Friday 24 March 2017

அவநம்பிக்கைகளை எடுத்து எறியுங்கள்.

குருப் 1 தேர்வின் முதல்நிலை தேர்விற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்வாளர்களின் தயாரிப்புகள் இன்னும் புத்துணர்வு பெறவில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் எதிர் மறையான சிந்தனைதான் .

முதலில் தேர்வின் பால் இருக்கும் அவநம்பிக்கைகளை எடுத்து எறியுங்கள்.

முடிவுகள் தாமதமாக வருகின்றன,இதனால் நம்மின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்ற எண்ண ஓட்டம் நியாயமானது தான்,அதற்காக நம்மின் தயாரிப்புகளில் சோர்வு இருக்க கூடாது.

கணிதம் சார்த்த கேள்விகளுக்கு முக்கியத்துவம் தந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

அதிகளவு திருப்புதல் தேர்வுகளை எழுதி பாருங்கள்.

உற்சாகம் என்பது பந்தில் உள்ள காற்று போன்றது.அது தொடர்ந்து இருந்தால் தான் பந்து எழும்ப முடியும்.அது போல் தான் நாமும் தொடர்ந்து படிக்க முடியும்.

சிந்தனையும் செயல்படும் ஒருங்கே அமைத்தல் வேண்டும்.

வெற்றி என்பது வேரில் தொடக்கி கனியில் முடிவது.ஒரே நாளில் நிகழ்வது அல்ல.எனவே தொடர் முயற்சி வேண்டும்.

மிக பெரிய வெள்ளம் கூட சிறு மழை துளியின் மூலம் தான் தொடங்குகிறது.அது போல் உங்களின் முயற்சி இருக்குமாயின், வெற்றி வெள்ளம் உங்கள் வீட்டின் கதவை தட்டும்.

வலியான வாழ்கை தான் வளமையும் வலிமையையும் நமக்கு தரும்.

வெல்க...வாழ்க.....

No comments:

Post a Comment