Tuesday 27 December 2016

தீர்த்தங்கரர்



தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. இவர்களது வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது. இவற்றில் குறிப்பிடப்படும் எண்கள் கலைநோக்குக் கற்பனை வடிவம் கொண்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்களின் பெயரும் வாழ்நாளும்

24 தீர்த்தாங்கரர்கள்

ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை



  1. ரிசபதேவர் (ஆதிநாதர்) - 1000 அண்டுகள் தவம் செய்து 84 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  2. அஜிதநாதர் - 72 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  3. சம்பவநாதர் - 60 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  4. அபிநந்தனநாதர் - 50 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  5. சுமதிநாதர் - 40 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  6. பத்மபிரபா - 30 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  7. சுபர்சவநாதர் - 20 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  8. சந்திரப்பிரபா - 10 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  9. புட்பதந்தா - 2 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  10. சீதாலநாதர் - ஒரு லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  11. சிரேயான்சநாதர் - 84 லட்சம் ஆண்டுகள்
  12. வாசுபூச்யா - 72 லட்சம் ஆண்டுகள்
  13. விமலநாதர் - 60 லட்சம் ஆண்டுகள்
  14. அனந்தநாதர் - 30 லட்சம் ஆண்டுகள்
  15. தர்மநாதர் - 10 லட்சம் ஆண்டுகள்
  16. சாந்திநாதர் - ஒரு லட்சம் ஆண்டுகள்
  17. குந்துநாதர் - 95,000 ஆண்டுகள்
  18. அரநாதர் - 84,000 ஆண்டுகள்
  19. மல்லிநாதர் - 55,000 ஆண்டுகள்
  20. முனிசுவிரதநாதர் - 30,000 ஆண்டுகள்
  21. நமிநாதர் - 10,000 ஆண்டுகள்
  22. நேமிநாதர் - 1,000 ஆண்டுகள்
  23. பார்சுவநாதர் - 100 ஆண்டுகள்
  24. மகாவீரர் - 72 ஆண்டுகள்

No comments:

Post a Comment