Sunday 10 July 2016

உன்காலம் வரும்வரை

உன்காலம் வரும்வரை
ஊமையாக பொறுத்திரு
உதாசினம் செய்வோரின்
உற்சாகத்தை ரசித்திரு

உள்ளத்தாலும் உடலாலும்
ஓய்வின்றி உழைத்திடு
அறுத்துன்னை போட்டாலும்
அருகம்புல்லாய் தளைத்திடு

எந்நொடியும் மாற்றம்வரும்
எதிரிக்கு சொல்லிவை
அடுத்தநொடி உனக்கேயென
ஆர்வத்தை அள்ளிவை

சோம்பலை இன்றேகொண்டு
சுடுகாட்டில் கொள்ளிவை
சூடுபட்ட மண்புழுவாய்
சுறுசுறுப்பை உன்னில்வை

உன்னைவெல்ல இதுவரைக்கும்
ஒருவன்கூட பிறக்கவில்லை
பிறக்கும்போதே லட்சம்விந்தை
தோற்கடித்ததா நினைவில்இல்லை

எதிர்பார்ப்பு காந்தத்தால்
எதையும்நீ ஈர்த்திடலாம்
உலகமே உனக்குத்தான்
வாஒருகை பார்த்திடலாம்

No comments:

Post a Comment