Thursday 24 September 2015

வெற்றிகளைத்தேடி ..

வாழ்கையின் கடினம் கருதி சில செயல்களை உதிர்த்து விடலாம்..இலட்சியங்களை உதிர்த்துவிடாதே..
ஏனெனில்..மரங்கள்கூட சாதகமற்ற சூழலில் இலைகளை உதிர்த்து விடுகின்றன..வேர்களையல்ல .. -மு.சிபிகுமரன்

வலிமை இல்லையென்று வீழ்ந்துவிடாதே...
பட்டாம்பூச்சிகள், ஈசல்கள் போராடுகின்றன மறந்துவிடாதே


உதிர்ந்த பூக்களைப்பற்றி பூச்செடி கவலைகொள்வதில்லை ..
பூப்பதற்கு இன்னும் வாய்ப்புள்ளபோது

+


தொலைந்து போய்விட்ட வெற்றிகளைத்தேடி ..
தொலைந்து போய்விடாத தோல்விகளைத்
தூக்கிக்கொண்டு செல்கிறது ..
என் நம்பிக்கை ..

எப்போதும் புகழ்ச்சிக்கு
மயங்காதிரு ...
எக்கணமும் இகழ்ச்சிக்கு
கலங்காதிரு ...
காலம்கொடுத்த வேலையென்று
கடமைசெய் ...
காலம்என்றும் முடியக்கூடும்
விரைந்துசெய் ...
உன்கணக்கு முடிந்துவிட்டால்
ஒய்வுதான்
உயிரிருக்கும் நேரமெதற்கு
ஒய்வுதான் ?
கொண்டுபோக இவ்வுலகில்
ஏதுமில்லை ...
தந்தபோனால் கொண்டுபோவாய்
பேருதான் ...

No comments:

Post a Comment