Friday 21 August 2015

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அப்துல் கலாம், இளைஞர்கள் ஏற்க வேண்டிய 10 சபதங்களை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அப்துல் கலாம், இளைஞர்கள் ஏற்க வேண்டிய 10 சபதங்களை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

1. நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாகஉழைத்துபடித்து, வாழ்க்கையின்லட்சியத்தைஅடையமுயல்வேன்.


3. எனதுவிடுமுறைநாள்களில், எழுதப்படிக்கத்தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.


4. எனதுவீட்டில்அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டு வைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.


5. மது, சூதாடுதல், போதைப்பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்தமுயல்வேன்.


6. துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.


7. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.


8. வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.


9. என்தாய், தாய்நாட்டை நேசித்து, பெண்குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.


10. நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.

No comments:

Post a Comment