்குகளைக் தாக்கி நோயை உண்டாக்கும் வைரஸ்கள் விலங்கு வைரஸ்கள் ஆகும். சார்ஸ் (கொரோனோ வைரஸ்), எய்ட்ஸ் (ரெட்ரோ வைரஸ்), வெறி நாய்க்கடி (ரேபிஸ் வைரஸ் அல்லது லிஸ்ஸா வைரஸ்), பொன்னுக்கு வீங்கி (பாராமிக்சோ வைரஸ்), மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் வைரஸ்), டெங்கு காய்ச்சல் (ஃபிளேவி வைரஸ்), போலியோ (போலியோ வைரஸ்) சிக்கன் பக்ஸ் (Chicken Pox) சின்னம்மை (வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ்) ஆகியன விலங்கு வைரஸ்கள் ஆகும்.
* பூஞ்சைகளுக்கு நோய் உண்டாக்கும் மைக்கோ வைரஸ்கள் எனப்படும். நீலப்பசும்பாசிகளைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்கள் சயனோ ஃபேஜ்கள் எனப்படும்.
* பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியோஃபேஜ்கள் எனப்படும்.
* பாக்டீரியோஃபேஜ் இரு வகையான வாழ்க்கைச் சுழற்சியை உடையது. 1. லைட்டிக் குழற்சி 2. லைசோஜெனிக் சுழற்சி.
* லைட்டிக் சுழற்சி என்பது பாக்டீரியோஃபேஜ்கள் செல்லுக்கு உள்ளே பெருக்கமடைவதால் ஒம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து பாக்டீரியா அழிகிறது.
* லைசோஜெனிக் சுழற்சியில் பாக்டீரியோஃபேஜ் ஒம்புயிர் செல்லின் குரோமோசோமின் ஒரு பகுதிபோலவே செயல்பட்டு பெருக்கமடைகிறது.
* புரோஃபேஜை தன் ஜீனோமில் கொண்டிருக்கும் பாக்டீரியா செல் லைசோஜெனிக் பாக்டீரியம் என அழைக்கப்படும். .கா. டிப்தீரியா பேசில்லஸ்.
* மனிதனில் புதிதாகத் தோன்றும் வைரஸ் நோய்கள் எபோலே வைரஸ், எச்..வி., டெங்கு, ஹெமராஜிக் ஜூரம், லஸ்ஸா ஜூரம், ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஜூரம், சார்ஸ், எயிட்ஸ் ஆகியன.
எயிட்ஸ் (AIDS)
* எயிட்ஸ் என்பதன் விரிவாக்கம் Acquired Immuno Deficiency Syndrome ஆகும்.
* எயிட்சை உருவாக்கும் வைரஸ் எச்ஐவி வைரஸ் (HIV - Human Immuno Deficiency Virus) எனப்படும்.
* எச்..வி. வைரஸ்கள் ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஒரு வரைஸ் பிரவைச் சார்ந்தவை.
* இவ்வைரஸ்கள் உதவும் செல்கள் (T Helper Cells) என்று அழைக்கப்படும் T4 லிம்ஃபோ சைட்டுக்களை தாக்கி மனித உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன.
* எயிட்சைக் குணப்படுத்த மருந்து ஏதும் இல்லை.
* அசிட்டோ தைமிட்டின் போன்ற மருந்தினால் எயிட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஒரு சில மாதங்கள் அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன. முழுமையாக கட்டுப்படுத்த இயலாது.
* புற்றுநோயை உருவாக்கும் வைரஸ்கள் ஆனகோஜெனிக் வைரஸ் (Oncogenic Virus) எனப்படும். .கா. சைமன் வைரஸ் (SV-40), ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஆர்.என்.. வைரஸ்கள்.
* இரத்த மாற்று, மாற்றும் திசு, உறுப்பு ஆகியவற்றை நோய் வாய்ப்பட்டவர்களிடமிருவந்து தானமாகப் பெறுதல், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள், சிரிஞ்சுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் மூலமாக எயிட்ஸ் பரவும்.
சார்ஸ் (SARS)
* சார்ஸ் என்பதன் விரிவாக்கம் (Servere Acute Respiratory Syndrome) ஆகும். சார்ஸ் நோய் கோரோனா வைரஸ்கள் எனப்படும் உறையுள்ள வைரஸ்களால் உண்டாகிறது. இந்த வைரசின் மரபுப் பொருள் ஒற்றை இழையால் ஆன ஆர்.என்.. ஆகும்.
* வைரஸ் தாக்குதலுக்கு மனி்த உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் இன்டர்ஃபெரான்கள் ஆகும். இது சைட்டோகைனி்ன் வகையைச் சார்ந்த புரதங்கள் ஆகும்.
பாக்டீரியங்கள்:
* பாக்டீரியம் என்பது "பாக்டீரியான்" என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்ததாகும். அதன் பொருள் " சிறு குச்சி " என்பதாகும்.
* பாக்டீரியங்கள் அளவில் மிக நுண்ணியவை ஆகும்.
* பாக்டீரியாவை நுண் நோக்கியின் (microscope ) மூலமே காணலாம். இவைதான் பல நோய்கள் உருவாக காரணமாய் உள்ளன.
* பால் புளிப்பதற்கும், நம் உடலின் மீது வியர்வை நாற்றம் அடிப்பதற்கும், நோய்கள் பரவுவுவது உள்ளிட்ட பலவற்றிக்கும் காரணம் இந்த பாக்டீரியங்கள் தான்.
* அதே சமையத்தில் இவை இயற்கைக்கு அளிக்கும் முக்கிய பங்கையும் நாம் மறந்து விட கூடாது. இவைதான் இறந்து போன தாவரங்கள், மிருகங்கள் மற்றும் பல வித கரிம கழிவு பொருட்களை அழுகச் செய்யவதால் இவற்றை இயற்கை துப்புரவாளர்கள் எனலாம்.
* பாக்டீரியங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆண்டன்வான் லியுவென்காக்
* நோய்கள் பற்றிய ஜெர்ம் கொள்கையை வெலியிட்டவர் லூயி பாஸ்டர்.
* விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நுண்ணுயிரிகள் தான் காரணம் எனக் கீறி நோய்களுக்கும் நுண்ணுயிரிகளுக்குமான தொடர்பினை நிரூபித்தவர் இராபர்ட் சோச்.
* பாக்டீரியா என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஏரன்பர்க்.
* பாக்டீரியங்கள் அனைத்தும் புரோகேரி்யாட் அமைப்புடைய ஒரு செல் உயிரிகளாகும்.
* பாக்டீரியங்கள் எல்லா இடங்களிலும் காணப்படும். எல்லா சுற்றுப் புறங்களிலும் அங்ககப் பொருட்களிலும், அங்ககப் பொருட்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.
* பாக்டீரியங்கள் பொதுவாக கமென்சல் ஆக வாழ்க்கின்றன. கமென்சல் (Commensal) என்பது இரண்டு சேர்ந்து வாழும் உயிரிகளில் ஒன்று பயனடையும், மற்றொன்று எந்தவிதப் பயனுமின்றி பாதிப்பின்றிக் காணப்படும். .கா. மனித சிறுகுடலில் வாழும் எஸ்செரிசியா கோலை.
* சில பாக்டீரியங்கள் தாவரங்களிலும் விலங்குகளிலும் மற்றும் மனிதர்களுக்கும் நோய்களை உண்டாக்கும் இந்த வகையில்(ஒட்டுண்ணி வகை பாக்டீரியங்கள்) (Parasitism) ஒரு உயிரினம் பயனடையும் மற்றொறு உயிரினம் பாதிப்படையும்.
* பாக்டீரியாவின் வடிவ அமைப்பை அதன் உறுதியான செல் சுவரே நிர்ணயிக்கிறது. பாக்டீரியங்கள் பொதுவாக கோள வடிவம், கோல் வடிவம், திருகு வடிவம் உடையன.
* சில பாக்டீரியங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் (Pleomorphic) காணப்படும். .கா.ஆர்த்ரோபாக்டர்.
* பாக்டீரியங்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது கசையிழைகள் (Flagella).
* வேதிச் சமிக்ஞைகளை கசையிழைகள் கண்டறிந்து அதனை நோக்கி நகர்கின்றன. இவ்வகை இயக்க முறைக்கு வேதித் தூண்டல் நகர்வு (Chemotaxis)  என்று பெயர்.
* உணவுப் பொருட்களின் தூண்டலுக்கேற்ப அதனை நோக்கி நகர்வு (Positive Chemotaxis) என்கிறோம்.
* வேதிப்பொருளை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு எதிர்மறை வேதித் தூண்டல் நகர்வு (Negative Chemotaxis) எனப்படும்.
பாக்டீரியாவின் உணவூட்ட முறைகள்:
* பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. அவை தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் எனப்படுகின்றன. .கா. ஸ்பைரில்லம்.
* வேதித் தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கும் எடுத்துக் காட்டு நைட்ரசோ மோனால் மற்றும் நைட்ரோபாக்டர் ஆகியன.
* பசும் கந்தக பாக்டீரியங்களில் ஹைட்ரஜன் அழிப்பானாகப் பயன்படுவது ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகும். இவ்வகை பாகாடீரியங்கள் அனங்கக ஒளி தற்சார்பு ஜீவிகள் ஆகும்.
* பசுங்கந்தக பாக்டீரியங்களில் காணப்படும் பசுகங்கணிகம் பாக்டீரியோ விரிடின் ஆகும்.
* அங்கக ஒளி தற்சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் ரோடோஸ்பைரில்லம்.
* அனங்கக வேதிசார்பு ஜீவி பாக்டீரியங்களுக்கு உதாரணம் தயோ பேசில்லஸ், ஃபெர்ரோபேசில்லஸ், ஹைட்ரஜனோ மோனஸ், நைட்ரசோ மோனஸ், நைட்ரோபாக்டர் ஆகியன.
* அங்கக வேதிச் சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் அசிட்டோபாக்டர், மெத்தனோகாக்கஸ், லாக்டோ பாசில்லஸ்.
பாக்டீரியாவில் காணப்படும் சுவாச முறைகள்:
* பாக்டீரியாவினால் காணப்படும் சுவாச முறையினைப் பொறுத்து கட்டாயக் காற்றுச் சுவாசிகள், காற்றில்லா சுவாசிகள், நிலை மாறும் காற்றில்லா சுவாசிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
* கட்டாயக் காற்றுச் சுவாசிகளில் இறுதி எலக்டிரான் ஏற்பியாக ஆக்சிஜன் செயல்படுகிறது.
* காற்றில்லா சுவாசிகள் வளர்வதற்கோ, வளர்சிதை மாற்றத்திற்கோ நொதிகள் தேவைப்படுவதில்லை. ஆனால் நொதித்தல் வினைகள் மூலம் இவை ஆற்றலைப் பெறுகின்றன..கா. கிளாஸ்டிரிடியம்
* நிலைமாறும் காற்றி்ல்லா சுவாசிகளில் ஆக்சிஜனை எலக்ட்ரான் ஏற்பியாகப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்ற முறையிலோ அல்லது காற்றில்லாமல் நடைபெறும் நொதித்தல் வினையின் மூலமாகவோ ஆற்றலைப் பெற்று வளர்கின்றன. .கா. எஸ்சிரியா கோலை.
* கிராமின் சாயத்திற்கேற்ப பாக்டீரியங்கள் எவ்விதம் வினைபுரிகின்றன என்பது பாக்டீரியங்களின் வகைப் படுத்துதலில் ஒரு முக்கியப் பண்பாக உள்ளது.
* கிராமின் சாயமேற்றுதலைப் பொறுத்து கிராம் பாசிட்டிவ், கிராம் நெகட்டிவ் என இரு வகைகளாக பாக்டீரியா பிரிக்கப்பட்டுள்ளது.
* கிராமின் சாயமேற்றுதலைப் பொறுத்து கிராம் பாசிட்டிவ், கிராம் நெகட்டிவ் என இரு வகைகளாக பாக்டீரியா பிரிக்கப்பட்டுள்ளது.
* கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியங்கள் இளஞ் சிவப்பாகவும், கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியங்கள் ஆழ்ந்த ஊதா நிறத்துடனும் காணப்படும்.
* கிராம் பாசிட்டிவ் வகை செல்சுவர்களில் டெய்க்காயிக் அமிலம் மற்றும் டெய்க்யூரானிக் அமிலம் மிகுந்து காணப்படும். மேலும் பாலிசாக்கரைடு மூலக்கூறு பெற்றுள்ளது.
* கிராம் நெகட்டிவ் வகை செல் சுவர்களில் பெப்டிடோ கிளைக்கான் அடுக்குக்கு வெளியே லிப்போ புரதங்கள், வெளிச்சவ்வு, லிப்போ பாலிசாக்கரைடு ஆகியவை காணப்படுகின்றன.
* சாதகமற்ற சூழ்நிலைகளில் பாக்டீரியங்களில் உருவாவது எண்டோஸ்போர் ஆகும்.
பாக்டீரியங்களின் இனப்பெருக்கம்:
* பாக்டீரியங்களில் இருவகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அவை: 1.இரண்டாகப் பிரித்தல் 2. பாலினப் பெருக்கம் ஆகியன்.
* பாலினப் பெருக்கம் 1. இணைவு (Conjugation) 2. ட்ரான்ஸ்டக்ஷன் (Transduction) 3. இயல்பு மாற்றம் (Transformation) ஆகிய மூன்று வகைகளில் நடைபெறுகிறது.
ட்ரான்ஸ்டக்ஷன் வகையில் பாக்டீயோஃபேஜின் புரத உறையின் மூலமாக, வழங்கி (Donar DNA) டி.என்.. பெறும் செல்லுக்கு (Recipient Cell) எடுத்துச் செல்லப்படுகிறது.
பாக்டீரியங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்:
* டைபாய்டு காய்ச்சல், சால்மானல்லா டைபி என்ற பாக்டீரியத்தால் உண்டாகிறது. சால்மானல்லா என்னும் பாக்டீரியம் கேஸ்ட்ரோ எண்ரைட்டிஸ் நோயை உருவாக்கும் சால்மானல்லா காலரேசியஸ் என்னும் பாக்டீரியத்தினாலும் கேஸ்ட்ரோ என்ரைட்டிஸ் நோய் உருவாகும்.
* விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியத்தால் மனிதனில் காலரா நோய் உருவாகிறது. இவ்வகை பாக்டீரியா சிறுகுடல் பகுதியில் எபிதீலியத் திசுவை ஒட்டிப் பெருக்கமடைந்து என்ட்ரோடாக்சின் (Enterotoxin) என்ற நச்சுப் பொருளை உற்பத்தி செய்கிறது.
* மனிதனில் பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியத் தொற்றால் உண்டாகிறது. இது ஒரு நகர்ச்சியற்ற கிராம் நெகட்டிவ் பேசில்லை வகையைச் சார்ந்த பாக்டீரியா ஆகும்.
* சிஃபிலிஸ் என்ற கொடூரமான பால்வினை நோய் ட்ரிப்போனிமா பாலிடம் சிபிலிஸ் என்ற பாகாடீயத்தால் தொற்றுகிறது.
* நிஸ்சேரியா கொனோரியா என்ற மற்றொரு பால்வினை நோயை உருவாக்குவது நிஸ்சேரியா பாக்டீரியம் ஆகும்.
* ட்யூபர்குளோசிஸ் (காசநோய்) எனப்படும் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவினால் உருவாகிறது.
* தொழுநோயை உருவாக்குவது மைக்கோபாக்டீரியம் லேப்ரே என்னும் பாக்டீரியா, இந்நோய் ஹேன்சனின் நோய் என்று அழைக்கப்படுகிறது.
* ஸ்கேபிஸ் எனப்படும் சொறி சிரங்கு இட்ச் மைட் எனப்படும் ஒரு வித மைட்டினால் (Mite) உருவாகிறது.
பாக்டீரியங்களால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்:
* எலுமிச்சை தாவரத்தில் சிட்ரஸ் கான்கர் நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் சிட்ரி என்ற பாக்டீரியா.
* நெல் செடியில் பாக்டீரிய வெப்பு நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் ஒரைசே என்ற பாக்டீரியா.
* பருத்தியில் கோண இலைப்புள்ளி நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் மால்வேசியேரம் என்ற பாக்டீரியா.
* பேரிச் செடியில் தீ வெப்பு நோயை உருவாக்குவது எர்வினியா கேரட்யோவோரா என்ற பாக்டீரியா.
* கேரட் செடியில் மென் அழுகல் நோயை உருவாக்குவது சூடோமோனஸ் சோலனேசியேரம் என்ற பாக்டீரியா.
பாக்டீரியங்களால் விலங்குகளுக்கு உண்டாகும் நோய்கள்:
* ஆடுகளுக்கு ஆந்திராக்ஸ் என்ற நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவில் உருவாகிறது.
* மாடுகளுக்கு புருசெல்லா மெலிட்டென்சிஸ் என்ற பாக்டீரியா ஆகும்.
* செம்மறி ஆடுகளுக்கு புருசெல்லோசிஸ் என்ற நோயை உருவாக்குவது புருசெல்லா மெலிட்டென்சிஸ் என்ற பாக்டீரியா ஆகும்.
பார்டீரியங்களின் நன்மை பயக்கும் செயல்கள்:
* தாவர விலங்கு எச்சங்கள் சிதைக்கப்படுவதற்கு பாக்டீரியங்கள் பயன்படுகின்றன. எனவே இயற்கைக் கழிவுநீக்கிகள் (இயற்கைத்தோட்டி) என பாக்டீரியாக்கள் அழைக்கப்படுகின்றன.
* பேசில்லஸ் ரமோசஸ், பேசில்லஸ் மைகாய்டஸ் போன்ற பாக்டீரியங்கள் இறந்த தாவர விலங்கு உடலங்களிலிருந்து புரதங்களை அம்மோனியாவாக மாற்றி, பின்பு அம்மோனியம் உப்புக்களாக மாற்றுகின்றன.
* நைட்ரோபாக்டர் மற்றும் நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்கள் அம்மோனியம் உப்புக்களை நைட்ரைட்டு மற்றும் நைட்ரேட் ஆக மாற்றுகின்றன.
* பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் தொழிற்சாலைகளில் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன.
* பாலைத் தயிராக மாற்ற லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் என்ற பாக்டீரியமும், பாலாடைக் கட்டியாக மாற்ற லாக்டோபேசில்லஸ் அசிடோஃபோபஸ் என்ற பாக்டீரியமும் பயன்படுகின்றன.
* அசிட்டோபாக்டர் அசிட்டை என்ற அசிட்டிக் அமில பாக்டீரியத்தின் செயலால் வினிகர் உற்பத்தி செய்யப்படுகிறது.
* கரும்புச் சக்கையிலிருந்து நொதித்தல் செயல்மூலம் பியூட்டைல் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் ஆகியவை தயாரிப்பதற்கு கிளாஸ்ட்ரிடியம் அசிட்டோ ப்யூட்டிலிகம் என்ற காற்றில்லா சுவாச பாக்டீரியம் பயன்படுகிறது.
* கிளாஸ்ட்டிரியம் போன்ற சில பாக்டீரியங்களின் செயல்களால் நார்தரும் தாவரங்களிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதுவே ரெட்டிங் (Retting) எனப்படுகிறது.
* பல பாக்டீரியங்களிலிருந்தே நுண்ணுயிர்க்கொல்லிகள் (Antibiotic) பெறப்படுகின்றன. .கா.பாசிட்ராசின் என்ற நுண்ணுயிரிக்கொல்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* பாலிமிக்சின் என்னும் நுண்னுயிர்க் கொல்லி பேசில்லஸ் பாலிமிக்சின் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் நுண்ணுயிர்க் கொல்லி ஸ்ட்ரேப்டோமைசிஸ் கிரைசியஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* மனித குடலில் வாழும் எஸ்சிரிசியா கோலை என்னும் பாக்டீரியா வைட்டமின் K மற்றும் வைட்டமின் B ஆகியவற்ரை உற்பத்தி செய்கிறது.
* கிளாஸ்ட்ரிடியம் என்ற பாக்டீரியாவின் சிற்றினங்கள் சர்க்கரையை நொதிக்கச் செய்து வைட்டமின் பி2 உற்பத்தி செய்கின்றன.
* பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் புழுக்களைக் கொல்ல பேசில்லஸ் வகையைச் சார்ந்த பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ் போன்ற பாக்டீரியங்கள் பயன்படுகின்றன
பூஞ்சைகள்
* பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றனய.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும் தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
* பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
* பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
* மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீது வாழ்கின்றன. .கா. ரைசோபஸ், அகாரிகஸ்
* பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
* பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
* மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
* மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
* ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
* வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும். சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன.
* மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
* முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
* சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
* பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தது.
* பூஞ்சைகளில் பச்சையம் இல்லை. எனவே இவை பிற ஊட்டமுறையைச் சார்ந்தவை.
* பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்) கிடையாது. தரத்திற்கு பதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன் உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
* பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இலைகளால் ஆனது. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
* குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
* பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
* எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
* பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
* பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
* ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
* பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
* ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
* லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
* பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
* இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
* மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
* ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
* வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
* பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
* யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3. ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
* கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
* மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இது பொதுவாக ஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இதை அழைப்பதுண்டு. இப்பேரினத்தில் 50 சிற்றினங்கள் உள்ளன.
* மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்தது. மியூக்கரின் ஒய்வு நிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.
* மியூக்கரில் வெஜிடேட்டிவ் முறையிலும், பால் மற்றும் பாலிலா இனப்பெருக்க முறையிலும் இன்ப்பெருக்கம் நடைபெறுகிறது.
* மியூக்கரில் ஒரே மைசீலியத்தின் ஹைஃப்பாக்கள் இணைவதன் மூலம் ஒரு சைகோஸ்போர் தோற்றுவிக்கப்படுமானால் அந்த நிலைக்கு ஹோமா தாலிசம் என்று பெயர். ஹோமோதாலிக் சிற்றினத்திற்கு எடுத்துக்காட்டு மியூக்கர் ஹீமாலிஸ்.
* மியூக்கரில் ஹெட்டிரோதாலிக் சிற்றினத்தில் ஒரு ஸ்போராஞ்சியத்தால் உருவாக்கப்படும் ஸ்போர்கள் அனைத்தும் + (பிளஸ்) தன்மை கொண்ட அல்லது -(மைனஸ்) தன்மை கொண்ட மைசீலியத்தைத் தோற்றுவிக்கும்.
* ஈஸ்டுகள், பழுப்புக் காளான்கள், பச்சைக் காளான்கள், இளஞ்சிவப்புக் காளான்கள், கிண்ணப் பூஞ்சைகள், உண்ணக்கூடிய மோரல்கள் ஆகியவை ஆஸ்கோ மைக்கோட்டினா வகையைச் சார்ந்தவை.
* ஆஸ்கோ மைசீட்டுக்ளுக்கே இரித்தான பண்பாக இப்பூஞ்சைகளில் ஆஸ்கோஸ்போர்கள் உருவாகின்றன. ஆஸ்கோஸ்போர்கள் ஆஸ்கஸ் எனப்படும் பை போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.
* ஆஸ்கஸ்கள் தொகுப்புக்களாகச் சேர்ந்து ஆஸ்கோ கார்ப் எனப்படும் கனி உறுப்பைத் தோற்றுவிக்கின்றன.
* ஆஸ்கோ கார்ப் மூன்று வகைப்படும் 1. கிளிஸ்டோதீசியம் 2. பெரிதீசியம் 3. அப்போதீசியம் ஆகியன.
* பூஞ்சைகளில் மிக்ப்பெரிய இனப்பெருக்க அமைப்புக்கள் அல்லது பெசிடியோ கார்ப் எனப்படும் கனியுறுப்புக்களை பெசிடியோ மைசீட்டுகள் தோற்றுவிக்கின்றன.
* காளான்கள், நாய்க்குடைகள், பஃப்பந்துகள், அடைப்புக் குறிப் பூஞ்சைகள் ஆகியவை பெசிடியோமைசீட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
* டியூட்ரோமைசீட்டுகள் பிரிவின் கீழ் மூன்று வகுப்புகள் உள்ளன. இவை முழுமையற்ற பூஞ்சைகள் என்று அழைக்கப்படுகின்றன.
* இப்பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்க நிலையே காணப்படுகிறது.

பூஞ்சைகளின் பொருளாதார முக்கியத்துவம்
* பெனிசிலியம் நொடேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பெனிசிலின் என்ற மருந்து அலெக்சாண்டர் ஃபிளெம்மிங் என்பவரால் 1828ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
* உண்ணக்கூடிய அகாரிகஸ் பூஞ்சையின் சிற்றினங்களான அகாரிகஸ் பைஸ்போரஸ், அகாரிகஸ் ஆர்வென்சிஸ், வால்வேரியல்லா வால்வேசி, வால்வேரியல்லா டைஸ்போரா ஆகியவை உணவாகப் பயன்படுகின்றன.
* சாராயத் தொழிற்சாலையும், ரொட்டித் தொழிற்சாலையும் ஈஸ்டுகளையே சார்ந்துள்ளன.
* சர்க்கரைக் கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்சைடாகம் நொதிக்கச் செய்வது ஈஸ்டுகள் ஆகும்.
* ஈஸ்டு என்பதன் தாவரவியல் பெயர் சாக்ரோமைசிஸ் செரிவிசியே.
* மரபியல் ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்த பூஞ்சை நியூரோஸ்போரா மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் ஆகிய பூஞ்சைகளாகும்.

பூஞ்சாகளின் தீய விளைவுகள்
* LSD (லைசர்ஜிக் அமிலம் டை எதில்அமைடு) எர்காட் எனப்படும் வேதிப்பொருள், கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது. இது ஒருவித பகற்கனவைத் தூண்டுகிறது.
* உருழைக் கிழங்கின் மென் அழுகல் நோயை ஃபைட்டோஃதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சை உருவாக்குகிறது. தாவர நோயியல் என்ற ஒரு புது அறிவியல் பிரிவு ஆரம்பமாவதற்கு இந்நோயே காரணம்.
* பருத்தியின் வாடல் நோய்க்குக் காரணமான பூஞ்சை ஃபயூசேரியம் ஆக்ஸிஸ்போரம்.
* கடலையின் இலைப்புள்ளி (Tikka disease of Ground nut) நோய்க்குக் காரணமான பூஞ்சை செர்க்கோஸ் போரா பெர்சோனெட்டா.
* கரும்பின் சிகப்பு அழுகல் நோய்க்குக் காரணமான பூஞ்சை கொலிட்டோடிரைக்கம்ஃபல்கேட்டம்.
* கேன்டிடியாசிஸ் எனப்படும் நோய்க்குக் காரணமான பூஞ்சை கேன்டிடா ஆல்பிகன்ஸ்.
* உருளைப்புழு நோய் தாக்கப்பட்ட மனிதனுக்கு தோல் நோயை உண்டாக்கும் பூஞ்சைகள் எப்பிடெர்மோ ஃபைட்டான் மற்றும் டிரைக்கோ ஃபைட்டான் ஆகும்.

ஆல்காக்கள்
* ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறைக்கு ஆல்காலஜி (Algology)  அல்லது ஃபைக்காலாஜி (Phycology) என்று பெயர்.
* பெரும்பான்மையான ஆல்காக்கள் நீரில் வாழ்பவை. மிகச் சில ஆல்காக்களே நிலத்தில் வாழ்பவை.
* தன்னிச்சையான நீரில் மிதக்கும் அல்லது தனித்து நீரில் நீந்தும் நுண்ணிய ஆல்காக்கள் ஃபைட்டோ பிளாங்டன்கள் எனப்படும்.
* கடல்கள், ஏரிகளின் ஆழமற்ற கரையோரப் பகுதிகளில் அடியில் ஒட்டி வாழும் ஆல்காக்கள் பெந்திக் எனப்படுகின்றன.
* சில ஆல்காக்கள் மற்ற ஆல்காக்கள் அல்லது ஏனைய தாவரங்கள் மீது தொற்று தாவரமாக வாழ்கின்றன. இவை எபிஃபைட்டுகள் எனப்படும்.
* சில ஆல்காக்கள் லித்தோஃபைட்டுகள் அல்லது பாறை வாழ் ஆல்காக்களாகும்.
* தற்போது சயனோ பாக்டீரியங்கள் என அழைக்கப்படும் நீலப்பசும் பாசிகளைத் தவிர அனைத்துப் பாசிகளும் யூகேரியாட்டிக் செல் அமைப்பை உடையவை.
* ஆல்காக்களில் மூன்று வகையான ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுகின்றன. பச்சையம், கரோட்டினாய்டுகள், புலிபுரதங்கள்.
* பச்சையம் A அனைத்து வகை ஆல்காக்கலிலும் காணப்படும்.
* கரோட்டினாய்டுகளில் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற நிறமிகள் காணப்படுகின்றன.
* நீரில் கரையக்கூடிய பிலிபுரதங்களான ஃபைக்கோ எரித்ரின் மற்றும் ஃபைக்கோசயனின் நிறமிகள் பொதுவாக ரோடோஃபைசி வகுப்பிலும், சயனோஃபைசி வகுப்பிலும் முறையே காணப்படுகின்றன. இந்த நிறமிகள் சூரிய ஒளியின் சிவப்பு மற்றும் நீல ஒளி அலைகளை ஈர்த்து ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகின்றன.
* ஆல்காக்கள் தற்சார்பு ஊட்ட முறையைச் சார்ந்தவை.
* குளோரோஃபைசி வகுப்பில் சேமிப்புப் பொருள் ஸ்டார்ச் ஆகும்.
* ரோடோஃபைசி வகுப்பில் சேமிப்புப் பொருள் ஃபளோரிடி.ன் ஆகும்.
* ஃபேயோஃபைசி வகுப்பில் லேமினேரியன் ஸ்டார்ச்சும், யூக்ளினோ ஃபைசி வகுப்பில் பாராமைலானும் சேமிப்புப் பொருட்களாக உள்ளன.
* பெரும்பான்மையான ஆல்கா வகுப்புக்களில் கசையிழைகள் அல்லது சீலியாக்கள் அவற்றின் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாகின்றன.
* ஒவ்வொரு கசையிழையின் மையத்திலும் 2 நுண் குழல்களும், அதனைச் சுற்றி 9 உருளை வடிவ இரட்டை நுண்குழல்களும் உள்ளன. இது 9+2 வகை அமைப்பு எனப்படும்.
* ஆல்காக்களில் 3 வகையான இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. அவை: 1.உடல் இனப்பெருக்கம் 2. பாலில இனப்பெருக்கம் 3. பாலினப் பெருக்கம் ஆகியன.
* துண்டாதல் முறை அல்லது வேற்றிடக் கிளைகள் தோன்றுதல் முறையில் உடல இனைப்பெருக்கம் நடைபெறுகிறது.
* பல வகையான ஸ்போர்களின் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சூஸ்போர்கள், ஏபிளனோஸ்போர்கள் மற்றும் ஏகைனேட்டுகள் ஆகியன சில வகையான பாலிலா ஸ்போர்களாகும்.
* பாலினப்பெருக்கத்தில் இரண்டு கேமிட்டுகள் இணைகின்றன. பாலினப்பெருக்கம் மூன்று வகையில் நடைபெறுகிறது. 1. ஐசோகேமி 2. அனைசோகேமி 3. ஊகேமி
* புற அமைப்பு, செயல் தன்மை ஆகிய இரண்டிலும் ஒத்த ஒரே மாதிரியான இரு கேமிட்டுகள் இணைகின்றன. இது ஐசோகேமி எனப்படும். .கா. ஸ்பைரோகைரா மற்றும் கிளாமிடோமோனஸ்.
* அனைசோகேமி வகையில் இணையும் கேமிட்டுகள் வெவ்வேறான தோற்றம் உடையவை. ஆனால் செயல் தன்மையில் ஒத்தவை.
* ஊகேமி வகையில் இணையும் கேமிட்டுகள் தோற்றத்திலும், செயல்பாட்டுத் தன்மையிலும் வேறுபடுகின்றன. ஆண் கேமிட்டு ஆந்த்ரோசுவாய்டுகள் என்றும், பெண் கேமிட்டு அண்டம் என்றும் அழைக்கப்படுகின்றன.
* F.E.ஃபிரிட்ஜ் தனது ஆல்காக்களின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் என்னும் நூலில் ஆல்காக்களை 11 வகுப்புக்களாக, நிறமிகளின் சேர்க்கை, சேமிப்புப் பொருட்கள், கசையிழைகளின் அமைவு, தாலஸ் அணைப்பு, இனப்பெருக்கம் ஆகிய பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.
* நன்னீர் கொண்ட குளங்கள், குட்டைகள், ஏரிகள் முதலானவற்றில் மிக அதிக அளவில் பச்சை ஆல்காவான ல்பைரோகைரா மிதந்து வாழ்கிறது. இதற்கு நீர்ப்பட்டு என்று பெயர் வழங்கப்படுகிறது.
* ஸ்பைரோகைரா கொலம்பியானா என்பது தென்னிந்தியாவில் காணப்படுமந் ஸ்பைரோகைரா சிற்றினமாகும்.
* மைசூரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் ஸ்பைரோகைரா ஜோகன்சிஸ் என்ற சிற்றினம் காணப்படுகிறது.
* ஸ்பைரோகைராவில் காணப்படும் பசுங்கணிகங்கள் வளைய வடிவில் அல்லது சுருள் வடிவில், நாடா போன்று பட்டையாக காணப்படுகின்றன. பசுங்கணிகங்களின் எண்ணிக்கை 1 முதல் 14 ஆகும்.
* ஸ்பைரோகைராவெஜிடேட்டிவ் இனப்பெருக்கம், பார்த்தனோஸ்போர்கள், ஏகைனேட்டுகள், ஏபிளனோஸ் போர்கள், பாலினப்பெருக்கம் ஆகிய வழிகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
* ஸ்பைரோகைராவில் பாலினப் பெருக்கம் ஏபிளனோ கேமிட்டுகள் எனப்படும் சிறப்பு கேமிட்டுகளின் இணைவினால் ஏற்படுகிறது. இதற்கு ஏபிளனோகேமி என்று பெயர்.
* பக்க இணைவு, ஏணி இனைவு ஆகிய இரு இணைவு மூலம் ஏபிளனோகேமி நடைபெறுகிறது.

ஆல்காக்களின் பொருளாதார முக்கியத்துவம்
* சமிபத்தீய கணக்கெடுப்பின்படி பாதி ஒளிச்சேர்க்கை கடலில் இருந்தே உண்டாகிறது. இதற்குக் காரணம் கடலில் வாழக்கூடிய ஒரே தாவர இனமான ஆல்காக்களாகும்.
* போர்ஃபைராவின் சிற்றினங்கள் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் கலிஃபோர்னியா நாடுகளில் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
* அல்வா, லாமினேரியா, சர்காசம் மற்றும் குளோரெல்லா போன்ற ஆல்காக்கள் பல நாடுகளில் உணவாக உண்ணப்படுகின்றன.
* கடல்பாசி எனப்படும் லாமினேரியா, ஃபியூக்கஸ் மற்றும் ஆஸ்கோஃபில்லம் ஆகிய ஆல்காக்கள் வீட்டு விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவாக அளிக்கப்படுகின்றன.
* ஆஸில்லட்டோரியா, அனாபினா, நாஸ்டாக் மற்றும் அலோசிரா ஆகிய நீலப்பசும்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கின்றன.
* பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளை ஆய்வுச் சாலையில் வளர்க்கும்போது அகார்-அகார் வளர் தளமாகப் பயன்படுகிறது. ஜெலிடியம் மற்றும் கிராஸிலேரியா ஆகிய சிவப்பு ஆல்காக்களிலிருந்து அகார் அகார் தயாரிக்கப்படுகிறது.
* ஆல்ஜினிக் அமிலம் எனப்படும் கூழ்மம் பழுப்பு ஆல்காக்களிலிருந்து பெறப்படுகிறது. ஐஸ்கிரீம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பற்பசைகளில் நிலைப்படுத்தும் பொருளாக ஆல்ஜின் பயன்படுகிறது.
* கெல்ப் என்று அழைக்கப்படும் பழுப்பு ஆல்காக்களிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
* தீயால் தாக்கப்படாத பொருட்களை உண்டாக்குவதிலும், உறிஞ்சும் திறன் நிரம்பிய டையேட்டமைட்டு என்னும் ஆல்கா பயன்படுகிறது. மேலும் இராசாயனப் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் அடுக்குவதிலும் டையேட்டம் ஆல்கா பயன்படுகிறது.
* டையேட்டம் வகை ஆல்காக்களின் செல் சுவர்களில் சிலிக்கா காணப்படுகிறது.
* விண்வெளிப் பயணங்களின்போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கனிவுப் பொருட்களை வெளியேற்றவும், குளோரெல்லா பைரினாய்டோசா என்ற ஆல்கா பயன்படுத்தப்படுகிறது.
* ஒற்றைச் செல் புரதம் தயாரிக்க குளோரெல்லா மற்றும் ஸ்பைருலினா போன்ற ஒரு சில ஆல்காக்கள் பயன்படுகின்றன.
* குளோரெல்லின் என்ற நுண்ணுயிர்க்கொல்லி குளோரெல்லாவிலிருந்து எடுக்கப்படுகிறது.
* சில சமயங்களில் ஆல்காக்கள் ப்ளூம்கள் எனப்படும் அடர்ந்த அமைப்பைத் தோற்றுவிக்கினறன.
* நீர்நிலைகளில் ஏற்படும் ஊட்டச் சத்துக்களின் (நைட்ரஜன், பாஸ்பரஸ்) சேர்க்கைக்கு யூட்ரோஃபி கேசன் என்று பெயர்.
* மிக எளிமையான, மேம்பாடு அடையாத நில வாழ்த் தாவரங்கள் பிரையோஃபைட்டுகள் ஆகும்.
* வாழ்க்கைச் சுழற்சியை முழுமையாக்க இன்னுமும் ஈரத்தை நம்பி வாழும் வாஸ்குலார் திசுக்களற்ற நிலவாழ்த் தாவரங்களே பிரையோஃபைட்டுகள்.
தாவர உலகின் நீர் நில வாழ்வன (Amphibians) என அழைக்கப்படுகின்றன.
* பிரையோஃபைட்டுகளின் வாழ்க்கை சுழற்சியில் தெளிவான சந்ததி மாற்றம் காணப்படுகிறது. மாஸ்கன், ஈரல் (லிவர்வொர்ட்ஸ்) மற்றும் கொம்பு பிரையோ ஃபைட்டுகள் ஆகியன பிரையோஃபைட்டுகளில் அடங்கும்.
* தனியான வேர்த்தொகுப்பைப் பெற்றிருக்கா விட்டாலும், மெல்லிய இலை போன்ற ரைசாய்டுகள் மூலம் வளர்தளத்தில் ஊன்றப்பட்டுள்ளன. இவைகளுக்கு உண்மையான வாஸ்குலார் திசு கிடையாது.
* நீரும் கனிம உப்புக்களும், ரைசாய்டுகள் உட்பட முழுத் தாவர உடலத்தால் உறிஞ்சப்படுகின்றன.
* ஆண் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆந்திரிடியம் எனவும், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆர்க்கினோனியம் எனவும் அழைக்கப்படுகின்றன.
பிரையோஃபைட்டுகளில் கேமிட்டோபைட் சந்ததி ஒங்கிய தன்மை உடையது.
* ஸ்போரோபைட் சந்ததி மிகச்சிறியது. நுண்ணோக்கியில் மட்டுமே காணவல்லது. கேமிட்டோபைட் சந்ததியைச் சார்ந்து வாழ்கின்றன.
பிரையோஃபைட்டுகளின் மூன்று முக்கிய வகுப்புகள் 1. ஹெப்பாட்டிகே 2. ஆந்தோசெரோட்டே 3. மஸ்ஸை ஆகியன.
* ஹெப்பாட்டிகே வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ரிக்சியா, ஆந்தோசெரோட்டே வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ஆந்தோசெராஸ், மஸ்ஸை வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ஃப்யூனேரியா ஆகும்.
* பிரையோஃபைட்டுகளில் ஸ்பேக்னம் அதிக ்ளவு நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் திறனுடையது. நர்சரிகளில் நாற்றுக்களையும், வெட்டப்பட்ட தாவரப் பகுதிகளையும் ஈரமாக வைத்திருக்க ஸ்பேக்னம் தாவரம் தோட்டக்காரர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
* விலை மதிப்பற்ற எரிபொருளாகப் பயன்படும் கரியைப் போன்ற பீட், ஸ்பேர்னம் போன்ற சில மாஸ்களின் உதவியால் தொல்லுயிர்ப் படிமமாக மாறி பின்பு பீட்டாக மாறுகிறது.
* வேரிகள் (ரைசாயிடுகள்) ஒற்றைச் செல்லால் ஆன நீண்ட தூவி போன்ற அமைப்புக்கள் ஆகும்.
* ரிக்சியாவின் உள்ளமைப்பில் உணவு தயாரிக்கவல்ல டார்ஸ் பகுதி, சேமிப்புத் திசு கொண்ட வென்ட்ரல் பகுதி ஆகியன காணப்படுகின்றன.
* ரிக்சியா கிளாக்கா என்ற சிற்றினத்தில் இளம் ரைசாயிடுகளின் நுனிப்பகுதியில் பகுப்புக்கள் நிகழ்ந்து, செல் திரள்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு ஜெம்மாக்கள் என்று பெயர்.

டெரிடோஃபைட்டா
* மிகப்பழமையான டெரிடோஃபைட்டு 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிலூரியன் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட தொல்லுயிர் படிமமாகும்.
* வாஸ்குலார் திசுக்களை உடைய மிகத்தொன்மையான தாவரம் டெரியோஃபைட்டுகள் ஆகும்.
* அனைத்து வாஸ்குலார் தாவரங்களும் சில நேரங்களில் டிரக்கியோஃபைட்டா என்ற ஒரே பிரவில் வைக்கப்படுகின்றன.
* டிரக்கியோஃபைட்டா பரிவில் டெரியோ ஃபைட்டுகளும் மேலும் மேம்பாடு அடைந்த ஸ்பெர்மெட்டோ ஃபைட்டுகளும் இரண்டு உட் பிரிவுகளாகும்.
* வாஸ்குலார் திசுக்கள் ஸ்போரோபைட் தலைமுறையில் காணப்படும் திசுக்களாகும்.
* ஸ்போரோபைட் தலைமுறை பிரையோபைட்டுகளில் மிகவும் குறுகியது. கேமிட்டோபைட் தலைமுறைறைச் சார்ந்து வாழ்வது, ஆனால் வாஸ்குலார் திசுக்கள் டெரிடோஃபைட்டுகளில் உள்ளதால் தான் வாஸ்குலார் தாவரங்களில் ஸ்போரோபைட் தலைமுறை ஒங்கியதாக உள்ளது.
* ரிடோஃபைட்டுகலில் வாஸ்குலார் திசுக்கள், அதாவது சைலம் மற்றும் ஃபுளேயம் காணப்படும்.
* சைலத்தில் டிரக்கீடுகள் மட்டுமே உள்ளன. குழாய்கள் கிடையாது.
* ஃபுளோயத்தில் சல்லடைச் செல்கள் மட்டுமே உள்ளன. சல்லடைக் குழாய்கள் கிடையாது. டெரிடோஃபைட்டுகள் ஹோமோஸ்போரஸ் வகை, அதாவது ஒரே ஒரு வகையான ஸ்போர்களை உருவாக்குபவை.
* ஸ்போரகங்களை உடைய இலைகள் ஸ்போரோஃபில்கள் அல்லது ஸ்போரக இலை எனப்படுகின்றன.
* ஸ்போர்கள் முளைத்து கேமிட்டோஃபைட்டைத் தோற்றுவிக்கின்றன. கேமிட்டோஃபைட் பல செல்களால் ஆன பாலுறுப்பைத் தோற்றுவிக்கும்.
* ஆன் பாலுறுப்பு ஆந்திரிடியம் என்றும், பெண் பாலுறுப்பு ஆர்க்கிகோனியம் என்றும் அழைக்கப்படும்.
* ஆர்க்கிகோனியத்தின் உள்ளே கருவுறுதல் நிகழ்கிறது. கரு வுற்ற சைகோட் கருவாக வளர்கிறது.
* ஃபெனரோகேம்கள் என அழைக்கப்படும் விதையுள்ள தாவரங்களில் காணப்படும் மிகச்சிறந்த தகவமைப்பு அவற்றில் விதைகள் உருவாவது தான் விதைகள் உள்ளே உள்ள இளம் கருவிற்கு பாதுகாப்பாக இருப்பதுடன் மட்டுமின்றி அதற்கு உணவூட்டத்தையும் அளிக்கிறது.
* டெரிடோஃபைட் (பெரணிகள்) அவற்றின் அழகான பெரிய இலைகளுக்காக அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது.
* டிரையாப்பெரிஸ் என்ற பெரணியின் ரைசோம் மற்றும் இலைக்காம்பிலிருந்து புழுக்கொல்லி மருந்து பெறப்படுகிறது.

ஜிம்னோஸ்பெர்ம்கள்
* மிக வெற்றிகரமாக நிலச்சூழலில் வாழும் மேம்பாடு அடைந்த தாவரங்கள் விதைத்தாவரங்கள் ஆகும்.
* விதைத்தாவரங்கள் மூன்று முக்கிய மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளன. 1.ஹெட்டிரோஸ்போரியின் தோற்றம் 2.விதைகள் உருவாக்கம் 3. நீந்தும் தன்மையற்ற ஆண் கேமிட்டுகள் தோன்றுதல் ஆகியன.
* ஜிம்னோஸ்பெர்ம்களில் பெண் கேமி்ட்டோ பைட் சூலினால் பாதுகாக்கப்படுகிறது. இது முழுமையாக தாய் ஸ்போரோபைட்டையே சார்ந்திருக்கும். கருவுறுதலுக்குப் பின்னர் இது இணைக்கப்பட்டிருக்கும். ஸ்போரோபைட்டிலிருந்து பெறப்படும் உணவைச் சேமித்து வளரும் சைகோட்டுக்கு அளிக்கிறது.
* விதை சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்கி கொள்ளும் ஒரு சிறப்பு அமைப்பாகும்.
* ஸ்பெர்மெட்டோஃபைட்டா பிரிவின் பின்தங்கிய வகுப்பே ஜிம்னோஸ்பெர்மகள் ஆகும்.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகள் திறந்தவை. இவை கன்த்தோலினால் மூடப்படவில்லை.
* ஜிம்னோஸ்பெர்ம்கள் மீசோசோயிக் காலத்திலேயே மிக அதிகமாகக் காணப்பட்டன. இந்தியக் குணைக் கண்டத்தில் ஹிமாலயப் பிரதேசத்தில் ஊசியிலைக் காடுகளில்  இவை காணப்படுகின்றன.
* பைன், ஃபர், ஸ்ப்ரூஸ், செடார், குப்ரஸஸ், செக்கோயா ஜெஜாண்டிகா ஆகியவை சில கோனிஃபெர்கள் ஆகும்.
* ஜிம்னோஸ்பெர்ம்கள் பல்லாண்டுகள் வாழக்கூடிய மரங்கள் ஆகும். வெகு அரிதாக புதர்ச்செடிகளாகவும் உள்ளன.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஹெட்டிரோமார்ஃபிக் சந்ததி காணப்படுகிறது.
* ஸ்போரோஃபைட் இரண்டு வகை வளமான இலைகளை உடையவை. 1. மைக்ரோஸ்போர்களை உருவாக்கும் மைக்ரோஸ்போராக இலை, 2. மெகாஸ்போர்களை உருவாக்கும் மெகாஸ்போரக இலை ஆகியன.
* ஜிம்னோஸ்பெர்ம்களி்ல் மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலமே நிகழ்கிறது. கருவுறுதல் ஒரே ஒரு இணைவை மட்டுமே உடையது. வளரும் கருவுக்கு பெண் கேமிட்டோபைட் உணவூட்டம் அளிக்கிறது.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகள் திறந்தவை. கனித்தோலினால் மூடப்படாதவை.
* நீட்டேல்ஸ் தாவரத்தில் மட்டுமே சைலத்தில் குழாய்கள் காணப்படும்.

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
* மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம் பிரிவைச் சார்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடுடற்ற தாவர வகையாக மட்டுமின்றி ஏனைய தாவர வகைகளை விட மிக  அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
* அண்மைக் காலக் கணக்கெடுப்பின்படி ஆஞ்சியோஸ் பெர்ம்களில் ஏறத்தாழ 2,86,000 சிற்றினங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
* ஆஞ்சியோஸ்பெர்ம்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் (மோனோ காட்டிலிடனே) இரு வித்திலைத் தாவரங்கள் (டைகாட்டிலிடனே) என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* இருவித்திலைத் தாவரத்தில் ஆணி வேர்த் தொகுப்பு காணப்படும். ஒரு வித்திலைத் தாவரத்தில் சல்லி வேர்த் தொகுப்பு காணப்படும்.
* இரு வித்திலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பில் வாஸ்குலார் கற்றைகள் வளைய வடிவில் அமைந்துள்ளன. ானால் ஒரு வித்திலையில் தண்டின் வாஸ்குலார் கற்றைகள் விரவிக் காணப்படுகின்றன.
* ஒரு வித்திலையில் கேம்பியம் இல்லாமையால் மூடிய வாஸ்குலாக் கற்றைகள் காணப்படுகின்றன. இரு வித்திலையில் கேம்பியத் திசு காணப்படுவதால் வாஸைகுலார் கற்றைகள் திறந்தவை.
* இரு வித்திலைத் தாவர மலரில் இரு வெளி அடுக்குகள் பொதுவாக புல்லி வட்டம், அல்லி வட்டம் என வேறுபாடு கொண்டிருக்கும்.
* ஒரு வித்திலையில் புல்லி வட்டம், அல்லி வட்டம் இல்லை. அவற்றிற்கு பதிலாக பூவிதழ் வட்டம் உள்ளது.
* ஒரு வித்திலையில் இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை. இரு வித்திலைத் தாவரத்தில் கேம்பிய செயலினால் இரண்டாம் நிலை வளர்ச்சி பொதுவாக காணப்படுகின்றன.
தாவர புற அமைப்பியல்
* தாவர புற அமைப்பியல் என்பது தாவரங்களின் உறுப்புக்களான வேர், தண்டு, இலை, பூ, கனி
மற்றும் விதை இவற்றின் வடிவம், அமைப்பு ஆகியவற்றை அறிவதாகும்.
* தாவரத்தின் வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகள் தாவரங்களின் உணவூட்ட முறையிலும்,
வளர்ச்சியிலும் பங்கேற்கின்றன. ஆகவே இவை உடலப்புற அமைப்பியல் என்றும்
அழைக்கப்படுகின்றன.
* மலர்கள், கனிகள் மற்றும் விதைகள் தாவர இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வுறுப்புக்களை விளக்கும் பிரிவு இனப்பெருக்க புற அமைப்பியல் என்று அழைக்கப்படுகிறது.

வேர்த்தொகுப்பு
* வேர்த்தொகுப்பு பச்சையம் அல்லாத தரைக்குக் கீழே வளரும் தாவர உறுப்பு.
* வேர்கள் நேர் புவி நாட்டமும், எதிர் ஒளி நாட்டமும் உடையவை. வேர்கள் பொதுவாகப்
பசுமையற்றவை.
* பக்கவாட்டு வேர்கள் என்பவை அகத்தோன்றிகள் ஆகும். அதாவது அவை பிரதான வேரின்
உள்ளே உள்ள திசுவான பெரிசைக்கிளில் இருந்து தோன்றுகின்றன.

வேர்த்தொகுப்பின் வகைகள்
* இரண்டு வகையான வேர்த்தொகுப்புக்கள் உள்ளன. அவை: 1. அணி வேர்த்தொகுப்பு 2.
வேற்றிட வேர்த்தொகுப்பு
* கருவின் முளை வேரிலிருந்து தோன்றுவது ஆணி வேர்த்தொகுப்பு ஆகும்.
* முளை வேர் தவிர தாவரத்தின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் வளரும் வேர் வேற்றிட வேர்
எனப்படுகிறது.

ஆணி வேரின் மாற்றுருக்கள்
* சில தாவரங்களில் முதன்மை வவேரானது உணவு சேமித்து வைப்பதால், பருத்து
சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவை வேர் கிழங்குகள் அல்லது கிழங்கு வேர்கள்
எனப்படும்.
* வடிவத்தின் அடிப்படையில் வேர்க்கிழங்குகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை:
1. கூம்பு வடிவம் .கா. கேரட் 2. கதிர் வடிவம் .கா. முள்ளங்கி 3. பம்பர வடிவம் .கா.
பீட்ரூட்
* சதுப்பு நிலங்களில் வாழும் அவிசீனியா போன்ற தாவரங்களில் மண்ணில் நீர் நிரம்பக்
காணப்படுவதால் காற்றோட்டம் மிகவும் குறைவு. இத்தகைய தாவரங்களில் உப்பு நிறைந்த
நீருக்குள் புதைந்திருக்கும் சாதாரண வேர்களிலிருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி
வருகின்றன. இவை நெமட்டோஃபோர்கள் என அழைக்கப்படுகின்றன.
* நெமட்டோஃபோர் வேர்கள் சுவாச வேர்கள் அல்லது மூச்சுவிடும் வேர்கள் என்றும்
குறிப்பிடப்படுகின்றன.

வேற்றிட வேரின் மாற்றுருக்கள்
* வேற்றிட வேர்களின் மாற்றுருக்களில் சேமிப்பு வேர்கள், உணவைச் சேமித்து வைத்து, பருத்து
சதைப்பற்றுடன் காணப்படுகின்றன.
* வடிவங்களின் அடிப்படையில் சேமிப்பு வேர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை:
1. கிழங்கு வேர்கள் .கா. சர்க்கரை வள்ளி 2. கொத்து வேர்கள் .கா. ஆஸ்பராகஸ்ட், டாலியா
3. முடிச்சு வேர்கள் .கா. இஞ்சி, மஞ்சள்

கூடுதல் உணவுக்காக மாறுபாடு அடைந்த வேர்கள்
* இவை வேற்றிட வேரின் மாற்றுருக்களே. இவை 1. முண்டு வேர்கள் .கா. சோளம், கரும்பு,
தாளை 2.தூண் வேர்கள் .கா. ஆலமரம் என இரு வகைப்படும்.

வேறுசில முக்கியப் பணிகளுக்காக மாறுபாடு அடையும் வேர்கள்
* இவை வேற்றிட வேரின் மாற்றுருக்களே. இவை மூன்று வகைப்படும் 1. தொற்றுவேர்கள் .கா.
ஆர்க்கிடுகளில் காணப்படும் வேற்றிட வேர்களான இவை எபிடைட்டுகளில் காணப்படுகின்றன.
2. ஒளிச்சேர்க்கை அல்லது சேமிப்பு வேர்கள் .கா. டைனோஸ்போரா 3. ஒட்டுண்ணி வேர்கள்
அல்லது ஹாஸ்டோரியாக்கள் .கா. கஸ்கியூட்டா
தண்டின் முக்கியப் பண்புகள்
* கருவின் முளைக் குருத்தாக தண்டு வளர்கிறது. இது நேர் ஒளிச் சார்பும், எதிர் புவிச் சார்பும்
உடையது. தெளிவான கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் பெற்றுள்ளன.
* தண்டின் பக்கவாட்டுக் கிளைகள் புறத்தோன்றிகள் ஆகும். அதாவது இவை தண்டின் புறத்தே
உள்ள திசுக்களில் இருந்து தோன்றுகின்றன.
* தண்டு மலர்களையும் கனிகளையும் தாங்குகிறது.
* மொட்டுக்கள் எனப்படுபவை வளர வேண்டிய இளம் தண்டு ஆகும்.
* மொட்டுக்கள் தண்டு அல்லது கிளையின் நுனியில் காணப்பட்டால் அது நுனி மொட்டு அல்லது உச்சி மொட்டு என அழைக்கப்படுகிறது.
* மொட்டுக்கள் அசாதாரணமான இடங்களில் தோன்றுகின்றன. இவ்வகை மொட்டுக்கள் வேற்றிட மொட்டுக்கள் எனப்படும். .கா. பிரையோஃபில்லம்
* கிளைகளையும் இலைகளையும் தாங்குவதே தண்டின் முக்கியப் பணியாகும்.
* நீரையும் தனிமங்களையும் வேரிலிருந்து இலைக்கும், உணவுப் பொருட்களை இலையிலிருந்து வேருக்கும் தண்டு கடத்துகிறது.
* தண்டின் இரண்டாம் நிலைப்பணிகள் 1. சேமித்தல் .கா. உருளை 2. பல்லாண்டு வாழும் தன்மை .கா. இஞ்சி 3. உடல் இனப்பெருக்கம் .கா. உருளை 4. ஒளிச்சேர்க்கை .கா. ஓபன்ஷியா ஆகியன.
* தண்டின் மாறுபாடுகள் மூன்று வகைகளைச் சார்ந்தவை. அவை: 1. தரைமேல் மாறுபாடுகள் 2. தரை ஒட்டிய மாறுபாடுகள் 3. தரைகீழ் மாறுபாடுகள்.
* தரைமேல் மாறுபாடுகள் சில சிறப்புப் பணிகளைப் புரிவதற்காக பலவிதங்களில் மாறுபாடு அடைந்துள்ளது. 1. பற்றுக்கம்பிகள் 2. முட்கள் 3.ஃபில்லோகிளேடு .கா. ஓபன்ஷியா 4.கிளாடோடு .கா.ஆஸ்பராக்ஸ் 5. புல்பில் ஆகியன
* வறள் நிலப் பிரதேசங்களில் வளர்வதால் சப்பாத்திக் கள்ளித் தாவரத்தில் நீராவிப் போக்கின் மூலம் நீர் ஆவியாதலைத் தடுக்க இலைகள் முட்களாக மாறியுள்ளன.
* தரைஒட்டிய மாறுபாடுகள் நான்கு வகைகளில் மாற்றம் அடைந்துள்ளது. 1.மட்ட நிலத் தண்டு .கா. இஞ்சி, மஞ்சள், ரைசோம் 2.கிழங்கு .கா. உருளை 3. குமிழம் .கா. வெங்காயம் 4. கந்தம் .கா. சேனைக்கிழங்கு ஆகியன.
இலை
* ஒளிச்சேர்க்கை புரியும் முக்கிய உறுப்பு இலைகளாகும். ஒரு தாவரத்தின் அனைத்துப் பசுமையான இலைகளும் மொத்தமாக தழையிலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
* இலையின் மூன்று முக்கிய பாகங்கள் 1. இலையடிப் பகுதி 2. இலைக்காம்பு 3. இலைப் பரப்பு ஆகியன.
* இலைத்தாள் அல்லது இலைப் பரப்பில் நரம்புகள் அமைந்திருக்கும் விதத்திற்கு நரம்பமைவு என்று பெயர். இவை வலை நரம்பமைவு, இணை நரம்பமைவு என இரு வகைப்படும்.
* வலை நரம்பமைவு நான்கு வகைகளாக மாற்றமடைந்திருக்கிறது. 1. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு அல்லது ஒரு மைய நரம்புடைய வலைப்பின்னல் நரம்பமைவு .கா. மா 2. பல மைய நரம்புடைய வலை நரம்பமைவு அல்லது ்ங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு.
* பல மைய நரம்புடைய வலை நரம்பமைவு இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 1. பல மைய நரம்புடைய குவி நரம்பமைவு .கா. இலந்தை 2. பல நரம்புடைய விரி நரம்பமைவு .கா பப்பாளி ஆகியன.
* இணை நரம்பமைவு இரு வகைப்படும். 1. ஒரு மைய நரம்புடைய இணை நரம்பமைவு .கா. வாழை 2. பல மைய நரம்புடைய இணை நரம்பமைவு .கா. பணை ஆகியன.
இமையமைவு
* இலை அமைவுகள் நான்கு வகைகளாக அறியப்படுகிறது. 1. மாற்று இலையமைவு .கா. நெட்டிலிங்கம் 2. எதிர் இலை அமைவு 3. மூவிலை அமைவு .கா. அரளி 4. வட்ட இலை அமைவு .கா. அலமாண்டா ஆகியன.
* எதிர் இலை அமைவு இரு வகைப்படும். 1, ஒரே போக்கில் அமைந்தவை .கா. கொய்யா 2. குறுக்குமறுக்கு .கா. எருக்கு ஆகியன.
தனி இலை மற்றும் கூட்டிலை
* இலைத்தாள் அல்லது இலைப்பரப்பு முழுமையாக இருப்பின் அது தனி இலை எனப்படும். .கா. மா
* இலைப்பரப்பு பல மடல்கள் போன்றி சிறிய இலைகளாகப் பிளவு பட்டிருப்பின் அது கூட்டிலை எனப்படும். கூட்டிலை இருவகைப்படும். 1. சிறகு வடிவ கூட்டிலைகள் 2. அங்கை வடிவ கூட்டிலைகள் ஆகியன.
* சிறகு வடிவ கூட்டிலையில் சிற்றிலைகள் ராக்கிஸ் எனப்படும் ஒரு மைய அச்சில் அமைந்துள்ளன. சிற்றிலைகள் பின்னாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* சிறகு வடிவ கூட்டிலைகள் நான்கு வகைப்படும். அவை 1.ஒற்றைச் சிறகு கூட்டிலை .கா. வேம்பு, புளி 2. இரட்டைச் சிறகு கூட்டிலை .கா. அக்கேசியா 3. மும்மடங்கு சிறகு கூட்டிலை .கா. முருங்கை 4. பன்மடங்கு சிறகு கூட்டிலை .கா. கொத்தமல்லி
* இணைப்பட்டுள்ள சிற்றிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அங்கை வடிவ கூட்டிலை பல வகைப்படுகின்றன. 1.ஒரே ஒரு சிற்றிலை உடைய அங்கைக் கூட்டிலை .கா. எலுமிச்சை 2. இரு சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை .கா. சோர்னியை டைஃபில்லா 3.மூன்று சிற்றிலைகளை உடைய அங்கை கூட்டிலைகள் .கா. ஆக்சாலிஸ் 4. ஐந்து சிற்றிலைகளை உடைய அங்கை கூட்டிலைகள் .கா. மார்ஷிலியா 5.பல சிற்றிலைகளை உடைய ்ங்கை கூட்டிலைகள் .கா. இலவ இலைகள்.
இலையின் மாற்றுரு
* ஒளிச்சேர்க்கையும் நீராவிப்போக்கும் இலையின் முக்கியப் பணிகள் ஆகும். கூடுதல் பணிகளைச் செய்வதற்காக இலைகள் மாற்றுருக்களைப் பெற்றுள்ளன. அவை 1. இலைப்பற்றுக் கம்பிகள் .கா. பட்டாணி 2. இலை கொக்கிகள் .கா.பிக்னோனியா 3. இலை முட்கள் .கா. இலந்தை 4. இலைத் தொழில் இலைக்காம்பு .கா. அக்கேசியா 5. குடுவை .கா. நெப்பந்தஸ் 6. பை அல்லது பிளாடர் .கா.யுட்ரிகுளேரியா
* தட்டையான இறகு வடிவ இலைக்காம்பு அல்லது ராக்கிசிற்கு இலைத்தொழில் இலைக்காம்பு என்று பெயர். சிறகு வடிவ கூட்டிலைகளால் ஆன சாதாரண இலைகள், தாவரம் இளமையாக இருக்கும்போது தோன்றுகிறது. பின்னர் உடனே உதிர்ந்துவிடுகின்றன. பிறகு ஃபில்லோடு இலையின் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது.
* நெப்பந்தஸ் தாவரத்தில் (குடுவைத் தாவரத்தில்) இலையானது குடுவை வடிவத்தில் மாறுபாடு அடைந்துள்ளது. இத்தாவரங்கள் தங்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்தைப் பெறுவதற்காக பூச்சிக்களைப் பிடித்து உண்ணுகிறது.
மஞ்சரி
* பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் மலர்கள் ஆகும்.
* கொத்தாக பல மலர்கள் பொதுவான ஒரு அச்சின் மீது தோற்றுவிக்கப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர் பொதுவான அச்சு, மஞ்சரித் தண்டு அல்லது மஞ்சரி அச்சு எனப்படும்.
* தரைக்கீழ்த் தண்டு உடைய தாவரங்களில் மஞ்சரித் தண்டு நேரிடையாக தரைகீழ்த் தண்டில் இருந்து உண்டாகிறது. இத்தகைய தண்டு ஸ்கேப் எனப்படும்.
* தாமரையில் ஸ்கேப் ஒரு தனி மலரைத் தோற்றுவிக்கும். வெங்காயம் போன்ற தாவரங்களில் மஞ்சரியைத் தோற்றுவிக்கும்.
* மஞ்சரிகளில் உள்ள மலர்களின் அமைப்பு, அவை அமைந்திருக்கும் விதம், மஞ்சரித் தண்டின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மஞ்சரிகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். 1.ரெசிமோஸ் மஞ்சரி 2.சைமோஸ் மஞ்சரி 3.கலப்பு வகை மஞ்சரி. 4.சிறப்பு வகை மஞ்சரி ஆகியன.
ரெசிமோஸ் மஞ்சரி
* ரெசிமோஸ் மஞ்சரியில் மஞ்சரித் தண்டு வரம்பற்ற வளர்ச்சி உடையது.
* மைய அச்சு நீண்ட ரெசிமோஸ் மஞ்சரியில் 6 வகைகள் உள்ளன. 1. தனி ரெசிம் .கா.குரோட்டலேரியா ரெட்டியுசா, கிளியோம் விஸ்கோசா 2. கூட்டு ரெசிம் அல்லது பானிக்கிள் .கா. மாஞ்சிஃபெரா 3.கதிர் மஞ்சரி .கா.அக்கிராந்தஸ் அல்லது நாயுருவி, பைப்பர்லாங்கம் அல்லது மிளகு 4. கூட்டுக் கதிரி மஞ்சரி .கா. நெல் அல்து ஒரைசா சட்டைவா 5. மடல் கதிர் மஞ்சரி .கா ஆரம், கோலக்கேசியா 6. கூட்டு மடல் கதிர் மஞ்சரி .கா. கோக்கோஸ் ஆகியன.
* மையத்தண்டு குட்டையான ரெசிமோஸ் மஞ்சரியில் காரிம்ப் என்ற மஞ்சரி அடங்கும் .கா.சீசல்பினியா
* மையத்தண்டு மலர்களில் முடியும் ரெசிமோஸ் மஞ்சரியில் 1.அம்பெல் .கா. அல்லியம் சீப்பா அல்லது வெங்காயம் 2. கூட்டு அம்பெல் .கா.டாக்கஸ் கரோட்டா அல்லது காரட் என இரு வகைகள் உள்ளன.
* மையத்தண்டு தட்டையான ரெசிமோஸ் மஞ்சரியில் 1.சிரமஞ்சரி அல்லது காப்பிடுலகம் 2. கூட்டு சிரமஞ்சரி .கா.லகாஸ்கா மால்லிஸ் என இரு வகைகள் உள்ளன.
* சிரமஞ்சரி அல்லது காப்பிடுலம் இரு வகைப்படும் 1.ஹோமோகேமஸ் வகை .கா.லானியா, வெர்னோனியா 2. ஹெட்டிரோகேமஸ் வகை .கா டிரைடாக்ஸ், ஹீலியாந்தஸ் என்ற சூரியகாந்தி ஆகியன.
சைமோஸ் மஞ்சரி
* சைமோஸ் மஞ்சரி ஐந்து வகைப்படும். 1. தனி் சைம் 2. தனி டைக்கேஷியம் .கா. ஜாஸ்மினம் 3. கூட்டு டைகேஷியம் .கா. கிளிரோ டென்ட்ரான் 4. ஒரு பாதக் கிளைத்தல் 5.பல பாதக் கிளைத்தல் .கா.நீரியம் ஆகியன.
* தனி சைம் மேலும் இரு வகைகளாகப் பரிகிகப்படுகிறது. 1.நுனி தனி சைம் .கா.ஹைபில்கஸ் 2. கோண தனி சைம் .கா. பப்பாவர் சாம்னிஃபெரம் ஆகியன.
* ஒரு பாதக் கிளைத்தல் 1.ஹெலிக்காய்டு சைம் .கா.ஹமிலியா பேட்டன்ஸ் 2. ஸ்கார்ப்பியாய்டு சைம் .கா. ஹீலியோட்ராப்பியம் என இரு வகைப்படும்.
கலப்பு வகை மஞ்சரி
* கலப்பு வகை மஞ்சரிகளில் மஞ்சரித் தண்டு ரெசிமோஸ் வகையிலும், தொடர்ந்து சைமோஸ் முறையிலும் கிளைத்துள்ளது. கலப்பு வகை மஞ்சரி 1.திர்சஸ் .கா.ஆசிமம்(துளசி) 2. வெர்டிகிலாஸ்டர் .கா.லியுக்காஸ் அல்பெரா(தும்பை) 3.கலப்பு மடல் கதிர் .கா.மியுசா(வாழை) என மூன்று வகைப்படும்.
சிறப்பு வகை மஞ்சரி
* சிறப்பு வகை மஞ்சரி ரெசிமோஸ் வகையிலோ அல்லது சைமோஸ் வகையிலோ சேர்க்க முடியாதவை. இவை 1.சையாத்தியம் .கா யூஃபோர்பியா சையாத்தோ ஃபோரா 2. ஹைபன்தோடியம் .கா. பைக்கஸ் பெங்காலென்சிஸ் (ஆலமரம்) 3. சீனான்தியம் .கா.டார்ஸ்டீனியா என மூன்று வகைப்படும்.
மலர்கள், கனிகள், விதைகள்
* மலர் என்பது இனப்பெருக்கத்திற்காக ஒர் மாறுபாடு அடைந்த அல்லது மாற்றுரு கொண்ட தண்டுத் தொகுதி.
* மலர் அச்சின் நுனிப்பகுதி மலரின் எல்லா உறுப்புக்களையும் தாங்க்ககூடியது. இது பூத்தளம் என அழைக்கப்படும்.
மலரின் உறுப்புக்கள்
* பூவடிச் செதில்கள் பூக்காம்புச் செதில்கள் பூத்தளம் பூவட்டங்கள் ஆகியன மலரின் உறுப்புக்கள்.
மலரின் முக்கியப் பாகங்கள், துணை பாகங்கள்
* மலரில் 4 பாகங்கள் உள்ளன. அவை: புல்லி வட்டம், அல்லி வட்டம் மகரந்தத் தாள் வட்டம், சூலக வட்டம் ஆகியன.
* மகரந்தத் தாள் வட்டமும், சூலக வட்டமும் நேரிடையாக இனப்பெருக்கச் செயலில் ஈடுபடுகின்றன. எனவே இவை மலரின் முக்கிய பாகங்களாகும்.
* புல்லி வட்டமும், அல்லி வட்டமும் இனப்பெருக்கச் செயலில் பங்குகொள்வதில்லை. எனவே இவற்றை மலரின் துணை பாகங்கள் என்று அழைக்கிறோம்.
* பூவடிச் செதில்கள் இளையினை ஒத்த சிறப்பு உறுப்புக்கள் இவற்றின் கோண்த்தில் இருந்து தான் மலர்கள் தோன்றுகின்றன.
* பூவடிச் செதில் உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து பூவடிச் செதில் உடைய மலர்கள், பூவடிச் செதில் அற்ற மலர்கள் என்கிறோம்.
* மலர்கள் மொட்டாக இருக்கும்போது அதனை மூடி பாதுகாக்கும் பணியை மேற்கொள்வது பூவடிச் செதில் ஆகும்.
* மலர்களில் பூவடிச் செதிலுக்கும், மலருக்கும் இடையே மலர்க்காம்பின் மீது மெல்லிய பூவடிச் செதிலினை ஒத்த உறுப்புக்கள் காணப்படும். இவற்றை பூக்காம்புச் செதில்கள் என்கிறோம்.
* பூவடிச் செதில் 6 வகைப்படும். அவை: 1. இலையொத்த பூவடிச் செதில் .கா. ஆடாதொடா 2. மடல் பூவடிச் செதில் .கா. மியூஸா 3. இன்வலூக்கர் .கா.ஹீலியாந்தஸ் 4.
அல்லி இதழ் ஒத்த பூவடிச் செதில்கள் .கா. பொகைன்வில்லியா, யூஃபோர்பியா பல்செரைமா(பாயின்செட்டியா) 5.குளும்கள் .கா.புல் 6.புறப்புல்லி வட்டம் .கா. ஹைபிஸ்கஸ் ஆகியன.

பூத்தளத்தில் பூவிதழ்கள் அமைந்திருக்கும் முறை
* பூத்தளம் சற்ரு நீண்டோ அல்லது குழிந்தோ இருந்தால் சூலகம் அதன் மேல் காணப்படும்.
* நுனியில் சூலகத்தினையும் அதற்குக் கீழாக புல்லி, அல்லி மற்றும் மகரந்தத் தாள் வட்டங்களைப் பெற்ற மேல் மட்ட சூற்பையுடைய மலர்கள் ஹைப்போகைனஸ்
மலர்கள் (சூலக மேல் மலர்) எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டு மால்வேசி அனோனேசி முதலியன.
* மலரின் மற்ற பாகங்கள் சூற்பைக்கு மேலே அமைந்திருக்கும் அமைப்பிற்கு எபிகைனஸ் மலர் அல்லது சூலக கீழ்மலர் என்று பெயர். .கா. ஆஸ்ட்ரேசி, குக்கர்பிட்டேசி, ரூபியேசி ஆகியன.
* பெரிகைனஸ் வகை சூலகத்தில் சூற்பை தட்டையான உட்குழியான பூத்தளத்தின் மையத்தில் அமைந்திருக்கும்போது மலரின் மற்ற பாகங்கள் சூற்பையின் விளிம்பில்
அமைந்திருக்கும். இவ்வகை அமைப்பிற்கு பெரிகைனஸ் என்று பெயர். .கா. பேபேசி, ரோசேசி

புல்லி வட்டம்
* புல்லி வட்டம் மலரின் வெளி அடுக்காகும். புல்லி இதழ்களால் ஆனது. பச்சை நிறத்துடன் காணப்படும். சில நேரங்களில் வண்ணத்துடன் காணப்பட்டால் அவை அல்லி ஒத்தவை எனப்படும்.
* புல்லி வட்டத்தின் முதன்மைப் பாணி மலரைப் பாதுகாத்தல் ஆகும்.
* பச்சை நிறத்துடன் இருக்கும்போது ஒளிச்சேர்க்கைப் பணியையும், அல்லி ஒத்தவையாக இருக்கும்போது மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சிகளைக் கவரும் பணியையும் மேற்கொள்கிறது.
* புல்லி வட்டம் சில நேரங்களில் செதில்களாக மாறி இருக்கும். .கா. சூரியகாந்தி
* புல்லி வட்டம் சில நேரங்களில் உரோமங்களாக மாறி இருக்கும். இதற்கு பாப்பஸ் உரோமங்கள் என்று பெயர். .கா. வெர்னோனியா.
* அல்லி வட்டம் மலரின் இரண்டாவது துணை வட்டமாகும். அல்லி வட்டம் அல்லி இதழ்களால் ஆனது. பல வண்ணங்களுடன் மிருதுவானது.
* அல்லி இதழ்கள் தனித்திருப்பின் அதற்கு தனித்த அல்லி வட்டம் என்றும், சேர்ந்திருப்பின் இணைந்த அல்லி வட்டம் என்றும் பெயர்.

அல்லி வட்டத்தின் உருவ அமைப்புக்கள்
* அல்லி வட்டத்தின் உருவ அமைப்பை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம். அவை: 1. ஒழுங்கான இணையா அல்லிகள் 2. ஒழுங்கற்ற இணையாத அல்லிகள் 3.
ஒழுங்கான இணைந்த அல்லிகள் 4. ஒழுங்கற்ற இணைந்த அல்லிகள்.
* ஒழுங்கான இணையா அல்லிகள் 1.சிலுவை வடிவம் .கா. கடுகு, முள்ளங்கி 2. கேரியோபில்லேஷியஸ் .கா. கேரியோபில்லேஷியே 3. ரோசேஷியஸ் .கா.வனரோஜா என மூன்று வகைப்படும்.
* ஒழுங்கான இணைந்த அல்லிகள் 1.குழல் வடிவம் .கா.சூரியகாந்தியின் குவள் சிறு மலர்கள் 2. மணி வடிவம் .கா. குக்கர்பிட்டா மேக்சிமா 3. புனல் வடிவம்
.கா.ஊமத்தை 4.சக்கர வடிவம் .கா. சொலானம் 5.தட்டு வடிவம் .கா.வின்கோ 6. தாழி வடிவம் .கா. பிரையோஃபில்லம் கால்சினம் என ஆறு வகைப்படும்.
* ஒழுங்கற்ற இணைந்த அல்லிகள் 1. ஈருதடான வடிவம் .கா. ஆசிமம் (துளசி) 2. பெர்சோனேட் .கா. ஆன்டிரைனம் 3. நாவடிவம் .கா. ஆஸ்ட்ரேசியியின் கதிர் சிறுமலர்கள் என மூன்று வகைப்படும்.

இதழமைவு
* மலரின் மொட்டுப் பருவத்தில் புல்லி இதழ்களும், அல்லி இதழ்களும் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர்.
* இதழமைவு 1.தொடு இதழமைவு .கா. ஹைபிஸ்கசின் புல்லி இதழ்கள் 2. திருகு இதழமைவு .கா. ஹைபிஸ்கசின் அல்லி வட்டம் 3. அடுக்கு இதழமைவு 4. குவின்
குனிஷியல் .கா. கொய்யா என நான்கு வகைப்படும்.
* அடுக்கு இதழமைவு 1. இறங்கு தழுவு அடுக்கு இதழமைவு (வெக்சில்லரி இதழமைவு) .கா. பேபேசி குடும்பத்தின் அல்லிகள் 2. ஏறு தழுவு இதழமைவு .கா.சீஸால்பினேசி என இரு வகைப்படும்.

மகரந்தத் தாள் வட்டம்
* இது மலரின் மூன்றாவது அடுக்கு இது மலரின் ஆண்பாகம் ஆகும்.
* மகரந்தத் தாள் வட்டம் மகரந்தத் தாள்களைக் கொண்டுள்ளது.
* ஒவ்வொரு மகரந்தத் தாளும் மெலிந்த காம்பினைக் கொண்ட மகரந்தக் கம்பியைப் பெற்றுள்ளது. இதன் முனையில் மகரந்தப் பை உள்ளது.
* மகரந்தப் பை பெரும்பாலும் இரு மடல்களை உடையது. மகரந்தப் பையின் இரு மடல்களை இணைக்கும் திசுவிற்கு இணைப்புத் திசு என்று பெயர்.
* ஒவ்வொரு மடலுக்குள்ளும் இரு மகரந்த அறைகள் உள்ளன.

No comments:

Post a Comment