Friday 21 August 2015

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

* உனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி உள்ளது. அதில் வெற்றி எண்ணத்தை வளர்த்து உன் சக்தியால் வெற்றி அடைந்தே தீரவேண்டும்.
* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லும் பாடங்களை அன்றைய இரவே படிக்க வேண்டும்.
* அறிவுபெட்டகமாக திகழும் உன் ஆசிரியர்களின் வாழ்வுமுறையை தெரிந்து அவர்களை  மதித்து நடக்க வேண்டும்.
* பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்க வேண்டும்.
* நீ பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
* நீ வெற்றிபெற்று மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழவேண்டும்.
* உன் வீட்டில் ஒரு சிறுநூலகம் அமைத்து தினமும் 30 நிமிடமாவது புத்தகங்களை படிக்க வேண்டும்.
* பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது. தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து விடாமுயற்சியுடன் உன்னத லட்சியத்தை அடைய வேண்டும்.  வெற்றிக்கு மூலக்காரணமான அறிவு, உழைப்பு, தைரியம், விடாமுயற்சியை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு கூறிய கவிதை

நான் பறந்து கொண்டே இருப்பேன்!
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற மன உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.

No comments:

Post a Comment