தேனி மாவட்டம்

1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், மாவட்டமாகச் செயல்பட துவங்கியது. இது, ஏற்கெனவே மதுரை மாவட்டத்துடன் இருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறே தேனிக்கும் பொருந்தும்.
தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, சர்வதேசத் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, நிலக்கடலை, தேயிலை, புகையிலை, கொக்கோ, ஏலக்காய் (போடிநாயக்கனூர் ஏலக்காய் நகரம்) போன்றவை முக்கியப் பயிர்கள்.பெரியகுளம் மாம்பழ விளைச்சலுக்குப் புகழ் பெற்றது.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை ஆண்டு முழுவதும் பயிராகிறது.
இரண்டாம் நிலைத் துறை
பருத்தி நூற்பாலைகள், சர்க்கரை ஆலை, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை முக்கியத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் துறை

வைகை அணையின் சில்வன் தோட்டம் 'குட்டி பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படுகிறது.
மேகமலையில் உள்ள 'க்ளவ்ட் லாண்ட்’ அருவி சின்னச் சுருளி அருவி என்று அழைக்கப்படுகிறது.
தமிழக - கேரள எல்லையில் சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோயிலில் (ஸ்ரீ மங்களா தேவி கோயில்) சித்ரா பௌர்ணமித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் வீரபாண்டியில் நடைபெறும் கௌமாரியம்மன் திருவிழா புகழ்பெற்றது.
மேகமலையில் உள்ள காட்டுப் பகுதியில் 'இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி’ எனப்படும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது.
பழங்காலத்தில் அரிகேசவ நல்லூர் என்றழைக்கப்பட்ட சின்னம னூரில் கிடைத்த செப்பேடுகள், சங்க காலத்திலேயே மகாபாரதம் தமிழ்ப்படுத்தப்பட்ட தகவலைத் தருகின்றன.
இந்தியாவிலேயே சனி பகவானுக்கு என்று அமைந்த தனிக்கோயிலான குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சுரபி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்
இங்கு உள்ள கோட்டை, 17-18-ம் நூற்றாண்டுகளில் மராட்டியர்கள் மற்றும்
ஹைதர் அலி அரசுகளின் படைக்களமாக இருந்தது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு
நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் போன்றோரின் ஆட்சிக்காலங்களில்
ராணுவத் தளமாக மாறியது.பாண்டிய நாட்டைச் சேர்ந்த இந்தப் பகுதி, மதுரை மாவட்டத்தில் இருந்தது. 1985-ல் மதுரை மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 15-ம் தேதி 'திண்டுக்கல் அண்ணா மாவட்டம்’ என உதயமானது. 1989, மார்ச் 27-ல் 'திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம்’ என பெயர் மாறியது. 1996-ம் ஆண்டு திண்டுக்கல் 'மன்னர் திருமலை மாவட்டம்’ என்று பெயர் மாறியது. 1997, ஜூலை முதல் 'திண்டுக்கல் மாவட்டம்’ என்ற பெயரே இன்று வரையில் நிலைத்து நிற்கிறது.

முதன்மைத் துறை
மலர் உற்பத்தியினால் 'தமிழ் நாட்டின் ஹாலந்து’ என அழைக்கப்படுகிறது.ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, வத்தலக்குண்டு தக்காளி, நிலக்கோட்டை பன்னீர் திராட்சை போன்றவை புகழ்பெற்றவை.
பருத்தி, வெங்காயம் மற்றும் நிலக்கடலையின் மொத்த சந்தை.
இரண்டாம் நிலைத் துறை
பட்டிவீரன்பட்டி ஏலக்காய்த் தொழிற்சாலை, 100க்கும் மேற்பட்ட அரிசி
ஆலைகள், தனியார் சேமியா ஆலைகள், சாம்பிராணி தொழிற்சாலை போன்றவை
இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.சின்னாளம்பட்டி சுங்குடி சேலை, அங்குவிலாஸ் புகையிலை, திண்டுக்கல் பூட்டு போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.

மூன்றாம் நிலைத் துறை
சில்வர் கேஸ்கேட், நெப்டியூன், எலிவால் அருவி, தலையாறு அருவி உள்ளிட்ட
15க்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளதால் 'அருவி மாவட்டம்’ என்று
அழைக்கப்படுகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பிரபலம்.

சுற்றுலாதலங்கள்: கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் (coaker’s walk) , பில்லர்ஸ் ராக்ஸ் (Pillar Rocks) , , பிர்யங்க் பூங்கா (Bryank Park) , நட்சத்திர ஏரி (Star Shapdelit lake), சூரிய கோள் அரங்கம் (solar observatories) , பச்சைச் சமவெளி (Green Valley View) பிரதேசம், சில்வர் கேஸ்கேடு (Silver Cascade) 160; நீர்வீழ்ச்சி, ஃபெய்ரி நீர்வீழ்ச்சி (Fairy Falls) க்ளென் நீர்வீழ்ச்சி (Glen Falls) பிரீஸ்ட் வாக் (Priests walk) பகுதி, பழனி மலை மீதுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் போன்ற இடங்கள் சுற்றுலா முக்கியத்துவம் பெறுகின்றன. கொடைக்கானல் கோடைவிழாவும், மலர்கண்காட்சியும் தமிழகத்தில் புகழ்பெற்ற விழாக்களாகும்.
திருப்பூர் மாவட்டம்
கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூர், உடுமலைப்பேட்டை, பல்லடம், அவினாசி
மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்த தாராபுரம், காங்கயம், பெருந்துறை ஆகிய
தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு, 2008, அக்டோபர் மாதம் தனி மாவட்டமாக
உருவாக்கப்பட்டது.தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை முக்கிய உற்பத்திப் பயிர்கள்.
இரண்டாம் நிலைத் துறை
இந்தியாவின் பின்ன லாடைத் நகரமான திருப்பூர், ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான 'நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்கா’ 2005ம் ஆண்டு திருப்பூரில் திறக்கப் பட்டது.


மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : திருமூர்த்தி அணை, அமராவதி அணை, அமராவதி முதலைப் பண்ணை (இந்தியாவின் மிகப் பெரிய முதலை நர்சரி)
குறிப்பிடத்தக்கவர்கள்: புல்லாங்குழல் வித்வான் சஞ்சீவராவ், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் , திரைப்பாடலாசிரியரும், பகுத்தறிவுப் பாடல்களை இயற்றியவருமான உடுமலை நாராயணகவி.
கோயம்புத்தூர் மாவட்டம்
தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான கோயம்புத்தூர், ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரமான 'கோவை’யை, பண்டைய காலத்தில் கன்னடம் பேசும் கங்க மன்னர்களும், பிறகு சோழர், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் ஆட்சி செய்தனர்.
கொங்கு மண்டலத்தில் இருந்த பெரிய ஊர் பேரூர். இதில் அடங்கி இருந்த சிறிய கிராமம்தான் 'கோயம்புத்தூர்.’
1865-ம் ஆண்டு முதல் நகராட்சியாக இருந்த கோவை, பிறகு மாநகராட்சியாக மாறியது.
மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதி. அதனால் இங்கு இதம் தரும் பருவநிலை உள்ளது.

பெயர்க்காரணம்:
சங்க இலக்கியம் கூறும் 'கோசர்’ என்பார் வாழ்ந்த இடம். கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
முதனிலைத் துறை
நெல், கம்பு, சாமை, வரகு, துவரை, உளுந்து, கொள்ளு, பருத்தி, தேங்காய், மஞ்சள், வாழை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்தென்னை மிகுதியான மாவட்டம். வெற்றிலை (பொள்ளாச்சி), ஏலக்காய், ரப்பர் (ஆனைமலை) போன்றவை புகழ்பெற்றவை.
பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதி.

இரண்டாம் நிலைத் துறை
பஞ்சாலைகள், பிளேடுகள், வேளாண் மோட்டார் பம்புகள், தொழிற்சாலை
இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள்
(கிரைண்டர்), கட்டுமானக் கம்பிகள் தயாரிப்பு என கோவை மாவட்டம்
தென்னிந்தியாவின் தொழில் மாவட்டமாகத் திகழ்கிறது.தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் ('தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’).

மூன்றாம் நிலைத் துறை

கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியன வழிபாட்டிடங்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்: சி.சுப்பிரமணியம், ஜி.டி.நாயுடு, கலைக்கதிர் ஜி.ஆர்.தாமோதரன், டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், கோவை அய்யாமுத்து (சுதந்திர போராட்ட வீரர், திரைப்பட பாடலாசிரியர்), தோழர் பாலதண்டாயுதம் (கம்யூனிஸ்ட் தலைவர்), நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார்.
நீலகிரி மாவட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நீலகிரி மலையின் பெயரே
மாவட்டப் பெயராக அமைந்திருக்கிறது. இந்த மாவட்டம், மைசூர் போருக்குப் பிறகு
ஆங்கிலேயேர் கட்டுப்பாட்டில் வந்தது. முன்பு, சேர நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது. பிறகே ஆங்கிலேயேரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1868-ம்
ஆண்டு, கோவை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப் பட்டு,
1882-ல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.தோடர், பனியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் என பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டம்.
முதனிலைத்துறை
தோட்டக்கலைப் பயிர், இஞ்சி, ஆரஞ்சு, மிளகு, உருளைக்கிழங்கு, தேயிலை, கேரட் அதிகம் விளைவிக்கப்படுகிறது.1920இல் தொடங்கப்பட்ட அரசின் பழ ஆராய்ச்சி நிலையம் (குன்னூர்).

இரண்டாம் நிலைத் துறை
எலக்ட்ரானிக் பொருட்கள், புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழில் சாலை
(இந்துஸ்தான்), ராணுவத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து மருந்து தொழிற்சாலை
(குன்னூர்) யூகலிப்டஸ் நீலகிரி எண்ணெய் தயாரித்தல், சின்கோனா தொழிற்சாலை,
ஊசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் (கேத்தி) இம்மாவட்டத்தின் தொழில்
வளர்ச்சிகளாகும்.'பைரீத்ரம்' செடியின் பூவிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படும் 'பைரோசைட்’ எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா மையங்கள்: உதக மண்டலம் (மலைகளின் அரசி), தாவரவியல் பூங்கா,
உதகமண்டலம் ஏரி (ஜான் சுலிவன் உருவாக்கியது), தொட்டபெட்டா (2637 மீ),
முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பார்க், குன்னுர், கோடநாடு வியூ
பாயிண்ட், கோத்தகிரி, கல்லட்டி நீர்வீழ்ச்சி, வென்லாக் சமவெளி.மேட்டுப்பாளையம் to ஊட்டி மலை ரயில் பாதை, யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவ நகரம் வெலிங்டனில், ராணுவத் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி உள்ளன.
உதகை மலர் கண்காட்சி
உதகமண்டலத்தில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும்.
மலர் கண்காட்சி பார்ப்பதற்காக பல வெளிநாட்டவரும் வருகை புரிகின்றனர்.
இக்கண்காட்சியில் காணவேண்டிய பூக்கள்: பிளாங்கெட் ஃபிளவர், ஸ்வீட் பீ
பான்சி, வயோலா, மங்கி பிளவர், கப்பிளவர், பிளாக்பெரி லில்லி, போன்ற 50
வகையான மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
ஈரோடு மாவட்டம்

கோவை மாவட்டத்தைப் பிரித்து 1979, ஆகஸ்ட் 31-ம் தேதி, ஈரோடு மாவட்டம் உதயமானது. கோவை மாவட்டத்தில் இருந்த பவானி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பெருந்துறை, தாராபுரம் ஆகிய ஆறு வருவாய் வட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.
2008 ஜனவரி 1-ம் தேதி மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. ஈரோடு, தமிழ்நாட்டில் ஐந்தாவது பெரிய மாநகராட்சி.
முதனிலைத்துறை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வேளாண் விளைபொருட்கள் நெல், நிலக்கடலை,
மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். மஞ்சள் சந்தை
தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. ஈரோடு தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் பெரியது. தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது.


இரண்டாம் நிலைத் துறை

தாளவாடி,சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தியும் பெருந்துறை, சென்னிமலை (போர்வை), தாராபுரம், ஈரோடு, பவானி (ஜமுக்காளம்) ஆகிய இடங்களில் நெசவுத் தொழிலும் நடக்கிறது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள்: பவானி சாகர் அணைக்கட்டு, காவிரியும் பவானியும்
கலக்கும் கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை,
அரச்சலூர் கல்வெட்டுகள், பெருந்துறை விஜயமங்கலம், கொடுமணல் புதைபொருள்
ஆய்வு இடம், பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர்
கோயில், சென்னிமலை முருகன் கோயில்.குறிப்பிடத்தக்கவர்கள்: ஈ.வெ.ராமசாமி (பெரியார்), கொடிகாத்த குமரன் (சென்னி மலை), தீரன் சின்னமலை (மேலப்பாளையம்).
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரியின் சரித்திரப் பெயர் 'தகடூர்’. ஒளவைக்கு நெல்லிக் கனி தந்த
அதியமான் ஆண்ட பூமி இது. பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், சுல்தான்கள்,
நாயக்கர்கள் என பல அரசுகளின் பிடியில் இருந்த தர்மபுரி, முன்பு சோழ
மண்டலமாக இருந்தது.சேலம் மாவட்டத்தில் இருந்த சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004ம் ஆண்டு தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியே உருவாக்கப் பட்டது.

மாவட்டச் சிறப்புகள்
முதனிலைத் துறை
மா சாகுபடி இம்மாவட்டத்தில் அதிகம். செந்தூர் மாம்பழங்கள் புகழ்பெற்றவை.தக்காளி (பாலக்கோடு), மிளகாய் (பெண்ணாகரம்) முக்கியக் காய்கறிகளாகும்.

இரண்டாம் நிலைத் துறை
பட்டுத் துணி உற்பத்தி, உலோகத் தொழிற்சாலை ஆகியவை உள்ளன.தீப்பெட்டித் தொழில், ஜவ்வரிசித் தொழில் போன்றவையும் முக்கிய உற்பத்தித் தொழில்கள்.
வேலம்பட்டி உருண்டை வெல்லம் புகழ் பெற்றது.

மூன்றாம் நிலைத் துறை
தாமஸ் மன்ரோ தூண் (தர்மபுரி), ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, சுப்ரமணிய சிவா
நினைவிடம் (பாப்பாரப் பட்டி), தீர்த்தமலைக் கோயில், அதியமான் கோட்டை,
சென்ராயப் பெருமாள் ஆலயம் (அதியமான் கோட்டை) ஆகியவை முக்கிய சுற்றுலாத்
தலங்களாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
அதியமான் ஆண்ட தகடூர் பகுதி இங்கு உள்ளது. போர் நடைபெற்றதற்கு அடையாளமாக
மதில் சுவர்களுடன் பழமையான சையத் பாட்சா கோட்டை இப்போதும் உள்ளது.பல்லவர், சோழர், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் பிடியில் கிருஷ்ணகிரி இருந்தது.
1965-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டம் உருவாக்கப் பட்டது. 2004, பிப்ரவரி 9-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

முதனிலைத் துறை
நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், வாழை, நிலக்கடலை, பருப்பு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.தமிழக கேழ்வரகு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கு மேல் இம்மாவட்டத்திலிருந்தே கிடைக்கிறது.
ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் இம்மாவட்டத்தில் சாகுபடியாகின்றன.
பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பரி இலை சாகுபடியிலும் இம்மாவட்டம் முன்னணியில் உள்ளது.

பர்கூர் காளை இனம் புகழ் பெற்றது.
1924ஆம் ஆண்டு ஓசூரிலுள்ள மத்திகிரியில் கால்நடைப்பண்ணை தொடங்கப்பட்டது. இவ்விடம், 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பண்ணை சுமார் 1674 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சிந்தி, கிர், ஹல்லி கார், காங்கயம் முதலிய இனங்கள் வளர்க்கப் படுகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஓசூர் தொழிற்பேட்டையில் டைட்டான் கைக்கடிகாரத் தொழிற்சாலை, இரும்பு
எஃகுத் தொழிற்சாலைகள், வாகனத் தயாரிப்பு மற்றும் மின்னணுத் தொழிற்சாலைகள்
போன்றவை அமைந்துள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலாத் தலங்கள் : மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டு குளு குளு
பிரதேசமாக இருக்கும் தளி, 'குட்டி இங்கிலாந்து’ என அழைக்கப்படுகிறது.சூளகிரி சின்னாறு நீர்த்தேக்கம், பாலக்காடு பீடபூமியை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் ராயக்கோட்டை

ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் கிருஷ்ணகிரி மாம்பழத் திருவிழா, மிகவும் பிரபலம்.
குறிப்பிடத்தக்கவர்கள்:சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல், காந்திஜியால் தனது மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்டவர், மதுவிலக்கை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வர், சக்கரவர்த்தி திருமகன் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மத்திய தொழிற்துறை அமைச்சர், மேற்கு வங்கத்தில் கவர்னராக இருந்தவர் எனப் பல சிறப்புகளைப் பெற்ற மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி இம்மாவட்டத்தில் உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் பூர்வீக ஊரான நொச்சிக்குப்பம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment