Monday 3 March 2014

எகிப்தின் அதிபர் முகமது மோர்சியைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கிய அந்நாட்டின் ராணுவத்தலைமை ஹசேம்-எல்-பெப்லாவி தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.

புதிய பிரதமராக பதவியேற்ற இப்ராகிம் மக்லப்

பிரேசில் நாட்டின் கார்னிவல் கொண்டாட்டங்களும் சம்பா நடனங்களும் உலகப் புகழ் பெற்றவையாகும்


நாட்டிலேயே முதல் அஞ்சலக ஏடிஎம் : நிதிஅமைச்சர் சிதம்பரம் சென்னையில் திறந்து வைத்தார்


அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் “கல்வி ஓர் அடிப்படை உரிமை”


நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

இந்த ஒப்பந்தங்கள் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய மற்றொரு மேடையாக இருக்கும். இது சம்பந்தமாக இரு நாடுகளின் உள்நாட்டு அமைச்சகங்களின் தலைமைக்கு எங்கள் பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம் என்று இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதுர் அலோன் உஷ்பிஸ் தெரிவித்தார். நாங்கள் எங்கள் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்க இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் நிபந்தனையற்ற உறுதிப்பாடே இந்த ஒப்பந்தங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது. முக்கியமாக பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படுவதன் மூலம் தொழில்நுட்பம், மனித வள மேம்பாட்டில் முதலீடு போன்ற அனைத்துத் துறைகளிலும் நமது சமுதாயமும், பொருளாதாரமும் மேம்படும் வண்ணம் செயலாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்தியாவுடனான கணிசமான கூட்டாண்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இரு நாடுகளும் சந்தித்து வரும் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு இந்த ஒத்துழைப்பு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதம் என்பது தற்போது உலக அச்சுறுத்தலாக இருக்கும் போது நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு மூலமே இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும் என்று இஸ்ரேலின் பொது பாதுகாப்பு அமைச்சரான இட்சக் அஹரோநோவிச் கூறினார்.

No comments:

Post a Comment