Tuesday 27 December 2016

ராஜஸ்தானுக்கே...

மழைப்பொழிவு குறைந்த மாநிலங்களில் ராஜஸ்தானுக்கே முதலிடம். அதுபோல இந்தியாவில் பாலைவனத்தைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையும் இந்த மாநிலத்துக்கு உண்டு.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது. இந்நிலையில் 2017-ம் ஆண்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக ஜோத்பூர் திகழும் என கூறப்படுகிறது.

தங்குமிடம், உணவு விடுதிகள், கவன ஈர்ப்பு, மக்களின் விருப்பம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வெளியான ஆய்வு முடிவுகள் ஜோத்பூரின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதிபலிக்கின்றன.

உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.

இதனால் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக ஜோத்பூர் திகழும் என டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் மேலாளர் நிகில் கஞ்ஜு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment