இந்திய மாநிலங்கள் - 8
|
Posted Date : 10:12 (14/12/2013)Last updated : 10:12 (14/12/2013)
உத்தரகாண்ட்
கடவுளின் தேசம்
என்றழைக்கப்படுகிறது. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத்,
ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இந்துக்களின் பல முக்கிய வழிபாட்டுத்தலங்கள் இம்
மாநிலத்தில் அமைந்துள்ளன. கங்கை, யமுனை உற்பத்தியாகும் மாநிலம்.வரலாறு: பண்டையகால இந்து நூல்களில் இந்தப் பகுதி கேதர்காந்த், மானஷ்காந்த், ஹிம்மாவத் என அழைக்கப் பட்டது. குஷானர்கள், கனிஷ்கர், குப்தர்கள், சீக்கியர்கள் என பலரது ஆட்சிக்கு உட்பட்டு கடைசியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு, இந்தப் பகுதி உத்தரப்பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. இதன்பிறகு, 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்திரகாண்ட் இந்தியாவின் 27-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. முக்கிய ஆறுகள்: கங்கை, யமுகை, ராம் பங்பை, பானி, கோசி. புவியியல் அமைப்பு முதன்மைத் துறை மூன்றாம் நிலைத் துறை
உத்தரப்பிரதேசம்
இந்தியாவுக்கு 8 பிரதமர்களை அளித்த
மாநிலம். அதிகபட்சமாக 9 மாநிலங்களுடனும், நேபாள நாட்டுடனும் எல்லையைப்
பகிர்ந்துகொள்கிறது. உலக அதிச யங்களுள் ஒன்றான தாஜ்மஹால், 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை நடை பெறும் கும்பமேளா, கிருஷ்ணர் பிறந்த மதுரா, ராமர் பிறந்த
அயோத்தியா, புத்தர் மறைந்த குஷாநகர் போன்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட
மாநிலம். 'இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.வரலாறு: ராமர் ஆட்சி செய்த இடம், கிருஷ்ணர் பிறந்த பூமி என்று கூறப்படுகிறது. மௌரியர், குஷானர், குப்தர் என பல ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடம். 1833-ல் வங்காளத்திலிருந்து ஆக்ரா மாகாணம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு பல பெயர் மாற்றத்துக்குப் பிறகு, 1937-ம் ஆண்டு யுனைடெட் மாகாணம் என்ற பெயர் பெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு, மன்னராட்சி நடந்த ராம்பூர், பனாரஸ், தேரி கார்வால் ஆகியவையும் இணைக்கப்பட்டன. 1950-ம் ஆண்டு யுனைடெட் ப்ராவின்ஸ் என்பது உத்தரப் பிரதேசம் ஆனது. முக்கிய ஆறுகள்: கங்கை, யமுனை, ராம் கங்கை, கோமதி யமுனை. இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிதி துறை
மேற்கு வங்காளம்
நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ண னர், சுவாமி விவேகானந்தர்,
ராஜாராம் மோகன் ராய், அமர்த் தியா சென் என பிரபலங்கள் பிறந்த மாநிலம். வரலாறு: 1772-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா அறிவிக்கப்பட்டது. வங்காளம் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டபோது அதில் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசத்தின் ஒருபகுதி இடம்பெற்றிருந்தது. 1905-ம் ஆண்டு வங்காளம் பிரிக்கப் பட்டது. மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தப் பிரிவினையை ரத்து செய்தார். சுதந்திரம் அடைந்த போது வங்காளம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கும்போது பீகாரின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு இன்றைய மேற்கு வங்கம் மாநிலம் உருவாக் கப்பட்டது. வெஸ்ட் பெங்கால் மாநிலத்தின் பெயரை பச்சிம் பங்கா என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முக்கிய ஆறுகள்: கங்கை, தாமோதர், பாகீரதி, ஹூக்ளி, மயூராஷி. புவியியல் அமைப்பு முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
இந்திய யூனியன் பிரதேசங்கள்
அந்தமான் நிகோபார் தீவுகள்அமைவிடம்: சென்னையிலிருந்து 1,190 கி.மீ., கொல்கத்தாவிலிருந்து 1255 கி.மீ. தொலைவில் போர்ட் பிளேயர் அமைந்துள்ளது. வரலாறு: இங்கு ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள 572 தீவுகளில், மனிதர்கள் வசிப்பது 38 தீவுகளில் மட்டுமே. 1950-ல் இந்தியாவுடன் இணைந்து, 1956-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் (INA) அந்தமான் தீவைக் கைப்பற்றி சுவராஜ் - சாஹிப் தீவுகள் என்று பெயர் சூட்டியது. கலாசாரம்: இன்றும் வெளிஉலகத்தை அறிந்திராத பழங்குடியின மக்கள் இங்குள்ள காடுகளில் வசிக்கின்றனர். தமிழர்களும் வங்காளிகளும் அதிக அளவில் உள்ளனர். முக்கிய இடங்கள்: போர்ட் பிளேயர், அழகிய கடற்கரை, செல்லுலார் சிறைச்சாலை. முதனிலைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
சண்டிகர்
சுதந்திர
இந்தியாவின் முதல் நிர்மாணிக்கப்பட்ட நகரம். ஜவஹர்லால் நேருவின் கனவு
நகரம். பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகர்.வரலாறு: இந்திய சுதந்திரத்தின்போது பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டது. பஞ்சாபின் தலைநகராக இருந்த லாகூர் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. இதனால், புதிய தலைநகர் நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது. 1950-ல் இதற்கான பணி தொடங்கியது. 1966-ல் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் ஆனது. 1966 ந்வம்பர் முதல் தேதியில் சண்டிகர் தனி யூனியன் மாநிலம் ஆனது. இரண்டு மாநிலத்துக்கும் மையமாக சண்டிகர் இருந்ததால், மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்றப்பட்டு இரண்டு மாநிலத்துக்கும் தலைநகராக மாறியது. சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா என மூன்று மாநில அரசுகளின் தலைமையிடமாக இருப்பதால் அரசாங்கமே முக்கிய வேலை வாய்ப்பு அளிப்பதாக இருக்கிறது. சண்டிகர் கல்வி நகரத் திட்டம் சரங்பூர் என்ற இடத்தில் 130 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சண்டிகரில் சுதந்திரப் போராட்ட தியாகிகள்:, மாற்றுத் திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், முஸ்லிம்கள், கிறித்த வர்கள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோரின் ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு அரசாங்கமே இலவசக் கல்விக்கு எற்பாடு செய்கிறது. அரசுக் கட்டடங்களில் விளக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை இங்கு நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. எல்லைகள்: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. திருவிழாக்கள்: இந்துக்கள், சீக்கியர்களின் திருவிழாக்கள். முதன்மைத் துறை இரண்டாம நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை |
Friday, 24 January 2014
இந்திய மாநிலங்கள் - 8
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment