Thursday 22 May 2014

gk

குடியரசுத்தலைவர் மாளிகையை வடிவமைத்தவர்...

01. அரசியல் சட்டத்தைத் திருத்தும் முறைகளை கூறும் அரசியலமைப்பு ஷரத்து - 368.

02. அரசியலமைப்பு முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வருடம் - 1951.

03. அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது - ஒரே ஒரு முறை

04. திருத்த மசோதாக்களை கொண்டுவர குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவை இல்லை.

05. அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் கையெழுத்திட மறுக்க முடியாது.

06. அரசியமைப்பு திருத்த மசோதாக்களுக்கு கூட்டுக்கூட்டம் (Joint Sitting) கிடையாது.

07. அடிப்படை கட்டமைப்பு மாறாமல் அரசியல் அமைப்பின் எந்தப் பகுதியையும் பாராளுமன்றம் திருத்தலாம் - கேசவா நந்தா பாரதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

08. அரசியலைமைப்பைத் திருத்தும் முறைகள் மூன்று.

09. அடிப்படை உரிமைகளை பாராளுமன்றம் திருத்த முடியாது - கோலக்நாத் வழக்கின் தீர்ப்பு.

10. அரசியமைப்பின் எப்பகுதியையும் திருத்தும் உரிமையை பாராளுமன்றத்துக்கு உறுதிப்படுத்தும் திருத்தம் - 24-வது திருத்தம்.

11. தேசிய அவசரநிலை பாராளுமன்ற ஒப்புதலுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அமலில் இருக்கலாம்.

12. அமைச்சரவையின் எழுத்துப்பூர்வமான பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் தேசிய அவசரநிலையை அறிவிக்கிறார்.

13. 1962, 1971 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளில் தேசிய அவசரநிலையை அறிவிக்கப்பட்டது.

14. நிதி நெருக்கடி ந ிலைக்கு இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்ற ஒப்புதலை பெற வேண்டும்.

15. அரசியலமைப்பு நெருக்கடி நிலை, பாராளுமன்றம் ஒப்புதலுடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை அமலில் இருக்கலாம்.

16. அரசியலமைப்பு நெருக்கடி நிலை, இந்திராகாந்தி பிரதமாராக இருந்தபோது அதிக முறை அமல்படுத்தப்பட்டது.

17. நிதி நெருக்கடிநிலைக்கு ஆறுமாதங்களுக்கு ஒரு முறை பாராளுமன்ற ஒப்புதல் பெறத்தேவையில்லை.

18. குடியரசுத்தலைவர் ஆட்சி முதல் முறையாக பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்டது.

19. குடியரசுத்தலைவர் ஆட்சியின்போது மாநில பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

20. தேசிய அவசர நிலையின்போது அடிப்படை உரிமைக்ள் தானாகவே ரத்தாகும்.

21. பாராளுமன்றம் என்பது குடியரசுத்தலைவர், லோக்சபை, ராஜ்யசபை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.

22. ஐந்தாவது லோக்சபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.

23. துணை குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் ராஜ்யசபையில் மட்டுமே துவங்கப்படும்.

24. இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்டுப்பவர் குடியரசுத்தலைவர், தலைமையேற்பவர் சபாநாயகர்.

25. நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபையில் மட்டுமே கொண்டு வரப்படும்.

26. பாராளுமன்றத்தின் இரு கூட்டத்தொடர்களுக்கும் இடைப்பட்ட காலம் ஆறு மாதத்திற்குமிகக்கூடாது.

27. பணமசோதா லோக்சபையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்.

28. லோக்சபையின் ஐந்து வருட பதவிக்காலம் என்பது, பொதுத்தேர்தல் முடிந்து நடக்கும் முதல் கூட்டத்தொடரிலிருந்து கணக்கிடப்படுகிறது.

29. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்திலும் பங்கேற்கும் உறுப்பினரல்லாத ஒரே நபர் - அட்டார்னி ஜெனரல்.

30. ஒரு மசோதா பண மசோதா என்று சபாநாயகரால் சான்றளிக்கப்பட்டால் அதுவே இறுதியானது.

31. "ஜன கண மன" இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்ட நாள் - 1950, ஜனவரி 24.

32. தேசிய கீதத்தை பாட எடுத்துக்கொள்ளும் கால அளவு - 52 வினாடிகள்.

33. "ஜன கண மன" முதன்முதலாக பாடப்பட்டது - கல்கத்தா காங்கிரஸ் மகாநாடு (1911, டிசம்பர் 27)

34. தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி - வங்காளி

35. "ஜன கண மன".. துவக்கத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தது - பாரத விதாதா

36. வங்காளி மொழியிலிருந்து இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - தாகூர்.

37. ஆங்கில மொழிபெயர்ப்பு - Morning Song of India என வழங்கப்படுகிறது.

38. "ஜன கண மன" பாடலுக்கு இசையமைத்தவர் - காப்டன் ராம்சிங்.

39. "ஜன கண மன"... அமைந்துள்ள ராகம் - சங்கராபரணம்.

40. 1912 இல் தாகூரில் தத்துவபோதினி் பத்திரிகையில் "பாரத விதாதா" என்னும் தலைப்பில் தேசிய கீதம் வெளியானது.

41. குடியரசுத்தலைவர் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்ப வேண்டிய நபர் - துணை குடியரசுத்தலைவர்.

42. குடியரசுத்தலைவர் இவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்கிறார் - தலைமை நீதிபதி.

43. இந்தியக் குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ மாளிகை - குடியரசுத்தலைவர் மாளிகை

44. குடியரசுத்தலைவர் மாளிகையை வடிவமைத்தவர் - எட்வின் லூட்டின்ஸ்.

45. பொது மன்னிப்பு வழஹ்கும் அதிகாரத்தை குடியரசுத்தலைவருக்கு வழங்கும் பிரிவு - ஆர்டிக்கிள் 72

46. உச்சநீதிமனற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத்தலைவர்.

47. பாராளுமன்றக் கூட்டங்களைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்.

48. அவசர நிலைப் பிரகடனம் வெளியிடுபவர் - குடியரசுத்தலைவர்.

49. ராஜ்யடபைக்கு குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் - 12

50. குடியரசுத் தலைவரை நீக்கும் நடவடிக்கை - இம்பீச்மென்ட்.

51. மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் - ஜவஹர்லால் நேரு.

52. இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு.

53. முதல் துணைப்பிரதமர் - சர்தார் வல்லபாய் படேல்

54. முதல் தாற்காலிக பிரதமர் - குல்சாரிலால் நந்தா.

55. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திரா காந்தி

56. மிக முதிய வயதில் பிரதமரானவர் - மொரார்ஜி தேசாய்(81).

57. மிகக் குறைந்த வயதில் பிரதமரானவர் - ராஜீவ் காந்தி(40).

58. நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்து பிரதமர் பதவியை இழந்த முதல் பிரதமர் - வி.பி. சிங்

59. காந்திஜியின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த இந்தியப் பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி.

60. தென்னிந்தியாவிலிருந்து வந்த முதல் இந்தியப் பிரதமர் - பி.வி. நரசிமமராவ்.

61. இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை வயது அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.

62. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடந்த ஆண்டு - 1952

63. வாக்களிக்கும் உரிமை ஒரு - அரசியலமைப்பு உரிமை (Constitutional right)

64. வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் முடிக்கப்பட வேண்டும்.

65. வாக்களிக்கும் இயந்திரங்கள் (Electronic Voting Machine) மாநில தேர்தலில் முதல் முறையாக முழுமையாக பயன்படுத்தப்பட்ட மாநிலம் - கோவா.

66. 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கும் ஷரத்து - 326.

67.அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, சின்னங்கள் ஒதுக்குவது -தேர்தல் ஆணையம்.

68. மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய லோக்சபை தொகுதி - இலட்சத்தீவு.

69. 84-ஆவது சட்டத்திருத்தம் லோக்சபை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றாமல் இருக்க வகை செய்தது.

70. தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களை பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி - தினேஷ் கோஸ்வாமி கமிட்டி.

71. காந்திஜியின் முதல் தமிழ்நாடு விஜயம் - 1896, அக்டோபர் 14, சென்னை.

72. காந்திஜியின் புதல்வர்கள் - ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.

73. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி சிறைவாசம் அனுபவித்த நாட்கள் - 249.

74. காந்திஜி இந்தியாவில் முதன்முதலாக கைதி செய்யப்பட்ட ஆண்டு - 1917.

75. இந்தியா முழுமையாக காந்திஜி நடத்திய முதல் போராட்டம் - ஒத்துழையாமை இயக்கம்.

76. காந்திஜி-பாரதியார் சந்திப்பு நிகழ்ந்த வருடம் - 1919.

77. காந்திஜியின் சுயசரிதை எழுதப்பட்ட மொழி - குஜராத்தி.

78. காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் - 1948, ஜனவரி 30.

79. காந்திஜியின் பிறந்த தினம் ஐ.நா.வின் - அகிம்சா தினம்.

80. சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை - காந்திஜி.

81. காந்தி அமைதிப்பரிசை பெற்ற முதல் அமைப்பு - ராமகிருஷ்ணா மி,ன்.

No comments:

Post a Comment