Thursday 24 September 2015

பிறரால் முடியுமெனில் நம்மாலும் முடியும்!

உதிரங்களே!

மகிழ்ச்சி கொள்ளுங்கள். நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் "உதிரத்தின் உதவிகள்" குடும்பத்தின் வார்த்தைகள் ஆயிரம் மனங்களை தொட்டுள்ளது.
பெறுமிதம் கொள்ளுங்கள்.
தூக்கத்தை விடுத்து, சிரமங்களை கானாமல் சமுதாயத்திற்கு செய்யவேண்டும்
என்று விருப்பம் கொண்டவர்கள் நம்மை போல் யார் இருக்க கூடும்.
நட்டிருப்பது மரக்கன்றுகள் மட்டுமல்ல.,
நமது சிந்தனைகளையும் தான்! மரம் நடப்பட்டதோ மண்ணில், நம் சிந்தனைகள் நடப்பட்டதோ மாணவர்கள் மனதில்! இரண்டுமே 1000 வருடங்கள் நிலைக்ககூடியவை.
நண்பர்களே,
எதற்கும் தயாராகுங்கள்!
சில சமயம் தோல்விகள் நம்மை சந்தித்து வெற்றியின் முகவரியை கொடுக்கும்.
ஏமாற்றங்கள் நம்மை நெறுங்கும்!
நாம் காணவேண்டிய ஏற்றங்கள் அதிகமுள்ளது என்பதற்கான முன்னறிவுப்பு அது!
அடைவது அனைத்தும் வெற்றி அல்ல!
இழப்பது அனைத்தும் தோல்வியுமல்ல!
நம் தேடலில் உள்ள நல்லதை மட்டுமே நாம் காண வேண்டும்.
விதைக்கபட்டோம்... துளிர்கின்றோம்...
வளருவோம்...!

பிறரால் முடியுமெனில் நம்மாலும் முடியும்!

No comments:

Post a Comment