Tuesday 5 May 2015

ஐந்துவகையான நீதிப் பேராணைகள்

ஐந்துவகையான நீதிப் பேராணைகள்

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas
Corpus) :
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால்,
அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில்
வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத்
திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட
வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச்
செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது
சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல்
துறையின் கடமை, இல்லையேல் அவரை
விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக
செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை
பிறப்பிப்பதாகும். இவ்வாணை
பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர்
அச்செயலை உடனடியாகச் செய்ய
வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை
பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு
செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை
பிறப்பிப்ப தாகும்.
.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo
warranto):
பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான
கோரிக் கையின் அடிப்படையில்,
அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த
அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை
வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக்
கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of
Certiorary):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ
அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை
பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச்
செயல்முறைகளையும் ஆவணங்களையும்
தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ
மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு
அனுப்பச் செய்வதாகும். *

5. பண்பாடு மற்றும்
கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு
29-30): * ்

4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
(அரசிய லமைப்புப் பிரிவு 25-28): *

3.
சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய
லமைப்புப் பிரிவு 23-24): * 2.
சுதந்திரத்திற்கான உரிமை
(அரசியலமைப்புப் பிரிவு 19-22):

* 1. சமத்துவ
உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

* 1978-
ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத்
திருத்தத்தின்படி சொத்துரிமையானது
அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்
பட்டதால், தற்போது ஆறு அடிப்படை
உரிமைகள் உள்ளன. *

இந்திய அரசியலமைப்பு,
தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக்
கொண்டிருந்தது. *
.

இந்தியாவின் 28-வது
மாநிலம் ஜார்கண்ட்.

29

No comments:

Post a Comment