Sunday 10 July 2016

எதுவும் நிரந்தரமில்லை

எதுவும் நிரந்தரமில்லை
எதற்கும்நீ கலங்காதே
எப்போது மகிழ்ச்சியாய் இரு

உனக்கானது உனக்கே சேரும்
பொறாமையால் யாருடமிருந்தும்
எதையும் பறிக்க இயலாது .

ஏற்றுக்கொள்ளுவதே
மிகச்சிறந்த மனப்பக்கும் .

நிறைய ஆசைப்படு
நிறையத் தேடு
கிடைத்தால் மகிழ்ச்சி கொள்
கிடைக்காவிடின்
உன்னையடையும் யோகம்
அதற்கு இல்லையென
விட்டுச்செல் .

உனக்கான அறிவுரை - உன்
மனசாட்சியிடமே கேள்
அதுவே உன் ஆண்டவன்

இவையனைத்துமே
என் மகிழ்ச்சிக்கு காரணம் ...

ஏற்றுக்கொள்ளுங்கள் எல்லாம்
மகிழ்ச்சியாய் மாறும் ...

No comments:

Post a Comment