Thursday 24 September 2015

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே,

இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே,
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் போதிலே!
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே,
இடைவிடாத முயற்சி என்றும் பொய்ததில்லையே!
தொலைத்தது கிடைத்திடாமல்,
நினைத்தது நடந்திடாமல்,இலக்குகள் முடிவதில்லை...
தோற்பதில்லை வெற்றியே!
அச்சமென்பது எந்த நொடியும் நம்மை வியுங்கும் மறவாதே.
உச்சம் என்பது எட்டும் வரையில் கண்கள் உறங்க நினையாதே!
அறிவெனும் ஆயுதம் நமதுயிர் காக்குமே,போரை ஏற்போமே!
உண்மை என்பது நம்மை தொடரும்வரை துணிவோமே.
நம்பி செய்திடும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே...
தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம்,பாதை மாறாதே!
ஒருமுறை தேறினால் தலைமுறை வாழுமே,வேர்வை காயாதே!
இழப்பதற்கு எதுவுமில்லை நமது கையிலே.
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும்போதிலே!

No comments:

Post a Comment