Sunday 10 July 2016

மனித நேயம்

நீ வாழுகிற
இந்த வாழ்க்கையில் ...
நீ வாழ்ந்து கொண்டு இருக்கும்
இந்த நாள் ,
இனி எந்த நாளும் கிடைக்காது .
ஆதலால் ...
இந்த நாளை
இதுவரை எந்நாளும்
அனுபவிக்காதவண்ணம் அனுபவி ...


தனக்கென்ற போதும்-அதுவே
பிறர்க்கென்று வந்த போதும்...
இரண்டையும் ஒன்றாய் நினைத்து,
துடிக்கின்ற மனமும்,
கண்ணீர் வடிக்கின்ற கண்களும்,
இருக்கின்ற வரை..
நிலத்தில் தழைத்து நிற்கும்,
மாண்போடு மனித நேயம்!!!


இனி காந்தி என்றும்
கார்ல் மார்க்ஸ் என்றும்
யாரும்
பிறக்கப்போவதில்லை
மிச்சம் இருக்கும்
நீயும் நானும்தான்
எதாவது
செய்தாக வேண்டும் .

No comments:

Post a Comment