Friday, 24 January 2014

தமிழகத்தில் வேளாண்மை

தமிழகத்தில் வேளாண்மை
Posted Date : 14:12 (15/12/2013)Last updated : 14:12 (15/12/2013)

மிழ்நாட்டின் முதன்மையானதும், மிகப் பழமையானதுமான தொழில், வேளாண்மைத் தொழிலாகும்.
வேளாண்மை என்பது பயிர் வளர்ப்போடு, கால்நடை வளர்ப்பு, பறவை, மீன் மற்றும் காடு வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் உள்ளடக்கியதாகும்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீத மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
வேளாண்மைத்துறை மனிதனுக்கு உணவும், கால்நடைகளுக்கு தீவனமும் அளிக்கிறது. பலவகைத் தொழிற்சாலைகளுக்குத்  தேவையான மூலப்பொருள்களும் வேளாண்மைத் துறையிலிருந்து கிடைக்கிறது.
பயிர் வளர்ப்பு முறைகள்
பயிர் வளர்ப்புமுறை அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அம்மாறுபாட்டின்படி பயிர் வளர்க்கும் முறையை கீழ்க்காணும் வகையில் வகைப்படுத்தலாம்.
தீவிர தன்னிறைவு விவசாயம்
சிறிய அளவிலான விளைநிலத்தில் சுயதேவைக்கு மட்டுமே உணவு தானியங்களை வளர்க்கும் முறைக்கு, தீவிர தன்னிறைவு விவசாயம் என்று பெயர். 
தமிழ் நாட்டின் பெரும்பான்மையான  விவசாயிகள் இம்முறையை  பின்பற்றுகின்றனர். நீர்பாசன ஆதாரங்களின் தன்மை மற்றும் பயனீட்டளவு ஆகியவற்றைக் கொண்டு விவசாய முறையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1) நன்செய் விவசாயம்
2) புன்செய் விவசாயம்
3) நீர்ப்பாசன விவசாயம்.
விவசாயத்தின் வகைகள்
தீவிர தன்னிறைவு விவசாயம்
தோட்டப்பயிர் விவசாயம்
கலப்பு விவசாயம்  
பட்டுப்பூச்சி வளர்ப்பு (Sericulture) தேனீ வளர்ப்பு , (Apiculture) திராட்சை வளர்ப்பு(Viticulture) மலர் விவசாயம் (Floriculture) கோழி வளர்ப்பு (Poultry).
நீர்ப்பாசன விவசாயம்
பாசன விவசாயம் என்பது மனிதனால், ஆண்டு முழுவதற்கும், வயலுக்கு தண்ணீரை கொணரும்படி செய்து பயிர் வளர்ப்பதாகும்.
கிணறு, குளம் மற்றும் கால்வாயின் மூலம் வயலுக்கு தேவையான நீரினை கொண்டுவர இயலும். தமிழ்நாட்டில் பருத்தி மற்றும் கரும்பு சாகுபடி நீர்ப் பாசன வசதியைப் பொறுத்தே அமைகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் தீவிர தன்னிறைவு விவசாய முறையையே பின்பற்றுகின்றனர்.
பயிர்களின் நீர் தேவை மாறுபடுவதால் பாசன வசதியைப் பொறுத்தே தமிழ்நாட்டின் வேளாண்மை வளர்ச்சி அமைகிறது.
நன்செய் விவசாயம்
ஆண்டு முழுவதும் மழை மற்றும் பாசன வசதி மூலம் நீர் கிடைக்கும் நிலங்களில்  செய்யப்படும் விவசாயம் நன்செய் விவசாயமாகும்.
நெல், கரும்பு போன்றவை நன்செய் பயிர்களாகும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆற்றுப் படுகைகளில் நன்செய்விவசாயம் நடைபெறுகிறது.
புன்செய் விவசாயம்
பாசனமற்று பருவ மழையை மட்டுமே நம்பிருக்கும் நிலங்களில் செய்யப்படும் விவசாயம் புன்செய் விவசாயமாகும்.
சிறுதானியங்கள் புன்செய் பயிர்களாகும்.
வறண்ட மாவட்டங்களான, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியின்  மழை மறைவு பிரதேசங்களிலும் இவ்விவசாய முறை நடைபெறுகிறது.
தோட்டப்பயிர் விவசாயம்
தோட்டப்பயிர் விவசாயம் என்பது மிகப்பெரிய  தோட்டத்தில் (அ) பண்ணைகளில் பயிர் சாகுபடி செய்யும் முறை ஆகும். 
தேயிலை, காபி, ரப்பர் மற்றும் மிளகு போன்ற பயிர்கள் தமிழ் நாட்டின் மலைச் சரிவுகளில் தோட்டப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
கலப்பு விவசாயம்
கலப்பு விவசாயத்தில் மிகப் பெரிய அளவிலான விளைநிலங்களில் பல பயிர்களை வளர்ப்பதுடன், கால்நடை, மீன், தேனீ மற்றும் பறவைகளையும் வளர்க்கும் முறையாகும்.
கலப்பு விவசாயம் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் லாபகரமான முறையாகும்.
சந்தை தோட்டப் பயிர் விவசாயம்
காய், கனி மற்றும் பூக்களை நகரச் சந்தையில் விற்பதற்காக பெரிய தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைக்காகவும் வளர்க்கப்படுகிறது.
மதுரை, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இவ்வகை விவசாயம் அதிகளவில் காணப்படுகிறது.
தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள்
விவசாயிகள், காலநிலை மற்றும் மண்வளம் ஆகியவற்றை பொறுத்து பயிர்களை தேர்வு செய்து மூன்று வெவ்வேறு பருவங்களில் சாகுபடி செய்கின்றனர்.
1) சொர்ணவாரி (சித்திரைப்பட்டம்)
2) சம்பா பருவம்  (ஆடிப்பட்டம்)
3) நவரை பருவம்  (கார்த்திகைப் பட்டம்)
சொர்ணவாரி
சித்திரையில் நடவு நட்டு, புரட்டாசியில் அறுவடை செய்யப்படும் பருவம் சித்திரைப் பட்டம் என்று அழைக்கப்படும். இப்பருவத்திற்கு கரீப் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
மே மாதத்தில் விதைக்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
விதைப்பு காலமான மே மாதம் தமிழ் மாதமான சித்திரை மாதமாக இருப்பதால் இப்பருவம் சித்திரைப் பட்டம் என்றழைக்கப்படுகிறது.
சம்பா பருவம்  (ஆடிப்பட்டம்)
ஜூலை மாதத்தில் விதைத்து ஜனவரியில் அறுவடை செய்யப்படும் பருவம்  சம்பா பருவமாகும்.  விதைப்பு காலமான ஜூலை மாதம், தமிழ் மாதமான ஆடி மாதத்தில் இருப்பதால் இப்பட்டத்தை ஆடிப்பட்டம் என்று அழைக்கின்றனர்.
'ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது முதுமொழி.
நவரைப் பருவம்
இப்பருவத்திற்கு ரபி (ஸிணீதீவீ) (குளிர் காலம்) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
நவம்பர் மாதத்தில் விதைத்து மார்ச் மாதத்தில் அறுவடை செய்யும் பருவமே நவரைப் பருவமாகும்.
விதைக்கும் காலம் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் என்பதால் இப்பட்டம் கார்த்திகைப் பட்டம்  என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பயிர் பரவல்
தமிழ்நாடு அயன மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால், அயன மண்டலப் பயிர்கள் அனைத்தும் பயிரிடப்படுகிறது.
உணவுப் பயிர்
தானியங்கள், பயறுவகைகள், மற்றும் குறுதானியங்கள் உணவுப் பயிர் வகையைச்  சார்ந்ததாகும்.
நெற்பயிர் தமிழ்நாட்டில் முதன்மையான உணவுப் பயிராகும்.
நெற்பயிர் வளர்ச்சிக்கு சமதளம், அதிக வெப்பம், தொடர்ச்சியான நீர் பாசனம் தேவைப்படுகிறது, பொன்னி, கிச்சிலிச் சம்பா போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் வகைகளாகும்.
ஜெயா, ஐ.ஆர். 50 போன்ற புதிய அதிவீரிய விளைச்சல் தரும் ரகங்களும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாக பட்டினம் ஆகிய மாவட்டங்கள் விளைப்பரப்பளவிலும் உற்பத்தி யிலும் முதன்மையாக விளங்குகிறது. காவிரி டெல்டா பகுதி 'தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நெல் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆடுதுறையில் அமைந் துள்ளது. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை புதிய நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு கடலை அதிக அளவில் பயிரிடப் படுகிறது. வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் துவரை உற்பத்தி யில் முதலிடம் வகிக்கின்றன.
திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பச்சைப் பயிர் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கின்றன.
நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் உளுந்து உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன.
கொள்ளு உற்பத்தியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் முதலிடம் வகிக்கின்றன.
குறு தானியப் பயிர்களான (விவீமீts) கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, சாமை மற்றும் சோளம் ஆகியவை தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படு கின்றன.
தோட்டக்கலைப் பயிர்கள்
தோட்டக்கலை பயிர்கள் தற்கால நாகரீகத்தின்படி காய், கனி மற்றும் பூ சாகுபடி மிக அதிக பரப்பளவில் வளர்க்கப்படுகின்றன. மா, பலா, வாழை, கொய்யா மற்றும் திராட்சைப் பழங்கள்... பெரிய தோப்புகளில் பயிரிடப்படுகின்றன.
கிருஷ்ணகிரி- மாங்காய் சாகுபடி யிலும், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு- வாழை சாகுபடியிலும் தேனி- திராட்சை சாகுபடியிலும் பெயர்போனதாகும்.
ஏனைய மாவட்டங்களைவிட தருமபுரி மாவட்டம் காய், கனி மற்றும் பூ சாகுபடியில் முதன்மை நிலையில் உள்ளது.
கால்நடை வளர்ப்பு
பால், மாமிசம் மற்றும் தோலிற்காக ஆடு - மாடுகளை வளர்ப்பதை கால்நடை வளர்த்தல் என்கி றோம்.
தமிழ்நாடு பால் உற்பத்தி செய்வோர் கூட்டமைப்பு (ஆவின்) மாநிலத்திற்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களை தயாரிக்கிறது.
சராசரியாக நாள் ஒன்றின் பால் நுகர்வு சுமார் 233 கிராம் ஆகும்.
தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைகள் நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் உள்ளன.
சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒருவருக்கு 128 முட்டைகள் கிடைக்கும் அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மீன் வளர்ப்பு
தேசிய அளவில் தமிழ்நாடு மீன் வளர்ப்பில் 4 ஆவது மாநிலமாக திகழ்கிறது.
மிக நீண்ட கடற்கரை (1076 கி.மீ.) அகலமான கண்டத்திட்டும் கடல் சார்ந்த மீன் வளர்ப்பை ஊக்குவிக்கிறது.
கடற்கரையை ஒட்டி சுமார் 591 மீனவ கிராமங்கள், 13 மாவட் டங்களில் பரந்து கிடக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் தமிழ் நாட்டின் முதன்மை மீன் பிடி துறைமுகம் ஆகும். அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம் (கன்னியாகுமரி மாவட்டம்) மீன்பிடி துறைமுகங்களாக பரிமளிக்கின்றன.

No comments:

Post a Comment