Sunday 10 July 2016

வெல்லும்வரை விடமாட்டேன் ...

ஈன்றபொழுதின்பெரிதுவக்கும்தன்மகனைச் சான்றோன்எனக்கேட்டதாய்" மற்றும் "தந்தைமகற்காற்றுநன்றிஅவையத்து முந்திஇருப்பச்செயல்" என்னும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் "மகன்தந்தைக்குஆற்றும்உதவிஇவன்தந்தை என்நோற்றான்கொல்எனும்சொல்" என்று கைமாறாக தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு மட்டும் பெருமை சேர்க்காமல் "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கங்கு மாலைகள் விழவேண்டும் , ஒரு மாற்று குறையாத மன்னவனிவனென்று போற்றி புகழ வேண்டும் " என்ற கவியரசு கண்ணதாசனின் கூற்றிற்கு இணங்க பாரதத்தின்பெருமைகளை பாருலகம் பாராட்டும்படி பாங்காக பறைசாற்றி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்திய உலகமே வியக்கும்வண்ணம் பாரதம் போற்றும் பெருமகன் மோடி அவர்களின் மாண்பினை பாராட்டுவதற்கு வார்த்தைகள் ஏது?

வெல்லும்வரை விடமாட்டேன் ...

ஆற்றுவெள்ளத்தில் அடித்துப்போகும்
இலையல்ல நான் ...
பாதைபோட்டு பயணிக்கும்
ஆறுதான்டா நான் ...

என்பாதையை தீர்மானிக்க
எனக்குமட்டுமே உரிமையிருக்கு ...
புதிதாய்வோர் பாதையை
பூமிக்குத்தருவதே எந்தன்கணக்கு ...

" எதிர்காலம் எனக்குத்தான் "

இன்பம்துன்பம் நிரந்தரமில்லையென - நான்
என்றைக்கு உணர்ந்தேனோ ....

அன்றிருந்தே ...

கவலை ...
என்னை கவலைப்படுத்த முடியாமல் கவலைப்படுகிறது ...

No comments:

Post a Comment