Tuesday 5 May 2015

பறவைகளைப் போல நாம் பறக்க முடியாது

பறவைகளைப் போல நாம் பறக்க முடியாது. ஏனென்றால் நமக்கு அந்த அளவு தன்னம்பிக்கை கிடையாது. நமக்கு இறக்கை என்பது நம்பிக்கையே. இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொருந்தும். பிறந்த குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது, எத்தனை முறை விழுந்தாலும் கடைசியில் எழுந்து நடந்து விடும். ஆனால் குழந்தை பருவத்தில் இருக்கும் இந்த விடாமுயற்சி வயது ஆக ஆக குறைகிறது. காரணம், பயம் இருப்பதில்லை. வாழ்க்கையில் முன்னேற, 'நம்மால் முடியும்' என்ற எண்ணத்தை நம் மனதில் விதைக்க வேண்டும். இன்று வயதானவர்கள் கூட எத்தனையோ தொழில்களில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் போது, இளைஞர்கள் மனதளவில் உழைக்க தயங்குவது ஏன்? இன்றைய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அதற்கான முயற்சி செய்ய விரும்புவதில்லை. முடியாதது என்பது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. 'முன்பு முடியாதது' என நினைத்ததை இன்று விஞ்ஞானிகள் நடத்திக் காட்டவில்லையா? அவர்களால் முடியும் போது... நீங்களும் ஏன் முயற்சி செய்யக்கூடாது.



2010 - செப்டம்பர் 21-ந்தேதி செவ்வாய் கிழமை டாக்டர் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தேன்.

கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் - அடுத்து கணித வகுப்பு -5.30-க்கு வீடு - தொழுகை - 6 மணிக்கு ரயில் நிலயம்- ஓடும் ரயிலிலிருந்து வீசியெறியப்படும் தினமணி - சுதேசமித்திரன்- பத்திரிக்கைகளை பிரித்து ராமேஸ்வரத்தில் வீடு வீடாக விநியோகம்- 8.00 மணிக்கு பழையதை
உண்டுவிட்டு பள்ளி - இரவு, 2 மணி நேரம் படிக்க மட்டும் விளக்கில் எண்ணெய் வசதி. விடுமுறை நாட்களில் அண்ணன் மளிகைக் கடையில் பணி.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் மாதம் 4 ரூ மிச்சப்படுத்த சைவ உணவுக்கு மாறி இன்று 84- ஐ கொண்டாடும் வயதிலும் சைவம்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் ரம்ஜான் - இப்தார் விருந்துச்செலவு 2.50 லட்சத்தை அப்படியே அனாதை விடுதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ் டெல்லி வருகையை முன்னிட்டு இங்கு மாளிகை வராந்தா கம்பளங்களை மாற்ற கேட்டபோது, மகான்களின் பாதம் பட்ட கம்பளத்தில் உங்கள் அதிபரின் பாதம் படுவது பெருமை என்று மாற்ற மறுத்தார்.

ஊரிலிருந்து டெல்லி சுற்றிப் பார்க்க வந்த உறவுகளின் செலவுக்கு கையிலிருந்து பணம் கொடுத்தார்.

பதவி காலம் முடிந்து மாளிகையை விட்டு
வெளியேறும்போது கையில் இரண்டு
சிறுபெட்டிகள், ஒரு பையில் , தான் காசு கொடுத்து வாங்கிய சில நூல்கள்....

எளிமையும் நேர்மையுமாய் என் இதயத்தில் இடம்பிடித்த மாமனிதர்- "யான்' 'எனது' என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்' - என்ற குறளைச் சொல்லி. என் கம்பன் உரையையும் ஓவியங்களையும் பார்த்து, என்னைப் பாராட்டிய போது, அந்தக் குறளின் முழுமையான அர்த்தத்துக்கு நம்மை இன்னும் தகுதியானவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆழ்மனம் சொல்லியது !!

No comments:

Post a Comment