Tuesday 27 October 2015

புலம்பாதே போராடு ...

புலம்பாதே போராடு ...
================

புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...

அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...

வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...

திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...

எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...

ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...

போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...

No comments:

Post a Comment