Thursday 24 September 2015

பெறுவதில்தான் சுகம்அதிகம் ....

அன்பு பாசம் காதல் காமம்
இவை நான்கும் கொடுப்பதைவிட
பெறுவதில்தான் சுகம்அதிகம் ....

இவை நான்கையும் - நான்
ஆயிரம்முறை அள்ளிக்கொடுக்க
முயற்சித்து இருக்கிறேன் ...

ஆனால் ...
ஒருமுறைகூட யாருமெனக்கு
கிள்ளிக் கொடுக்கக்கூட
முயற்சித்ததில்லை ...

இந்தஏக்கம் தாங்காமல் - என்னுள்
நொந்துநித்தம் அழுகிறேன்
வந்தவலி அத்தனையையும் - பின்
வார்த்தையாக்கி மகிழ்கிறேன் ...

1 comment:

  1. என் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete