நெட்பேங்கிங் - ஓர் அறிமுகம்!
Posted Date : 13:12 (16/12/2013)Last updated : 14:12 (16/12/2013)
ஆன்லைன் மூலம் ஒரு வங்கியின் ஒரு
கணக்கிலிருந்து, அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள மற்றொரு
வங்கிக்கணக்கிற்கு சுலபமாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.
வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கிக்கணக்குகளுக்கிடையே, ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்ய NEFT (National Electronic Fund Transfer), RTGS (Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
NEFT, 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும்.
NEFT ன் அடிப்படை IFSC (Indian Financial System Code) ஆகும்.
IFSC என்பது ரிசர்வ் வங்கியினால், வங்கிகளுக்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு குறியீட்டு எண்ணாகும்.
IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆன ஒரு குறியீட்டு எண்ணாகும்.
இதில் முதல் 4இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் வங்கியின் கிளையைக் குறிக்கும்.
உதாரணத்துக்கு, CUB00000104என்ற அக்கவுன்ட் எண்ணில், CUB என்பது, சிட்டி யூனியன் பேங்க் என்பதையும், அதன் பின் ஒரு பூஜ்ஜியமும், அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் சிட்டி யூனியன் பேங்க், தமிழ் நாடு, சென்னை, நங்கநல்லூர் கிளையையும் குறிக்கிறது.
இந்த IFSC எண் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டி ருக்கும். வங்கியில் நேரிடையாகவோ அல்லது http://banksifsccode.com/ என்ற இணையத்தளத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
நாம்
ஒரு வங்கியின் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம், மற்றொரு வங்கியின்
கணக்கிற்கு பணம் அனுப்பியவுடன், அந்த தகவல் NEFT சேவை மையத்திற்கு (NEFT
service centre) செல்லும்.
இந்தத் தகவலைப் பெற்றுக் கொள்ளும் NEFT சேவை மையம், அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு (NEFT Clearing Centre)க்கு அனுப்பி வைக்கும்.
இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
இப்போது NEFT பட்டுவாடா மையம், வங்கி வாரியாகக் கணக்கினைத் தயார் செய்யும். அதாவது எந்த வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய வங்கிக்கான பட்டியல் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெறும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்து விடும்.
அதாவது, அன்றாடம் நடை பெறுகின்ற ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய்விடும். அம்மையம் அவற்றை உடனடியாக செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல்படுத்தும்.
எனவே, NEFT மூலம் நாம் பரிவர்த்தனை செய்யும் பணம், உடனுக்குடன், பட்டுவாடா செய்யப்பட மாட்டது. குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
சனிக்கிழமைகளில் 9.00மணி, 11.00மணி, 12.00மணி என்று 3 சுற்றுக்களில்
பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு 12.05மணிக்கு நாம் பணம்
அனுப்பினால், அது வங்கியின் அடுத்த வேலை நாளான திங்கள் அன்று 9 மணி
சுற்றில் தான் வரும். 11 மணிக்கு நாம் அனுப்பியவரின் கணக்கில் பணம்
கிரெடிட் ஆகி விடும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு
உட்பட்டதாகும்.
NEFT மூலம் குறைந்தபட்சத் தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,000 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்கு வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.
NEFT மூலம் அனுப்பப்படுகின்ற பணத்தைப் பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பணத்தை அனுப்புபவருக்கு சேவைக் கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
இதுவும் IFSC ன் அடிப்படையில் தான் செயல்படுகிறது. ஆனால் இங்கு 2,00,000லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை மட்டுமே பணப்பரிமாற்றம் முடியும்.
பணத்தை அனுப்பிய 10-15 நிமிடங்களுக்குள், சேர வேண்டிய வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
RTGS மூலம்
வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும்,
சனிக்கிழமைகளில் 9.00 மணி முதல் 12.30 மணி வரையும் பணம் அனுப்பலாம். இவை
வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
RTGS மூலம் குறைந்தபட்ச தொகையாக 2,00,000 லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும். இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் RTGS –மூலமே பணப்பரிவர்த்தனை செய்கின்றன.
RTGS மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
RTGS மூலம் அனுப்பப்படுகின்ற பணத்தைப் பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பணத்தை அனுப்புபவருக்குச் சேவைக் கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account வைத்திருப்பவர்கள் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். NRE, NO வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள்,RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.
NEFT மூலம் நாடு விட்டு நாடு பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் அவ்வாறு செய்ய முடியாது
NRE, NO வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் NEFT மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது
NEFTல் குறைவான தொகைகள் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் RTGSல் குறைந்த பட்ச தொகையாக 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
NEFT மூலம் அதிக பட்ச தொகையாக 5 லட்சம் வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் அதிக பட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
NEFT செயல்படும் முறையைத் தெரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஆன்லைனில் NEFT மூலம், நாம் பத்மா என்பவருக்கு 5000ரூபாய் அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். நாம் நம் பேங்கில் இருந்து அனுப்புகின்ற 5000ரூபாய் எப்படி பத்மாவின் பேங்க் அக்கவுன்டிற்குச் செல்கிறது என்று பார்ப்போம்.
1. நாம் பத்மாவிற்கு 5000 ரூபாயை அனுப்பியவுடன், நம் பேங்கில் இருந்து பத்மாவின் பேங்கிற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். ஆனால் அந்தத் தகவல் நேரடியாக பத்மாவின் பேங்கின் கிளைக்குச் செல்லாது. அது NEFT சேவை மையத்துக்குத் தான் செல்லும்.
2. இந்தத் தகவலை பெற்றுக் கொள்ளும் NEFT சேவை மையம், அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு அனுப்பி வைக்கும்.
3. இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
4. இப்போது NEFT பட்டுவாடா மையம், பேங்க் வாரியாக கணக்கினைத் தயார் செய்யும். அதாவது எந்த பேங்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த பேங்கிற்கு அனுப்ப வேண்டும் என்ற லிஸ்ட்டை தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய பேங்கிற்கான லிஸ்ட் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
5. NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெறும் பேங்குகளுக்கு செய்தி வந்தவுடன், பேங்குகள் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட பேங்க் அக்கவுன்டில் கிரெடிட் செய்து விடும். இங்கு நம் பேங்க் அக்கவுன்டில் இருந்து பத்மாவின் பேங்க் அக்கவுன்டிற்கு 5000ரூபாய் அனுப்பப்பட்டு விடும்.
NEFT அடிப்படையில் இயங்குகிறது. இது கூரியர் அலுவலகம் போல செயல்படுகிறது. கூரியர் அலுவலகத்துக்குத் தபால்கள் காலையில் இருந்து மாலை வரை அவர்களது அலுவலக நேரம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். அவை நாளின் இறுதியில், ஏரியா வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த ஏரியாவிற்கு அனுப்பப்பட்டு விடும். பிறகு அந்தந்த ஏரியாவில் உள்ள கூரியர் அலுவலகங்கள் மூலம், கடிதங்கள் சேர வேண்டிய நபருக்கு அனுப்பப்பட்டு விடும்.
இதுபோலத் தான் பேங்கில் NEFT மூலம் பணப்பரிமாற்றம் நடை பெறுகிறது. அதாவது, அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய் விடும். அம்மையம் அவற்றை உடனடியாகச் செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல் படுத்தும்.
வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கிக்கணக்குகளுக்கிடையே, ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்ய NEFT (National Electronic Fund Transfer), RTGS (Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
NEFT (National Electronic Fund Transfer )
ஆன்லைனில் ஒரு வங்கியின் கிளையில் இருந்து, மற்றொரு வங்கியின் கிளைக்கு
மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தை அனுப்புவதற்காக முதன்
முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முறை தான் NEFT (National Electronic Fund
Transfer).NEFT, 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும்.
NEFT ன் அடிப்படை IFSC (Indian Financial System Code) ஆகும்.
IFSC என்பது ரிசர்வ் வங்கியினால், வங்கிகளுக்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு குறியீட்டு எண்ணாகும்.
IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆன ஒரு குறியீட்டு எண்ணாகும்.
இதில் முதல் 4இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் வங்கியின் கிளையைக் குறிக்கும்.
உதாரணத்துக்கு, CUB00000104என்ற அக்கவுன்ட் எண்ணில், CUB என்பது, சிட்டி யூனியன் பேங்க் என்பதையும், அதன் பின் ஒரு பூஜ்ஜியமும், அதற்குப் பின் வருகின்ற ஆறு இலக்கங்கள் சிட்டி யூனியன் பேங்க், தமிழ் நாடு, சென்னை, நங்கநல்லூர் கிளையையும் குறிக்கிறது.
இந்த IFSC எண் வங்கிக் கணக்குப்புத்தகத்தில் அச்சிடப்பட்டி ருக்கும். வங்கியில் நேரிடையாகவோ அல்லது http://banksifsccode.com/ என்ற இணையத்தளத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
NEFT செயல்படும் முறை
இந்தத் தகவலைப் பெற்றுக் கொள்ளும் NEFT சேவை மையம், அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு (NEFT Clearing Centre)க்கு அனுப்பி வைக்கும்.
இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
இப்போது NEFT பட்டுவாடா மையம், வங்கி வாரியாகக் கணக்கினைத் தயார் செய்யும். அதாவது எந்த வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய வங்கிக்கான பட்டியல் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெறும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்து விடும்.
அதாவது, அன்றாடம் நடை பெறுகின்ற ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய்விடும். அம்மையம் அவற்றை உடனடியாக செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல்படுத்தும்.
எனவே, NEFT மூலம் நாம் பரிவர்த்தனை செய்யும் பணம், உடனுக்குடன், பட்டுவாடா செய்யப்பட மாட்டது. குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
NEFT – சில முக்கிய தகவல்கள்
NEFT மூலம் வார நாட்களில் காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை பணம்
அனுப்பலாம். 9.00 / 11.00 / 12.00 / 1.00 / 3.00 /5.00 என்று வார நாட்களில்
6சுற்றுக்களில் பணப்பரிமாற்றம் நடைபெறும். உதாரணத்துக்கு, 1.05க்கு நாம்
பணம் அனுப்பினால், அது 3மணிசுற்றில் சேர்ந்து விடும். 5மணிக்கு நாம்
அனுப்பியவரின் கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.NEFT மூலம் குறைந்தபட்சத் தொகையாக 1ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,00,000 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
NEFT மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் NRE, NRO கணக்கு வைத்திருந்தால், அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும்.
NEFT மூலம் அனுப்பப்படுகின்ற பணத்தைப் பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பணத்தை அனுப்புபவருக்கு சேவைக் கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account, NRE, NRO வைத்திருப்பவர்கள் NEFT மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
RTGS (Real Time Gross Settlement)
RTGS என்பது Real Time Gross Settlement என்பதன் சுருக்கமாகும். அதாவது உடனடி பணப்பரிமாற்றம் என்று பொருள்படும்.இதுவும் IFSC ன் அடிப்படையில் தான் செயல்படுகிறது. ஆனால் இங்கு 2,00,000லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை மட்டுமே பணப்பரிமாற்றம் முடியும்.
பணத்தை அனுப்பிய 10-15 நிமிடங்களுக்குள், சேர வேண்டிய வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
RTGS மூலம் குறைந்தபட்ச தொகையாக 2,00,000 லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும். இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் RTGS –மூலமே பணப்பரிவர்த்தனை செய்கின்றன.
RTGS மூலம் இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
RTGS மூலம் அனுப்பப்படுகின்ற பணத்தைப் பெறுபவர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பணத்தை அனுப்புபவருக்குச் சேவைக் கட்டணமும், சேவை வரியும் உண்டு. இவை வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
வங்கியில் Savings Account, Current Account, ODCC Account வைத்திருப்பவர்கள் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். NRE, NO வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள்,RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.
NEFT-க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடுகள்
NEFT மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற நேரம் ஆகும். RTGS ல் பணப்பரிமாற்றம் உடனுக்குடன் நடைபெறும்.NEFT மூலம் நாடு விட்டு நாடு பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் அவ்வாறு செய்ய முடியாது
NRE, NO வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் NEFT மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது
NEFTல் குறைவான தொகைகள் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் RTGSல் குறைந்த பட்ச தொகையாக 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
NEFT மூலம் அதிக பட்ச தொகையாக 5 லட்சம் வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். RTGS மூலம் அதிக பட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
NEFT செயல்படும் முறையைத் தெரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஆன்லைனில் NEFT மூலம், நாம் பத்மா என்பவருக்கு 5000ரூபாய் அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். நாம் நம் பேங்கில் இருந்து அனுப்புகின்ற 5000ரூபாய் எப்படி பத்மாவின் பேங்க் அக்கவுன்டிற்குச் செல்கிறது என்று பார்ப்போம்.
1. நாம் பத்மாவிற்கு 5000 ரூபாயை அனுப்பியவுடன், நம் பேங்கில் இருந்து பத்மாவின் பேங்கிற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். ஆனால் அந்தத் தகவல் நேரடியாக பத்மாவின் பேங்கின் கிளைக்குச் செல்லாது. அது NEFT சேவை மையத்துக்குத் தான் செல்லும்.
2. இந்தத் தகவலை பெற்றுக் கொள்ளும் NEFT சேவை மையம், அதை NEFT பட்டுவாடா மையத்துக்கு அனுப்பி வைக்கும்.
3. இதனை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா செயலகம் (National Clearing Cell) பெற்றுக் கொள்ளும்.
4. இப்போது NEFT பட்டுவாடா மையம், பேங்க் வாரியாக கணக்கினைத் தயார் செய்யும். அதாவது எந்த பேங்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், எந்த பேங்கிற்கு அனுப்ப வேண்டும் என்ற லிஸ்ட்டை தயாராகும். பணத்தை அனுப்பி வைக்க வேண்டிய பேங்கிற்கான லிஸ்ட் தயாரானதும், அது NEFT சேவை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
5. NEFT சேவை மையத்தில் இருந்து குறிப்பிட்ட பணம் பெறும் பேங்குகளுக்கு செய்தி வந்தவுடன், பேங்குகள் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட பேங்க் அக்கவுன்டில் கிரெடிட் செய்து விடும். இங்கு நம் பேங்க் அக்கவுன்டில் இருந்து பத்மாவின் பேங்க் அக்கவுன்டிற்கு 5000ரூபாய் அனுப்பப்பட்டு விடும்.
NEFT அடிப்படையில் இயங்குகிறது. இது கூரியர் அலுவலகம் போல செயல்படுகிறது. கூரியர் அலுவலகத்துக்குத் தபால்கள் காலையில் இருந்து மாலை வரை அவர்களது அலுவலக நேரம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். அவை நாளின் இறுதியில், ஏரியா வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த ஏரியாவிற்கு அனுப்பப்பட்டு விடும். பிறகு அந்தந்த ஏரியாவில் உள்ள கூரியர் அலுவலகங்கள் மூலம், கடிதங்கள் சேர வேண்டிய நபருக்கு அனுப்பப்பட்டு விடும்.
இதுபோலத் தான் பேங்கில் NEFT மூலம் பணப்பரிமாற்றம் நடை பெறுகிறது. அதாவது, அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் NEFT பட்டுவாடா மையத்துக்குப் போய் விடும். அம்மையம் அவற்றை உடனடியாகச் செயல்படுத்தாது. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் வந்தவுடன் அவற்றை செயல் படுத்தும்.
No comments:
Post a Comment