Tuesday 27 October 2015

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!

நம்பிக்கையோடு வாழ் மனமே!!!!
--------------------------------------------------

மனிதன் போடும் சிலகணக்குகள் பிழையாகும் போது அங்கே சந்தோசம் முற்றிலும் வடிந்துபோகிறது..

அதே நேரத்தில் கணக்கு சரியாக இருந்திருப்பின் உற்சாகம் குடிகொள்கிறது...

ஏன் நம்மில் பலர் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்வதில்லை...

தோல்விகள் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என எடுத்துக்கொண்டால் துக்கமும் மனஉளைச்சலும் நம்மை நெருங்குமா....

நம் அறிவை சோதிக்க சரியான தருணம் இன்னும் வரவில்லை என நினைத்துக்கொண்டால் என்ன...

இது ஓர் சிறிய சறுக்கல்தான்....எதையும் பாசிடிவ்வாக யோசிக்க வேண்டும்...அவ்வாறு யோசிக்க யோசிக்க மனம் தெளிந்து நல்வழிப் பிறக்கும்....

நம்தோல்வியை நினைத்து துவண்டுபோவதை விட வெற்றி பெற்றவரின் மதிநுட்பத்தை நினைத்து சந்தோசப் பட்டோமேயானால் நிச்சயம் அடுத்து நமக்கும் வெற்றிதான்...

நமக்குமுன் ஏகப்பட்ட பாதைகள் உள்ளன....எனவே,வாழ்வின் மொத்த சந்தோசமும் நம்மிடம் மட்டுமே உள்ளது...

நம்வெற்றியும் தோல்வியும் நம் நம்பிக்கையில் மட்டுமே உள்ளது...

நாம் தடுமாறி கீழே விழும்போதெல்லாம் சிலரின் அனுபவக் கருத்துகள் நம்மை நிமிர்ந்து எழச் செய்கின்றன..

நம்பிக்கை உள்ளவனுக்கு உலகமே தன் உள்ளங்கையில் அடங்கும்...அது இல்லாதவனுக்கு பூமியே...சின்ன புள்ளியாய் சுருங்கும்...

நம்பிக்கை கொண்டு நாம் விஸ்வரூபம் எடுப்போம்..
என்றும் நட்புடன்.....உங்கள் நம்பிக்கை சக்தி..!!!!

No comments:

Post a Comment