Wednesday 22 July 2015

இன்றைய நமது கனவு நாயகர்கள் பலரும் தேர்வில் தோற்றவர்கள்

 இன்றைய நமது கனவு நாயகர்கள் பலரும் தேர்வில் தோற்றவர்கள் அல்லது பள்ளிக் கல்வியில் பலவீனமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

* ஆர்.கே. நாராயணன். பல்கலைக்கழகத்தின் ஆங்கில தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர். பின்னாட்களில் ஆங்கில இலக்கியத்தில் அசைக்க முடிக்யாத ஆளுமையாக உயர்ந்தார்.

* பள்ளிப் பாடங்களை வெறுத்தவர் ஜி.டி.நாயுடு. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியை ஐந்து ஆண்டுகள் கற்பிப்பதை கண்டு சலிப்புற்றவர், ஓர் ஆண்டிலேயே அந்த பொறியியல் கல்வியை தனது மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று சொல்லி செய்துகாட்டினார்.

* விமானி ஆக ஆசைப்பட்டார் அப்துல் கலாம். அதற்கான தேர்வில் ஒரு கிரேடு மதிப்பெண் குறைந்தது. ஜனாதிபதி ஆகிவிட்டார்.

* பள்ளியில் டிராவிட் சரியாக படிக்கவில்லை. பல ஆண்டுகள் அணியிலும் இடம் பெற முடியவில்லை. அந்த காலகட்டத்தில் தனது பைக்கில் அவர் எழுதி வைத்த வாக்கியம்: “கடவுள் தாமதப்படுத்துவது என்பது தரவே மாட்டார் என்று அர்த்தம் அல்ல”

* பத்தாம் வகுப்பு தேறாத சச்சினின் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

* பணிச்சூழல், குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இசையால் உயர்ந்தார். ஆஸ்கர் தேடிவந்தது.

* இந்தியாவில் முதியோர் சிகிச்சைத் துறையை உருவாக்கியவர் மூத்த மருத்துவர் வி.எஸ்.நடராஜன். மதிப்பெண் குறைவாக பெற்றதால் மறுதேர்வு எழுதிய பின்பே எம்.எம்.சி-யில் இடம் கிடைத்தது.

* ஸ்டீவ் ஜாப்ஸ். பள்ளிக் கல்வியில் மிக, மிக சுமார் ரகம். இவர்தான் பின்னாட்களில் ஆப்பிள் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார்.

* ஆறாவது கிரேடு தோல்வி அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில்தான் பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமர் ஆனார்.

* பதினாறு வயதில் படிப்பு பிடிக்காமல் உதறிய வால்ட் டிஸ்னி அள்ளியது ஆறு ஆஸ்கர் விருதுகள்.

* முதல் வகுப்புடன் ‘டாமி படிக்க லாயக்கில்லை’ என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன்தான் இன்று எல்லோர் வீட்டில் ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்.

* பள்ளி படிப்பில் தோல்வி அடைந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்ததுதானே விமானம்.

* டார்வினை அவருக்கு பிடிக்காத மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். மயக்க மருந்து இல்லாமல் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதைப் பார்த்து பயந்து படிப்பை உதறியவர், பின்னாளில் தனக்கு பிடித்த பரிணாமவியல் தந்தை ஆனார்.

* அலெக்சாண்ட்ரே குஸ்தவ் ஈஃபிள். பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பித்தார். தகுதி இல்லை என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னாட்களில் அவர் கட்டியதுதான் ஈஃபிள் டவர் மற்றும் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

* ஐன்ஸ்டின் மற்றும் எடிசன் ஆகியோர் கற்றல் குறைபாடு (Dyslexia) கொண்ட குழந்தைகள். இவர்கள் இல்லை எனில் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாத்தியம் இல்லை

No comments:

Post a Comment