தமிழக நீர்வளம்
Posted Date : 14:12 (15/12/2013)Last updated : 14:12 (15/12/2013)
கால்வாய்கள்
வற்றாத ஆறுகளிலிருந்தும், அணைக்கட்டுகளிலிருந்தும் நீரினை வயலுக்கு
கொண்டு செல்ல மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நீர்வழித் தடங்களே கால்வாய்கள்.தமிழ்நாட்டில் 27 சதவீத நிலங்களில், கால்வாய் பாசன முறை மூலம் பயிர்சாகுபடி நடை பெறுகிறது.
காவிரியில் முக்கிய கால்வாய்கள் பவானி ஆற்றுக் கால்வாய், அரக்கண் கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் கால்வாய்கள்.
மேட்டூர் அணைக் கால்வாய்கள் சுமார் 2.7 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பிற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
திருச்சியில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கல்லணை, நீர்திருப்புக் கட்டுமானமாகத் திகழ்ந்து, காவிரி ஆற்றுப் படுகை முழுமைக்கும் நீர் பாசன வசதியை அளிக்கின்றது.
முதலாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை தமிழகத்தில் கால்வாய் பாசனம் தொன்றுதொட்டு இன்றுவரை பின்பற்றப்பட்டு வருவதற்குச் சான்றாகும்.
இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வரும் கல்லணை உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மைத் திட்டமாகும்.
திருச்சியின் அருகில், மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கும் கல்லணை, காவிரியாற்று படுகையின் டெல்டா பகுதி முழுமைக்கும் ஐந்து கால்வாய்களின் மூலம் நீர் பாசன வசதி பெற வகைசெய்கிறது.
தாமிரபரணி ஆற்றின் துணையாறுகள் திருநெல்வேலி மாவட்ட கால்வாய் பாசனத்திற்கு மிகவும் பயன்படுகின்றன.

சிற்றாற்றிலிருந்து 17 கால்வாய்களும், பச்சையாற்றிலிருந்து ஒன்பது கால்வாய்களும் நீர் பாசனத்தை அளிக்கின்றது.
குளங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 நீர்பாசன குளங்கள் உள்ளன.குளங்களின் மொத்த நீர் பாசன பரப்பு 19 சதவிகித நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை அளிக்கின்றன.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குளங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.
ராமநாதபுரத்தில் மிக அதிகமான குளங்கள் உள்ளன.
இடைவிடாத நீர் பாசனத்தைப் பெற, குளங்களை குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாரி பராமரித்தல் மிக அவசியமாகிறது
குளங்களை செய்முறை அமைப்பு குளங்கள் மற்றும் பிற குளங்கள் என இருவகைப்படுத்தலாம்.
செய்முறை அமைப்புக் குளங்கள் அப்பகுதியில் உள்ள கால்வாய் அல்லது ஆற்றிலிருந்து நீர்வரத்து கொண்டுவரப்பட்டு செயல்படுகிறது.
பிற குளங்கள் அப்பகுதியில் பெய்யும் மழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
பொதுவாக, குளங்கள் பொதுப்பணித்துறையினர் அல்லது பஞ்சாயத்தினரால் பராமரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் முக்கிய ஏரிகள், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், மதுராந்தகம், கௌவை, அம்பத்தூர், கொடைக்கானல், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ளன.
கிணறுகள்
தமிழ்நாட்டின் நீர் பாசன ஆதாரங்களுள் கிணற்றுப் பாசனம் மிக முக்கியமானதாகும்.தமிழ்நாட்டின் மொத்த விவசாய நிலத்தில் சுமார் 52% கிணற்று நீர் பாசனத்தை சார்ந்திருக்கிறது.
நீர் பாசனக் கிணறுகளை தரைக்கிணறு, ஆழ்குழாய்க் கிணறு என இரு வகைப்படுத்தலாம்.
தரைக் கிணறுகள் பெரும்பாலும் திறந்தவெளிக் கிணறாக தரைமட்டத்திலிருந்து நீர் மட்டம் வரை சில மீட்டர் ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரினை பயன்படுத்தும் வகையில் தோண்டப்படுகிறது.
ஆழ்குழாய்க் கிணறுகள் நிலத்தின் அதிக ஆழத்தில் அமைந்துள்ள, நீர் கொள் படுகைகளில் இருந்து மின்சார மோட்டார்கள் மூலம் நீரினை மேல்கொண்டுவந்து பாசனத்திற்கு வகை செய்கின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,62,11,391 தரைக் கிணறுகளும், 2,87,304 ஆழ்குழாய் கிணறுகளும் நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன
ஆழ்நீர் கொள் படுகை
நில நீர்மட்டம், நில நீர்மட்டக் கிணறு,
ஆர்ட்டீசியன் கிணறு, நீர் உட்செல்லும் பகுதி,தற்காலிக பூரித மண்டலம்,
ஆர்ட்டீசியன் ஊற்றுகள், கடினப்பாறை, களிமண், நிலப்பாறை, நிரந்தர பூரித
மண்டலம் ஆகியவை முக்கிய ஆழ்நீர் கொள் படுகைகளாகும்.
அதிக அளவில் நீர் இருப்பு கொண்ட ஆர்ட்டீசியன் நீர் கொள் படுகை
தமிழ்நாட்டில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் பகுதியில் அமைந்துள்ளது.நெய்வேலி லிக்னைட் நிலக்கரி சுரங்கப் பகுதியிலுள்ள இப்படுகைகளிலிருந்து, 24 மணிநேரமும் நீர் பம்புகளின் மூலம் எடுக்கப்பட்டு சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
காவிரி மற்றும் வைகை படுகையில் சில இடங்களில் ஊற்று நீரினையும் பாசனத்திற்காக பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
No comments:
Post a Comment