Friday 21 August 2015

நீ கண்ட கனவு இந்தியா 2020ஐ இவ்வுலகம் வியந்து பார்க்கும்

😰
என் அன்னை பூமிக்கு அன்னை ஆஷியம்மா ஈன்று தந்த அருந்தவப்பதல்வன் நீ.....

😰
கலாம் உன்னை கரைசேர்க்க
கலம் செலுத்தி கரைகடந்த ஜைனுலாப்தீனின் செல்வப்புதல்வன் நீ.....

😰
தந்தைக்கு கைகொடுக்க கற்ற நேரம் தவிர்த்து கடினமாக உழைத்த உழைப்பாளி நீ....

😰
சோதனைகளை தகர்த்து கடினமாக உழைத்து அறிவியலில்
சாதித்த அறிஞன் நீ.....

😰
அக்கினி ஆகாஷ் பிரித்திவி போன்ற ஏவுகணைகளை தர காரணமாக இருந்து உலக நாடுகளிடையே இந்தியாவை
ஒளிரச் செய்தவன் நீ....

😰
மாணவர்களின் மனதான மணிமகுடத்தில் பசுமரத்தாணிபோல்
பதிந்த மாணிக்கம் நீ.....

😰
கனவுகாணுங்கள் என்று கூறி இந்திய இளைஞர்களை விழிக்க வைத்த விடியல் நீ.....

😰
மக்களின் மனதில் குடிகொண்டு
அன்னை தேசத்தின் குடியரசுத் தலைவனாக உயர்ந்த முதல் குடிமகன் நீ.....

😰
முத்தான உன் பிறப்பை ஆனந்த கண்ணீருடன் முதலில் தாங்கியது உன் அன்னை மடி...

😰
இன்று மூர்ச்சை அடைந்து கிடக்கும் உன் இறப்பை முகம்முழுதும் கண்ணீருடன் முடிவில் தாங்கியது இந்திய அன்னை மடி....

😰
நீ சோர்ந்து போகலாம், நீ தந்த அக்கினி சிறகுகள் முழுவேகத்துடன் பறக்கத் துவங்கிவிட்டன.....

😰
நீ ஏற்றிய எழுச்சி தீபங்கள் சுடர்விட்டு எறியத் துவங்கிவிட்டன....

😰
நீ கண்ட கனவு இந்தியா 2020ஐ இவ்வுலகம் வியந்து பார்க்கும்

No comments:

Post a Comment