Tuesday 5 May 2015

திறமையில்லை என்றால்கூட பரவாயில்லை.. சோம்பேறித்தனத்தை மட்டும் அனுமதித்து விடாதீர்கள், ஜெயிப்பது கடினம்..

பல வருடங்களாக கொத்தனார் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவர், தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். மீதியுள்ள காலத்தை தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்பினார். எஜமானனிடம் தனது நிலையை சொன்னார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
கொத்தனார், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று தரக்குறைவான பொருள்களைக் கொண்டு, முறையான திட்டமிடல் இல்லாமல் வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி சோம்பேறித்தனமாக செய்தது துரதிர்ஷ்டம்தான்.
எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியை கொத்தனாரிடம் கொடுத்து, ''இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு'' என்றார்.
கொத்தனார் அதிர்ச்சியுடன் தலைகுனிந்தார். ''அய்யோ, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே?'' என்று மனம் வருந்தினார். தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்த கொத்தனாருக்கு..

நீதி: திறமையில்லை என்றால்கூட பரவாயில்லை.. சோம்பேறித்தனத்தை மட்டும் அனுமதித்து விடாதீர்கள், ஜெயிப்பது கடினம்..

No comments:

Post a Comment